Latest topics
» நாவல்கள் வேண்டும்by Rutu Today at 10:33 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்லம் என்னும் இனிய பள்ளி!
2 posters
Page 1 of 1
இல்லம் என்னும் இனிய பள்ளி!
![இல்லம் என்னும் இனிய பள்ளி! P1k97FMVSGyBKeWVfJWt+Tamil_News_large_1271986](https://www.filepicker.io/api/file/P1k97FMVSGyBKeWVfJWt+Tamil_News_large_1271986.jpg)
தகவல்களை மூளைக்குள் குவிப்பது மட்டுமா கல்வி? குழந்தைகளின் ஆளுமை, அவர்களின் மொழிவளர்ச்சி, சிந்தனைத் திறன், கற்பனையாற்றல், படைப்புத்திறன், தன்னம்பிக்கை, உயரிய மதிப்பீடுகள், நற்பண்புகள், மனிதநேயம், நம்பண்பாடு, கலாசாரம் கற்றல், மற்றவர்களை மதித்தல், நற்செயலைச்செய்தல், விட்டுக்கொடுத்தல் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொள்வதல்லவா கல்வி!வகுப்பறைகள் மாறிவிட்டன.
சாக்பீஸ் துாக்காமல், மவுஸ் பிடிக்கும் நவீன ஆசிரியர்கள், குளிர்சாதன வசதி கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், அதிநவீன டேப்களோடு வகுப்பில் அமர்ந்திருக்கும் எல்.கே.ஜி. மாணவ மாணவியர். கரும்பலகைக்கு மாற்றாய் வெண்திரைகள். அந்த வெண்பலகையில் எழுதிய யாவற்றையும் சேமிக்கும் ஆற்றல்மிகு கணினிகள், நினைத்த மாத்திரத்தில் தேடுபொறிகளின் உதவியால் பாடத்தையும் படத்தையும் கண்முன் கொண்டுவரும் அதிவேக இணைய வசதிகள்...
காதால் கேட்டும், கண்ணால் கண்டும், கற்க உதவும் மொழி ஆய்வகங்கள் என வகுப்பறைகள் வசதியாக்கப்பட்டுவிட்டன. ஆனால் கற்றல் சுகமான அனுபவமாகி இருக்கிறதா? மகிழ்ச்சியோடு நம் குழந்தைகள் கற்கிறார்களா?இரட்டைக் கோடு, நான்கு கோடு போட்ட அழகான எழுத்துப்பயிற்சி ஏடுகள், வளைந்து நெளிந்து எழுதும் பிஞ்சுவிரல்கள் என்று எத்தனை சுகமாக இதமாகக் கற்றோம்?
அன்று எழுத்து எத்தனை சுகமான அனுபவம்! வளைவும் நெளிவும் கூட்டி மனதின் நடைச் சித்திரத்தை விரல்கள் வழியே நம் சொந்தக் கையெழுத்தில் எழுதுவது எத்தனை அழகானது! எழுத்தை மட்டுமா? சிலேட்டையுமல்லவா நாம் இன்று இழந்து நிற்கிறோம். அழித்து அழித்து அகரம் கற்ற அந்த அற்புதப் பொருளைக் காலம் தன் கருங்கைகளால் அழித்துப் போட்டதே..! எப்படி அனுமதித்தோம் இந்தப் பிரபஞ்சப் பிழையை?
விசித்திர செவ்வகம் :சிலேட்டு எனும் விசித்திரச் செவ்வகத்தை மரகதம் டீச்சர்தான் முதன் முதலில் என் பால்ய வகுப்பில் அறிமுகப்படுத்தினார். பாலிதீன் பைக்குள்ளிருந்து அந்தச் செவ்வக அதிசயத்தை டீச்சர் எடுத்ததும், குட்டையாய் இருந்ததால் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்த என்னை அழைத்து மாவுக்குச்சியால் கையைப் பிடித்து வளைத்து ஓட்டுனர் ஸ்டீரிங்கை லாவகமாக வளைக்கிற மாதிரி வளைத்து, 'அ'கரத்தைப் போடவைத்ததும் வாழ்வின் அபூர்வமான நிமிடங்கள்.
அன்று மாலையே அப்பாவிடம் அடம்பிடித்து கடையில் கல்சிலேட்டு வாங்கியதும், உருட்டிய பென்சில் போன்ற மாவுக்குச்சியால் ஆசைதீர அன்று முழுக்க ஏதேதோ கிறுக்கியதும் அழகான நிகழ்வுகள். கல்சிலேட்டைத் துாக்கக்கூட அப்போது தெம்பிருக்காது; ஆனாலும் துாக்கிக்கொண்டு வீடுமுழுக்கத் திரிந்திருக்கிறோம்.
சிலேட்டின் நான்கு ஓரங்களிலும் மடக்கப்பட்டு குட்டிஆணி அறையப்பட்ட தகரம் எத்தனையோ முறை என் கைகளைப் பதம் பார்த்திருக்கிறது. ஆனாலும் அதன் மீதான மோகம் மட்டும் குறைந்ததில்லை. அதில் எழுதுவது சுகமானது. அதுவும் மாக்குச்சியால் எழுதுவது பிடிக்கும், அது சிலேட்டில் நன்றாகப் பதியும்.
விளையாட்டு :பாம்பே குச்சியால் எழுதியது, கடல் குச்சியால் எழுதியது என்று குச்சியைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். சில மாணவர்கள் எச்சில் தொட்டும் எழுத்தை அழிப்பார்கள். எழுதியதை அழிக்கக் கஷ்டமாக இருக்கும். புதியதை எழுதவேண்டுமானால் பழையதை அழித்துத்தானேயாக வேண்டும். வாழ்க்கையும் அதைத்தானே கற்றுத்தருகிறது! எண்ணையும் எழுத்தையும் அன்று அப்படித்தான் கற்றோம்.
அப்போது விளையாட்டு எங்களுக்கு உயிர். இன்றுபோல் சிந்தடிக் விளையாட்டுத் தரைகள் அன்று இல்லை. ஆலமரத்தடியில்தான் எங்கள் விளையாட்டு ஆசிரியரின் இருக்கை இருக்கும். ஆனால் அவர் அமர்ந்து பார்த்ததில்லை. தினமும் மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க எங்களோடு அவரும் விளையாடிக்கொண்டிருப்பார். இதனால் பள்ளிக்கு செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி அனுபவம். தாத்தாவின் கையைப் பிடித்து பள்ளிசென்ற அந்த நாட்கள் அபூர்வமானவை. என்ன நடந்தது இந்த முப்பது ஆண்டுகளில்?
ஓடிவிளையாடிய பாப்பாக்கள் ஓட்டத்தை ஏன் நிறுத்திக்கொண்டார்கள்? ஒருகுடம் தண்ணியெடுத்து ஒருபூப் பூக்க வைத்த பிஞ்சுக்குழந்தைகள் ஏன் வீட்டுக்குள் முடங்கிப் போனார்கள்? பூவரச இலையைச் சுருட்டி பீப்பீ ஊதியகுட்டிக் குழந்தைகளைச் சோட்டாபீமும் ஜுக்கியும் ஜக்குவும் பவர்ரேஞ்ஜெர்சும் எப்படி ஆட்கொண்டன? கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகளை வீடியோ கேம்ஸுக்குள் பிடித்துத் திணித்தது யார்?
செவ்வாய்க் கிரகத்திலிருந்து யாரும் செய்துவிடவில்லை. நாம்தான் அந்த நற்செயலைச் செய்தோம்.குழந்தைகளின் உலகம்மிக மென்மையானது, உண்மையானது, பாசாங்கற்றது, அன்புக்கு ஏங்குவது, வன்சொல் தாங்காதது, எல்லோரும் தன்னைப் புரிந்துகொண்டு கொண்டாட வேண்டும் என நினைப்பது.
எல்லாவற்றையும்விடச் சுதந்திரத்தையும் விளையாட்டையும் விரும்புவது. குழந்தைகளின் உலகத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா? அவர்களைச் சுதந்திரமாய் ஓடியாட நாம் அனுமதித்துள்ளோமா? நம் விருப்பங்களை அவர்கள் மீது திணித்து நம் ஆளுமையை காட்ட முயல்கிறோம். பூக்களின்மீது எப்படி நம்மால் கோடரியை இரக்கமில்லாமல் வீசியெறிய முடிகிறது? காலம் நமக்குத்தந்த கருவூலம் நம் குழந்தைகள். அவர்களின்மீது ஏன் பாரத்தை ஏற்ற வேண்டும்?
முதுகில் பாரம் :தங்கக்கடைகளிலும் குழந்தைகள் விரும்புவது பலுான்களைத்தானே. அந்தத் தளிர்களின் முதுகில் மூடையாய் பாரங்கள். அவர்களின் முதுகெலும்புகள் உறுதிபெற்றுவிட்டனவா?அவர்கள் மதிப்பெண் முட்டையிடும் வாத்துக்களா? உலக அனுபவம் இல்லாமல், செய்தித்தாள் படிக்காமல், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் மதிப்பெண்களைக் குவித்து என்ன பயன்?
இன்னும் நம் தாய்மொழியில் பிழையின்றிப் பேசவும் எழுதவும் நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரவில்லையே. திருக்குறளையும், நாலடியாரையும், கொன்றைவேந்தனையும், ஆத்திச்சூடியையும், மூதுரையும், நல்வழியையும் ஆசாரக்கோவையையும் நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோமா? மனத்தையும் வாழ்வையும் செம்மைப்படுத்தாத கல்வி தரும் மதிப்பெண்ணால் என்ன பயன்?
பொம்மைகளைக் கூட உண்மைகளாய் நம்பிவிடும் அப்பாவிக் குழந்தைகளை நாம் இயற்கையோடு, செடியோடு, பூனைக்குட்டியோடு, பறவைகளோடு, மீன்களோடு பேச மண்ணில் விளையாட நாம் அனுமதித்துள்ளோமா? நம் குழந்தைகளுக்கு நதியும் வயலும் கடலும் அருவியும் தெரியுமா? மகிழ்ச்சியை மனதிற்குத் தந்து மலர்ச்சியை முகத்திற்குத் தருவதுதானே நற்கல்வி! வெளியே இருப்பதை உள்ளே திணிப்பதும் மனப்பாடம் செய்யவைத்து அதை அப்படியே தேர்வில் எழுத வைப்பது மட்டுமா கல்வி செய்யவேண்டும்?
பள்ளிகளில் மட்டுமே இவற்றைக் கற்றுத்தந்துவிட முடியாது. வீடுகள்தான் குழந்தைகளின் முதற் பள்ளிகள். பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள். ஆனால் ஆசிரியர்கள் அக்குழந்தைகளைப் பெறாத பெற்றோர்கள். பெற்றோர்களும் தன்வாழ்நாளில் இதையெல்லாம் கற்றோர்கள்தானே! பின் ஏன் குழந்தைகளுக்குக் கற்றுத்தரக்கூடாது? பாடத்திட்டத்திலும் பள்ளியிலும் இல்லை சாதனை மாணவர்களின் உருவாக்கம். இல்லங்களிலும் இருக்கிறது இன்பமான கற்றல். அங்கிருந்து கற்றலைத் தொடங்குவோமா?
முனைவர் சவுந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி,
திருநெல்வேலி.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இல்லம் என்னும் இனிய பள்ளி!
இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க அம்மா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இல்லம் இனிய இல்லம்
» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» ஈகரையின் இனிய வழிநடத்துனர் ரபீக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» ஈகரையின் இனிய வழிநடத்துனர் ரபீக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|