ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

2 posters

Go down

ஹைக்கூகள்-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Wed May 20, 2015 11:01 pm

வலி
-------
பார்வையில்லாதவன்
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.

வயல்
---------
பச்சை சேலையுடுத்த
கன்னி ஒருத்தி நாட்டியமாடி
சிரிக்கின்றாள்.

கணணி
-----------
ஆண் பெண் ஆகிய
இருவர் மார்பிலும்
தூங்கும் புதுக்குழந்தை.

முகவரி
------------
உண்மைக்கும்
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.

விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால்
தந்தவளை மறந்தவன்
தேடும் உடல் மோப்பம்.

சீதனம்
----------
1.நான்கு எழுத்து
தெரிந்தவன் கை நீட்டி
வாங்கும் பிச்சை.

2.பெண்ணை கண்ணால்
கற்பழித்து வாழ்நாள் முழுவதும்
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.

பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.

அனாதை
-------------
கருவில் பாரமாகி
தந்தையால் வெறுக்கப்பட்டு
நாயிடம் பாசம் அறிந்தவன்.

குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம்
சாட்சியான என்பில்லாத சிசு
தூங்கும் தொட்டில்.

தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும்
வார்த்தை பேசாத இதழுக்கும்
கண்களின் பார்வை மடல்.

முகில்
----------
வானிலுள்ள இளைய மகள்
கூட்டமாய் சேர்ந்தால்
அழகான பஞ்சு மிட்டாய்.

ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய்
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.

நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி
கொடுத்து, ரசிக்கச் செய்த
வானிலுள்ள வெள்ளை முகம்.

காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,

வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி
பாவமான உடலை சலவை செய்து
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு

தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய
நீரையாவது அள்ளி தந்து விடு
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....

கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி
உணர்வுகளில் கலந்து நினைவில்
அழியாத அனுபவ எழுத்து.

2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.

அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும்
ஜாதிமதமற்ற கொடியவன்.

பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு
மனைவியின் சேலைதான்
தாலாட்டும் அம்மா.

நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது
பாவாடை தாவணி வீடு துடைக்க
பயன்படுத்தப்படுகிறது.

கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும்
கறுப்பாய் மாறி விட்டது.

அரசியல்
--------------
திகதி நாள்
கிழிக்கப்படாத
ஏப்ரல் 01

கல்வி
----------
கற்பாறை
தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.

உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.

சிற்பம்
----------
காயப்பட்டவன்
உள்ளத்தில் பளுத்தப்பட்ட
கைரேகை.

கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத
நாவல் நாம் எழுதப்படாத
எழுத்துக்கள்.

பூக்கள்
-----------
காதலியின்
புன்னகையில்
குழிவிழும் கன்னங்கள்.

பொறாமை
-----------------
உனக்கே நீயே
குழி தோண்டிக்கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு.

நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும்
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன்
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....

கல்லானது
----------------
தாயை கூட தெருவில்
கைவிட்ட மனிதன் மரத்தை
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.

புத்தகம்
------------
நல்ல நண்பன்
அறிவின் கடல்
நல்லதை தூண்டுபவன்

தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.

செந்நிறம்
---------------
அவள் பருத்திப்
பூவில் பூத்த
மருதாணிப் பூக்கள்.

கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.

அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும்
சிட்டுக்களை கிழே விழாமல்
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.

அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின்
மெளனம் கூட ஒருவனை
மனநோயாளியாக மாற்றும்.

புன்னகை
--------------
கண்ணழகியின்
வட்டக்குழி நாணத்தினால்
தெளியாத போதை.

இரவு
--------
நாமம்
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.

தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும்
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு

மது
------
செல்வன் அருந்தும்
ஆடம்பரப்பானம்
ஏழைக்கு விஷம்.

ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன்
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

ஹைக்கூகள்-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty Re: ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by ஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 8:17 am

காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்....., ஹைக்கூகள்-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  3838410834 ஹைக்கூகள்-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  3838410834


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum