ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்!

3 posters

Go down

'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்! Empty 'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்!

Post by சிவா Wed Jun 17, 2015 4:15 pm


ஸ்மார்ட் போன் வாசிகள் மத்தியில் பிரபலமான `செல்பி` என்ற தன்னைத்தானே படம் எடுத்துக்கொள்வது ஃபேஷனாக இருக்கிறது.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவரையிலும் தங்களின் அன்றாட நிகழ்வுகளை `செல்பி` எடுத்து ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளும், ஷேர்களும் வாங்குவதை ஸ்மார்ட் போன் வாசிகள் பெருமையாகக் கருதுகிறார்கள். இந்தப் பெருமைக்குப் பின்னால் ஒளிந்துகிடக்கும் உண்மைகள் அதிரவைப்பதாக உள்ளது.

செல்பிக்கு சாதாரண பிரஜைகள் முதற்கொண்டு நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அடிமையாகிவிட்ட நிலையை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் நாட்டின் பழைமையான பாலத்திலிருந்து தொங்கியபடி `செல்பி` எடுக்க ஆசைப்பட்ட இளம் மருத்துவ மாணவி ரேச்சல்,பாலத்திலிருந்து விழுந்து உடல் நொறுங்கி பரிதாபமாக பலியானார். அதே போல இங்கிலாந்து நாட்டின், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர் கெரீத் ஜோன்ஸ், 90 அடி உயரமான மலையுச்சியில் நின்றபடி `செல்பி` எடுக்க முயன்று, மலையுச்சியில் இருந்து விழுந்து இறந்தார்.

அண்மையில், ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் துப்பாக்கியை ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் செல்போன் மூலம் செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக டிரிக்கரை அழுத்தியதால் துப்பாக்கி குண்டு தலையில் பட்டு பரிதாபமாகப் பலியானார்.

இந்த சம்பவம் செல்பி எடுக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும் செல்பி எடுப்பது குறைந்தபாடில்லை. இவை எல்லாம் உலக நிகழ்வுகள். நமது தமிழ் நாட்டிலும் ஒரு `செல்பி` சோக சம்பவம் நடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார். 27 வயதான கூலித் தொழிலாளி. செல்பி எடுத்துக்கொள்ளும் அதீத ஆர்வம் கொண்டவர். கடந்த மார்ச் மாதம் அவர் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் மீது நாகப்பாம்பு ஊர்ந்து விளையாடியுள்ளது. அதனையறிந்த சந்திரகுமார் கொடும் நஞ்சு கொண்ட நாகப்பாம்பை கையில் பிடித்துக்கொண்டு செல்பி எடுத்து தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அந்த நேரத்தில் சந்திரகுமார் உடலில் பல இடங்களில் நாகப்பாம்பு கொத்தி, கொடிய விஷத்தை இறக்கியுள்ளது. இதனால் வாயில் நுரை தள்ளி அங்கேயே சந்திரகுமார் இறந்தார்.

இப்படி நிறைய சம்பவங்கள் அடிக்கடி நிகழத்தான் செய்கின்றன.ஆனால் செல்பி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் செல்பிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இப்படி செல்பி மோகம் பிடித்து அலைவது ஒரு வித மன நோய் என்று அதிர்ச்சி தருகிறார்கள் அமெரிக்க மனநல மருத்துவர்கள். அதே நேரத்தில் அதிலிருந்து விடுபடவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

ஒருகட்டத்தில் மொபைல் போன் மூலமும், கேமிரா மூலமும் தன்னைத் தானே, 'செல்பி' படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் அதைப் பதிவேற்றம் செய்வது, இளைஞர்களிடம் பொழுது போக்காக இருந்தது. இது தற்போது, அவர்களின் `முழுநேர பணி` யாகவே மாறிவிட்டது. இது புதுவகையான மனநோய்தான் என்று கண்டறிந்துள்ள அமெரிக்க மனநல மருத்துவர்கள், இதை மூன்று வகையாகவும் பிரித்து உள்ளனர்.

1. தினமும் மூன்று முறை, 'செல்பி' படம் எடுப்பது; அதை சமூக வலைதளங்களில் பதிவிடாதது ஆரம்ப மன நிலை.
2. தினமும் மூன்று முறை படம் எடுத்து, அதை சமூக வலை தளங்களில் தவறாமல் பதிவிடுவது இரண்டாம் நிலை.
3. எப்போதும் எதைப் பார்த்தாலும் 'செல்பி' படம் எடுத்து உடனுக்குடன் சமூக வலைதளங்களுக்கு அனுப்புவதை அன்றாட செயலாகக் கருதுவது மூன்றாவது நிலை.

இதுதான் 'செல்பி' மோகம் முற்றி, மன நோயாளியாக மாறும் நிலை என்று எச்சரிக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அதனால் செல்பி மோகத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு ஸ்மார்ட் போன் வாசிகளை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இதற்கென பிரத்யேக மருத்துவமும் 'ஒபாமா கேர்' என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் செல்பி பிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விஷேசம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், நமது இந்திய பிரதமர் மோடியை போல செல்பி பிரியரே..!

விகடன்


'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்! Empty Re: 'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்!

Post by சரவணன் Wed Jun 17, 2015 6:09 pm

யாரும் இதை கேட்பதாக தெரியவில்லை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்! Empty Re: 'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்!

Post by ayyasamy ram Sat Jun 20, 2015 10:28 pm

'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்! Empty Re: 'செல்பி மோகம்' மன நோய்...எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum