Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூடான இட்லி சாம்பார்
+2
krishnaamma
ayyasamy ram
6 posters
Page 1 of 1
சூடான இட்லி சாம்பார்
-
புரதச் சத்து பற்றிப் பேசும்போதே, புலால் உணவின் புரதத்தைப் பற்றிதான் அதிகம் சொல்கிறார்கள். சமீபகாலத்தில், செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுவன், மரத்தடி நிழலில் முளைத்த காளான்களைப் பறித்துக்கொண்டு, எதிரில் இருந்த அவனுடைய குடிசைக்குள் புகுந்தான். இதை எதற்குப் பறிக்கின்றாய் என்று அவனைக் கேட்க, ‘அம்மா பறிக்கச் சொன்னாங்க. கூட்டு செய்யத்தான்’ என்று பதிலளித்தான்.
மலைவாழ் மக்களும், சில கிராம மக்களும் பல காலமாக உணவாக உபயோகிக்கும் காளான்களை இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் உணவியல் நிபுணர்களும் மிகச்சிறந்த புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருளாக சிபாரிசு செய்கிறார்கள். இப்போது இந்தக் காளான்களை திருமண வீடுகளில்கூடப் பரிமாறுகிறார்கள். இதில் நீர்ச் சத்தும் முழுமையான புரதச் சத்தும் உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்கள் என்று எல்லா வயதினரும் இதைச் சாப்பிடலாம்.
நம் உணவில் பருப்பு வகைகள் முக்கிய அளவு புரதத்தைத் தருகின்றது. ‘ஏழையின் இறைச்சி’ என்று மேல் நாட்டினரால் அழைக்கப்படும் பருப்பு வகைகள், நம் உணவு முறையில் முக்கியத்துவம் வகிக்கிறது. பருப்பு வகையில் இறைச்சி, முட்டை, பால் ஆகிய உணவைவிட புரதத்தின் தரம் குறைவாக இருக்கலாம். ஆனால், இயற்கை நமக்கு தேவையான அளவு மற்ற உணவுகளில் பருப்பு வகைகளில் இல்லாத அமினோ அமிலங்களைப் படைத்திருக்கிறது. இயற்கைக்குத்தான் நம் மீது எத்தனை கருணை. பருப்பு மற்றும் அரிசியின் கலவையில் நாம் சமைக்கும் உணவுகள், புரத அளவிலும் தரத்திலும் முழுத்தன்மை அடைகிறது. நாம் இந்த நுணுக்கங்களை பெரிதாக ஆராயாமல் இருக்கலாம்.
அன்றாடம், சராசரி குடும்பங்களில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் உட்கொள்கிறார்கள். காலை உணவாக பிரசித்தி பெற்ற இட்லி மற்றும் தோசையின் கலவையைக் கவனிப்போம். அரிசியில் லைசீன் (lysine) குறைவாக உள்ளது. உளுந்து வகையில் மிதியோநைன் (methonine) என்ற அமிலோ அமிலம் குறைவாக உள்ளது. இவை இரண்டும் 4:1 என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து, இட்லி, தோசை என்று உபயோகிக்கும்போது தேவைக்கேற்ப புரத அளவு முழுமையாக உடலுக்குக் கிடைக்கிறது.
1980-களில் அரிசிக்கும் கோதுமைக்கும் போட்டி. 90-களில் சீரியல்ஸ் என்று பதப்படுத்தப்பட்ட தானிய வகைகள் பிரசித்தி பெற்றது. 2000-ல் காலை உணவாக வெறும் பழங்களோ அல்லது ஓட்ஸ் கஞ்சிக்கு மாறியது. இன்று 2015-ல், மறுபடியும் உலக அளவில் மிக ஊட்டச்சத்துமிக்க காலை உணவு என்று இட்லி, தோசை, பொங்கலை வரிசைப்படுத்தி உணவியல் நிபுணர்கள் அழுத்திச் சொல்கிறார்கள்.
இந்த ‘சுடச்சுட இட்லி சாம்பார்’, இவ்வளவு நல்லதை தருகிறதா என்று ஆச்சரியமாக உள்ளதா? எல்லா வகை காலை உணவுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவை தானியம் மற்றும் பருப்பு வகைகளின் கலவையில் இருந்தே தயார் செய்யப்படுகிறது. உதாரணமாக இட்லி, பொங்கல், ஆப்பம், என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் தேவையான கலோரியுடன் உடம்பின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான புரதச் சத்தும் சரிவிகிதத்தில் கொடுப்பதால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கு தெம்பும் சுறுசுறுப்பும் அளிக்கிறது.
பருப்பு வகைகள் மட்டுமின்றி பால், தயிர், இறைச்சி, மீன் வகைகள், கொட்டை வகைகள் போன்ற உணவுகளிலிருந்தும் நமக்குத் தரமான புரதம் கிடைக்கிறது. மனித வாழ்க்கையில் வளர்ச்சி அதிகம் இருக்கும் பருவம் குழந்தைப் பருவம், விடலைப் பருவம், பெண்கள் கருவுறும்போது மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் நேரம். இக்காலகட்டங்களில், உடல் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கவும் புரதம் மிக முக்கிய ஒரு பங்கை ஏற்கிறது.
பருப்பை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள இயலாதவர்கள் முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முளை கட்டிய பயிறு வகைகளைச் சாப்பிடுவதால், வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். புரதச் சத்து எளிமையாக செரிக்கக்கூடிய சத்தாக மாற்றப்படுகிறது.
=By அருணா ஷ்யாம்
நன்றி- தினமணி
Re: சூடான இட்லி சாம்பார்
//இன்று 2015-ல், மறுபடியும் உலக அளவில் மிக ஊட்டச்சத்துமிக்க காலை உணவு என்று இட்லி, தோசை, பொங்கலை வரிசைப்படுத்தி உணவியல் நிபுணர்கள் அழுத்திச் சொல்கிறார்கள்.
எல்லா வகை காலை உணவுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவை தானியம் மற்றும் பருப்பு வகைகளின் கலவையில் இருந்தே தயார் செய்யப்படுகிறது. உதாரணமாக இட்லி, பொங்கல், ஆப்பம், என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் தேவையான கலோரியுடன் உடம்பின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான புரதச் சத்தும் சரிவிகிதத்தில் கொடுப்பதால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கு தெம்பும் சுறுசுறுப்பும் அளிக்கிறது.//
இதை சொன்னா யார் கேட்கிறார்கள்? .....அந்த காலத்தில் நம் பெரியவர்கள் தெரியாமலா சொல்லி வைத்துவிட்டு போனார்கள்? .........ரொம்ப அருமையான பகிர்வு ராம் அண்ணா
எல்லா வகை காலை உணவுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவை தானியம் மற்றும் பருப்பு வகைகளின் கலவையில் இருந்தே தயார் செய்யப்படுகிறது. உதாரணமாக இட்லி, பொங்கல், ஆப்பம், என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் தேவையான கலோரியுடன் உடம்பின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான புரதச் சத்தும் சரிவிகிதத்தில் கொடுப்பதால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கு தெம்பும் சுறுசுறுப்பும் அளிக்கிறது.//
இதை சொன்னா யார் கேட்கிறார்கள்? .....அந்த காலத்தில் நம் பெரியவர்கள் தெரியாமலா சொல்லி வைத்துவிட்டு போனார்கள்? .........ரொம்ப அருமையான பகிர்வு ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சூடான இட்லி சாம்பார்
இட்டலியும் சாம்பாரும் ( நேரிசை வெண்பா )
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
இட்டலி
========
பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
இட்டலி
========
பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சூடான இட்லி சாம்பார்
என் தம்பி , "உன்னுடன் ஹோடல்லுக்கு வந்தால் , இட்லிதான் நீ சாப்பிடுவாய் .
நானும் இட்லிதான் சாப்பிடவேண்டி இருக்கும் " என்று கிண்டல் அடிப்பான் .
ரமணியன்
நானும் இட்லிதான் சாப்பிடவேண்டி இருக்கும் " என்று கிண்டல் அடிப்பான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சூடான இட்லி சாம்பார்
ஜாஹீதாபானு wrote:பொங்கல் சாம்பார் இட்லி சாம்பார்
அத்துடன் 2 வடையும் சேர்த்துடுங்கோ பானு .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூடான இட்லி சாம்பார்
M.Jagadeesan wrote:இட்டலியும் சாம்பாரும் ( நேரிசை வெண்பா )
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
இட்டலி
========
பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !
அஹா....அஹா..........அருமை.அருமை.............சூப்பர் ஜெகதீசன் ஐயா..............அதிலும் இந்த வரிகள்.......
//.மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல்//
இது தோசைக்கும் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூடான இட்லி சாம்பார்
அருமையான பதிவு அய்யா . நன்றி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: சூடான இட்லி சாம்பார்
மேற்கோள் செய்த பதிவு: 1154347M.Jagadeesan wrote:இட்டலியும் சாம்பாரும் ( நேரிசை வெண்பா )
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
இட்டலி
========
பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !
அருமை அய்யா..
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Similar topics
» இன்று உலக இட்லி தினம்! மென்மையான இட்லி செய்முறை எப்படி!
» இட்லி மிஞ்சி போனால் - இட்லி ரோஸ்ட்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி!
» இட்லி மிஞ்சி போனால் - இட்லி ரோஸ்ட்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|