ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்

2 posters

Go down

ஈகரை சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்

Post by dhanasekaran10 Wed Jun 03, 2015 9:12 pm

வரலாற்றைத் திரும்பி பார்க்கும் போது மாபெரும் நாகரிகங்கள் எனத் தன்னை மார்தட்டிக் கொண்டவை பல இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு
மண்ணாக புதைந்து போய் உள்ளன.இதே போல் பல சாம்ராஜ்ஜியங்கள் ,அரசர்கள்,தனி மனிதர்கள் என பலரும் கணப்பொழுதில் காணாமல் போய் உள்ளனர்.இந்த அழிவு, வியாபாரம்,தொழில்நுட்பம் என பல துறைகளுக்கும் பொருந்தும்.நேற்று வரை கார்,பணம்,வசதி என பறந்து கொண்டிருந்தவர் சட்டென்று நடு ரோட்டிற்கு வந்திருப்பார்.நேற்று வரை உச்சத்திலிருந்த தொழில்நுட்பம் இன்று குப்பைக்கு போயிருக்கும்.பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து ,பங்கு மார்க்கட்டில் உச்சத்தில் இருந்த கம்பெனி இன்று காணாமல் போயிருக்கும்.இவையெல்லாம் ஏன் நடக்கின்றன?இவற்றின் பின்னால் ஏதாவது அறிவியல் காரணம் உள்ளதா?இந்த காணமல் போனவர்கள் பட்டியலில் நாமும் சேராமல் இருப்பது எப்படி?

பத்து வருடத்திற்கு முன்னால் இந்தியவில் உள்ள ஒவ்வொருவர் கையிலும் கைபேசியை கொண்டு வந்து,அன்று கைபேசி மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த கம்பெனி நோக்கியா.இன்று காணமல் போய்விட்டது.ஏன் காணாமல் போனது?நோக்கியாவின் அழிவைப் பற்றி பேச வேண்டுமானால், இரண்டு முக்கியமான விசயங்களைப் பற்றி பேச வேண்டும்.அதில் ஒன்று ஆப்பிளின் ஐபோன், மற்றொன்று கூகுளின் ஆண்டிராய்டு.ஆறு வருடத்திற்கு முன்னால் எல்லா மக்களின் கையிலும் கைபேசியை கொண்டு சேர்த்திருத்திருந்தன கைபேசி தயாரிக்கும் கம்பெனிகள். ஆனால் அடுத்த கட்ட தொழில்நுட்பம் என்னவென்று தெரியாமல் கைபேசி தயாரிக்கும் கம்பெனிகள் முழித்திக்கொண்டிருந்தன.அதில் நோக்கியாவும் ஒன்று.அப்போது கைபேசியின் அடுத்த பரிமாணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது ஆப்பிளின் ஐபோன்.தொடுதிரை ,கண்கவர் பொத்தன்கள் ,தொழில் நுட்ப நேர்த்தியென கைய்டக்க கணிப்பொறியாகவே கைபேசியை அறிமுகப்படுத்தினர்.இதை அனைத்து கைபேசி தயாரிப்பு கம்பெனிகளும் காப்பியடிக்க முயன்று மண்ணை கவ்வின.காரணம் ஆப்பிளின் தொழில்நுட்ப நேர்த்தி.இந்த இடைப்பட்ட காலத்தில் நோக்கிய சரியத்தொடங்கியது.தன்னை காப்பாற்றிக்கொள்ள மைக்ரோசாப்ட்டுடன் இணைய திட்டமிட்டது.மற்ற கம்பெனிகள் மாற்றத்திற்காக காத்திருந்தன.

அப்போது தான் ஆப்பிளின் தொழில்நுட்பத்திற்கு சவால்விட கூகுள் தயாரானது.அதாவது புதிய கைபேசி இயங்குதளம் ஆண்டிராய்டை இலவசமாக வெளியிட் தயாரானது.ஆண்டிராய்டை பொருத்தவரை தொழில்நுட்பம் முற்றிலும் இலவசம்.அதுவும் உயர்ந்த தரத்தில்.கூகுளின் திட்டமே அப்போது உச்சத்திலிருந்த ஆப்பிளை வீழ்த்துவது தான்.வாய்ப்புகளுக்காக காத்திருந்த அலைபேசி கம்பெனிகள் ஆண்டிராய்டை மொய்க்கத்தொடங்கின.அதுதான் அலைபேசி தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையின் ஆரம்பம்.கூகுள் ஆண்டிராய்டின் புண்ணியத்தால் குப்பனும் சுப்பனும் கைபேசி தயாரிக்கும் அளவுக்கும் தொழில்நுட்பம் எளிதானது.இங்கே நோக்கியாவின் நிலை பரிதாபம்.ஏற்கனவே மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துவிட்டதால்,ஆண்டிராய்டு இயங்கு தள கைபேசியை உருவாக்க முடியவில்லை. கடைசியில் வாய்ப்புக்காக காத்திருந்த சாம்சங்கும்,சோனியும் கைபேசி மார்க்கெட்டை விழுங்கின.நோக்கியாவை மைக்ரோசாப்ட் விழுங்கியது.சரி இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

வியாபார அறிவியலில் இதை இடையூறான கண்டுபிடிப்பு(disruptive innovation) என்பார்கள்.அதாவது வியாபாரத்திலோ,பொருட்களை உருவாக்கு முறையிலோ அல்லது தொழில்நுட்பத்திலோ சிறு மாற்றங்கள் செய்து புதிய சந்தையை அல்லது புதிய பயனாளர்களை உருவாக்கி சந்தையின் உச்சத்தை தொடுவது.உதாரணமாக சீன சந்தை மலிவானது,தரம் குறைந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் சீனாவின் திட்டமே மலிவான விலையை காரணம் காட்டி சந்தையில் நுழைந்து மெதுவாக தரத்தை உயர்த்தி உலக சந்தையின் உச்சத்தை தொடுவதுதான்.ஆரம்பத்தில் தரத்தை காரணம் காட்டி சீனாவை பார்த்து சிரித்த நாம் இன்று சீனாவிடம் உலக சந்தை இழந்துவிட்டோம் என்பது தான் உண்மை.

நோக்கியாவின் கதையிலும் நடந்தது இது தான்.கைபேசியில் புதிய மாற்றங்களை உருவாக்கி மொத்த சந்தையை வளைத்தது ஆப்பிள்.அதில் இருந்து புதிய சந்தையை உருவாக்க கூகுள் தொழில்நுட்த்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி இலவச இயங்குதளத்தை உருவாக்கி சந்தையை தன் வசமாக்கிக்கொண்டது.இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருந்த நோக்கியா தன்னையே இழந்துவிட்டது.

இப்படிதான் தொழிலிலும் ,தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்படும் சிறு மாற்றங்களை கவனிக்க தவறி மொத்தத்தையும் இழந்துவிடுகிறோம்.உங்கள் கடைக்கு எதிராக ஒருவர் வித்தியாசமான அணுகுமுறை முறையோடு சின்ன கடை விரித்தாலோ,அல்லது நீங்கள் வேலைபார்க்கும் இடத்தில் ஒருவர் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடித்தாலோ அதை அலட்சியம் செய்யாதீர்கள்.அது உங்கள் அழிவுக்கே காரணமாகலாம். மற்றொரு கோணத்தில் சொன்னால் வாழ்க்கையில் நாம் உயரத்திற்கு போக சின்ன மாற்றங்களே போதும்.மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.மாறிக்கொண்டே இருங்கள்.மாற்றம் ஒன்றே மாறாதது.


சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011

http://sekar-thamil.blogspot.com/

Back to top Go down

ஈகரை Re: சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்

Post by shobana sahas Thu Jun 04, 2015 1:46 am

மிகவும் சரி தான் . நல்ல பகிர்வு தான சேகர் .  சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்  3838410834  சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்  103459460  சீரற்ற மாற்றமும்,காணாமல் போனவர்களும்  1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும்
» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
» சீரற்ற இதயத்துடிப்பு: புதிய கருவி அறிமுகம்
» சீரற்ற மாதவிடாய் சாி செய்ய வழிமுறைகள் சொல்லுங்கள்..
» தொடரும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் மக்களின் இயல்புநிலை பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum