Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை விமர்சனம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
4 posters
Page 1 of 1
திரை விமர்சனம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
ஆண்களின் நட்பு திருமணத்துக்குப் பிறகும் தொடர்வது சாத்தியமா? நட்புக்கும் திருமண / காதல் வாழ்க் கைக்கும் இருக்கும் முரண்களைத் தீர்க்கவே முடியாதா? இந்தக் கேள்விக் கான பதில்தான் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’.
வாசுவும் (சந்தானம்) சரவணனும் (ஆர்யா) பால்யம் முதலே நண்பர்கள். இருவரில் வாசுவுக்குக் கல்யாணம் நடக்கிறது. சரவணன் செய்யும் முட்டாள் தனமான குறும்புகளால் வாசுவின் மனைவி செல்லம்மா (பானு) எரிச்சல் அடைகிறாள். சரவணனுடனான நட்பை வெட்டிவிட்டு வந்தால்தான் தாம்பத்திய வாழ்க்கை என்கிறாள் செல்லம்மா. சரவணனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது வாசுவின் கணக்கு.
சரவணன் ஐஸ்வர்யாவைக் (தமன்னா) கண்டதுமே காதலில் விழுகிறான். ஆனால் ஐஸ்வர்யா, சரவணனைப் பிடிக்க வில்லை என்று விலகிச் செல்கிறாள். ஏகப்பட்ட துரத்தல்களுக்குப் பிறகு காதல் கைகூடும்போது வாசுவால் பிரச் சினை முளைக்கிறது.
திருமண / காதல் உறவால் நட்புக்கு வரும் சோதனை என்ன ஆயிற்று?
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச் சவங்க; ஒண்ணாவே குடிச்சவங்க என்று முதல் காட்சியில் தொடங்கும் டாஸ் மாக் விளம்பரம் படம் நெடுகத் தொடர் கிறது. குடியே வாழ்வு என்றிருக்கும் நண்பர்களுக்கு நட்பின் எல்லை எது என்று தெரிவதில்லை. முதலிரவன்று படுக்கை அறைக்குள் விபரீதக் குறும்பு செய்யும் அளவுக்கு ஒரு நட்பு இருந்தால் அதை எந்த மனைவியால் ஏற்க முடியும்? படத்தின் தொடக்கமே இப்படி இருக்கிறது. தன்னை உதாசீனப்படுத்தும் தமன்னாவை வெறுப்பேற்றிப் பொறாமை கொள்ளவைக்க வேண்டும் என்பதற்காக அவளது தோழி வித்யூ ராமனை நண்பர்கள் கறிவேப் பிலையாகப் பயன்படுத்துவதும் அவரது உடல்பருமனையும் அவரது குடும்பத் தினரையும் கேவலப்படுத்துவதும் இழிவான நகைச்சுவை.
அசட்டுத்தனமாக நடந்துகொள்வது பற்றிய சொரணையே இல்லாத நண்பர் கள் தங்களைத் தூக்கியெறிந்த மனைவி, காதலி இருவரையும் பணியவைக்க சங்கம் ஆரம்பித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அங்கே ஷகிலா வரு கிறார். ஊடகங்களும் ஓடோடி வரு கின்றன. நகைச்சுவை என்ற பெயரால் ராஜேஷ் அரங்கேற்றும் அபத்தங்களுக்கு எல்லையே கிடையாதா?
ஒரு பெண்ணைக் கவர்வது எப்படி என்பதுதான் பெரும்பாலான படங் களின் தலையாய பிரச்சினை. அதை வைத்துத்தான் ராஜேஷ் படத்தை ஓட்டு கிறார். ஆனால் அதற்கான காட்சிகளில் துளியாவது புதுமை இருக்க வேண் டாமா? நட்பால் காதலுக்கும் குடும்ப வாழ்வுக்கும் வரும் பிரச்சினையைச் சொல்லும் காட்சிகளும் மனதைக் கவரும் வகையில் இல்லை.
போதாக்குறைக்கு ஆபாச இரட்டை அர்த்த வசனங்களும் நகைச்சுவை போர்வை போர்த்திக்கொண்டு ஆங் காங்கே எட்டிப் பார்க்கின்றன.
சரவணனாக ஆர்யாவும் வாசுவாக சந்தானமும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். சந்தானத் தின் நகைச்சுவையைவிட, அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. ஐஸ்வர் யாவாக நடித்திருக்கும் தமன்னா, செல்லம்மாவாக நடித்திருக்கும் பானு ஆகியோரின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. ஒரு காட்சியே வந்தாலும் விஷால் கவர்கிறார். ஆனால் அந்தக் காட்சியும் டாஸ்மாக் விளம்பரம்தான்.
இமானின் இசையில் பாடல்கள் இளைஞர்களைத் தாளம் போடவைக் கின்றன. ராஜேஷ் இந்தப் படத்தில் எடுத்துக்கொண்ட விஷயம் முக்கிய மானது. ஆண்களின் நட்பு அவர்கள் திருமண வாழ்க்கையை எப்படிப் பாதிக் கிறது என்பது தீவிரமாக விவாதிக்க வேண்டிய கேள்வி. இதை வைத்து நகைச்சுவைப் படம் எடுக்க அவர் விரும்பியதில் தவறில்லை. ஆனால் குடும்பம் - நட்பு என்னும் முரணைக் காட்டுவதற்கான காட்சிகளில் கற்பனை வறட்சி தெரிவதுதான் பிரச்சினை. திரும்பத் திரும்ப மதுக் கோப்பையை உயர்த்துவதும் கலாய்த்தல் என்னும் பெயரால் யாரையாவது கேவலப் படுத்துவதும்தான் நகைச்சுவை என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பார் போலி ருக்கிறது. சந்தானத்தின் சீரிய துணை யுடன் இந்தக் காரியத்தை அவர் படம் முழுவதும் செய்கிறார். குண்டாக இருக்கும் பெண்களைக் கேவலப் படுத்துகிறார். அப்பாவிக் குடும்பத்தைக் கேவலப்படுத்துகிறார். அப்படிக் கேவலப் படும் குடும்பத்தின் ஜாதி அடை யாளத்தையும் வெளிப்படையாகவே காட்டுகிறார். இளம் ரசிகர்களைக் கிச்சு கிச்சு மூட்டினால் போதும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.
நகைச்சுவைக்கான கற்பனைப் பஞ்சத்தைக் காட்டும் படமாக இதைச் சொல்லலாம்.
தி இந்து
வாசுவும் (சந்தானம்) சரவணனும் (ஆர்யா) பால்யம் முதலே நண்பர்கள். இருவரில் வாசுவுக்குக் கல்யாணம் நடக்கிறது. சரவணன் செய்யும் முட்டாள் தனமான குறும்புகளால் வாசுவின் மனைவி செல்லம்மா (பானு) எரிச்சல் அடைகிறாள். சரவணனுடனான நட்பை வெட்டிவிட்டு வந்தால்தான் தாம்பத்திய வாழ்க்கை என்கிறாள் செல்லம்மா. சரவணனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது வாசுவின் கணக்கு.
சரவணன் ஐஸ்வர்யாவைக் (தமன்னா) கண்டதுமே காதலில் விழுகிறான். ஆனால் ஐஸ்வர்யா, சரவணனைப் பிடிக்க வில்லை என்று விலகிச் செல்கிறாள். ஏகப்பட்ட துரத்தல்களுக்குப் பிறகு காதல் கைகூடும்போது வாசுவால் பிரச் சினை முளைக்கிறது.
திருமண / காதல் உறவால் நட்புக்கு வரும் சோதனை என்ன ஆயிற்று?
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச் சவங்க; ஒண்ணாவே குடிச்சவங்க என்று முதல் காட்சியில் தொடங்கும் டாஸ் மாக் விளம்பரம் படம் நெடுகத் தொடர் கிறது. குடியே வாழ்வு என்றிருக்கும் நண்பர்களுக்கு நட்பின் எல்லை எது என்று தெரிவதில்லை. முதலிரவன்று படுக்கை அறைக்குள் விபரீதக் குறும்பு செய்யும் அளவுக்கு ஒரு நட்பு இருந்தால் அதை எந்த மனைவியால் ஏற்க முடியும்? படத்தின் தொடக்கமே இப்படி இருக்கிறது. தன்னை உதாசீனப்படுத்தும் தமன்னாவை வெறுப்பேற்றிப் பொறாமை கொள்ளவைக்க வேண்டும் என்பதற்காக அவளது தோழி வித்யூ ராமனை நண்பர்கள் கறிவேப் பிலையாகப் பயன்படுத்துவதும் அவரது உடல்பருமனையும் அவரது குடும்பத் தினரையும் கேவலப்படுத்துவதும் இழிவான நகைச்சுவை.
அசட்டுத்தனமாக நடந்துகொள்வது பற்றிய சொரணையே இல்லாத நண்பர் கள் தங்களைத் தூக்கியெறிந்த மனைவி, காதலி இருவரையும் பணியவைக்க சங்கம் ஆரம்பித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அங்கே ஷகிலா வரு கிறார். ஊடகங்களும் ஓடோடி வரு கின்றன. நகைச்சுவை என்ற பெயரால் ராஜேஷ் அரங்கேற்றும் அபத்தங்களுக்கு எல்லையே கிடையாதா?
ஒரு பெண்ணைக் கவர்வது எப்படி என்பதுதான் பெரும்பாலான படங் களின் தலையாய பிரச்சினை. அதை வைத்துத்தான் ராஜேஷ் படத்தை ஓட்டு கிறார். ஆனால் அதற்கான காட்சிகளில் துளியாவது புதுமை இருக்க வேண் டாமா? நட்பால் காதலுக்கும் குடும்ப வாழ்வுக்கும் வரும் பிரச்சினையைச் சொல்லும் காட்சிகளும் மனதைக் கவரும் வகையில் இல்லை.
போதாக்குறைக்கு ஆபாச இரட்டை அர்த்த வசனங்களும் நகைச்சுவை போர்வை போர்த்திக்கொண்டு ஆங் காங்கே எட்டிப் பார்க்கின்றன.
சரவணனாக ஆர்யாவும் வாசுவாக சந்தானமும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். சந்தானத் தின் நகைச்சுவையைவிட, அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. ஐஸ்வர் யாவாக நடித்திருக்கும் தமன்னா, செல்லம்மாவாக நடித்திருக்கும் பானு ஆகியோரின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. ஒரு காட்சியே வந்தாலும் விஷால் கவர்கிறார். ஆனால் அந்தக் காட்சியும் டாஸ்மாக் விளம்பரம்தான்.
இமானின் இசையில் பாடல்கள் இளைஞர்களைத் தாளம் போடவைக் கின்றன. ராஜேஷ் இந்தப் படத்தில் எடுத்துக்கொண்ட விஷயம் முக்கிய மானது. ஆண்களின் நட்பு அவர்கள் திருமண வாழ்க்கையை எப்படிப் பாதிக் கிறது என்பது தீவிரமாக விவாதிக்க வேண்டிய கேள்வி. இதை வைத்து நகைச்சுவைப் படம் எடுக்க அவர் விரும்பியதில் தவறில்லை. ஆனால் குடும்பம் - நட்பு என்னும் முரணைக் காட்டுவதற்கான காட்சிகளில் கற்பனை வறட்சி தெரிவதுதான் பிரச்சினை. திரும்பத் திரும்ப மதுக் கோப்பையை உயர்த்துவதும் கலாய்த்தல் என்னும் பெயரால் யாரையாவது கேவலப் படுத்துவதும்தான் நகைச்சுவை என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பார் போலி ருக்கிறது. சந்தானத்தின் சீரிய துணை யுடன் இந்தக் காரியத்தை அவர் படம் முழுவதும் செய்கிறார். குண்டாக இருக்கும் பெண்களைக் கேவலப் படுத்துகிறார். அப்பாவிக் குடும்பத்தைக் கேவலப்படுத்துகிறார். அப்படிக் கேவலப் படும் குடும்பத்தின் ஜாதி அடை யாளத்தையும் வெளிப்படையாகவே காட்டுகிறார். இளம் ரசிகர்களைக் கிச்சு கிச்சு மூட்டினால் போதும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.
நகைச்சுவைக்கான கற்பனைப் பஞ்சத்தைக் காட்டும் படமாக இதைச் சொல்லலாம்.
தி இந்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திரை விமர்சனம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திரை விமர்சனம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
//நகைச்சுவைக்கான கற்பனைப் பஞ்சத்தைக் காட்டும் படமாக இதைச் சொல்லலாம்//
ரொம்ப சரி.....சரியான ஜவ்வாக இருக்கு படம்
ரொம்ப சரி.....சரியான ஜவ்வாக இருக்கு படம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திரை விமர்சனம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
மேற்கோள் செய்த பதிவு: 1157750krishnaamma wrote://நகைச்சுவைக்கான கற்பனைப் பஞ்சத்தைக் காட்டும் படமாக இதைச் சொல்லலாம்//
ரொம்ப சரி.....சரியான ஜவ்வாக இருக்கு படம்![]()
ரொம்ப சரி அம்மா . முதல் 20 நிமிடம் கூட பார்க்க முடியல ... நேற்றைக்கு பார்க்க நினைத்தோம்.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: திரை விமர்சனம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
மேற்கோள் செய்த பதிவு: 1157753shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157750krishnaamma wrote://நகைச்சுவைக்கான கற்பனைப் பஞ்சத்தைக் காட்டும் படமாக இதைச் சொல்லலாம்//
ரொம்ப சரி.....சரியான ஜவ்வாக இருக்கு படம்![]()
ரொம்ப சரி அம்மா . முதல் 20 நிமிடம் கூட பார்க்க முடியல ... நேற்றைக்கு பார்க்க நினைத்தோம்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யா யா - திரை விமர்சனம்!
» திரை விமர்சனம்: ஜோ
» வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க – திரைப்படம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» மஹா திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: ஜோ
» வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க – திரைப்படம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» மஹா திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|