ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் பற்றிய சிந்தனை தவறா?

3 posters

Go down

மரணம் பற்றிய சிந்தனை தவறா? Empty மரணம் பற்றிய சிந்தனை தவறா?

Post by krishnaamma Sun May 24, 2015 4:29 pm

வள்ளலார் கூறிய மரணமில்லாப் பெருவாழ்வு, எவருக்குமே சாத்தியப் பட்டதில்லை.
ஒரு குடும்பத்தில், திடீர் மரணம் ஏற்படும் போது, அதை, அக்குடும்ப உறுப்பினர்கள் ஜீரணிக்க இயலாதவர்களாகி விடுகின்றனர்.

'என்னை இங்கு தான் புதைக்க வேண்டும்...' என்று தம் பேரன், பேத்திகளை அழைத்துப் போய், தமக்கென கட்டிய கல்லறையை காட்டினார் கி.ஆ.பெ.விஸ்வநாதம். எப்படிப்பட்ட வலிமையான மனநிலை!

இந்தியாவில், காப்பீட்டுத்துறை அறிமுகமான போது, அது காலூன்ற வெகுகாலம் ஆனது. மிக அண்மைக்காலம் வரை, 2 சதவீதம் பேர்கள் தான், தங்களை உயிர்க்காப்பீடு செய்து கொள்ள முன் வந்திருக்கின்றனர்.

இதை ஆய்வு செய்த பொருளாதார நிபுணர்கள், 'மரணம் பற்றிய சிந்தனையே நமக்கு வரக் கூடாது என்கிற இந்தியர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை தான், இதற்கு காரணம்...' என, கண்டுபிடித்தனர்.

காப்பீட்டு முகவர்களை, 'மரண ஏஜென்ட்கள்' என்று வர்ணித்ததோடு, அலறியடித்து ஓட்டம் பிடித்த காலம் உண்டு.

என் தாய்மாமா, தன் இளமைக் காலத்தில் காப்பீட்டு முகவராக இருந்தார். இத்துறையில் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள, அவர் அரும்பாடு பட வேண்டியிருந்ததை கதை கதையாய்ச் சொல்வார்.

'காப்பீடு விஷயமாக உங்கள பாக்க வர்றேன்...' என்று எவரிடமாவது சொன்னால், 'என்ன சார்... வாழ்ற காலத்திலேயே சாகச் சொல்றீங்க...' என்பதுடன், அவர்கள், இவருடனான சந்திப்பை அடியோடு தவிர்ப்பராம்!

இன்றும் மரணத்தை பற்றி பேசவும், சிந்திக்கவும் கூடாது என்கிற நினைப்பு, நம்மவர்களிடம் தொடர்வதால், இந்தியாவில் உள்ள, 50 காப்பீடு நிறுவனங்களால், 16 சதவிகித மக்களையே அணுகி, வெற்றி பெற முடிந்திருக்கிறது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்... 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, என் மனைவியிடம், என் மரணம் பற்றி பேச ஆரம்பித்து விட்டேன். இதைப் பற்றி நான் அவளிடம் பேச நேர்ந்ததே, மிக வித்யாசமான சூழலில் தான்.

ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவளை, வரவேற்க வருகிறேன் என்றவன், போக முடியாமல், ஒரு மேடைப் பேச்சில் சிக்கிக் கொண்டேன். வந்திறங்கியவளுக்கு சில சங்கடங்கள்; மிகவும் சிரமப்பட்டு விட்டாள். இதை வைத்தே ஆரம்பித்தேன்...

'நான் வரலேன்னாலும், நான் இல்லன்னாலும் சமாளிக்கக் கத்துக்கணும்...' என்று கூறி, பின், மெல்ல மெல்ல, 'நான் இல்லாமல் வாழக் கற்றுக் கொள்...' என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தேன். 'இப்படியெல்லாம் பேசாதீங்க; உங்களுக்கு முன் நான் போய் சேர்ந்திடுவேன்...'என்பாள் அழுகையோடு!

நான் அடங்க மாட்டேன். 'அப்படியெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்ல; என் மரணத்தை நீயோ, உன் மரணத்தை நானோ பாக்கத்தான் போறோம். நான் இல்லாத வாழ்க்கைக்கு நீ தயாராக இருக்கணும்...' என்பேன் கிளிப்பிள்ளையாக!

இந்த மனத் தயாரிப்பு, தைரியத்தை தரும்; யதார்த்தத்தை, எதிர் கொள்ளும் ஆற்றலை வளர்க்கும். ஒரு வித சமூகப் பாதுகாப்பு உணர்வை வளர்க்கும்.

ஒருவரை மற்றவர் இழந்து, மனதளவில் சங்கடப்படும் போது, சோகத்தின் வீரியம் குறையும். இது, மன பாதிப்புகளால் ஏற்படக் கூடிய, உடல் நோய்களின் தீவிரத்தை குறைக்கும்.
இறந்தவர்களுக்காக, வாழ வேண்டியவர்கள் சாவதாவது!

மரணப் புலம்பல்களின் நடுவே, 'மனசுல என்னென்ன வச்சிருந்தாருன்னே தெரியலயே... ஒண்ணுமே சொன்னதில்லையே! என்ன இருக்கு, ஏது இருக்குன்னு (கடனோ, சொத்தோ) சொல்லாமல் போயிட்டாரே... பிள்ளைங்களுக்கு ஒருவழியும் செய்யாம திடீர்ன்னு போயிட்டாரே...' என்கிற புலம்பல் எவ்வளவு கனமானது!

எனவே, வளர்ச்சிக்கு திட்டமிடுதல் போலவே, அதன் முடிவிற்கும் அவசியம் திட்டமிட வேண்டும்.
உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்கு தயாராக, என்னென்னவோ முன்னேற்பாடுகள் செய்கிறோம்... மீளாப் பயணத்திற்கு என்ன ஏற்பாடுகளைச் செய்தோம்? (அட... ஏன்யா இப்படி வயித்தை கலக்குறே என்கிறீர்களா?)

உறுதியற்ற நிகழ்வுகளை சாத்தியப்படுத்த என்னென்னவோ செய்கிறோம்; உறுதியான நிகழ்விற்கு என்ன ஏற்பாடுகளைச் செய்தோம்? சிந்தியுங்கள்!

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரணம் பற்றிய சிந்தனை தவறா? Empty Re: மரணம் பற்றிய சிந்தனை தவறா?

Post by Aathira Sun May 24, 2015 4:42 pm

லேனா சாருக்கு சொல்லிக்கொள்வது..
நாங்களெல்லாம் மீளாப் பயணத்தைப் பற்றி நன்கு அறிவோம். தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை விட வேறு என்ன செய்ய இருக்கிறது.

“சாதலும் புதுவதன்று
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன”

எங்க பாட்டன் எப்பவோ சொன்னதை மனத்தில் ஆழத்தில் வைத்து இருக்கிறோம். இருக்கும் போது வயிற்றுப் பசியைப் போக்கவே பிடி சோறு இல்லாது அவதி படுவோரின் சதவீதம் தான் நீங்க சொல்ற காப்பீடு செய்யாத மீதி சதவீதம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரணம் பற்றிய சிந்தனை தவறா? Empty Re: மரணம் பற்றிய சிந்தனை தவறா?

Post by krishnaamma Sun May 24, 2015 4:57 pm

Aathira wrote:லேனா சாருக்கு சொல்லிக்கொள்வது..
நாங்களெல்லாம் மீளாப் பயணத்தைப் பற்றி நன்கு அறிவோம். தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை விட வேறு என்ன செய்ய இருக்கிறது.

“சாதலும் புதுவதன்று
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன”

எங்க பாட்டன் எப்பவோ சொன்னதை மனத்தில் ஆழத்தில் வைத்து இருக்கிறோம். இருக்கும் போது வயிற்றுப் பசியைப் போக்கவே பிடி சோறு இல்லாது அவதி படுவோரின் சதவீதம் தான் நீங்க சொல்ற காப்பீடு செய்யாத மீதி சதவீதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1138422

புன்னகை அதனால் தான் நம் பிரதமர் மோடி குறைந்த ரூபாய்க்கு ஏதோ இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வந்திருக்கிறார் ஆதிரா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரணம் பற்றிய சிந்தனை தவறா? Empty Re: மரணம் பற்றிய சிந்தனை தவறா?

Post by சிவா Sun May 24, 2015 9:55 pm

Aathira wrote:லேனா சாருக்கு சொல்லிக்கொள்வது..
நாங்களெல்லாம் மீளாப் பயணத்தைப் பற்றி நன்கு அறிவோம். தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை விட வேறு என்ன செய்ய இருக்கிறது.

“சாதலும் புதுவதன்று
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன”

எங்க பாட்டன் எப்பவோ சொன்னதை மனத்தில் ஆழத்தில் வைத்து இருக்கிறோம். இருக்கும் போது வயிற்றுப் பசியைப் போக்கவே பிடி சோறு இல்லாது அவதி படுவோரின் சதவீதம் தான் நீங்க சொல்ற காப்பீடு செய்யாத மீதி சதவீதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1138422

அருமையான சிந்திக்கக்கூடிய கருத்து அக்கா!


மரணம் பற்றிய சிந்தனை தவறா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம் பற்றிய சிந்தனை தவறா? Empty Re: மரணம் பற்றிய சிந்தனை தவறா?

Post by krishnaamma Mon May 25, 2015 11:06 pm

சிவா wrote:
Aathira wrote:லேனா சாருக்கு சொல்லிக்கொள்வது..
நாங்களெல்லாம் மீளாப் பயணத்தைப் பற்றி நன்கு அறிவோம். தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை விட வேறு என்ன செய்ய இருக்கிறது.

“சாதலும் புதுவதன்று
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன”

எங்க பாட்டன் எப்பவோ சொன்னதை மனத்தில் ஆழத்தில் வைத்து இருக்கிறோம். இருக்கும் போது வயிற்றுப் பசியைப் போக்கவே பிடி சோறு இல்லாது அவதி படுவோரின் சதவீதம் தான் நீங்க சொல்ற காப்பீடு செய்யாத மீதி சதவீதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1138422

அருமையான சிந்திக்கக்கூடிய கருத்து அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1138474

நிஜம் சிவா, ஆனால் பிடிசோற்றுக்கு வக்கில்லாவிட்டலும் , தினம் தினம் குடிக்க மட்டும்
எங்கிருந்து பணம் வருகிறது அவங்களுக்கு?..............சொல்லுங்கள்...........தான் இருக்கும்போது தான் குடும்பத்துக்கு பிரயோஜனம் இல்லை, செத்தாவது பிரயோஜனப்படலாமே..............என்று யோசித்தால் நல்லது தானே?.............

Prioritize செய்வது இல்லை என்பது தான் உண்மை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரணம் பற்றிய சிந்தனை தவறா? Empty Re: மரணம் பற்றிய சிந்தனை தவறா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum