Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்!
3 posters
Page 1 of 1
பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்!
தமிழகத்தின் மிகப் பெரிய தலைவர் அவர்; உரையாடலில், ஆங்கிலம் கலந்து தான் பேசுவார். மேடை என்றாலோ, பேட்டி என்றாலோ அவரது மொழி நடையே, அடியோடு மாறி, அபாரமாகி விடும். 'பொது'விற்கு வந்து விட்டார் அல்லவா!
இந்த நுணுக்கம் பலருக்கு தெரிவதே இல்லை. ஏதோ வீட்டிற்குள் நடந்து கொள்வது போலவே, பொது இடத்திலும் நடந்து, அடிக்கின்றனர்; அசிங்கமாக பேசி, தங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்கின்றனர்.
'ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில்' நடந்த சம்பவம் இது —
வயதான தாய்க்கும், அவர் மகனுக்கும் மேல், 'பெர்த்' ஒதுக்கப்பட்டிருந்தன. எதிரே இருந்த கீழ், 'பெர்த்'காரரைப் பார்த்து, 'உங்க, 'பெர்'த்தை கொடுக்கிறீங்களா...' என்று அந்த வயதான பெண்மணி கேட்க, அவரோ, மூத்த குடிமகள் என்று கூட பாராமல் மறுத்தார்.
விடாமல் அந்தப் பெண்மணி, 'என்னால மேலே ஏற முடியல; குடுக்கக்கூடாதா...' என்று சற்று இறங்கிக் கேட்க, பார்த்துக் கொண்டிருந்த மகன் டென்ஷனாகி, ஏகமாய் கத்த ஆரம்பித்து விட்டார்.
'பெர்த்' மறுக்கப்பட்ட போது சுருங்கிய அத்தாயின் முகம், மகனது கத்தலில் மேலும் சுருங்கி விட்டது.
பொது இடத்தில், குடும்ப உறுப்பினர்களை எப்படி நடத்துவது என்று தெரியாதவர்களுள், ஆண்கள் தாம் பெரும்பான்மை இடத்தை வகிக்கின்றனர்.
வீட்ல எலி வெளியில புலி என்று ஒரு படம் வந்தது. இத்தகைய புலிகள் தாம் இந்த ஆண்கள். பொது இடங்களில், நம் வீட்டுப் பெண்கள் பதிலுக்கு குரலை உயர்த்த மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான், இவர்கள் ஆடித் தீர்க்கின்றனர்.
நான் சுயபுராணம் பாடுவதாக நீங்கள் எண்ண மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில் ஒன்றை சொல்கிறேன்... வீட்டில் நமக்காக எவ்வளவு பணிவிடை செய்கிறாள் என்கிற மகிழ்ச்சியில், வெளியிடங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்லும் போது, என் மனைவிக்கு நன்கு பணிவிடை செய்வேன்.
ரயிலில், 'பெர்த்' மீது, 'பெட்ஷீட்' விரித்து கொடுப்பது முதல், குறைவான எடையை மட்டுமே சுமக்கும்படி பார்த்துக் கொள்வதிலிருந்து, காயப்படுத்தாத சொற்களை பேசுவது வரை, என் மனைவி மனம் கோணாதபடி கவனித்து கொள்வேன்.
கடைசி நிமிடங்களில் ரயில் நிலையங்களில், ரயிலை பிடிக்க, அங்கும், இங்கும் மனைவி, பிள்ளைகளை ஓட வைக்கும் குடும்பத் தலைவன், 'சனியனே... சீக்கிரம் வந்து தொலை...' என, திட்டித் தீர்ப்பான்.
'முடியலைங்க...' என்பாள் மனைவி.
'ஊம்! நல்லா வரப் போகுதுடி என் வாயில...' என, ஆரம்பித்து, அநாகரிகமாகப் பேசுவதை, ரயில்வே ஸ்டேஷன்களில் நிறைய பார்க்கிறோம்.
தன்னுடைய வேகத்திற்கு மனைவியால் நடக்க முடியவில்லை என்பதும், மறதி, கவனக்குறைவுகள் எல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்களா... இவற்றிற்கு தான் எவ்வளவு திட்டு!
பிள்ளைகளை இன்னும் மோசமாக நடத்துகின்றனர். பிள்ளை இப்படி மானத்தை வாங்குகிறதே என்கிற கோபத்தில், 'டின்' கட்டி, பார்க்கிறவர்களின் வெறுப்பிற்கும் ஆளாகின்றனர்.
பொது இடங்களில் நடந்து கொள்கிற விதம் பற்றி, புறப்படும் முன்பே பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி விட வேண்டும். பொது இடங்களில் எது எதற்கு அனுமதி இல்லை என்பதில், பிள்ளைகள் தெளிவாக இல்லை எனில், அது பெற்றோரின் குறையே!
பொது இடங்களில் நல்ல செயல்களை செய்யும் போது, முதுகில் மட்டுமல்ல, பாராட்டு வார்த்தைகளால் தட்டிக் கொடுக்க வேண்டும். தவறுகளை, கண்ணசைவில் மட்டுமே கண்டிக்க வேண்டும்.
புரியாத வயதுப் பிள்ளைகளுக்கு, 'டிஸ்கவுன்ட்' கொடுத்து அரட்டை, லூட்டி சேட்டைகளுக்கு இடமளித்து விடலாம். கவனத்தை திசை திருப்ப முயன்றால், இப்பிள்ளைகளை அடக்கி விடலாம். பொது இடங்களில், குடும்ப உறுப்பினர்களை கண்ணியமாக நடத்துங்கள்; பலர் மத்தியில் நாம் ஏற்படுத்தும் காயங்கள், ரணங்களாகி சீக்கிரம் ஆறுவதில்லை.
லேனா தமிழ்வாணன்
இந்த நுணுக்கம் பலருக்கு தெரிவதே இல்லை. ஏதோ வீட்டிற்குள் நடந்து கொள்வது போலவே, பொது இடத்திலும் நடந்து, அடிக்கின்றனர்; அசிங்கமாக பேசி, தங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்கின்றனர்.
'ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில்' நடந்த சம்பவம் இது —
வயதான தாய்க்கும், அவர் மகனுக்கும் மேல், 'பெர்த்' ஒதுக்கப்பட்டிருந்தன. எதிரே இருந்த கீழ், 'பெர்த்'காரரைப் பார்த்து, 'உங்க, 'பெர்'த்தை கொடுக்கிறீங்களா...' என்று அந்த வயதான பெண்மணி கேட்க, அவரோ, மூத்த குடிமகள் என்று கூட பாராமல் மறுத்தார்.
விடாமல் அந்தப் பெண்மணி, 'என்னால மேலே ஏற முடியல; குடுக்கக்கூடாதா...' என்று சற்று இறங்கிக் கேட்க, பார்த்துக் கொண்டிருந்த மகன் டென்ஷனாகி, ஏகமாய் கத்த ஆரம்பித்து விட்டார்.
'பெர்த்' மறுக்கப்பட்ட போது சுருங்கிய அத்தாயின் முகம், மகனது கத்தலில் மேலும் சுருங்கி விட்டது.
பொது இடத்தில், குடும்ப உறுப்பினர்களை எப்படி நடத்துவது என்று தெரியாதவர்களுள், ஆண்கள் தாம் பெரும்பான்மை இடத்தை வகிக்கின்றனர்.
வீட்ல எலி வெளியில புலி என்று ஒரு படம் வந்தது. இத்தகைய புலிகள் தாம் இந்த ஆண்கள். பொது இடங்களில், நம் வீட்டுப் பெண்கள் பதிலுக்கு குரலை உயர்த்த மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான், இவர்கள் ஆடித் தீர்க்கின்றனர்.
நான் சுயபுராணம் பாடுவதாக நீங்கள் எண்ண மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில் ஒன்றை சொல்கிறேன்... வீட்டில் நமக்காக எவ்வளவு பணிவிடை செய்கிறாள் என்கிற மகிழ்ச்சியில், வெளியிடங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்லும் போது, என் மனைவிக்கு நன்கு பணிவிடை செய்வேன்.
ரயிலில், 'பெர்த்' மீது, 'பெட்ஷீட்' விரித்து கொடுப்பது முதல், குறைவான எடையை மட்டுமே சுமக்கும்படி பார்த்துக் கொள்வதிலிருந்து, காயப்படுத்தாத சொற்களை பேசுவது வரை, என் மனைவி மனம் கோணாதபடி கவனித்து கொள்வேன்.
கடைசி நிமிடங்களில் ரயில் நிலையங்களில், ரயிலை பிடிக்க, அங்கும், இங்கும் மனைவி, பிள்ளைகளை ஓட வைக்கும் குடும்பத் தலைவன், 'சனியனே... சீக்கிரம் வந்து தொலை...' என, திட்டித் தீர்ப்பான்.
'முடியலைங்க...' என்பாள் மனைவி.
'ஊம்! நல்லா வரப் போகுதுடி என் வாயில...' என, ஆரம்பித்து, அநாகரிகமாகப் பேசுவதை, ரயில்வே ஸ்டேஷன்களில் நிறைய பார்க்கிறோம்.
தன்னுடைய வேகத்திற்கு மனைவியால் நடக்க முடியவில்லை என்பதும், மறதி, கவனக்குறைவுகள் எல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்களா... இவற்றிற்கு தான் எவ்வளவு திட்டு!
பிள்ளைகளை இன்னும் மோசமாக நடத்துகின்றனர். பிள்ளை இப்படி மானத்தை வாங்குகிறதே என்கிற கோபத்தில், 'டின்' கட்டி, பார்க்கிறவர்களின் வெறுப்பிற்கும் ஆளாகின்றனர்.
பொது இடங்களில் நடந்து கொள்கிற விதம் பற்றி, புறப்படும் முன்பே பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி விட வேண்டும். பொது இடங்களில் எது எதற்கு அனுமதி இல்லை என்பதில், பிள்ளைகள் தெளிவாக இல்லை எனில், அது பெற்றோரின் குறையே!
பொது இடங்களில் நல்ல செயல்களை செய்யும் போது, முதுகில் மட்டுமல்ல, பாராட்டு வார்த்தைகளால் தட்டிக் கொடுக்க வேண்டும். தவறுகளை, கண்ணசைவில் மட்டுமே கண்டிக்க வேண்டும்.
புரியாத வயதுப் பிள்ளைகளுக்கு, 'டிஸ்கவுன்ட்' கொடுத்து அரட்டை, லூட்டி சேட்டைகளுக்கு இடமளித்து விடலாம். கவனத்தை திசை திருப்ப முயன்றால், இப்பிள்ளைகளை அடக்கி விடலாம். பொது இடங்களில், குடும்ப உறுப்பினர்களை கண்ணியமாக நடத்துங்கள்; பலர் மத்தியில் நாம் ஏற்படுத்தும் காயங்கள், ரணங்களாகி சீக்கிரம் ஆறுவதில்லை.
லேனா தமிழ்வாணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்!
பொது இடங்களில் நல்ல செயல்களை செய்யும் போது,
முதுகில் மட்டுமல்ல, பாராட்டு வார்த்தைகளால் தட்டிக்
கொடுக்க வேண்டும்.
தவறுகளை, கண்ணசைவில் மட்டுமே கண்டிக்க வேண்டும்.
-
![பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Re: பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்!
//நான் சுயபுராணம் பாடுவதாக நீங்கள் எண்ண மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில் ஒன்றை சொல்கிறேன்... வீட்டில் நமக்காக எவ்வளவு பணிவிடை செய்கிறாள் என்கிற மகிழ்ச்சியில், வெளியிடங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்லும் போது, என் மனைவிக்கு நன்கு பணிவிடை செய்வேன்.
ரயிலில், 'பெர்த்' மீது, 'பெட்ஷீட்' விரித்து கொடுப்பது முதல், குறைவான எடையை மட்டுமே சுமக்கும்படி பார்த்துக் கொள்வதிலிருந்து, காயப்படுத்தாத சொற்களை பேசுவது வரை, என் மனைவி மனம் கோணாதபடி கவனித்து கொள்வேன்.//
"Touch wood " எங்கள் வீட்டில் இப்படித்தான் நடக்கும்
ரயிலில், 'பெர்த்' மீது, 'பெட்ஷீட்' விரித்து கொடுப்பது முதல், குறைவான எடையை மட்டுமே சுமக்கும்படி பார்த்துக் கொள்வதிலிருந்து, காயப்படுத்தாத சொற்களை பேசுவது வரை, என் மனைவி மனம் கோணாதபடி கவனித்து கொள்வேன்.//
"Touch wood " எங்கள் வீட்டில் இப்படித்தான் நடக்கும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்!
நல்ல பதிவு . நன்றி அம்மா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாமியாரை நடத்தும் விதம்!
» பொது இடங்களில் தலை சொறிந்து...
» உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள்
» பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
» பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை
» பொது இடங்களில் தலை சொறிந்து...
» உறையூர் முற்காலத்தில் அழைக்கப்பட்ட விதம் என்ன?- பொது அறிவு கேள்விகள்
» பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!
» பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|