Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தரமறியா மதிப்பு
Page 1 of 1
தரமறியா மதிப்பு
அறியாமை மயக்கத்தால் மக்கள் ஒரு சிறந்த அறிவாளியைக் கூட பைத்தியக்காரன் என்று கருதக்கூடும். அதேபோல் ஒரு மயக்கவாதியை மேதாவி என்றும் தங்கள் வாழ்விற்கே வழி காட்டும் தலைவன் என்றும் கருதக்கூடும்.
நாளா வட்டத்தில் அனுபவத்தின் மூலம் உண்மை தெளிவாகி மக்கள் உள்ளப்போக்கு சரியான திசைக்கு மாறிவிடும் என்பது நிச்சயம்.
ஆனால் இந்த இடைக்காலம் அறிஞர்களுக்கே சோதனை காலமாக இருக்கும். மயக்கவாதிகளுக்கோ மிக நல்ல காலம். மக்கள் கொண்ட நம்பிக்கையை மூலதனமாக வைத்துக் கொண்டே தாங்கள் திருந்திக் கொள்ள நல்ல வாய்ப்பு இருக்கின்றது.
இத்தகைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாது இழந்துவிட்ட தலைவர்களாலேயேதான் இன்று உலக மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் அனைத்தும் தோன்றியன, பெருகி நிலைத்து நீடித்து வருகின்றன.
seethamani- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
சிந்தனையாளர்கள் கடமை
ஆகாரப்பைக்கு அருகிலேயே மலப்பை அமைந்திருக்கின்றது போல சமையலறைக்கு அருகில் சில இடங்களில் கக்கூஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.
சமுதாய நலத்திற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பேரறிஞர்களிடையே சமூக பாதகச் செல்களைத் தந்திரமாகச் செய்து தங்கள் பிழைப்பை நடத்தி வரும் கயவர்களும் உள்ளார்கள்.
மலப்பையிலிருந்து ஆகாரப்பைக்கு காற்றும், கழிவுப் பொருளும் திரும்பி வராமல் இயற்கை பாதுகாத்துக்கொள்வதை போல, கக்கூஸிலிருந்து காற்று வாடை கூட சமையலறைக்கு வர ஒட்டாமல் பாதுகாக்கப்படுவது போல,
கயவர்களின் செயல் நல்லோர்களின் சேவையைக் களங்கப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது சிந்திக்கும் திறனுடைய மக்களின் கடமை.
seethamani- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
மனிதன் களங்கமற்றவன்
மனிதன் களங்கமற்றவன், தேவை, பழக்கம், அறியாமை, சந்தர்ப்பம், இவைகளால் சமுதாயத்தையும் அதன் நலத்தையும் மறந்து தன்னளவிலும் தற்கால இன்பத்திலும் குறுகி செயலாற்றுகின்றான். இதன் விளைவாக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கொண்டே எந்த மனிதனும் களங்கமுள்ளவனாக மதிக்கப்படுகிறான்.
தேவைகளை காலா காலத்தில் முடித்துக்கொள்ள, நல்ல பழக்கங்களில் நிலைக்குமாறு குழந்தை முதல் ஒழுக்கமாக வளர அறிவு சமுதாய நல நோக்கத்திலும் இயற்கைத் தத்துவ ஆராய்ச்சியிலும் செயல்பட்டு வளர்ச்சிபெற, சரியான முறையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அமர்த்திக் கொண்டால், எல்லா மனிதர்களும் களங்கமற்றவர்களாகவே காணப்படுவார்கள்.
seethamani- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
கடமையும் உரிமையும்
பிறந்த மனிதனுக்கு உலகில் பொருள் ஈட்ட, காக்க, துய்க்க, பிறர்க்கு உதவ, விரும்புவோரிடம் நட்புக் கொள்ள, இயற்கை எழில்களை ரசிக்க, சிந்தித்து தெளிந்து மகிழ முழு உரிமையுண்டு. வாழத் தெரியாதவர்களையும், வாழ இயலாதவர்களையும் சிறப்பாக வாழ வைக்கப் பொருள், ஆற்றல், அறிவு இவை மிக்கோருக்கு கடமை உண்டு. கடமையை உணர்ந்த இடத்தில் அதைப் பொறுப்போடு காலா காலத்தில் ஆற்றும் இடத்தில் உரிமை யென்ற உணர்வே எழ இடமில்லை. கடமை மறந்த இடத்தில் தான் உரிமை பல்வேறு வடிவத்தில் தோன்றுகின்றது. பிணக்கு, அச்சம், பகை, வஞ்சம், போர் மற்றும் கூறப்படும் பழிச்செயல்கள் யாவும் உரிமை வேட்கையின் விளைவுகளே. உரிமை வேட்கையோ கடமை மறந்த இடத்தில் பிறந்ததேயாகும்.
சிந்தனை ஆற்றல் மிக்க அன்பா உனது கடமைகளை உணர்ந்து முறைப்படுத்திக் கொள். மனிதனுக்கு, உடல், குடும்பம், சுற்றம், நாடு, உலகம் என்ற ஐந்து வகையிலும் கடமையுண்டு. எனினும் ஒரு மனிதன் ஆற்றலுக்கேற்ப ஒன்று முதல் ஐந்துக்கும் கடமையின் எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உடல் ஓம்பும் கடமையாகிய ஒன்று முதல் ஐந்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தும், ஒன்றால் மற்றது கெடாமலும், ஆற்றும் விழிப்பு என்றுமே எக்கடமையிலும் பிறழாத ஒழுங்கமைப்பை உருவாக்கித் தரும்.
seethamani- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
வேதம்
ஓதிக் கொண்டேயிருப்பதற்காக வேதம் தோற்றுவிக்கப் படவில்லை. அதன் உட்கருத்தை உணர்ந்து ஒழுகுவதற்காகவே வகுக்கப்பட்டது. ஓதிக்கொண்டே இருக்கும் வரையில் உணர்ந்து கொள்ளவில்லை என்பதும், உணர்ந்து கொண்டபின் ஓத வேண்டியதில்லை என்பதும் தெளிவான விளக்கமாகும்.
இதனால் வேதம் ஓதாதவர் எல்லோருமே வேதத்தின் பொருள் உணர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை ஓதாமல் உணர்ந்தோர்களுமுண்டு ஓதியும் உணராதவர்களும் உண்டு. பிறர் காதுக்கும் கருத்துக்கும் எட்டச் செய்ய வேண்டும். என்ற பெரும் நோக்கத்துடன் வேதத்தின் பொருளுணர்ந்தவர்கள் அதை ஓதினால் அவ்விடத்தில் அச்செயல் சிறந்ததே.
seethamani- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன் மதிப்பு பெரிதா?
» மதிப்பு
» மதிப்பு
» பணத்தின் மதிப்பு
» உண்மையான மதிப்பு!
» மதிப்பு
» மதிப்பு
» பணத்தின் மதிப்பு
» உண்மையான மதிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|