ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

4 posters

Go down

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Empty வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Post by அபிராமிவேலூ Wed Nov 11, 2009 5:56 pm

இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?
இதே தலைப்பில்
பழமைபேசி மலர்கள் வலைப்பூவில் இட்டுள்ள ஒரு



ஒருமுறை இராமரும்
சீதையும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் .அப்போது அவ்வழியே வந்த
இந்திரனின் மகன் சீதையின் மீது ஆசைகொண்டு (அப்பனுக்கு தப்பாம
பிறந்திருக்கான்) காகம் போல வேடமெடுத்து பறந்து வந்து சீதையின் மார்பில்
கொத்திவிட்டு பறந்தான் . அதை பார்த்து கோபம் கொண்ட ராமர் தன் அருகில்
இருந்த ஒரு தர்ப்பைபுல்லை பிடுங்கி மந்திரம் ஓதி அதை பிரம்மாஸ்திரமாக்கி
காக்கையின் மீது ஏவினார் . பயம் கொண்ட இந்திரன் மகன் ராமரிடம் வந்து
மன்னிப்பு கேட்க , மனமிறங்கிய ராமன் காக்கையின் ஒரு கண்ணை மட்டும்
குருடாக்கிவிட்டு மன்னித்தார்
. --- இது ராமயண கதையில் வரும் காட்சி

இதைத்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறார்களோ ??!?!?!?
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Empty Re: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Post by nandhtiha Wed Nov 11, 2009 9:53 pm

வணக்கம்
நான் எழுதுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை அறிகிறேன். கருத்துச் சுதந்திரம் என்பது ஈகரையின் அடிப்படைக் கொள்கை என்பதனால் தான் எழுதுகிறேன், எந்த விதத்திலும் என் எழுத்துக்களில் தரம் குறைந்த சொற்கள் வந்து விடாமல் மிகக் கவனமாக இருக்கிறேன். அப்படியும் என் கருத்தை ஏற்காதவர்கள் மறுப்புச் சொன்னால் அதில் நேர்மையும் நியாயமும் இருந்தால் என்னைத் திருத்திக் கொள்ளத்தயங்க மாட்டேன்.

.சரி விடயத்துக்கு வருவோம்
இந்திரனின் மகன் என்று கூறப்படும் ஜயந்தன் என்பவன் காக்கை உருவத்தில் வந்து சீதாப் பிராட்டியைத் துன்புறுத்த இராமன் ஒருபுல்லில் பிரம்மாஸ்திரத்திர மந்திரத்தைபிரயோகித்து காக்கையைத்தண்டித்தான் என்ற ஒருகதை இருக்கிறது, இது வால்மீகி இராமாயணத்தில் சித்திரகூட பர்வத்தில் வருகிறது, கம்பன் அங்குஅதைக் கூறவில்லை. காரணம் தெரியவில்லை. ஆனால் ஒருவாறு யூகிக்க முடிகிறது, விவரம் வருமாறு.
மாரீச மானைக் கொன்று விட்டு இராமனும் இலக்குவனும் பர்ண சாலைக்கு வருகின்றனர், அங்கு சீதாப் பிராட்டி இல்லாதது கண்டு திடுக்குற்றுத் தேடுகின்றனர்,. வழியில் ஜடாயுவைப் பார்க்கின்றனர், அவர் மூலம் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற விவரம் அறிந்து ஊழித் தீயெனக் கோபம் கொண்டு பிரம்மாஸ்திரம் கொண்டு இவ்வுலகை அழித்து விடுவேன் என்றார். அது கேட்ட ஜடாயு

வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியல் வைக
கொம்பிழை மானின் பின்போய்க்குலப் பழை கூட்டிக் கொண்டீர்
அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர் ஆயுங்காலை
உம்பிழை என்பதல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ

என்று இராமனை எச்சரிக்கிறார், ஒரு பெரிய தவற்றுக்காகக் கூட பிரம்மாத்திரம் எய்தல் தவறு என்று கூற நினைத்த கம்பன் காக்காசுர விருத்தாந்தத்தில் இதனை விட்டிருக்கலாம். ஆயினும் வைணவப் பெரியாரான விட்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்.

சித்திர கூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும் ஓர் அடையாளம்

என்று அனுமன் வாயிலாக் சிறையிருந்த செல்வியிடம் கூறுகிறார்

இதனை பெரியாழ்வாரை ஒட்டியே கம்பனும் அனுமன் வாயால் சீதையிடம் சொல்வதாகக் கூறுகிறான்

நாகம் ஒன்றிய நல் வரையின் தலை மேல் நாள்
ஆகம் வந்து எனை அல் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால்’
வேக வெம்படை விட்டது மெல்ல விரிப்பாய்

(வேக அம்பு- பிரம்மாத்திரம் என்று கூறவில்லை)
என்று அனுமன் வாயிலாக் சிறையிருந்த செல்வியிடம் கூறுகிறான்,

அங்கு இராமன் காகத்தின் மீது ஒருவேகமுள்ள அம்பைத்தான் ஏதோ ஒருவலிமை மிக்க மந்த்திரத்தை தான் உபயோகித்தான். அதனை ஏற்றுச் சென்றது அந்தப் புல், புல் இல்லாமலும் இராமன் அவனைத் தண்டித்திருக்கலாம்.

காரணம், அனுமன் சீதியிடம்

வேறு இனி விளம்ப உளதன்று, விதியால் இப்
பேறு பெற என்கண் அருள் தந்தருளு, பின் போய்
ஆறுதுயர் அம் சொல் இளவஞ்சி! அடியேன் தோள்
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் (கம் 5354)

அதற்குச் சீதை மறு மொழியாக
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் , என்
சொல்லினால் சுடுவேன், அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் என்றாள் (கம் 5362)

சீதாப் பிராட்டியே தன் சொல் ஒன்றினால் எல்லையில்லா உலகங்கள் யாவையும் சுட வல்லமை பெற்ற போது இராமனுக்கு அந்த வல்லமை இருந்திருக்காதா என்ன? ஆகவே ஏதோ ஒரு வலிமை மிக்க மந்திரத்தைக் கொண்டு தான் காகத்தைத் தண்டித்தான் எனல் தேறும் ( பிரும்மாத்திரம் அல்ல) காரணம் பிரம்மாத்திரம் தண்டிப்பதானால் இலக்கு மட்டுமல்ல அந்த இடைத்தை சாம்பலாக்கி விடும், பாரதத்தில் முசல பர்வத்தில் பிரம்மாஸ்திரக் கொடுமையைக் காணலாம்.

ஆனால் வேறொரு கதை என் மனதில் நிழலாடுகிறதும்
மஹா பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு வந்த பாலகனான விட்ணுவுக்கு எங்கெ கொடுத்து விடுவானோ மன்னன் என்று நினைத்த அவனுடைய குல குருவான சுக்கிராச்சாரியார் மன்னன் நீர் வார்க்க இருந்த கமண்டலத்தின் உள்ளே ஒரு வண்டாக மாறி நீர் வரத்தைத் தடுத்து விடுகிறார், இதை அறிந்த வாமனர் தன் கையில் இருந்த புனித முடியான பவித்ரம் செய்யப் பட்ட புல்லால் சுக்கிரனின் கண்ணைத் தோண்டி விடுகிறார், எனவே இதுவே அந்தப்பழமொழிக்குச் சரியான பொருளாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இதனைத் தள்ளலும் கொள்ளலும் படிப்பவரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்
அன்புடன்
நந்திதா


Last edited by nandhtiha on Thu Nov 12, 2009 11:05 am; edited 1 time in total
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Empty Re: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Post by Anandh Wed Nov 11, 2009 10:01 pm

நீங்கள் சொல்வதும் சரி தான் நந்திதா
avatar
Anandh
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Empty Re: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Post by மீனு Wed Nov 11, 2009 10:04 pm

அன்பின் அக்கா..உங்கள் எழுத்தை நாம் ரொம்ப விரும்புவோம்.. நீங்கதான் முன்னை போல உங்கள் ஆக்கங்களை தருவதில்லை .. அல்லது தந்தும் நாம் படிப்பதில்லையோ ?..என்னமோ உங்கள் வருத்தம் தெரிகிறது ..
இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அருமை..ரொம்ப விளக்கமான கருத்துக்கள்..நன்றிகள் அக்கா ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Empty Re: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Post by nandhtiha Wed Nov 11, 2009 10:19 pm

திரு ஆனந்த,செல்வி மீனு
உங்களுக்கு என் வனக்கமும் நன்றியும்
FACTS ARE ALWAYS BITTER , WE HAVE TO DIGEST THEM
உண்மைகள் என்றுமே கசக்கும் நாம் தான் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்
ஒன்றை மட்டும் ஈகரை அன்பர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
எழுத இட்ம் கிடைக்காமல் நான் ஈகரைக்குள் வ்ரவில்லை. எழுத நேரம் இல்லாமல் தவிப்பவள்.
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Empty Re: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Post by மீனு Wed Nov 11, 2009 11:25 pm

தங்கை மீனு ..இப்போ செல்வி மீனு ஆகி விட்டது அக்கா..
ஓகே உங்க மனசில் மீனு தங்கை..செல்வியா மாறி இருக்கலாம்..ஆனா மீனுவுக்கு நீங்க அக்கா தான் என்றும்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Empty Re: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Post by அபிராமிவேலூ Thu Nov 12, 2009 10:47 am

அக்கா..உங்கள் எழுத்தை நாம் ரொம்ப விரும்புவோம்
இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் கருத்து அருமை..ரொம்ப விளக்கமான கருத்துக்கள்..நன்றிகள் அக்கா ..
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் Empty Re: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum