ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை இன்பம் .

+4
shobana sahas
krishnaamma
சிவா
M.Jagadeesan
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மழலை இன்பம் . Empty மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Mon Sep 07, 2015 7:11 pm

[You must be registered and logged in to see this image.]

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)


பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .

நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by சிவா Wed Sep 09, 2015 1:40 am

சிறந்த குறளின் விளக்கத்திற்கு நன்றி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Wed Sep 09, 2015 10:44 am

தம் மக்கள் அறிவு
===============


[You must be registered and logged in to see this image.]

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது . ( மக்கட்பேறு _68 )

பொருள்: தம்மைவிடத் , தம்மக்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வது உலகத்து மக்கட் சமுதாயத்திற்கு அதிக நன்மை தருவதாகும்.

நுட்ப உரை :
==========
தம் மக்களுடைய அறிவானது , தனக்குப் பயன்படுவதைக் காட்டிலும், உலக மக்களுக்கு அதிக பயன் தருவதாகும் . விஞ்ஞானி எடிசனின் அறிவு , அவருடைய குடும்பத்திற்குப் பயன்பட்டதைக் காட்டிலும் ,,  உலகத்திற்கே  அதிகம் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது . மின்விளக்கும் , திரைப்படமும்  எடிசனின்
நன்கொடைகள் அல்லவா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by krishnaamma Wed Sep 09, 2015 11:57 am

ம்ம்...ஸ்வாமி நாதன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by shobana sahas Wed Sep 09, 2015 8:19 pm

அருமையான திரி . அனைத்தும் அருமை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Thu Sep 10, 2015 11:38 am

அறிவறிந்த மக்கள்
================


[You must be registered and logged in to see this image.]

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற . ( மக்கட்பேறு -61 )

பொருள் :
========
இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளில் தலை சிறந்தது , நல்லறிவுடைய மக்களைப் பெறுவதாகும் . இதைவிடப் ஒரு பெரிய பேறு நான் அறிந்தவரையில் இல்லை .

நுட்ப வுரை :
==========
" அறிவு அறிந்த மக்கட்பேறு " என்னும் தொடருக்கு , அறிவு அறிந்த மக்கள் , அறிவு அறியா மக்கள் என இரு நிலையார் உளர் என்றும் , அவருள் அறிவு அறிந்த மக்கட்பேற்றையே வள்ளுவர் ஈண்டு குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கூறுவர் . இது வள்ளுவ முரண் ஆகும் .

மேலும் , " அறிவறிந்த " என்றதனான் , மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண் ஒழித்து நின்றது . இதனாற் புதல்வரைப் பெறுதலின் சிறப்புக் கூறப்பட்டது " என்ற பரிமேலழகரின் உரையும் தவறு என்று கூறுவார் டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் அவர்கள் .


=========


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Fri Sep 11, 2015 1:25 pm

வான்சிறப்பு :
==========

[You must be registered and logged in to see this image.]

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது . ( வான்சிறப்பு - 16 )

பொருள் :
=======
வானம் மழை பெய்யாவிட்டால் , பசும் புல்லின் தலையையும் காணமுடியாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by T.N.Balasubramanian Fri Sep 11, 2015 1:31 pm

வானம் மழை பெய்யாவிட்டால் , பசும் புல்லின் தலையையும் காணமுடியாது .

உண்மை , மழை பெய்வது இயற்கை
அதற்கேற்ற சூழ்நிலையை நாம் ஏற்படுத்த தவறி விடுகிறோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Sat Sep 12, 2015 7:11 pm

வலியறிதல் :
==========


[You must be registered and logged in to see this image.]

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும் . ( வலியறிதல் - 479 )

பொருள் :
=======
மரத்தின் உச்சிக்கொம்பு வரையில் ஏறியவர் , அதையும் தாண்டி மேலே ஏற முனைந்தால் , அவருடைய உயிருக்கே அது ஆபத்தாக முடியும் . எனவே திறமைக்கு மீறிய செயல்களில் நாம் ஈடுபடக் கூடாது . நம் திறமையின் வலிமையை அறிந்து , எல்லையை அறிந்து , அதற்கேற்ற செயல்களில் ஈடுபடவேண்டும் .

இக்குறள் பிறிது மொழிதல் அணியில் உள்ளது . உவமானத்தை மட்டும் கூறி , உவமேயத்தைக் கூறாது விடுத்தார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan Sun Sep 13, 2015 6:56 pm

பெண்வழிச் சேறல் :
================

[You must be registered and logged in to see this image.]


பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து . ( 907 )

பொருள் :
-----------
மனைவிக்குக் குற்றேவல் செய்துகொண்டு , அவளுக்குப் பணியாளாய் வாழ்தலைவிட,  அவன் நாணம் முதலிய பண்புகளையுடைய பெண்ணாய்ப் பிறத்தலே மேலானது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழலை இன்பம் . Empty Re: மழலை இன்பம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum