Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
3 posters
Page 1 of 1
பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
தமிழ்நாட்டில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன.
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களான 1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கோவிலூர். 5.திருக்கண்ணங்குடி, ஆகிய 5 தலங்களும் 'பஞ்ச கிருஷ்ண தலங்கள்' என்ற சிறப்புப் பெற்றவை.
கிருஷ்ணர் மீது தீராத பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்கள் அவசியம் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பஞ்ச கிருஷ்ண தலங்களை வழிபடுவது நல்லது. அதற்கு உதவும் வகையில் பஞ்ச கிருஷ்ண தலங்கள் பற்றிய குறிப்புகளை இங்கு தருகிறோம். பத்திரப்படுத்தி கொண்டு, நேரம் கிடைக்கும் போது பயன்படுத்துங்கள்.
Last edited by krishnaamma on Thu Aug 20, 2015 12:14 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
1. திருக்கண்ணமங்கை !
மிகவும் புகழ் பெற்ற இத்தலம் கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ளது. இத்தலத்தில் பிரார்த்தனை செய்தாலே முக்தி கிடைத்து விடும் என்கிறார்கள். பெருமாள் பாற்கடலை கடைந்தபோது சந்திரன், காமதேனு என வரிசையாக தோன்றி இறுதியில் மகாலட்சுமி அவதரித்தாள். பெருமாளை கண்டு வெட்கப்பட்ட லட்சுமி, இந்த திருக்கண்ண மங்கை தலத்துக்கு வந்து தவம் இருந்து பெருமாளுடன் சேர்ந்தாள். இதனால் இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
மூலவர்
இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.
எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும்.
மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள்.
உத்சவர்
இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.
பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார்.
பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் குரு வரும்போது இந்த தலத்தில் பெருமாள் 5 தேவியர்களுடன் காட்சி கொடுப்பார். அதை கண்டு தரிசனம் செய்வது மகாமகம் புனித குளத்தில் நீராடியதற்கு சமமாக கருதப்படுகிறது. பதவி உயர்வு பெற விரும்புபவர்கள், நினைத்ததை சாதிக்க ஆசைப்படுபவர்கள், இங்கு வழிபட பலன் கிடைக்கும். உறவினர்களால் கெட்ட பெயர் வராமல் இருக்க இத்தலத்து கிருஷ்ணர் வழிகாட்டியாக உள்ளார்.
மிகவும் புகழ் பெற்ற இத்தலம் கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ளது. இத்தலத்தில் பிரார்த்தனை செய்தாலே முக்தி கிடைத்து விடும் என்கிறார்கள். பெருமாள் பாற்கடலை கடைந்தபோது சந்திரன், காமதேனு என வரிசையாக தோன்றி இறுதியில் மகாலட்சுமி அவதரித்தாள். பெருமாளை கண்டு வெட்கப்பட்ட லட்சுமி, இந்த திருக்கண்ண மங்கை தலத்துக்கு வந்து தவம் இருந்து பெருமாளுடன் சேர்ந்தாள். இதனால் இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
மூலவர்
இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.
எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும்.
மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள்.
உத்சவர்
இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.
பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார்.
பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் குரு வரும்போது இந்த தலத்தில் பெருமாள் 5 தேவியர்களுடன் காட்சி கொடுப்பார். அதை கண்டு தரிசனம் செய்வது மகாமகம் புனித குளத்தில் நீராடியதற்கு சமமாக கருதப்படுகிறது. பதவி உயர்வு பெற விரும்புபவர்கள், நினைத்ததை சாதிக்க ஆசைப்படுபவர்கள், இங்கு வழிபட பலன் கிடைக்கும். உறவினர்களால் கெட்ட பெயர் வராமல் இருக்க இத்தலத்து கிருஷ்ணர் வழிகாட்டியாக உள்ளார்.
Last edited by krishnaamma on Thu Aug 20, 2015 12:46 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
2. திருக்கண்ணபுரம்
நன்னிலத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலை மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரத்தை கீழை வீடு என்றும் சொல்வார்கள். அந்த அளவுக்கு இத்தலம் புண்ணியம் மிகுந்தது. மூலவர் ஸ்ரீநீலமேக பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
நாகப்பட்டினம் அருகேயுள்ள இந்த கோவில் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோரால் மங்களா சாஸனம் செய்யப்பட்டது ஆகும்.
இத்தலத்தில் உள்ள உற்சவர் "செளரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "செளரி' என்ற சொல்லுக்கு "முடி' என்று பொருள் உண்டு.
ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே, அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார்.
அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார்.
மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார்.
சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார். மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார்.
அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார்.
இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார்.
விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.
அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
தினமும் அர்த்தசாமத்தில் இத்தலத்து பெருமாளுக்கு "முனியோதரம் பொங்கல்'' சமர்ப்பிக்கப்படுகிறது. இவரை வழிபட சூழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி விடுதலை கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கினால் வாழ்வில் இடர்பாடுகள் நீங்கி சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
நன்னிலத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலை மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரத்தை கீழை வீடு என்றும் சொல்வார்கள். அந்த அளவுக்கு இத்தலம் புண்ணியம் மிகுந்தது. மூலவர் ஸ்ரீநீலமேக பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
நாகப்பட்டினம் அருகேயுள்ள இந்த கோவில் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோரால் மங்களா சாஸனம் செய்யப்பட்டது ஆகும்.
இத்தலத்தில் உள்ள உற்சவர் "செளரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "செளரி' என்ற சொல்லுக்கு "முடி' என்று பொருள் உண்டு.
ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே, அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார்.
அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார்.
மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார்.
சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார். மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார்.
அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார்.
இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார்.
விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.
அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
தினமும் அர்த்தசாமத்தில் இத்தலத்து பெருமாளுக்கு "முனியோதரம் பொங்கல்'' சமர்ப்பிக்கப்படுகிறது. இவரை வழிபட சூழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி விடுதலை கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கினால் வாழ்வில் இடர்பாடுகள் நீங்கி சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
Last edited by krishnaamma on Thu Aug 20, 2015 12:51 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
3. கபிஸ்தலம்
கும்பகோணம் - திருவையாறு பாதையில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கபிஸ்தலம் உள்ளது. பெருமாளின் விளையாட்டுகளில் மிகவும் முக்கியமாக நமக்கு கஜேந்திர மோட்சம் நினைவுக்கு வரும். அது நடந்த இடம் இத்தலம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வாலிக்கு பெருமாள் நேரடியாக காட்சிக் கொடுத்த இடம் என்பதால் இந்த ஊருக்கு கபிஸ்தலம் என்ற பெயர் ஏற்பட்டது. திருமழிசை ஆழ்வார் இங்கு மங்களாசனம் செய்துள்ளார்.
மூலவர்
அவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை, ஆற்றங்கரையில் கிடக்கும் கண்ணன் என்று சொல்லி வணங்கினார். எனவே பக்தர்களும் அதுபோல் வழிபட வாழ்வில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் தொடர்ந்து வறுமையில் இருப்பவர்கள், தொழிலில் லாபம் பெற முடியாதவர்கள், நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்து கண்ணனை வழிபட நினைத்தது நடைபெறும். இத்தலத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை, ஆராதனை செய்து வழிபட்டால், பகவான் கருடன் மூலம் பறந்து வந்து நம் கஷ்டங்களை போக்குவார் என்று தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கும்பகோணம் - திருவையாறு பாதையில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கபிஸ்தலம் உள்ளது. பெருமாளின் விளையாட்டுகளில் மிகவும் முக்கியமாக நமக்கு கஜேந்திர மோட்சம் நினைவுக்கு வரும். அது நடந்த இடம் இத்தலம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வாலிக்கு பெருமாள் நேரடியாக காட்சிக் கொடுத்த இடம் என்பதால் இந்த ஊருக்கு கபிஸ்தலம் என்ற பெயர் ஏற்பட்டது. திருமழிசை ஆழ்வார் இங்கு மங்களாசனம் செய்துள்ளார்.
மூலவர்
அவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை, ஆற்றங்கரையில் கிடக்கும் கண்ணன் என்று சொல்லி வணங்கினார். எனவே பக்தர்களும் அதுபோல் வழிபட வாழ்வில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் தொடர்ந்து வறுமையில் இருப்பவர்கள், தொழிலில் லாபம் பெற முடியாதவர்கள், நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்து கண்ணனை வழிபட நினைத்தது நடைபெறும். இத்தலத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை, ஆராதனை செய்து வழிபட்டால், பகவான் கருடன் மூலம் பறந்து வந்து நம் கஷ்டங்களை போக்குவார் என்று தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Last edited by krishnaamma on Thu Aug 20, 2015 12:42 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
4. திருக்கோவிலூர்
ஆதிகாலத்தில் இந்த தலம் மலையமான் நாடு என்று அழைக்கப்பட்டது. கிருஷ்ண பரமாத்மா செய்த அற்புதத்தால் பிறகு இத்தலம் கிருஷ்ணன் கோவில் என்று பெயர் பெற்றது. விழுப்புரம் - காட்பாடி சாலையில் திருக்கோவிலூர் உள்ளது. மகாபலி, மிருகண்டு முனிவர், பிரம்மன், இந்திரன், சனகர், சாச்யபர், காலவரி, குஷ்வஜன் ஆகியோர் இத்தலத்தில் பெருமாளை நேரில் கண்டு தரிசனம் செய்துள்ளனர்.
பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் கடைக்கழியில் சந்தித்து பெருமாளை வணங்கி ஒப்பற்ற திருவந்தாதிகளை பாடிய தலம். இத்தலத்து மூலவர் திருவிக்கிரமன். மிருகண்டு முனிவர் கேட்டுக் கொண்டதால் பெருமாள் வாமன அவதாரம் எடுத்து காட்டினார். அவர் சங்கை வலது பக்கமும், சக்கரத்தை இடது பக்கமும் மாற்றி வைத்துள்ளார். உற்சவர் கோபாலன். அவர் சீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார்.
கிருஷ்ணர் தினமும் இத்தலத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்வதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன் முதலாக இத்தலத்தில்தான் பாடப்பெற்றது. இவ்வளவு பெருமைமிகு இத்தலத்தில் திருவிக்கிரமரையும், கிருஷ்ணரையும் வழிபட்டால், எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சரி, அவற்றை கிருஷ்ண பரமாத்மா பனி கட்டியை உருக வைப்பது போல் தீர்த்து விடுவார். குறிப்பாக கடன் தொல்லை, குடும்ப பிரச்சினை, எதிரிகள் தொல்லை, உறவினர்களின் துரோகம் போன்ற பிரச்சினைகள் கிருஷ்ணரின் அருளால் தீரும்.
ஆதிகாலத்தில் இந்த தலம் மலையமான் நாடு என்று அழைக்கப்பட்டது. கிருஷ்ண பரமாத்மா செய்த அற்புதத்தால் பிறகு இத்தலம் கிருஷ்ணன் கோவில் என்று பெயர் பெற்றது. விழுப்புரம் - காட்பாடி சாலையில் திருக்கோவிலூர் உள்ளது. மகாபலி, மிருகண்டு முனிவர், பிரம்மன், இந்திரன், சனகர், சாச்யபர், காலவரி, குஷ்வஜன் ஆகியோர் இத்தலத்தில் பெருமாளை நேரில் கண்டு தரிசனம் செய்துள்ளனர்.
பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் கடைக்கழியில் சந்தித்து பெருமாளை வணங்கி ஒப்பற்ற திருவந்தாதிகளை பாடிய தலம். இத்தலத்து மூலவர் திருவிக்கிரமன். மிருகண்டு முனிவர் கேட்டுக் கொண்டதால் பெருமாள் வாமன அவதாரம் எடுத்து காட்டினார். அவர் சங்கை வலது பக்கமும், சக்கரத்தை இடது பக்கமும் மாற்றி வைத்துள்ளார். உற்சவர் கோபாலன். அவர் சீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார்.
கிருஷ்ணர் தினமும் இத்தலத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்வதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன் முதலாக இத்தலத்தில்தான் பாடப்பெற்றது. இவ்வளவு பெருமைமிகு இத்தலத்தில் திருவிக்கிரமரையும், கிருஷ்ணரையும் வழிபட்டால், எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சரி, அவற்றை கிருஷ்ண பரமாத்மா பனி கட்டியை உருக வைப்பது போல் தீர்த்து விடுவார். குறிப்பாக கடன் தொல்லை, குடும்ப பிரச்சினை, எதிரிகள் தொல்லை, உறவினர்களின் துரோகம் போன்ற பிரச்சினைகள் கிருஷ்ணரின் அருளால் தீரும்.
Last edited by krishnaamma on Thu Aug 20, 2015 12:42 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
5. திருக்கண்ணங்குடி
கிருஷ்ண பரமாத்மாவின் விளையாட்டு நடந்த தலங்களுள் திருக்கண்ணங் குடியும் ஒன்றாகும். திருவாரூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயம் பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டது. ஒரு தடவை வசிஷ்டர், வெண்ணையை கிருஷ்ணராக பிடித்து, அதுஇளகாதபடி வைத்து வணங்கிக் கொண்டிருந்தார். இதை கண்டு மனம் மகிழ்ந்த கிருஷ்ணர், குழந்தை வடிவம் எடுத்து வந்து அந்த வெண்ணையை தின்று விட்டார்.
இதை கண்டு பதறிப்போன வசிஷ்டர், குழந்தை கிருஷ்ணரை விரட்டினார். உடனே குழந்தை கிருஷ்ணர் ஓடி சென்று இந்த கோவிலில் உள்ள மகிழ மரத்தடியில் பதுங்கினார். அந்த மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மகரிஷிகள், கிருஷ்ணனை யார் என்று தெரியாமல் பிடித்து கட்டி போட்டனர். இதனால்தான் இந்த ஊருக்கு திருக்கண்ணங்குடி என்ற பெயர் ஏற்ப்பட்டது.
இத்தலத்தில் மூலவரும், உற்சவரும் ஒரே மாதிரி காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சென்று வழிபட்டால் பரம்பரை சொத்துக்கள் நம் கையை விட்டு போகாது. ஒருவேளை போய் இருந்தால் திரும்ப கிடைத்து விடும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவர்களின் குறைகளை இத்தலத்து பெருமாள் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
கிருஷ்ண பரமாத்மாவின் விளையாட்டு நடந்த தலங்களுள் திருக்கண்ணங் குடியும் ஒன்றாகும். திருவாரூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயம் பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டது. ஒரு தடவை வசிஷ்டர், வெண்ணையை கிருஷ்ணராக பிடித்து, அதுஇளகாதபடி வைத்து வணங்கிக் கொண்டிருந்தார். இதை கண்டு மனம் மகிழ்ந்த கிருஷ்ணர், குழந்தை வடிவம் எடுத்து வந்து அந்த வெண்ணையை தின்று விட்டார்.
இதை கண்டு பதறிப்போன வசிஷ்டர், குழந்தை கிருஷ்ணரை விரட்டினார். உடனே குழந்தை கிருஷ்ணர் ஓடி சென்று இந்த கோவிலில் உள்ள மகிழ மரத்தடியில் பதுங்கினார். அந்த மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மகரிஷிகள், கிருஷ்ணனை யார் என்று தெரியாமல் பிடித்து கட்டி போட்டனர். இதனால்தான் இந்த ஊருக்கு திருக்கண்ணங்குடி என்ற பெயர் ஏற்ப்பட்டது.
இத்தலத்தில் மூலவரும், உற்சவரும் ஒரே மாதிரி காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சென்று வழிபட்டால் பரம்பரை சொத்துக்கள் நம் கையை விட்டு போகாது. ஒருவேளை போய் இருந்தால் திரும்ப கிடைத்து விடும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவர்களின் குறைகளை இத்தலத்து பெருமாள் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
nalla pathivu krishnaammaa . samayam kidaikkum bothu muzhuvathum padikkiren ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1158350shobana sahas wrote:nalla pathivu krishnaammaa . samayam kidaikkum bothu muzhuvathum padikkiren ...
மெதுவா படியுங்கோ...நோ ப்ரோப்ளேம்............திருக்கண்ண மங்கை இல் இருக்கும் 'பக்ஷி ராஜர்' தான் எங்கள் குலதெய்வம் .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
திருக்கோவிலூர் சென்றுள்ளேன் மற்ற ஸ்தலங்கள் யாவும் திருவாரூர் பக்கத்தில் உள்ளனவா ?
Re: பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1158570கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:திருக்கோவிலூர் சென்றுள்ளேன் மற்ற ஸ்தலங்கள் யாவும் திருவாரூர் பக்கத்தில் உள்ளனவா ?
ஆமாம், ஓர் வண்டி எடுத்துக்கொண்டால் ஒரு சுத்து போய்வந்துடலாம்........ஆனால் நானும் இன்னும் 5 ஐயும் ஒரே சேர பார்த்தது இல்லை......இந்த வருடமாவது குதிர்கிறதா பார்ப்போம் கிருபா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்
» பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து
» தினமும் 3 ஜிபி: பிஎஸ்என்எல் வாரி வழங்கும் அதிரடி சலுகைகள்!!
» இன்று (9.8.13) ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம்
» அன்பை வாரி வழங்குங்கள் - சாய்பாபா
» பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து
» தினமும் 3 ஜிபி: பிஎஸ்என்எல் வாரி வழங்கும் அதிரடி சலுகைகள்!!
» இன்று (9.8.13) ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம்
» அன்பை வாரி வழங்குங்கள் - சாய்பாபா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|