ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவில் வண்ணங்கள் ! வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள். பதிப்பாசிரியர் : முனைவர் அ. அறிவு நம்பி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

வானவில் வண்ணங்கள் ! வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள். பதிப்பாசிரியர் : முனைவர் அ. அறிவு நம்பி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty வானவில் வண்ணங்கள் ! வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள். பதிப்பாசிரியர் : முனைவர் அ. அறிவு நம்பி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Sun Jun 21, 2015 8:48 am

வானவில் வண்ணங்கள் !
வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள்.
பதிப்பாசிரியர் : முனைவர் அ. அறிவு நம்பி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வானவில் பண்பாட்டு மையம் வெளியீடு
மகாகவி பாரதியார் உலக மகா கவிஞர் என்று இன்று உலகம் போற்றுகின்றது. ஆனால் வாழும் காலத்தில் அவருக்கு உரிய அங்கீகாரம், பாராட்டு, பரிசு எதுவும் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. இனியாவது நல்ல படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது தான் இந்த நூல்.
இப்படி பலரும் ஆய்வு நோக்கில் பாராட்டும் போது படைப்பாளி இன்னும் கூடுதலாகவும், மேலும் தரமாகவும் படைக்க ஊக்கமாக அமையும். வழக்கறிஞர் க. இரவி அவர்களை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதில் தனி முத்திரை பதித்து வரும் சோபனா இரவியின் கணவர் என்று அறிந்தவர்கள், இந்த நூல் படித்தால் படைப்பாளி வழக்கறிஞர் கவிஞர் க. இரவியின் மனைவி சோபனா இரவி என்று சொல்வார்கள்.
பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்கள் இந்நூலின் பதிப்பாசிரியராக இருந்து ஆற்றியுள்ள நற்பணி பாராட்டுக்குரியது. 21-02-2015 அன்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வழக்கறிஞர் க.இரவி ஒரு வானவில் என்ற கருத்தரங்கில் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கவிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் இரா. சுந்தரி வரை 35 தமிழ் ஆர்வலர்கள் பேராசிரியர்கள், அறிஞர்கள் கட்டுரை நூலாகி உள்ளது. வழக்கறிஞர் க. இரவி அவர்கள் ஆங்கிலத்தில் மூன்று நூல்களும், அழகு தமிழில் ஏழு நூல்களும் எழுதி உள்ளார்.
10 நூல்கள் எழுதியுள்ள படைப்பாளியின் படைப்புப் பற்றிய திறனாய்வு. எனது பெயரான இரவி அவருக்கும் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இந்நூல் படிக்கவும் வாழும் காலத்திலேயே நமது படைப்புகள் பற்றிய ஒரு கருத்தரங்கம் நடத்தி விட வேண்டும் என்ற ஆசை எனக்கும் வந்தது.
படைப்பாளி வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகளை வாய்ப்பு உள்ளவர்கள் அவரது இணையத்திலும் வாசித்து மகிழலாம். www.ravilit.com இணையத்திலும் பார்த்தேன். திருக்குறள் பற்றிய கட்டுரை படித்து வியந்து போனேன். சென்னையில் நடந்தது போலவே மதுரையில் திருமலை மன்னர் கல்லூரியில் 24.7.2015 அன்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நானும் கட்டுரை வாசிக்க உள்ளேன்.
வழக்கறிஞர் க. இரவி என்பதை க என்ற முன் எழுத்து தந்தைக்காக இருந்த போதும் கவிஞர் இரவி என்பதன் சுருக்கமாக க. இரவி என்றும் பொருள் கொள்ளலாம். இவருக்கு மகாகவி பாரதியார் மீது அளவற்ற பற்று உள்ளது. காரணம் பாரதி கவிதைகளை நன்கு உள்வாங்கிப் படித்து உள்ளார். அவரது படைப்புகளில் பாரதியின் தாக்கம் உள்ளது. பாராட்டுக்கள். திருவள்ளுவர் மீது அளவற்ற ஈடுபாடு உள்ளது என்பதையும் படைப்புகள் உணர்த்துகின்றன.
பதிப்பாசிரியர், பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்கள் பதிப்புரையில் எழுதியுள்ளவற்றில் சிறு துளி இதோ!
ஆங்கிலத்திலும் பழுத்த புலமையாளரான இவரிடம் இருப்பவை இரண்டு (1) அறிவாற்றல் (2) ஆக்கம் நிறை செயல்பாடு இவரிடம் இல்லாதவை இரண்டு (1) அகம்பாவம் (2) ஆடம்பரம்.
கவிஞர் க. இரவி அவர்களிடம் இருக்கும் இரண்டும், இல்லாத இரண்டும் நாம் கடைபிடித்தால் நாமும் வாழ்வில் உயரலாம். வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை வசப்படும். உரைநடை வடிவிலும், கவிதை வடிவிலும் படைப்புகளை வழங்கி உள்ளார். கவிஞர் தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் குலோத்துங்கன் என்ற பெயரில் அற்புதமான கவிதைகள் எழுதி நூலாக வெளியிட்டவர். அவர் கவிஞர் க. இரவியின் கவிதைகளை மேற்கோள் காட்டி வடித்த வாழ்த்துரை மிக நன்று. பதச்சோறாக கவிஞர் க. இரவியின் கவிதை ஒன்று.
தொடுவானம் தீண்டினேன் துணையொன்று
வேண்டினேன்
கனவே கடலானது
முடியாத ஆசைகள் மூழ்கட்டும் என்றால்
மௌனம் படகானது (உன்னோடு பக். 125)
. தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் இலட்சியச் சுடரொளி இரவி என்று தலைப்பிட்டு வழங்கியுள்ள வாழ்த்துரை மிக நன்று. அதிலிருந்து சிறு துளிகள். கவிஞர் க. இரவி பற்றி முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் எழுதிய கவிதை அவரை படம் பிடித்துக் காட்டுவது போல உள்ளது.
பெண்மைக்குணமுடையான் சில நேரத்தில்
பெருஞானி போல் பேசிடுவான் ! மிகத்
தன்மைக் குணமுடையான், சில நேரம்
தபூலின் குணமுடையான்.
எண்ணியொன் றுரைப்பேன் யான்! எந்த நேரமும்
இரவியைப் போல் எவர்தான் இலங்கிடுவார் காண்!
படைப்பாளி க. இரவி அவர்கள் வழக்கறிஞர் என்பதையும் நல்ல இலக்கியவாதியாக இயங்கி வருகிறார். கதிரவனைப் போல ஓய்வின்றி உழைக்கிறார் என்பதை கவிதை உணர்த்துகின்றது.
35 பேரின் கட்டுரைகளில் இருந்து மேற்கோள் காட்டுவது என்றால் இக்கட்டுரை மதிப்புரை மிகவும் நீண்டுவிடும். முனைவர் பட்ட ஆய்வு முடித்த பேராசிரியர்கள் பலர் கட்டுரை வடித்துள்ளனர்.
முனைவர் பட்ட ஆய்வு போலவே கவிஞர் க. இரவியின் படைப்புகளை வடித்து உள்ளனர். ஒவ்வொருவரும் மேலோட்டமாக எழுதாமல் மிக நுட்பமாகவும் திட்பமாகவும் எழுதி உள்ளனர். கவிதைகளில் உள்ளவைகளில் மோனை, எதுகை, இயைபு என்று அனைத்துக் கோணத்திலும் ஆய்வு செய்து கட்டுரைகளை யாத்து உள்ளனர். படைப்புகளில் சொல் விளையாட்டு விளையாடி உள்ள ஆற்றலை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் அவர்கள் கவிஞர் வைரமுத்து அவர்களின் ஆசிரியர் அவரும், மந்திரம் போல் சொல்லினம் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கி உள்ளார்.
தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், பாராட்டும், படைப்பாளி வழக்கறிஞர் கவிஞர் க. இரவி வாழ்க பல்லாண்டு.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக் கோவை ! பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அன்புள்ள அமெரிக்கா ! பயணக் கட்டுரைகள் ! நூல் ஆசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வான் தொட்டில் ! நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum