ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு

5 posters

Go down

ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு Empty ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு

Post by சிவா Mon May 18, 2015 3:24 pm


எளிமையான பயன்பாடு, குறைவான விலையில் ஸ்மார்ட்போன் ஆகியவற்றோடு மக்கள் மனதில் இணையம் குறித்த ஆர்வமே, கிராமப் புற மக்களிடம் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதற்கான முதன்மை காரணமாக இருந்து வருகிறது. இந்தியாவின் புதிய இணையப் பயனாளர்களில், இதுவரை இது நமக்குச் சரிப்படு வராது என்று ஒதுங்கி இருந்த மூத்த குடிமக்கள், கிராமப் புற குடிமக்கள், பெண்கள், ஆங்கிலம் அறியாத, மாநில மொழி மட்டுமே தெரிந்த மக்கள் மற்றும் மொபைல் போன்களைப் புதியதாகப் பயன்படுத்தத் தொடங்கு மக்கள் ஆகியோரைக் காண முடிகிறது.

ஒரு சிறிய நகரம் ஒன்றில், வீடுகளில் சிறிய வேலைகளைப் பார்த்து வாழ்க்கையைக் கழிக்கும், ஒரு பெண்மணி, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம், ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்; எனவே நானும் ஒன்று வாங்கினேன் என மிகவும் தீவிரமாக அது குறித்து கூறினார். இந்த போனின் மூலம், என் வேலைநேரம் கூடுதலாகி உள்ளது. என் வாடிக்கையாளர்களும் அதிகரித்துள்ளனர் என்று பெருமைப்படுகிறார்.

இன்னொரு வயதான பெண்மணி, “என்னுடைய குழந்தைகள் இதனை வைத்துக் கொண்டு பல விஷயங்களைக் கற்று வருகின்றனர். அவர்கள், எனக்கு, இந்த ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு, எப்படி இலவசமாக குரல் வழிச் செய்திகளை அனுப்பலாம் என்று கற்றுக் கொடுத்துள்ளனர். எப்போதும் மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது நல்லதல்லவா” என்று கூறுகிறார்.

மேலே குறிப்பிட்டவர்களைப் போன்றவர்கள் தான், இப்போதைய இந்தியாவின் 30 கோடி புதிய இணையப் பயனாளர்களாக உள்ளனர். இதற்கு ஸ்மார்ட் போன் பெருகி வருவது மட்டுமின்றி, இவர்களின் ஆர்வமும் அடிப்படைக் காரணமாக உள்ளது. மெல்ல, மெல்ல, இந்திய இணையப் பயனாளர்களின் தேவைகளும், பயன்பாடும் மாறி வருகின்றன. தற்போது, இளைஞர்கள், அலுவலர்கள் மற்றும் நகரத்தவர்கள் ஆகியோர்களால் நிரப்பப்பட்டுள்ள, இணைய பயனாளர் மக்கள் தொகை, படிப்படியாக புதிய பரிமாணங்களைப் பெற்று வருகிறது.

ஸ்மார்ட் போன் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வருமானம், வயது, பாலினம் மற்றும் கல்வி என்ற அடிப்படையில் இல்லாமல், இவற்றைப் பயன்படுத்தும் மக்கள் புதிய பிரிவுகளிலிருந்து வரத் தொடங்கியுள்ளனர். இந்த மாற்றம் தற்போது வலுப்பெற்று வருகிறது. கிராமப் பயனாளர்கள் மத்தியில் புதிய ஆர்வத்தினையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இது செயற்கையாக வலிந்து திணிக்கப்பட்ட மாற்றம் அல்ல. இயற்கையாக, அவர்களின் வாழ்வோடு கலந்த மாற்றமாக உள்ளது.

ஸ்மார்ட் போன்களும், மொபைல் வழி இணையப் பயன்பாடும், மக்களிடையே உள்ள இடைவெளியை நிரப்பவும், புதிய வகை பொழுது போக்கு நிகழ்வுகளைத் தரவும் தற்போது பயன்படுத்தபடுகின்றன. இது வரவேற்கத்தக்க முன்னேற்றமும் மாற்றமுமாகும்.

இன்றைக்கு கிராமங்களிலிருந்தும், சிறிய நகரங்களிலிருந்தும், தொழில் மற்றும் அலுவலகக் காரணங்களுக்காக, பெரிய நகரங்களுக்கு வரும் மக்கள், தங்கள் பணிக்கு, ஸ்மார்ட் போன்கள் எந்த அளவிற்குத் துணை புரிகின்றன என்பதனை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இத்துடன், சமுதாயத்தில் தன்னை உயர்நிலையில் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்களும், இந்த பரந்து விரிந்த உலகில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களும், ஸ்மார்ட்போனுக்கும், அதன் வழி இணையத் தொடர்புக்கும் மாறிக் கொண்டு வருகின்றனர்.

பாஸ்டன் கன்சல்டிங் குரூப், அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் இதனைத் தெளிவாக்குகின்றன. இந்தியாவில், 2013ல், இணையத்தைப் பயன்படுத்தியவர்களில், 60% பேர், 25 வயதுக்கும் குறைவானவர்களாவர். இது, வரும் 2018ல், 55% பேர், 25 மற்றும் அதற்கு அதிக வயதுடையவர்களாகவே இருப்பார்கள். முன்பு 30% பேர் மட்டுமே கிராமப் புற பயனாளர்களாக இருந்த நிலை, இனி 50% ஆக உயரும் என உறுதியாக எதிர்பார்க்கலாம். மொபைல் போன் வழி இணையத்தைத் தற்போது அணுகிய 60% பேர் இனி, 80% பேராக உயர்ந்திருப்பார்கள். பெண்கள் 28% லிருந்து, 35% ஆக உயர்ந்திருப்பார்கள். மாநில மொழிகளைப் பயன்படுத்திய 45% பேர், இனி 60% ஆக உயர்ந்திருப்பார்கள்.

பாஸ்டன் குரூப் இந்தியாவில் எடுத்த கணிப்பு படி, இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜுன் 2014ல், 19 கோடி. இது 2018ல் 58 கோடியாக உயரும். ஆனால், IMAI என்னும் இந்திய அமைப்பின் கணக்குப்படி, இந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை டிசம்பர், 2014ல், 30 கோடியைத் தாண்டி இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களில் தான், பயனாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 40% அதிகரித்து வருகிறது. 2014ல், 6 கோடியாக இருந்த எண்ணிக்கை, 2018ல், 28 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களில் ஏற்படும் இந்த அபரிதமான மாற்றத்திற்கான காரணங்களும் ஆராயப்பட்டன. நகரங்களில், ஸ்மார்ட் போன் பயன்பாடு, அதிக பட்ச, உச்ச நிலையை அடைந்துவிட்டது. கிராமப் புறங்களில், ஸ்மார்ட் போன் விற்பனை நிலையங்கள் அதிகம் திறக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் போன்களைக் கடைகளில் மட்டுமின்றி, இணைய தளங்கள் மூலமாகவும் பெறும் வசதி, கிராமப் புற மக்களிடம் ஒரு தெம்பை ஏற்படுத்தியுள்ளன. 4 அங்குலத்திற்கும் அதிகமான அளவில் திரை கொண்ட போன்கள், மக்களுக்குப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை உயிரோட்டத்துடன் தருகின்றன.

சராசரியாக 26 வயதினைக் கொண்ட இளைஞர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே, சமீப காலங்களில், ஸ்மார்ட் போன் மற்றும் இணையப் பயன்பாடு உயர்ந்தது. தற்போது, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், மின் அஞ்சல், சேட் செயலிகள், உடனடி செய்தி அனுப்பும் வசதி ஆகியவை, மக்களை இணைக்கும் பாலங்களாக இயங்குவதால், எப்போதும் தங்கள் நட்புகளுடனும், உறவுகளுடனும், தொடர்பில் இருக்க விரும்புபவர்கள், ஸ்மார்ட் போன்களையும், இணையத்தையும் நாடுகின்றனர்.

இளைஞர்களுக்கு இணையாகப் பணித் தளங்களில் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட வயதானவர்களும், ஸ்மார்ட்போனும் இணையமும் அதற்கு அத்தியாவசியத் தேவை என உணர்ந்து கொண்டு மாறி வருகின்றனர்.

கம்ப்யூட்டர் மலர்


ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு Empty Re: ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு

Post by krishnaamma Mon May 18, 2015 4:01 pm

//மின் அஞ்சல், சேட் செயலிகள், உடனடி செய்தி அனுப்பும் வசதி ஆகியவை, மக்களை இணைக்கும் பாலங்களாக இயங்குவதால், எப்போதும் தங்கள் நட்புகளுடனும், உறவுகளுடனும், தொடர்பில் இருக்க விரும்புபவர்கள், ஸ்மார்ட் போன்களையும், இணையத்தையும் நாடுகின்றனர்.//

ரொம்ப சரி....நல்ல பகிர்வு சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு Empty Re: ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு

Post by ayyasamy ram Mon May 18, 2015 6:26 pm

ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு Empty Re: ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு

Post by ராஜா Mon May 18, 2015 8:21 pm

ஆர்வத்தினால் ஆரம்பித்து பிறகு "ஆர்வகோளாரில்" கண்டதையும் பயன்படுத்தி நாசமா போவதற்கு தான் நிறைய பேர் வருகிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு Empty Re: ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு

Post by T.N.Balasubramanian Mon May 18, 2015 9:17 pm

ராஜா wrote:ஆர்வத்தினால் ஆரம்பித்து பிறகு "ஆர்வகோளாரில்" கண்டதையும் பயன்படுத்தி நாசமா போவதற்கு தான் நிறைய பேர் வருகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1137236

ஒட்டு மொத்தமாக சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன் .
ஆரம்ப ஆர்வக் கோளாறு : உச்சம் கண்டு உறங்கிவிடும் ஒரு நாள் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு Empty Re: ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum