Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்
2 posters
Page 1 of 1
புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்
ஹாலிவுட், பாலிவுட் ஸ்டைலில், ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என மூன்று ஹீரோக்கள் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் தான், புறம்போக்கு என்கிற பொதுவுடமை.
நட்சத்திர சேர்க்கை மட்டுமல்ல, படத்திலும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், புறம்போக்கு என்கிற பொதுவுடமை மிரட்டலாகவும், பிரமாண்டமாகவும், புரட்சி பேசி வெளிவந்திருக்கிறது.
கதைப்படி, புரட்சிகர படையை சேர்ந்த பாலு என்கிற ஆர்யா தூக்குதண்டனை கைதி. அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய இளம் சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாம். டில்லியிலிருந்து தூக்கு தண்டனை கைதி பாலுவை ஹெலிகாப்டரில் சென்னை அழைத்து வரும் ஷாம், அவரை சிறையில் தள்ளுகிறார். தூக்கு போட வேண்டிய கேங்மேன் எமலிங்கமாக விஜய் சேதுபதி வருகிறார்.
பரம்பரை பரம்பரையாக தூக்கு போடுவதை தொழிலாக கொண்ட குடும்பம் விஜய் சேதுபதி உடையது என்பதாலும், தனது 18 வயதிலேயே அப்பாவுக்கு முடியாமையால் ஒரு நிரபராதியை தூக்கில் போட்டதால் இனி யாரையும் தூக்கில் போடுவதில்லை எனும் உறுதியில் ரயில்வே கலாசியாக வேலை பார்த்து வரும் விஜய் சேதுபதியை, பாலு எனும் ஆர்யாவை தூக்கு போட அழைக்கிறார் ஷாம். ஆனால் தனது உறுதிமொழியை சொல்லி, தான் யாரையும் தூக்கிலிடமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வர சகலமும் செய்கிறார் ஷாம். ஆனாலும் முழுநேர குடிகாரரான எமலிங்கம் - விஜய் சேதுபதி வழிக்கு வர மறுக்கிறார்.
இந்நிலையில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த பாலு உடனடியாக தூக்கில் இடப்படாமல் இருப்பதற்கு தூக்குபோடும் தொழிலாளி எமலிங்கத்தை தீர்த்து கட்டினால், தூக்கு தண்டனை தள்ளிப்போகும் எனும் எண்ணத்துடன் விஜய் சேதுபதியை கொல்ல துரத்துகிறது கதாநாயகி குயிலி - கார்த்திகா தலைமையிலான புரட்சிகர அமைப்பு. ஆனால் ஒருக்கட்டத்தில் எமலிங்கத்திற்கே யாரையும் தூக்கில் போட விருப்பம் இல்லையென கார்த்திகா அண்ட் கோவினருக்கு தெரிய வர, சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாமின் பிடியில் இருக்கும் புரட்சியாளர் பாலு - ஆர்யாவை தப்பிக்க வைக்க, விஜய் சேதுபதியை தங்கள் கூட்டணியில் சேர்க்கிறார் கார்த்திகா.
கார்த்திகாவின் திட்டம் நிறைவேறியதா.?,
பாலு - ஆர்யா தப்பித்தாரா..?,
அதற்கு எமலிங்கம்-விஜய்சேதுபதி உதவினாரா...?
சிறை அதிகாரி மெக்கலே - ஷாமின் நிலை என்ன...?
என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் யாரும் எதிர்பாராதவிதமாக விடை சொல்கிறது புறம்போக்கு என்கிற பொதுவுடமை.
எமலிங்கமாக விஜய் சேதுபதி கிடைத்த இடத்தில் எல்லாம் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரை மாதிரியே புரட்சியாளர் பாலு - ஆர்யா, சிறை அதிகாரி மெக்கலே - ஷாம், கதாநாயகி, புரட்சிப்பெண் குயிலி - கார்த்திகா உள்ளிட்டோரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள் மிரட்டி.
வர்சனின் இசையில், ஆழ்வௌ்ளி கிழங்கு... பாடல் தாளம் போட வைத்தாலும், இமயமலையில், ஆர்யா-கார்த்திகா இடையேயான டூயட் பாடல் வலிய திணிக்கப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டுகிறது.
ஏகாம்பரத்தின் ரம்மியமான ஔிப்பதிவு, குலுமாணியை கண்களுக்கு குளிர்ச்சி விருந்து படைக்க வைத்திருக்கிறது. அதேசமயம் சிறைசாலை காட்சிகளில் அவரின் ஔிப்பதிவு மிரட்டியிருக்கிறது.
இயற்கை, ஈ, பேராண்மை படங்களை போன்று, எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் வௌிவந்துள்ள புறம்போக்கு என்கிற பொதுவுடமை, படமும், நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள தரமான கருத்துக்களை சொல்லியிருக்கும் சிறந்த புரட்சிகரமான படம்!
தினமலர் விமர்சனம்
நட்சத்திர சேர்க்கை மட்டுமல்ல, படத்திலும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், புறம்போக்கு என்கிற பொதுவுடமை மிரட்டலாகவும், பிரமாண்டமாகவும், புரட்சி பேசி வெளிவந்திருக்கிறது.
கதைப்படி, புரட்சிகர படையை சேர்ந்த பாலு என்கிற ஆர்யா தூக்குதண்டனை கைதி. அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய இளம் சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாம். டில்லியிலிருந்து தூக்கு தண்டனை கைதி பாலுவை ஹெலிகாப்டரில் சென்னை அழைத்து வரும் ஷாம், அவரை சிறையில் தள்ளுகிறார். தூக்கு போட வேண்டிய கேங்மேன் எமலிங்கமாக விஜய் சேதுபதி வருகிறார்.
பரம்பரை பரம்பரையாக தூக்கு போடுவதை தொழிலாக கொண்ட குடும்பம் விஜய் சேதுபதி உடையது என்பதாலும், தனது 18 வயதிலேயே அப்பாவுக்கு முடியாமையால் ஒரு நிரபராதியை தூக்கில் போட்டதால் இனி யாரையும் தூக்கில் போடுவதில்லை எனும் உறுதியில் ரயில்வே கலாசியாக வேலை பார்த்து வரும் விஜய் சேதுபதியை, பாலு எனும் ஆர்யாவை தூக்கு போட அழைக்கிறார் ஷாம். ஆனால் தனது உறுதிமொழியை சொல்லி, தான் யாரையும் தூக்கிலிடமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வர சகலமும் செய்கிறார் ஷாம். ஆனாலும் முழுநேர குடிகாரரான எமலிங்கம் - விஜய் சேதுபதி வழிக்கு வர மறுக்கிறார்.
இந்நிலையில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த பாலு உடனடியாக தூக்கில் இடப்படாமல் இருப்பதற்கு தூக்குபோடும் தொழிலாளி எமலிங்கத்தை தீர்த்து கட்டினால், தூக்கு தண்டனை தள்ளிப்போகும் எனும் எண்ணத்துடன் விஜய் சேதுபதியை கொல்ல துரத்துகிறது கதாநாயகி குயிலி - கார்த்திகா தலைமையிலான புரட்சிகர அமைப்பு. ஆனால் ஒருக்கட்டத்தில் எமலிங்கத்திற்கே யாரையும் தூக்கில் போட விருப்பம் இல்லையென கார்த்திகா அண்ட் கோவினருக்கு தெரிய வர, சிறை அதிகாரி மெக்கலே எனும் ஷாமின் பிடியில் இருக்கும் புரட்சியாளர் பாலு - ஆர்யாவை தப்பிக்க வைக்க, விஜய் சேதுபதியை தங்கள் கூட்டணியில் சேர்க்கிறார் கார்த்திகா.
கார்த்திகாவின் திட்டம் நிறைவேறியதா.?,
பாலு - ஆர்யா தப்பித்தாரா..?,
அதற்கு எமலிங்கம்-விஜய்சேதுபதி உதவினாரா...?
சிறை அதிகாரி மெக்கலே - ஷாமின் நிலை என்ன...?
என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் யாரும் எதிர்பாராதவிதமாக விடை சொல்கிறது புறம்போக்கு என்கிற பொதுவுடமை.
எமலிங்கமாக விஜய் சேதுபதி கிடைத்த இடத்தில் எல்லாம் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரை மாதிரியே புரட்சியாளர் பாலு - ஆர்யா, சிறை அதிகாரி மெக்கலே - ஷாம், கதாநாயகி, புரட்சிப்பெண் குயிலி - கார்த்திகா உள்ளிட்டோரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள் மிரட்டி.
வர்சனின் இசையில், ஆழ்வௌ்ளி கிழங்கு... பாடல் தாளம் போட வைத்தாலும், இமயமலையில், ஆர்யா-கார்த்திகா இடையேயான டூயட் பாடல் வலிய திணிக்கப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டுகிறது.
ஏகாம்பரத்தின் ரம்மியமான ஔிப்பதிவு, குலுமாணியை கண்களுக்கு குளிர்ச்சி விருந்து படைக்க வைத்திருக்கிறது. அதேசமயம் சிறைசாலை காட்சிகளில் அவரின் ஔிப்பதிவு மிரட்டியிருக்கிறது.
இயற்கை, ஈ, பேராண்மை படங்களை போன்று, எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் வௌிவந்துள்ள புறம்போக்கு என்கிற பொதுவுடமை, படமும், நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள தரமான கருத்துக்களை சொல்லியிருக்கும் சிறந்த புரட்சிகரமான படம்!
தினமலர் விமர்சனம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்
விமர்சனம் - புறம்போக்கு என்கிற பொதுவுடமை
பொதுவுடமையில் நம்பிக்கையுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், தனது முதல் படம் தவிர்த்து மற்ற இரு படங்களிலும் - ஈ, பேராண்மை - பொதுவுடமை கருத்துகளை இலைமறை காயாக சொன்னவர். அவரது நான்காவது படத்தின் பெயரே, புறம்போக்கு என்கிற பொதுவுடமை. நாம் எதிர்பார்த்தது போலவே படத்தின் கதையும், காட்சிகளும் ஜனநாதனின் பொதுவுடமை நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.
பாலுச்சாமி இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த முயலும் நக்ஸலைட்களில் ஒருவர். அரசாங்கத்தின் பார்வையில் தீவிரவாதி. மனித வெடிகுண்டாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். கடுமையான குற்றங்களை ஒழிக்க தூக்குத் தண்டனையே ஒரேவழி என்று நம்பும் சிறை அதிகாரி மெக்காலே பாலுவின் மரணத் தண்டனையை நிறைவேற்ற துடிக்கிறார். அதற்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் எமலிங்கத்தின் உதவி வேண்டும். எமலிங்கமோ மெக்காலேக்கு பிடிதராமால் போதையில் மிதக்கிறார். நக்ஸலைட்களில் ஒருவரான குயிலி, எமலிங்கத்தின் மூலம் பாலுவை சிறையிலிருந்து விடுவிக்க முயல்கிறார். இந்த கதையோட்டத்தில் பொதுவுடமை, தமிழ்த்தேசியம் என்று தனது கொள்கைகளை தூவிச் செல்கிறார் இயக்குனர்.
அரச வன்முறையை எதிர்த்து மக்களுக்காக போராடும் நக்ஸலைட்களை, அரசு தீவிரவாதிகள் என்று பெயர்சூட்டி சமூகத்திலிருந்தும், இந்த உலகத்திலிருந்தும் பிடிங்கியெறிய துடிக்கிறது. நக்ஸல்கள் தீவிரவாதிகள் அல்ல மக்களுக்காக போராடுகிறவர்கள் என்று, இன்றைக்குத் தேவைப்படும் மிக முக்கியமான அரசியலை துணிச்சலுடன் தொட்டதற்காக ஜனநாதன் பாராட்டுக்குரியவர்.
பாலுச்சாமியாக நடித்திருக்கும் ஆர்யா, மெக்காலேவாக வரும் ஷாம், எமலிங்கம் விஜய் சேதுபதி, குயிலியாக வரும் கார்த்திகா என்று அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
முந்தையப் படங்களில் ஜனநாதனுக்கு ஏற்பட்ட சறுக்கல் இந்தப் படத்திலும் பளிச்சென்று தெரிகிறது. கதாபாத்திரங்களின் பின்புலம் அழுத்தமாகச் சொல்லப்படாததால் அவர்கள் பேசும் தத்துவங்கள், அரசியல் பின்னணிகள் வெறும் உரையாடலாக மட்டுமே எஞ்சுகின்றன. குறிப்பாக குயிலியின் லெனின் குறித்த பேச்சு. மரண தண்டனைக்கு எதிரான இந்தப் படத்தால் அதனை அழுத்தமாக பதிவு செய்ய முடியவில்லை என்பது இன்னொரு ஏமாற்றம். இதற்கும் அழுத்தமில்லாத திரைக்கதையே காரணம்.
தமிழ்ப் படங்களில் வரும் பாடல்களை களைந்தாலே அவை நல்ல படமாகிவிடும் என்ற கமெண்ட், இந்தப் படத்தைப் பொறுத்தவரை உண்மை. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை சில இடங்களில் மட்டுமே கதைக்கும் காட்சிக்கும் நியாயம் செய்கிறது. கதையோடு இயைந்து வருகிறது ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு.
கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியின் கேள்விகளின் மூலம் சட்டத்தின், நீதிமன்றத்தின் போதாமையை விளக்கும் காட்சி அற்புதமானது.
கதை மற்றும் கதாபாத்திரங்களின் பின்புலம் அழுத்தமாகச் சொல்லப்படாத போது அந்த கதாபாத்திரங்களின் ஆவேசமும், உரையாடல்களும், கேள்விகளும் வெறும் விவரணைகளாகவே எஞ்சும். ஜனநாதன் இந்த விபத்தை தவிர்த்திருந்தால் புறம்போக்கு என்கிற பொதுவுடமை அரச பயங்கரவாதத்தின் முகத்தில் பொளோரென்று அறைந்திருக்கும்.
ஜே.பி.ஆர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்
» அதிகாரக்காதல் (உடைமை )
» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
» புறம்போக்கு பிரதர்ஸ்!
» புறம்போக்கு காதல்…!!!- Mano Red
» அதிகாரக்காதல் (உடைமை )
» தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
» புறம்போக்கு பிரதர்ஸ்!
» புறம்போக்கு காதல்…!!!- Mano Red
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|