Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்
5 posters
Page 1 of 1
குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்
குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்
வீடுகளில் சேரும் பழைய பொருட்களை எடைக்கு வாங்கி விற்பதற்கென்றே 'குப்பவண்டி டாட் காம்' என்ற இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர் திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்கள்.
வேஸ்ட் பேப்பர் மற்றும் பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் பொருட் கள் எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் சேரும் பழைய பொருட்களை விற்பதற்கு ஏதுவாக இருக்கிறது 'குப்பவண்டி டாட் காம்'. எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த சந்திரகுமார், காமராஜ், சசிகுமார், சதீஸ்குமார் ஆகிய நண்பர்களின் வித்தியாசமான யோசனையில் உருவானது இது.
இவர்களின் முயற்சியில் 2012-ம் ஆண்டு சாதாரணமாக ஆரம் பிக்கப்பட்ட குப்பவண்டி டாட் காமில் இப்போது ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்கள். திருச்சியில் கே.கே. நகர், கருமண்டபம், தில்லைநகர், எ.புதூர் என ஏரியா வாரியாக தெருப் பெயர்கள், டாட் காமில் இருக்கின்றன. என்ன விலைக்கு பழைய பொருட்களை வாங்குகிறார் கள் என்ற விலைப் பட்டியல் மற்றும் குறிப்பிட்ட ஏரியாவுக்கு குப்பவண்டி வரும் கிழமை குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.
திருச்சி நகர மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள குப்பவண்டி டாட் காம் குறித்து 'தி இந்து'விடம் சந்திரகுமார் கூறியதாவது:
''நியூஸ் பேப்பர் போடுவது உள்ளிட்ட பகுதிநேர வேலை பார்த்து அதன் மூலம் படித்தவன் நான். அப்போது பழைய பேப்பரை எடைக்கு போட்டு கொடுக்கும் படி பலர் என்னிடம் தருவார்கள். அப்படிதான் இந்த ஐடியா எனக்கு வந்தது. நண்பர்களிடம் இது குறித்து தெரிவிக்க, குப்பவண்டி டாட் காம் உருவானது. ஆரம்பித்தபோது மக்களிடம் பெரிதாக வரவேற்பு இல்லை. அதனால் சனி, ஞாயிறு மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்று பொருட்களை சேகரித்து வருவோம். மற்ற நாட்களில் வேறு வேலைக்கு சென்றுவிடுவோம்.
கடந்த 2 ஆண்டுகளில் இணைய தள பயன்பாடு அதிகரித்ததன் விளைவாகவும், எங்களிடம் ஒரு முறை வாடிக்கையாளராக பயனடைந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த பலரை அறிமுகம் செய்து வைத்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக குப்பவண்டி டாட் காம் திருச்சி மக்களிடையே பிரபலமானது. தற்போது பார்த்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இந்த தொழிலில் பிஸியாக இருக்கிறோம்.
திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு ஏரியாவுக்கு குப்பை வண்டியை எடுத்துச் செல்கிறோம். இப்போது சரக்கு ஆட்டோவில் எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இது தவிர திருச்சியில் 2 இடங்களில் கிடங்கு கள் உள்ளன.
எங்களுக்கு லாபம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் எங்களால் முடிந்த வரை பிளாஸ் டிக்கை மறுசுழற்சி செய்ய மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க சிறு முயற்சி செய்கிறோம் என்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. எந்த தொழிலையும் இன்றைய நவீன காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயமாக சாதிக்கலாம்'' என்றார்.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
வீடுகளில் சேரும் பழைய பொருட்களை எடைக்கு வாங்கி விற்பதற்கென்றே 'குப்பவண்டி டாட் காம்' என்ற இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர் திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்கள்.
வேஸ்ட் பேப்பர் மற்றும் பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் பொருட் கள் எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் சேரும் பழைய பொருட்களை விற்பதற்கு ஏதுவாக இருக்கிறது 'குப்பவண்டி டாட் காம்'. எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த சந்திரகுமார், காமராஜ், சசிகுமார், சதீஸ்குமார் ஆகிய நண்பர்களின் வித்தியாசமான யோசனையில் உருவானது இது.
இவர்களின் முயற்சியில் 2012-ம் ஆண்டு சாதாரணமாக ஆரம் பிக்கப்பட்ட குப்பவண்டி டாட் காமில் இப்போது ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்கள். திருச்சியில் கே.கே. நகர், கருமண்டபம், தில்லைநகர், எ.புதூர் என ஏரியா வாரியாக தெருப் பெயர்கள், டாட் காமில் இருக்கின்றன. என்ன விலைக்கு பழைய பொருட்களை வாங்குகிறார் கள் என்ற விலைப் பட்டியல் மற்றும் குறிப்பிட்ட ஏரியாவுக்கு குப்பவண்டி வரும் கிழமை குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.
திருச்சி நகர மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள குப்பவண்டி டாட் காம் குறித்து 'தி இந்து'விடம் சந்திரகுமார் கூறியதாவது:
''நியூஸ் பேப்பர் போடுவது உள்ளிட்ட பகுதிநேர வேலை பார்த்து அதன் மூலம் படித்தவன் நான். அப்போது பழைய பேப்பரை எடைக்கு போட்டு கொடுக்கும் படி பலர் என்னிடம் தருவார்கள். அப்படிதான் இந்த ஐடியா எனக்கு வந்தது. நண்பர்களிடம் இது குறித்து தெரிவிக்க, குப்பவண்டி டாட் காம் உருவானது. ஆரம்பித்தபோது மக்களிடம் பெரிதாக வரவேற்பு இல்லை. அதனால் சனி, ஞாயிறு மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்று பொருட்களை சேகரித்து வருவோம். மற்ற நாட்களில் வேறு வேலைக்கு சென்றுவிடுவோம்.
கடந்த 2 ஆண்டுகளில் இணைய தள பயன்பாடு அதிகரித்ததன் விளைவாகவும், எங்களிடம் ஒரு முறை வாடிக்கையாளராக பயனடைந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த பலரை அறிமுகம் செய்து வைத்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக குப்பவண்டி டாட் காம் திருச்சி மக்களிடையே பிரபலமானது. தற்போது பார்த்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இந்த தொழிலில் பிஸியாக இருக்கிறோம்.
திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு ஏரியாவுக்கு குப்பை வண்டியை எடுத்துச் செல்கிறோம். இப்போது சரக்கு ஆட்டோவில் எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இது தவிர திருச்சியில் 2 இடங்களில் கிடங்கு கள் உள்ளன.
எங்களுக்கு லாபம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் எங்களால் முடிந்த வரை பிளாஸ் டிக்கை மறுசுழற்சி செய்ய மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க சிறு முயற்சி செய்கிறோம் என்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. எந்த தொழிலையும் இன்றைய நவீன காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயமாக சாதிக்கலாம்'' என்றார்.
நன்றி தி ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்
MBA படித்து இருந்தும் , குப்பைத் தொழில் என கருதாது ,
சுற்று சூழல் நலன் கருதி , பிளாஸ்டிக்கை மறுசுயற்சி செய்யும்
இவர்கள் பணி போற்றத்தக்கதே .
தமிழகத்தில் /இந்தியாவில் பல ஊர்களில் கிளைகள் திறந்து நாட்டிற்கு சேவை செய்யும் பணி தொடரட்டும் .
ரமணியன் .
சுற்று சூழல் நலன் கருதி , பிளாஸ்டிக்கை மறுசுயற்சி செய்யும்
இவர்கள் பணி போற்றத்தக்கதே .
தமிழகத்தில் /இந்தியாவில் பல ஊர்களில் கிளைகள் திறந்து நாட்டிற்கு சேவை செய்யும் பணி தொடரட்டும் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்
இவர்களை வாழ்த்தியும் , சென்னையிலோ வேறெங்கிலாவது கிளை உண்டா என்று
விசாரித்து இருந்தேன் .
அவர்களிடம் இருந்து வந்த பதில் :
ரமணியன்
விசாரித்து இருந்தேன் .
அவர்களிடம் இருந்து வந்த பதில் :
மதிப்பிற்குரிய ஐயா திரு மணியன் அவர்களுக்கு ...
ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, உங்கள் வாழ்த்துக்கள் எங்களை மென்மேலும் வளர செய்யும், ஐய தற்பொழுது நாங்கள் நால்வரும் திருச்சியில் மட்டுமே எங்கள் சேவையை செய்துகொண்டிருக்கிறோம் , தற்பொழுது எங்கள் கிளையை சென்னையில் தொடங்கும் எண்ணம் இல்லை, இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறோம், மேலும் சென்னையில் கிளை திறக்கும் எண்ணம் வரும் பொழுது நிச்சயமாக் முதன்மையாக உங்களுக்கு தெரிவிக்கிறோம் .
உங்கள் அன்புக்கு நன்றி.. தமிழை வளர்ப்போம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்
நிஜமாகவே மாற்றி யோசித்து சாதித்து தான் காட்டியிருக்கிறார்கள். வளரட்டும் இவர்களது பணி. தொடரட்டும் இவர்களது சேவை. பகிர்வுக்கு நன்றி ஐயா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்
மிகவும் பாராட்டுக்குரியது இந்த செயல் . இந்தியாவின் இளைஞர் களின் அறிவுத் திறன் அபாரம்.
கஷ்டபட்டும் இஷ்டபட்டும் உழைகிரார்கள் . ரொம்ப சந்தோசம் .
கஷ்டபட்டும் இஷ்டபட்டும் உழைகிரார்கள் . ரொம்ப சந்தோசம் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சங்கர்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
Similar topics
» மாத்தி யோசித்து விட்டாளே...!
» டாட் காம் - ஒரு பக்க கதை
» அழிந்துபோகும் நிலையில் டாட் காம்(.COM) ஆதிக்கம்.!
» எலக்ஷன் ரன்னர்ஸ் டாட் காம் - ஜாலியா ஒரு கற்பனை
» புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்
» டாட் காம் - ஒரு பக்க கதை
» அழிந்துபோகும் நிலையில் டாட் காம்(.COM) ஆதிக்கம்.!
» எலக்ஷன் ரன்னர்ஸ் டாட் காம் - ஜாலியா ஒரு கற்பனை
» புதிய திரைப்படங்களுக்கு சவால் விடும் திருட்டு வி.சி.டி. டாட் காம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|