Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி !
தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி !
தமிழ் என்ற சொல்லே அழகு. தமிழ் இலக்கியம் என்றாலே அழகு தான். அழகு என்றாலே இயற்கை. இயற்கை என்றால் அழகு. சங்க இலக்கியம் என்பதே ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நிலங்களால் கட்டமைக்கப்பட்டவை. இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் வர்ணனை பாடல்கள் அழகையே படம் பிடித்தும் காட்டும்.
அழகு என்ற சொல்லை அனைவரும் விரும்புவர். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அனைவரும் அதனை விரும்புவார்கள். அழகை விரும்பாதவர் யாருமில்லை. சங்க இலக்கியத்தில் இரண்டு மான்கள், தண்ணீர் கொஞ்சமாக இருப்பதால் ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மானும், பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும் தண்ணீரை குடிக்காமல் குடிப்பது போல பாவனை செய்யும் காட்சியே அழகு. விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்ற அக அழகை உணர்த்தும் உன்னத இலக்கியம் தமிழ் இலக்கியம்.
இறையனார் பாடிய புகழ்பெற்ற பாடலான திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள் அழகை விவரிக்கும் பாடல் தான்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
(குறுந்தொகை-2; திணை : குறிஞ்சித்திணை )
பக்தி இலக்கியமான ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள் முழுவதும் அழகை உணர்த்தும் காட்சிகள் மிகுந்த பாடல்கள் உள்ளன.
...மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
‘’மதி நிறைந்த’’ என்று முழு நிலவை வர்ணிக்கும் அழகு மிக்க வரிகள்.
ஆறு வயது முதல் அறுபது வயது வரை அனைவரும் ரசிப்பது அழகு. அழகை வெறுப்பவர் உலகில் ஒருவரும் இல்லை.
மகாகவி பாரதியார் கவிதைகளில் அழகியல் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். பல கவிதைகள் அழகையே பாடும்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
தமிழ் இலக்கியத்தில் உவமை அழகு, அணி அழகு, சொல் அழகு, பொருள் அழகு என்ற பலவகை அழகுகளின் சுரங்கம் தான். அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல தமிழ் இலக்கியம், படிக்கப் படிக்க காட்சியில் வருவது அழகியலே!
சங்க காலம் மட்டுமல்ல, இக்காலக் கவிஞர்களும் அழகியலையே கவிதையாக்கி வருகின்றனர். நிலவு பற்றி பாடாத கவிஞர் இல்லை. நிலவு பற்றி பாடாதவர் கவிஞரே இல்லை என்பது உண்மை. எல்லாக் கவிஞர்களும் நிலவு பற்றி ஒரு கவிதையாவது எழுதி விடுவார்கள். நிலவு என்றாலே அழகு. அழகு என்றாலே நிலவு. நிலவை ரசித்தால் பசியும் பறந்து விடும்.
நிலவு குறித்து முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுதிய கவிதையை இணையத்தில் வாசித்த போது பிரமித்தேன். வாசித்ததும் அப்படியே மனதில் பதிந்தது. திரு. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் நல்ல கவிஞர். அவர் கதை, கட்டுரை என்று தளம் மாறி முத்திரை பதித்து வந்தாலும் அவர் கவிதையில் இன்னும் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
இதோ அவர் கவிதை!
அமைதியாக வருகின்ற நிலவல்லவா
இரவெல்லாம் நிலைத்து நிற்கிறது
இடி எனும் தண்டோரா போட்டுக் கொண்டு
வரும் மின்னல் நொடியில் மறைந்து விடுகிறது!
நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழியை நினைவூட்டும் விதமாகவும், நிலவையும், மின்னலையும் காட்சிப்படுத்தும் விதமாகவும் அமைந்த கவிதை அழகோ அழகு. படித்ததும் மனதில் பதியும் கவிதையே சிறந்த கவிதை ஆகும்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் திரைப்படத்திற்காக எழுதிய முதல் பாடல் அழகியல் சார்ந்தது.
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள், நாணுகிறாள்
வேறு உடை, பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலை பொழுது
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ
வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால், வேள்விகளை. நான் செய்தேன்.
இப்படி பல பாடல்கள் அழகியல் தொடர்பாகவே எழுதி உள்ளார். மற்றொரு பாடல் ஒன்று.
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம் உன் பார்வை.. ஒரு வரம்.
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்..
இளமையின் கனவுகள் விழியோரம்
துளிர் விடும் கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்
இப்படி அழகியல் தொடர்பான பாடல்கள் பட்டியல் இட்டால் அது நீளும்.
இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்களுக்கு தேசிய விருது பெற்ற பாடலான்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
இந்தப்பாடல் தன்னம்பிக்கை விதைக்கும் பாடலாக இருந்த போதும், மனதை அழகாக்கும் பாடல்.
கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இரண்டாவது தேசிய விருது பெற்ற பாடலான முதல் வரியே அழகே என்று தான் தொடங்கும். சைவம் திரைப்படத்தில் இடம் பெற்றது.
அழகே அழகே எதுவும் அழகே
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மை அதுதான் நீதான் அழகு !
குயிலிசை அது பாடிட – ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட – ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !
இந்தப் பாடல் பாடிய பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் சிறுமி உத்ரா பாடிய முதல் பாடலுக்கே, தந்தையைப் போல தேசிய விருது வாங்கித் தந்த பாடல், அழகே ... அழகே ... பாடல் தான்.
கம்ப இராமாயணத்தில் ஆயிரக்கணக்கான வரிகள் இருந்தாலும் ஆயிரக்கணக்கானோரின் மனதில் பதிந்த இரண்டு வரிகள் உணர்த்துவதும் அழகு தொடர்பானவை தான்.
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்
சங்க காலம் தொடங்கி, இன்றைய கணினி காலம் வரை கவிஞர்களின் பாடுபொருள் அழகு தான். என்னுடைய ஹைக்கூ கவிதைகளும் அழகை உணர்த்தி இருக்கின்றன.
( கவிஞர் இரா .இரவி ஹைக்கூ )
அமாவாசையன்று
நிலவு
எதிர் வீட்டு சன்னலில் !
-----------------------------
வானவில்
நகர்வலம்
வண்ணத்துப் பூச்சி !
-----------------------------
வனப்பு அதிகம்
வாழும் நேரம் குறைவு
வானவில் !
----------------------------
விடிய விடிய தவம்
விடிந்ததும் மரணம்
மலரில் பனித்துளி !
-----------------------------
பூக்களைப் பறிக்காதீர்
படித்ததும் பறித்தனர்
படித்தவர்கள்?
------------------------------
என் போன்று பல ஹைக்கூ கவிஞர்கள் சப்பானிய ஹைக்கூ கவிஞர்களுக்கு சவால் விடும் வகையில் மிக அழகாக படைத்து வருகின்றனர்.
புற அழகு மட்டுமல்ல, அக அழகும் அழகு தான். காந்தியடிகளின் அக அழகை உணர்த்தும் திருக்குறள்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
தந்தை பெரியாரின் அக அழகை உணர்ந்தும் திருக்குறள்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
முதல்வரானதும் இந்த ஆட்சி பெரியாருக்கு காணிக்கை என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் மன அழகை உணர்த்தும் திருக்குறள்.
நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது
அன்றே மறப்பது நன்று.
தமிழ் இலக்கியத்தில் அன்றும் இன்றும் அழகு கொட்டிக் கிடக்கின்றது .ரசிக்க வாருகள் .ரசித்தால் இதயம் இதமாகும். வாழ்க்கை வசமாகும்
தமிழ் என்ற சொல்லே அழகு. தமிழ் இலக்கியம் என்றாலே அழகு தான். அழகு என்றாலே இயற்கை. இயற்கை என்றால் அழகு. சங்க இலக்கியம் என்பதே ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நிலங்களால் கட்டமைக்கப்பட்டவை. இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் வர்ணனை பாடல்கள் அழகையே படம் பிடித்தும் காட்டும்.
அழகு என்ற சொல்லை அனைவரும் விரும்புவர். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அனைவரும் அதனை விரும்புவார்கள். அழகை விரும்பாதவர் யாருமில்லை. சங்க இலக்கியத்தில் இரண்டு மான்கள், தண்ணீர் கொஞ்சமாக இருப்பதால் ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மானும், பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மானும் தண்ணீரை குடிக்காமல் குடிப்பது போல பாவனை செய்யும் காட்சியே அழகு. விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்ற அக அழகை உணர்த்தும் உன்னத இலக்கியம் தமிழ் இலக்கியம்.
இறையனார் பாடிய புகழ்பெற்ற பாடலான திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள் அழகை விவரிக்கும் பாடல் தான்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
(குறுந்தொகை-2; திணை : குறிஞ்சித்திணை )
பக்தி இலக்கியமான ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள் முழுவதும் அழகை உணர்த்தும் காட்சிகள் மிகுந்த பாடல்கள் உள்ளன.
...மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
‘’மதி நிறைந்த’’ என்று முழு நிலவை வர்ணிக்கும் அழகு மிக்க வரிகள்.
ஆறு வயது முதல் அறுபது வயது வரை அனைவரும் ரசிப்பது அழகு. அழகை வெறுப்பவர் உலகில் ஒருவரும் இல்லை.
மகாகவி பாரதியார் கவிதைகளில் அழகியல் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். பல கவிதைகள் அழகையே பாடும்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
தமிழ் இலக்கியத்தில் உவமை அழகு, அணி அழகு, சொல் அழகு, பொருள் அழகு என்ற பலவகை அழகுகளின் சுரங்கம் தான். அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல தமிழ் இலக்கியம், படிக்கப் படிக்க காட்சியில் வருவது அழகியலே!
சங்க காலம் மட்டுமல்ல, இக்காலக் கவிஞர்களும் அழகியலையே கவிதையாக்கி வருகின்றனர். நிலவு பற்றி பாடாத கவிஞர் இல்லை. நிலவு பற்றி பாடாதவர் கவிஞரே இல்லை என்பது உண்மை. எல்லாக் கவிஞர்களும் நிலவு பற்றி ஒரு கவிதையாவது எழுதி விடுவார்கள். நிலவு என்றாலே அழகு. அழகு என்றாலே நிலவு. நிலவை ரசித்தால் பசியும் பறந்து விடும்.
நிலவு குறித்து முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுதிய கவிதையை இணையத்தில் வாசித்த போது பிரமித்தேன். வாசித்ததும் அப்படியே மனதில் பதிந்தது. திரு. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் நல்ல கவிஞர். அவர் கதை, கட்டுரை என்று தளம் மாறி முத்திரை பதித்து வந்தாலும் அவர் கவிதையில் இன்னும் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
இதோ அவர் கவிதை!
அமைதியாக வருகின்ற நிலவல்லவா
இரவெல்லாம் நிலைத்து நிற்கிறது
இடி எனும் தண்டோரா போட்டுக் கொண்டு
வரும் மின்னல் நொடியில் மறைந்து விடுகிறது!
நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழியை நினைவூட்டும் விதமாகவும், நிலவையும், மின்னலையும் காட்சிப்படுத்தும் விதமாகவும் அமைந்த கவிதை அழகோ அழகு. படித்ததும் மனதில் பதியும் கவிதையே சிறந்த கவிதை ஆகும்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் திரைப்படத்திற்காக எழுதிய முதல் பாடல் அழகியல் சார்ந்தது.
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள், நாணுகிறாள்
வேறு உடை, பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலை பொழுது
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ
வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால், வேள்விகளை. நான் செய்தேன்.
இப்படி பல பாடல்கள் அழகியல் தொடர்பாகவே எழுதி உள்ளார். மற்றொரு பாடல் ஒன்று.
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம் உன் பார்வை.. ஒரு வரம்.
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடும்..
இளமையின் கனவுகள் விழியோரம்
துளிர் விடும் கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்
இப்படி அழகியல் தொடர்பான பாடல்கள் பட்டியல் இட்டால் அது நீளும்.
இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்களுக்கு தேசிய விருது பெற்ற பாடலான்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
இந்தப்பாடல் தன்னம்பிக்கை விதைக்கும் பாடலாக இருந்த போதும், மனதை அழகாக்கும் பாடல்.
கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இரண்டாவது தேசிய விருது பெற்ற பாடலான முதல் வரியே அழகே என்று தான் தொடங்கும். சைவம் திரைப்படத்தில் இடம் பெற்றது.
அழகே அழகே எதுவும் அழகே
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மை அதுதான் நீதான் அழகு !
குயிலிசை அது பாடிட – ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட – ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !
இந்தப் பாடல் பாடிய பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் சிறுமி உத்ரா பாடிய முதல் பாடலுக்கே, தந்தையைப் போல தேசிய விருது வாங்கித் தந்த பாடல், அழகே ... அழகே ... பாடல் தான்.
கம்ப இராமாயணத்தில் ஆயிரக்கணக்கான வரிகள் இருந்தாலும் ஆயிரக்கணக்கானோரின் மனதில் பதிந்த இரண்டு வரிகள் உணர்த்துவதும் அழகு தொடர்பானவை தான்.
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்
சங்க காலம் தொடங்கி, இன்றைய கணினி காலம் வரை கவிஞர்களின் பாடுபொருள் அழகு தான். என்னுடைய ஹைக்கூ கவிதைகளும் அழகை உணர்த்தி இருக்கின்றன.
( கவிஞர் இரா .இரவி ஹைக்கூ )
அமாவாசையன்று
நிலவு
எதிர் வீட்டு சன்னலில் !
-----------------------------
வானவில்
நகர்வலம்
வண்ணத்துப் பூச்சி !
-----------------------------
வனப்பு அதிகம்
வாழும் நேரம் குறைவு
வானவில் !
----------------------------
விடிய விடிய தவம்
விடிந்ததும் மரணம்
மலரில் பனித்துளி !
-----------------------------
பூக்களைப் பறிக்காதீர்
படித்ததும் பறித்தனர்
படித்தவர்கள்?
------------------------------
என் போன்று பல ஹைக்கூ கவிஞர்கள் சப்பானிய ஹைக்கூ கவிஞர்களுக்கு சவால் விடும் வகையில் மிக அழகாக படைத்து வருகின்றனர்.
புற அழகு மட்டுமல்ல, அக அழகும் அழகு தான். காந்தியடிகளின் அக அழகை உணர்த்தும் திருக்குறள்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
தந்தை பெரியாரின் அக அழகை உணர்ந்தும் திருக்குறள்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
முதல்வரானதும் இந்த ஆட்சி பெரியாருக்கு காணிக்கை என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் மன அழகை உணர்த்தும் திருக்குறள்.
நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது
அன்றே மறப்பது நன்று.
தமிழ் இலக்கியத்தில் அன்றும் இன்றும் அழகு கொட்டிக் கிடக்கின்றது .ரசிக்க வாருகள் .ரசித்தால் இதயம் இதமாகும். வாழ்க்கை வசமாகும்
Similar topics
» தமிழ் இலக்கியத்தில் அழகு ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி
» தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி
» தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|