Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கின்னஸ் கிழவி
+4
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கின்னஸ் கிழவி
கிழவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.இப்பவோ,அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்தது.கிழவியின் பேரன் மாடசாமி, கிழவியின் தலைமாட்டில் கவலையுடன் உட்கார்ந்திருந்தான்.வீட்டின் முன்பாகக் கூட்டம் கூடியிருந்தது.
ஊர்ப்பெரியவர்கள் மாடசாமியிடம்,"தம்பி சொந்தக் காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடு.இன்னிக்கு ராவுக்குக்கூடத் தாங்காது."-என்று சொன்னார்கள்.
வைத்தியர் வந்து பார்த்தார்."பல்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு,நம்ப முடியாது.ஆகவேண்டியதைக் கவனிங்க"-என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஊர்மக்கள்,ஆண்களும், பெண்களுமாக வந்து கிழவியைப் பார்ப்பதும், போவதுமாக இருந்தார்கள்.மங்காத்தா கிழவியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அவளுக்குப் பிரசவம் பார்க்கத் தெரியும்.அந்த ஊரில் முக்கால்வாசிப்பேர்
கிழவிப் பிரசவம் பார்த்துப் பிறந்தவர்கள்.
அந்தஊர் ஜோசியர் கிழவியை வந்து பார்த்தார்.முகத்தை சற்றுநேரம் உற்று நோக்கினார்.மூக்கிலே கை வைத்துப் பார்த்தார்.கிழவியின் உள்ளங்கையை விரித்துப் பார்த்துவிட்டு சற்றுநேரம் சிந்தனை செய்தார்."தம்பி பாட்டியோட ஜாதகம் ஏதாவது இருக்கா? ?"-என்று மாடசாமியிடம் கேட்டார்.
"தேடிப் பார்க்கணும்"-என்று மாடசாமி சொன்னான்.
ஜோசியர் மாடசாமியைப் பார்த்து," தம்பி இந்த உலகத்துல பொறக்குற ஒவ்வொருத்தரும் ஒரு நோக்கத்துக் காகத்தான்
ஆண்டவன் படைக்கிறான்.அந்த நோக்கம் முடியற வரைக்கும்
ஆண்டவன் அவங்களை அழைச்சிக்கிறது இல்ல.அதே சமயத்துல. வந்த நோக்கம் முடிஞ்சிட்டுதுன்னா ஆண்டவன் அவங்களை விட்டு வைக்கிறதும் இல்ல.சிலபேரு சின்ன வயசுல சாகறதுக்கும், சிலபேரு நூறு வயசுலகூட நல்லா இருக்கிறதுக்கும் இதுதான் காரணம். கிழவி இந்த உலகத்துக்கு
வந்த நோக்கம் இன்னும் முடியல.அந்த நோக்கம் முடியற வரைக்கும் எமன் கிட்ட நெருங்கமுடியாது.இதுநான் கத்துகிட்ட ஜோசியத்து மேல ஆணை."-என்று சொன்னார்.
ஜோசியர் சொன்னதைக் கேட்டு வீட்டின் முன்பு கூடியிருந்தவர்கள் சிரித்தார்கள்." என்ன ஜோசியரே கிழவி மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறா. இனிமே கிழவி என்ன செய்யப்போறா? நோக்கம் அது, இதுன்னு பேசறீங்களே?' என்று பரிகாசம் செய்தார்கள்.
"ஐயா நான் சொல்றது முக்காலும் உண்மை.கிழவி எந்த நோக்கத்துக்காக வந்தான்னு அவ செத்த பின்னாடிதான் தெரியும்"-என்று அடித்துப் பேசினார்.
மறுநாள் காலை.கிழவி கோமா நிலையில் இருந்தாள். வெறுமனே மூச்சு மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தது.நேரம் செல்லச்செல்ல நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது.பாதம் சில்லிட்டு அந்தக் குளிர்ச்சி மெல்ல மெல்ல மேலேறியது.திடீரென்று கிழவியின் உடல் ஒரு வெட்டு வெட்டி இழுத்தது.அவ்வளவுதான்.அதற்குப்பின் கிழவியின் உடலில் எந்த அசைவும் இல்லை.
கிழவி இறந்துவிட்டதை உறுதி செய்த ஊர்மக்கள் அவளது இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.வீட்டின் முன்பு பந்தல் போடப்பட்டது.வெகு நேர்த்தியாக பாடை கட்டி, ஆட்டபாட்டத்துடன் ,வாண வேடிக்கையுடன் கிழவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ஒருவழியாகக் கிழவியை அடக்கம் செய்துவிட்டு ஊர்மக்கள் திரும்பினர்.வீட்டின்முன்பு இருந்த பெஞ்சில் சிலர் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.சிலர் செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்தனர்.ஜோசியரும் ஒரு ஓரமாக குந்தியிருந்தார்.
மாடசாமி வெளியில் வந்தான்.ஜோசியரைப் பார்த்து,"ஐயா வீட்டின் பரண்மீது இந்தப் பஞ்சாங்கம் கிடந்தது."-என்று சொல்லி அதை ஜோசியரிடம் கொடுத்தான்.
ஜோசியர் அதை வாங்கிப் பார்த்தார்.அதில் கிழவியின் பிறந்த ஆண்டு, தேதி,நேரம் ஆகியவை குறிப்பிட்டிருந்தது.
அப்பொழுது செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த பெரியவர்,"ஜோசியரே இந்த செய்தியைப் படியுங்க.ஜப்பானில் ஒரு கிழவி நேத்து செத்துப் போனாளாம்.அவளுக்கு வயசு 116 -ன்னு போட்டிருக்கு.அவளோட பிறந்த தேதி எல்லாம் போட்டிருக்கு.உலகத்துல அதிக வயசான கிழவி அவதானாம்.கின்னஸ் சாதனைன்னு சொல்றாங்க."-என்று சொல்லி பேப்பரை ஜோசியரிடம் கொடுத்தார்.
பேப்பரை அவசரமாக வாங்கிப் பார்த்தார் ஜோசியர்.அவர் முகத்தில் திடீரென்று ஒரு பிரகாசம் தோன்றியது."நான் சொன்னது வீண் போகல.நம்ம கிழவி சாதனை படச்சுட்டா.இந்த பஞ்சாங்கத்தையும்,இந்தப் பேப்பர்ல வந்திருக்குற செய்தியையும் பாருங்க.நம்மூர் கிழவியின் பிறந்த தேதியும்,ஜப்பான் கிழவியின் பிறந்த தேதியும் ஒன்னா இருக்கு,ஜப்பான் கிழவி நேத்து செத்துப் போனா.நம்மூர் கிழவி இன்னிக்கு செத்துப் போனா.ஆக ஜப்பான் கிழவியைவிட நம்மூர் கிழவிக்கு வயசு ஒருநாள் அதிகம்.இந்த சாதனை படைக்கிறதுக்கு தான் கிழவியோட உசிரு இழுத்துக்கிட்டு இருந்தது.என்னோட கணிப்பு எப்பவும் சரியாத்தான் இருக்கும்"-என்று சொல்லி முடித்தார்.
உலகில் அதிக வயதான கிழவி என்ற பெருமையை மங்காத்தா கிழவி பெற்றுவிட்டாள்.இந்த சாதனைப் படைத்த கிழவியின் பெயரை கின்னஸ் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.
ஊர்ப்பெரியவர்கள் மாடசாமியிடம்,"தம்பி சொந்தக் காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடு.இன்னிக்கு ராவுக்குக்கூடத் தாங்காது."-என்று சொன்னார்கள்.
வைத்தியர் வந்து பார்த்தார்."பல்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு,நம்ப முடியாது.ஆகவேண்டியதைக் கவனிங்க"-என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஊர்மக்கள்,ஆண்களும், பெண்களுமாக வந்து கிழவியைப் பார்ப்பதும், போவதுமாக இருந்தார்கள்.மங்காத்தா கிழவியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அவளுக்குப் பிரசவம் பார்க்கத் தெரியும்.அந்த ஊரில் முக்கால்வாசிப்பேர்
கிழவிப் பிரசவம் பார்த்துப் பிறந்தவர்கள்.
அந்தஊர் ஜோசியர் கிழவியை வந்து பார்த்தார்.முகத்தை சற்றுநேரம் உற்று நோக்கினார்.மூக்கிலே கை வைத்துப் பார்த்தார்.கிழவியின் உள்ளங்கையை விரித்துப் பார்த்துவிட்டு சற்றுநேரம் சிந்தனை செய்தார்."தம்பி பாட்டியோட ஜாதகம் ஏதாவது இருக்கா? ?"-என்று மாடசாமியிடம் கேட்டார்.
"தேடிப் பார்க்கணும்"-என்று மாடசாமி சொன்னான்.
ஜோசியர் மாடசாமியைப் பார்த்து," தம்பி இந்த உலகத்துல பொறக்குற ஒவ்வொருத்தரும் ஒரு நோக்கத்துக் காகத்தான்
ஆண்டவன் படைக்கிறான்.அந்த நோக்கம் முடியற வரைக்கும்
ஆண்டவன் அவங்களை அழைச்சிக்கிறது இல்ல.அதே சமயத்துல. வந்த நோக்கம் முடிஞ்சிட்டுதுன்னா ஆண்டவன் அவங்களை விட்டு வைக்கிறதும் இல்ல.சிலபேரு சின்ன வயசுல சாகறதுக்கும், சிலபேரு நூறு வயசுலகூட நல்லா இருக்கிறதுக்கும் இதுதான் காரணம். கிழவி இந்த உலகத்துக்கு
வந்த நோக்கம் இன்னும் முடியல.அந்த நோக்கம் முடியற வரைக்கும் எமன் கிட்ட நெருங்கமுடியாது.இதுநான் கத்துகிட்ட ஜோசியத்து மேல ஆணை."-என்று சொன்னார்.
ஜோசியர் சொன்னதைக் கேட்டு வீட்டின் முன்பு கூடியிருந்தவர்கள் சிரித்தார்கள்." என்ன ஜோசியரே கிழவி மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறா. இனிமே கிழவி என்ன செய்யப்போறா? நோக்கம் அது, இதுன்னு பேசறீங்களே?' என்று பரிகாசம் செய்தார்கள்.
"ஐயா நான் சொல்றது முக்காலும் உண்மை.கிழவி எந்த நோக்கத்துக்காக வந்தான்னு அவ செத்த பின்னாடிதான் தெரியும்"-என்று அடித்துப் பேசினார்.
மறுநாள் காலை.கிழவி கோமா நிலையில் இருந்தாள். வெறுமனே மூச்சு மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தது.நேரம் செல்லச்செல்ல நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது.பாதம் சில்லிட்டு அந்தக் குளிர்ச்சி மெல்ல மெல்ல மேலேறியது.திடீரென்று கிழவியின் உடல் ஒரு வெட்டு வெட்டி இழுத்தது.அவ்வளவுதான்.அதற்குப்பின் கிழவியின் உடலில் எந்த அசைவும் இல்லை.
கிழவி இறந்துவிட்டதை உறுதி செய்த ஊர்மக்கள் அவளது இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.வீட்டின் முன்பு பந்தல் போடப்பட்டது.வெகு நேர்த்தியாக பாடை கட்டி, ஆட்டபாட்டத்துடன் ,வாண வேடிக்கையுடன் கிழவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ஒருவழியாகக் கிழவியை அடக்கம் செய்துவிட்டு ஊர்மக்கள் திரும்பினர்.வீட்டின்முன்பு இருந்த பெஞ்சில் சிலர் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.சிலர் செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்தனர்.ஜோசியரும் ஒரு ஓரமாக குந்தியிருந்தார்.
மாடசாமி வெளியில் வந்தான்.ஜோசியரைப் பார்த்து,"ஐயா வீட்டின் பரண்மீது இந்தப் பஞ்சாங்கம் கிடந்தது."-என்று சொல்லி அதை ஜோசியரிடம் கொடுத்தான்.
ஜோசியர் அதை வாங்கிப் பார்த்தார்.அதில் கிழவியின் பிறந்த ஆண்டு, தேதி,நேரம் ஆகியவை குறிப்பிட்டிருந்தது.
அப்பொழுது செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த பெரியவர்,"ஜோசியரே இந்த செய்தியைப் படியுங்க.ஜப்பானில் ஒரு கிழவி நேத்து செத்துப் போனாளாம்.அவளுக்கு வயசு 116 -ன்னு போட்டிருக்கு.அவளோட பிறந்த தேதி எல்லாம் போட்டிருக்கு.உலகத்துல அதிக வயசான கிழவி அவதானாம்.கின்னஸ் சாதனைன்னு சொல்றாங்க."-என்று சொல்லி பேப்பரை ஜோசியரிடம் கொடுத்தார்.
பேப்பரை அவசரமாக வாங்கிப் பார்த்தார் ஜோசியர்.அவர் முகத்தில் திடீரென்று ஒரு பிரகாசம் தோன்றியது."நான் சொன்னது வீண் போகல.நம்ம கிழவி சாதனை படச்சுட்டா.இந்த பஞ்சாங்கத்தையும்,இந்தப் பேப்பர்ல வந்திருக்குற செய்தியையும் பாருங்க.நம்மூர் கிழவியின் பிறந்த தேதியும்,ஜப்பான் கிழவியின் பிறந்த தேதியும் ஒன்னா இருக்கு,ஜப்பான் கிழவி நேத்து செத்துப் போனா.நம்மூர் கிழவி இன்னிக்கு செத்துப் போனா.ஆக ஜப்பான் கிழவியைவிட நம்மூர் கிழவிக்கு வயசு ஒருநாள் அதிகம்.இந்த சாதனை படைக்கிறதுக்கு தான் கிழவியோட உசிரு இழுத்துக்கிட்டு இருந்தது.என்னோட கணிப்பு எப்பவும் சரியாத்தான் இருக்கும்"-என்று சொல்லி முடித்தார்.
உலகில் அதிக வயதான கிழவி என்ற பெருமையை மங்காத்தா கிழவி பெற்றுவிட்டாள்.இந்த சாதனைப் படைத்த கிழவியின் பெயரை கின்னஸ் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கின்னஸ் கிழவி
நன்றாக இருக்கிறது ஜெகதீசன் .
இதை தவிர மஞ்சு என்ற கதையும் என் கவனத்தை கவர்ந்தது .
இந்த கதைகள் ,தங்கள் கற்பனையில் உதித்தவைதானே .
எந்தன் கதைகள் என்றே ஒரு தனித்திரி உருவாக்கி ,தொடர்பதிவாக
பதியலாமே .
ரமணியன்
இதை தவிர மஞ்சு என்ற கதையும் என் கவனத்தை கவர்ந்தது .
இந்த கதைகள் ,தங்கள் கற்பனையில் உதித்தவைதானே .
எந்தன் கதைகள் என்றே ஒரு தனித்திரி உருவாக்கி ,தொடர்பதிவாக
பதியலாமே .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: கின்னஸ் கிழவி
என் கதைகள் எல்லாமே சொந்தப் படைப்புகளே ! " எனது கதைகள் " என்று தனித் திரி தொடங்கி கதைகளை பதித்து வந்தேன் . ஆனால் அது எல்லோர் கண்ணிலும் படுவதில்லை . பின்னூட்டமும் இடுவதில்லை . எனவேதான் இப்போது என் கதைகளைத் தனியாகப் பதிவிட்டு வருகிறேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கின்னஸ் கிழவி
பொதுவாக எந்தன் கவனம் கதைகள் பக்கம் போவதில்லை .
ஏற்கனவே வாராந்திரியில் வந்த கதைகளே (தலைப்புக்கள் மூலம் அறியமுடிகிறது )
மறு பதிவுகளாக வருகிறது ஒரு காரணம் .
விரும்பி படிக்கும் சாரார் இருக்கிறார்கள் .
நன்றி ,ஜெகதீசன் .
ரமணியன்
ஏற்கனவே வாராந்திரியில் வந்த கதைகளே (தலைப்புக்கள் மூலம் அறியமுடிகிறது )
மறு பதிவுகளாக வருகிறது ஒரு காரணம் .
விரும்பி படிக்கும் சாரார் இருக்கிறார்கள் .
நன்றி ,ஜெகதீசன் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கின்னஸ் கிழவி
மேற்கோள் செய்த பதிவு: 1150835M.Jagadeesan wrote:என் கதைகள் எல்லாமே சொந்தப் படைப்புகளே ! " எனது கதைகள் " என்று தனித் திரி தொடங்கி கதைகளை பதித்து வந்தேன் . ஆனால் அது எல்லோர் கண்ணிலும் படுவதில்லை . பின்னூட்டமும் இடுவதில்லை . எனவேதான் இப்போது என் கதைகளைத் தனியாகப் பதிவிட்டு வருகிறேன் .
நான் தங்கள் கதைகள் படித்திருக்கேன் ஐயா...........படித்ததும் பின்னூட்டமும் போடுவேன்.....ஆனால் இன்னும் நிறையகதைகள் படிக்க வேண்டி இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கின்னஸ் கிழவி
கிருஷ்ணம்மா , ஐயாசாமிராம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கின்னஸ் கிழவி
நான் ஜோசியர் சொன்னதும் கிழவி மறு நாள் எழுந்து எதாவது ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பார்கள் என்று எண்ணி படித்தேன்.
ஆனால் கதையில் ஒரு திருப்பம்...நன்று நல்ல கதை...
ஆனால் கதையில் ஒரு திருப்பம்...நன்று நல்ல கதை...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கின்னஸ் கிழவி
மேற்கோள் செய்த பதிவு: 1150835M.Jagadeesan wrote:என் கதைகள் எல்லாமே சொந்தப் படைப்புகளே ! " எனது கதைகள் " என்று தனித் திரி தொடங்கி கதைகளை பதித்து வந்தேன் . ஆனால் அது எல்லோர் கண்ணிலும் படுவதில்லை . பின்னூட்டமும் இடுவதில்லை . எனவேதான் இப்போது என் கதைகளைத் தனியாகப் பதிவிட்டு வருகிறேன் .
பாருங்கள் ஜெகதீசன் எவ்வளவு பின்னூட்டங்கள் .!
பலருக்கு நேரமின்மை , பல பல ஜோலிகள் இருப்பினும் ,காலம் கடந்தாலும் ,
உறவுகள் , உள்ளம் கவர்ந்த பதிவுகளுக்கு ,உரிய மதிப்பை வழங்குவார்கள் .
தொடருங்கள் அய்யா !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|