Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் - பெண்கள் கைக்குழந்தைகளோடு பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது
5 posters
Page 1 of 1
குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் - பெண்கள் கைக்குழந்தைகளோடு பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது
![குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் - பெண்கள் கைக்குழந்தைகளோடு பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது P30c](https://2img.net/h/img.vikatan.com/jv/2015/05/zwyzju/images/p30c.jpg)
சமீபகாலமாக பெண்கள் கைக்குழந்தைகளோடு பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. அந்தக் குழந்தைகள் வாடகைக்கு எடுத்துவரப்பட்டவை என்ற அதிர்ச்சித் தகவல் பரவவே, பதறிக்கிடக்கிறது தமிழகம். கடந்த 17--ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கைக்குழந்தைகளுடன் சிக்னல்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 7 பெண்களை திருச்சி மாநகர குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
‘‘திருச்சி, சமீபகாலமாகக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவருகிறது. நாகமங்கலம் பகுதியில் குடியிருக்கும் அந்த மக்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு பண்ணுவதே அரிது. குடும்பத்துக்கு நாலைந்து பிள்ளைகள் இருக்கும். அந்தக் குழந்தைகளை மடியில் கட்டிக்கிட்டு கையேந்தி நிற்பார்கள். இப்படியிருக்க, இதே பகுதியில் இருக்கும் சிலர், உறவுக்காரர்கள் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு பிச்சை எடுக்கப் போகிறார்கள். குழந்தைக்குப் பழகிய முகம் என்பதால் குழந்தைகள் அழுவதில்லை.
திருவெறும்பூர் காந்தி நகர் பகுதியில் உள்ள குறிஞ்சி, முல்லை, மருதம் உள்ளிட்ட நான்கு வீதிகளில் வசிப்பவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகளைக் கடத்தி வந்து அவர்களுக்கு திருட்டு தொழில் கற்றுக்கொடுத்து வடமாநிலங்களுக்கு விற்பதை சர்வ சாதாரணமாகச் செய்கிறார்கள். இந்தக் கும்பலின் தலைவனான ‘போலீஸ்’ குமார் கடந்த சிலநாட்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டான். இவனோடு இதுவரை 3 பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலால் இதுவரை 63 குழந்தைகளைக் கடத்தி, குழந்தைகளுக்கு உடலெங்கும் சூடு வைப்பார்கள். அவர்களுக்கு பயம் வராமல் இருக்க கோழி ரத்தம் உள்ளிட்டவற்றை ஊற்றி, திருட பயிற்சி கொடுத்து குஜராத், சூரத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்றுவிடுகிறார்கள்.
இவர்கள் பிடியில் இருந்து கடந்த சில மாதங்களில் 6 குழந்தைகள் மீட்கப்பட்டிருக்கின்றனர்’’ என்று சொன்னார்கள் காவல் துறை அதிகாரிகள் சிலர்.தங்களது பெயர் வெளியில் வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் சிலர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சிரகம். ‘‘இப்போது குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் கும்பல் அதிகரித்து உள்ளது.ரங்கம், சமயபுரம் உள்ளிட்ட கோயில் பகுதிகளில் வாடகைக்குக் குழந்தைகளை வாங்கி பிச்சை எடுக்கும் பெண்கள் 160 பேருக்கு மேல் உள்ளனர்.
6 டீமாக செயல்படும் இவர்களுக்கு ஏஜென்ட்கள் கோபுரத்துக்கு கொஞ்சம் தொலைவில் நின்றுகொண்டு அனைத்தையும் கவனிக்கிறார்கள். பெண்களை சம்பளத்துக்கு அழைத்துவருவதும் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வருவதும் இவர்கள்தான். இவர்கள்தான் பிச்சை எடுக்கும் பெண்கள், குழந்தைகளுக்குமான செலவைப் பார்த்துக்கொள்வார்கள். ஒன்றரை வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு ரேட், ஒன்றரை வயதிலிருந்து 3 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு ரேட். குறிப்பாக, ஆறு மாதக் குழந்தை என்றால் அதிகம் ரேட். இதற்காக வேலூர், வாணியம்பாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஹைதராபாத் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து 6 மாதத்துக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் என ஒப்பந்த அடிப்படையில் குழந்தைகள் அழைத்துவரப்படுகின்றன.
ஏழை பெற்றோரைக் குறிவைத்து இந்தக் கும்பல் காசு ஆசையைத் தூண்டி பிள்ளைகளை வாடகைக்கு எடுக்கிறார்கள். ஆறாவது மாதம் குழந்தைகளை பெற்றோரிடம் காண்பிக்க வேண்டும். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்வதாலும், குழந்தையை நாள் முழுவதும் வைத்து ஒருவரே வைத்திருக்காமல், 3 மணி நேரத்துக்கு ஒருமுறை கைமாற்றிவிடுவதும் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பதும் ஏஜென்ட்களின் வேலை. இடையிடையே குழந்தைகளுக்கு சளி இருமல் டானிக் கொடுப்பார்கள். மருந்து தரும் மயக்கத்தில் குழந்தை தூங்கிவிடும். இதுதான் இவர்கள் ஸ்டைல். இந்தக் கும்பலுக்கு திருச்சியில் அதிகம் கெடுபிடியில்லை’’ என்றார்கள்.
கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்திருக்கும் நாடியம்மாள் என்பவரிடம் பேசினோம். ‘‘இந்தப் பகுதியில இருக்குற 100 குடும்பமும் பூம்பூம் மாட்டோடு போய் குறி சொல்கிற சாதிக்காரவங்க. இப்போ தொழில் நலிந்துபோனதால ஆம்பளைங்க எல்லாம் திருஷ்டி கயிறு, பொம்மை வித்து சம்பாதிக்க வேண்டிய நிலைமை. அந்த சம்பாத்தியம் பத்தாம போறதால பிள்ளைகளோடு போய் பிச்சை எடுக்கிறோம். வேற வழியில்லாமத்தான் இந்தத் தொழிலை செய்றோம். திருச்சியில மலையப்பன்னு ஒரு கலெக்டர் இருந்தாங்க. அவருதான் எங்களுக்கு இங்க வீடுகட்டி கொடுத்தாங்க. சாதி சான்றிதழ் கொடுத்தாங்க. இப்ப அதெல்லாம் செல்லாதுனு சொல்றாங்க. இதுக்காகப் பலதடவை மனுகொடுத்துப் பார்த்தாச்சு. அதிகாரிகள் இழுத்தடிக்கிறாங்களே தவிர, சாதிச்சான்றிதழ் கொடுக்கல. அதனால படிக்கிற பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை விட்டுட்டு வீட்டோட இருக்காங்க. நாங்க திருடல, பொய் சொல்லல, எங்க வயிற்றுப் பொழைப்புக்கு கையேந்தி பிச்சை கேட்கிறோம். இது தப்புன்னு எங்களை போலீஸ்காரங்க பிடிச்சிக்கிட்டு போயி, வாடகைக்கு பிள்ளையை வாங்கிட்டு வந்து பிச்சை எடுக்கிறதா பழி சொல்றாங்க’’ என்றார்.
அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர் அற்புதராஜை சந்தித்தோம். ‘‘இங்கிருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் தெரியாததால் பெண்கள், பிள்ளைகளோடு பிச்சை எடுப்பார்கள். அந்தப் பகுதியில் படிக்கும் மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்காமல் இருப்பதுதான் பெரும் பிரச்னை. இப்போது நிறைய முயற்சிகள் எடுத்து பிச்சை எடுப்பதைக் கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனாலும் சில பெண்கள் தொடர்ந்து பிச்சை எடுக்கிறார்கள். இவர்கள் யாரும் வாடகைக்கு குழந்தை வாங்கி பிச்சை எடுக்கமாட்டாங்க. இவர்களுடைய பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு போவாங்க. உறவுக்காரங்க பிள்ளைகளை அழைச்சிக்கிட்டுப் போவாங்க. அடிக்கடி வெளியூரில் இருந்து அவங்க சொந்தக்காரங்க வந்து தங்குவாங்க. அவர்கள் யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.
வாடகைக் குழந்தையோ, சொந்தக் குழந்தையோ... குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.
விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் - பெண்கள் கைக்குழந்தைகளோடு பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் - பெண்கள் கைக்குழந்தைகளோடு பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது
கொடுமை. பாவம் பிள்ளைகள். ![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் - பெண்கள் கைக்குழந்தைகளோடு பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது
தேசிய அளவில் சட்டமொன்று இயற்றி ,
பிச்சை எடுப்பவர்களையும்
பிச்சை இடுபவர்களையும்
தண்டிக்க வேண்டும் .
சில விஷயங்களில் கண்மூடித்தனமாக இருந்து ,
தண்டிக்கப்பட்டால்தான் இந்த சமூகம் திருந்தும் போல் .
ரமணியன்
பிச்சை எடுப்பவர்களையும்
பிச்சை இடுபவர்களையும்
தண்டிக்க வேண்டும் .
சில விஷயங்களில் கண்மூடித்தனமாக இருந்து ,
தண்டிக்கப்பட்டால்தான் இந்த சமூகம் திருந்தும் போல் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் - பெண்கள் கைக்குழந்தைகளோடு பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1138527T.N.Balasubramanian wrote:தேசிய அளவில் சட்டமொன்று இயற்றி ,
பிச்சை எடுப்பவர்களையும்
பிச்சை இடுபவர்களையும்
தண்டிக்க வேண்டும் .
சில விஷயங்களில் கண்மூடித்தனமாக இருந்து ,
தண்டிக்கப்பட்டால்தான் இந்த சமூகம் திருந்தும் போல் .
ரமணியன்
சில விஷயங்களில் கண்மூடித்தனமாக இருந்து ,
தண்டிக்கப்பட்டால்தான் இந்த சமூகம் திருந்தும் போல் .
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 இஸ்லாமிய பெண்கள், குழந்தைகளைக் காத்த ஜாட் நபர்!
» துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது
» குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்...!!
» ஆசிய சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது
» தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.392 அதிகரித்துள்ளது.
» துணி எடுப்பது போல் நடித்து திருடிய 3 பெண்கள் கைது
» குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்...!!
» ஆசிய சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது
» தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.392 அதிகரித்துள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|