Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது
4 posters
Page 1 of 1
புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது
தமிழக அரசியலில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் வாரம்தோறும் நடந்து வந்தாலும், இன்று நடந்த ஒரு நிகழ்வு அரசியலின் போக்கை மாற்றி போட்டிருப்பதாக தோன்றுகிறது.
வருகிற 2016 ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரலில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது.முன் எப்போதும் இல்லாத வகையில் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது.அதில், வருமானத்தைவிட 10 சதவீதம் வரை சொத்துச் சேர்த்திருந்தால் விடுவிக்கப்படலாம். ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12 சதவீதம் குறைவாகத்தான் சொத்து சேர்த்துள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். மேலும் ஜெயலலிதா வங்கி கடன்களை கீழமை நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும் கூறி, நீதிபதி குமாரசாமி அவரை விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில்,ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா இளவரசி சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் சிறைத்தண்டனை மற்றும் ரொக்க அபராதம் விதித்தும் அரசியலில் அதிர்ச்சியூட்டினார். பின்னர் சிறைவாசமிருந்த ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜாமீன் அளித்து விசாரணை நடத்தி இன்று அவரை விடுதலை செய்துள்ளது.கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அப்படியே தூக்கிப் பரணில் போட்டுவிட்டு விடுதலை என்ற புதிய `பொக்கே` கொடுத்து ஜெயலலிதாவை மீட்டு வந்திருக்கிறது. கடந்த 7 மாதங்களாக அதிமுகவை புரட்டிபோட்ட ஊழல் வழக்குப் புயல், ஒருவழியாகக் கரையை கடந்து நிம்மதியை வரவைத்துள்ளது.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே அரசியல் களத்தில் கூட்டணி வைக்கவும் தனித்து தேர்தல் களம் காணவும் கட்சிகள் மும்முரமாக இயங்கிவந்தன.
நான்கைந்துமுறை ஆட்சியில் இருந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வியடைந்து, தமிழகத்தின் எதிர்க்கட்சியாகவும் இடம்பெற முடியாமல்போன திமுக, வழக்கின் சிக்கலில் ஜெயலலிதா சிக்குண்டிருந்த மாதங்களில் சுறுசுறுப்பாகப் பணியாற்றி மக்களைக் கவர்ந்து கவர்ந்தது.ஜெயலலிதாவுக்குப் பதிலாக தமிழக முதல்வராகப் பொறுப்பில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அரசு தள்ளாடுவதாகவும், ஊழல்கள் மலிந்து மக்களை துயரக்கடலில் தள்ளிவிட்டதாகவும் திமுக பல்வேறு அறிக்கைகள் போராட்டங்கள் நடத்தியது.
அதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தினந்தோறும் அறிக்கைகள்,போராட்டங்கள் கடும் விமர்சனம் என்று அரசியல் களத்தில் விறுவிறுப்பைக் கூட்டினார்.அத்தோடு நில்லாமல் தமிழக அரசில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நோய் போல பீடித்துக் கிடக்கிறது என்றும், அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றும் பட்டியல்கள் தயாரித்து ஆளுநரிடம் மனு அளித்தது பாமக. பல நேரங்களில் முதல்வர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்றும், ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்றும் அறிக்கைகள் பலவும் பாமகவில் இருந்து வெளியாகின.
எதிர்க்கட்சியாக அமர்ந்த தேமுதிக, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்துக் கொள்வதிலும் அதன் தலைவரின் குண்டக்க மண்டக்க பேச்சுக்களிலும் மாட்டிக்கொண்டு தேய்ந்து கிடக்கிறது. இருந்தாலும் திடீரென்று திமுக,காங்கிரஸ்,பாஜக,இந்திய ஜனநாயகக் கட்சி,புதிய நீதிக்கட்சி என்று பல கட்சித் தலைவர்களைப் பார்த்துப் பேசி டெல்லிக்கு அழைத்துச்சென்று, பிரதமர் மோடியிடம் மாநிலன் நலன் குறித்து கோரிக்கை வைத்தார்.அவரின் இந்த ஒருங்கிணைக்கும் சக்தியை அனைத்துத் தரப்பினரும் பாரட்டினர்.
நாட்டின் விடுதலைக்கு வித்திட்டு போராட்டம் பல கண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரத்தை வாங்கி தந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தைப் பொறுத்த வரை 1967 க்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் தேய்ந்து தேய்ந்து, தற்போது மாவட்ட அமைப்பைப் போல சுருங்கிவிட்டநிலையில் இருந்தாலும்,கடந்த 7 மாதங்களில் அதன் புதிய தலைவர் ஈவி கே எஸ் இளங்கோவன், தமிழக அரசு மீது ஊழல் பட்டியல் தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று புகார் அளிக்கும் அளவுக்கு சக்திப் பெற வைத்தார்.
கிடைத்த இடைவெளியில், காங்கிரஸ் தலைமையோடு கருத்து வேறுபாடு கொண்ட காரணத்தால் அக்கட்சியிலிருந்து விலகி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாகச் சேர்த்து முழுசக்தியை வெளிப்படுத்தி களத்தில் நிற்கிறார் ஜி.கே.வாசன். இந்தக் கட்சிகளைத் தாண்டி பார்க்கையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வழக்கம் போல மக்கள் போராட்டத்தில் கவனம் செலுத்துவதால் தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் இழந்து நிற்கின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவின் அன்பைப் பெற்று இருந்தாலும், அதன் தற்போதைய விருப்பம் அதிமுக என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் அரசியல் களத்தில் அந்த அளவுக்கு சுறுசுறுப்பைக் கூட்டாமல் இருக்கிறது.புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி திமுகவின் குட் புக்கில் இடம்பெற்று அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்.
வைகோ தலைமையிலான மதிமுக, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களை முன்னின்று நடத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.அதிலும் காவிரி நீர்ப் பிரச்னை,மீதேன் பிரச்னை,பொட்டிபுரம் நியுட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பதை எதிர்த்தது என்று பல்வேறு போராட்டங்கள் மாநிலம் தழுவிய அளவில் நடத்தி மற்ற கட்சிகளை மிரட்சி அடையத்தான் செய்து இருக்கிறார்.
இன்னும் நிறைய சிறிய அளவிலான கட்சிகள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டையும்,அதேபோல திமுக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட சிறிய கட்சிகளும் களத்தில் தேர்தல் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் 2016 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இன்னும் சில மாதங்களில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் நிலையை வடிவமைத்துக் கொண்டு, தங்களுக்குள் அணியை அமைத்து தேர்தல் களம் காணவேண்டிய சூழல் நிலவுகிறது.
தமிழகத்தின் தனிப்பெரும் மக்கள் செல்வாக்கை தன்னகத்தே வைத்து, திமுக மற்றும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளை கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல், 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், இடையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் என்று 3 தேர்தலில் வெற்றிகளைக் குவித்து அதிமுக தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அதனால் அதிமுகவுடன் தற்போது உள்ள சிறுசிறு கட்சிகளை இயக்கங்களைத் தவிர வேறு கட்சிகள் இணைய சாத்தியமில்லை.
ஆனால் இன்று விடுதலைப் பெற்ற ஜெயலலிதாவுக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வாழ்த்துக்களைத் தெரிவித்து ஒரு புதிய அரசியல் கணக்கைத் தொடங்கியிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக அரசியலில் ஏற்பட்ட நட்டத்தை வரும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈடுகட்டி லாபம் பார்க்க அகில இந்திய பாஜக தலைமை விரும்புகிறது.அதற்கு இப்போதிருந்தே பணிகளை விரைவுப் படுத்தியிருக்கிறது. அண்மையில் கூட தமிழிசை சௌந்திரராஜன், தமிழகத்தில் தேமுதிக,பாமக ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திப்போம்.எங்களோடு இணைவது குறித்து ஜி.கே.வாசன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆக தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கையில், ஜெயலலிதா விடுதலையால் அதிமுகவின் பார்வை, பாஜக மீது கனிந்தால் இரண்டு கட்சிகளும் கரம் கோர்க்கலாம்.அப்படி நடந்தால் விஜயகாந்தின் தேமுதிக,ராமதாஸின் பாமக ஆகியவற்றின் அரசியல் இடம் மாறுபடலாம். ஆனால், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த நாள் முதல் இன்று வரை பாமக தனித்து நிற்கும் பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்றே கூறிவரும் டாக்டர் ராமதாஸ், வரும் நாட்களில் எப்படி செயல்படுவார் என்பதும் கவனிக்கத் தக்கது.
கட்சிகள் நிலை குறித்து கணக்கிட்டு அணி பிரிப்பது சற்று சிரமமானாலும், வரும் நாட்களில் கூட்டணிகள் தெளிவாகும். கடந்த 7 மாதங்களாக, 'ஜெயலலிதா மீண்டும் சிறை சென்றுவிடுவார். அதனால் அரசியலில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுவிடும். அதை நாம் நிரப்பிவிடலாம்' என்றே திமுக,பாமக,தேமுதிக,காங்கிரஸ் ,பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் தங்களின் திட்ட நிரல்களை முன் வைத்து செயல்பட்டு வந்தன. ஆனால் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்துள்ளதால்,மீண்டும் ஜெயலலிதா தமிழக முதல்வராக அரியணையில் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா, தற்போது தனக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பை மக்கள் மன்றத்தில் முன்வைத்து தன் மீது வீண்பழி சுமத்தப்பட்டதாக கூறி, வாக்குகளை அறுவடை செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால், மீண்டும் முதல்வர் பதவியை ஏற்ற ஒரு சில மாதங்களிலேயே, ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் மீண்டும் ஒரு புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது.
விகடன்!
வருகிற 2016 ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரலில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது.முன் எப்போதும் இல்லாத வகையில் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது.அதில், வருமானத்தைவிட 10 சதவீதம் வரை சொத்துச் சேர்த்திருந்தால் விடுவிக்கப்படலாம். ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12 சதவீதம் குறைவாகத்தான் சொத்து சேர்த்துள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். மேலும் ஜெயலலிதா வங்கி கடன்களை கீழமை நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும் கூறி, நீதிபதி குமாரசாமி அவரை விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில்,ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா இளவரசி சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் சிறைத்தண்டனை மற்றும் ரொக்க அபராதம் விதித்தும் அரசியலில் அதிர்ச்சியூட்டினார். பின்னர் சிறைவாசமிருந்த ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜாமீன் அளித்து விசாரணை நடத்தி இன்று அவரை விடுதலை செய்துள்ளது.கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அப்படியே தூக்கிப் பரணில் போட்டுவிட்டு விடுதலை என்ற புதிய `பொக்கே` கொடுத்து ஜெயலலிதாவை மீட்டு வந்திருக்கிறது. கடந்த 7 மாதங்களாக அதிமுகவை புரட்டிபோட்ட ஊழல் வழக்குப் புயல், ஒருவழியாகக் கரையை கடந்து நிம்மதியை வரவைத்துள்ளது.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே அரசியல் களத்தில் கூட்டணி வைக்கவும் தனித்து தேர்தல் களம் காணவும் கட்சிகள் மும்முரமாக இயங்கிவந்தன.
நான்கைந்துமுறை ஆட்சியில் இருந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வியடைந்து, தமிழகத்தின் எதிர்க்கட்சியாகவும் இடம்பெற முடியாமல்போன திமுக, வழக்கின் சிக்கலில் ஜெயலலிதா சிக்குண்டிருந்த மாதங்களில் சுறுசுறுப்பாகப் பணியாற்றி மக்களைக் கவர்ந்து கவர்ந்தது.ஜெயலலிதாவுக்குப் பதிலாக தமிழக முதல்வராகப் பொறுப்பில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அரசு தள்ளாடுவதாகவும், ஊழல்கள் மலிந்து மக்களை துயரக்கடலில் தள்ளிவிட்டதாகவும் திமுக பல்வேறு அறிக்கைகள் போராட்டங்கள் நடத்தியது.
அதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தினந்தோறும் அறிக்கைகள்,போராட்டங்கள் கடும் விமர்சனம் என்று அரசியல் களத்தில் விறுவிறுப்பைக் கூட்டினார்.அத்தோடு நில்லாமல் தமிழக அரசில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை நோய் போல பீடித்துக் கிடக்கிறது என்றும், அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றும் பட்டியல்கள் தயாரித்து ஆளுநரிடம் மனு அளித்தது பாமக. பல நேரங்களில் முதல்வர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்றும், ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்றும் அறிக்கைகள் பலவும் பாமகவில் இருந்து வெளியாகின.
எதிர்க்கட்சியாக அமர்ந்த தேமுதிக, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்துக் கொள்வதிலும் அதன் தலைவரின் குண்டக்க மண்டக்க பேச்சுக்களிலும் மாட்டிக்கொண்டு தேய்ந்து கிடக்கிறது. இருந்தாலும் திடீரென்று திமுக,காங்கிரஸ்,பாஜக,இந்திய ஜனநாயகக் கட்சி,புதிய நீதிக்கட்சி என்று பல கட்சித் தலைவர்களைப் பார்த்துப் பேசி டெல்லிக்கு அழைத்துச்சென்று, பிரதமர் மோடியிடம் மாநிலன் நலன் குறித்து கோரிக்கை வைத்தார்.அவரின் இந்த ஒருங்கிணைக்கும் சக்தியை அனைத்துத் தரப்பினரும் பாரட்டினர்.
நாட்டின் விடுதலைக்கு வித்திட்டு போராட்டம் பல கண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரத்தை வாங்கி தந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தைப் பொறுத்த வரை 1967 க்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் தேய்ந்து தேய்ந்து, தற்போது மாவட்ட அமைப்பைப் போல சுருங்கிவிட்டநிலையில் இருந்தாலும்,கடந்த 7 மாதங்களில் அதன் புதிய தலைவர் ஈவி கே எஸ் இளங்கோவன், தமிழக அரசு மீது ஊழல் பட்டியல் தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று புகார் அளிக்கும் அளவுக்கு சக்திப் பெற வைத்தார்.
கிடைத்த இடைவெளியில், காங்கிரஸ் தலைமையோடு கருத்து வேறுபாடு கொண்ட காரணத்தால் அக்கட்சியிலிருந்து விலகி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாகச் சேர்த்து முழுசக்தியை வெளிப்படுத்தி களத்தில் நிற்கிறார் ஜி.கே.வாசன். இந்தக் கட்சிகளைத் தாண்டி பார்க்கையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வழக்கம் போல மக்கள் போராட்டத்தில் கவனம் செலுத்துவதால் தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் இழந்து நிற்கின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவின் அன்பைப் பெற்று இருந்தாலும், அதன் தற்போதைய விருப்பம் அதிமுக என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் அரசியல் களத்தில் அந்த அளவுக்கு சுறுசுறுப்பைக் கூட்டாமல் இருக்கிறது.புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி திமுகவின் குட் புக்கில் இடம்பெற்று அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்.
வைகோ தலைமையிலான மதிமுக, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களை முன்னின்று நடத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.அதிலும் காவிரி நீர்ப் பிரச்னை,மீதேன் பிரச்னை,பொட்டிபுரம் நியுட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பதை எதிர்த்தது என்று பல்வேறு போராட்டங்கள் மாநிலம் தழுவிய அளவில் நடத்தி மற்ற கட்சிகளை மிரட்சி அடையத்தான் செய்து இருக்கிறார்.
இன்னும் நிறைய சிறிய அளவிலான கட்சிகள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டையும்,அதேபோல திமுக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட சிறிய கட்சிகளும் களத்தில் தேர்தல் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் 2016 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இன்னும் சில மாதங்களில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் நிலையை வடிவமைத்துக் கொண்டு, தங்களுக்குள் அணியை அமைத்து தேர்தல் களம் காணவேண்டிய சூழல் நிலவுகிறது.
தமிழகத்தின் தனிப்பெரும் மக்கள் செல்வாக்கை தன்னகத்தே வைத்து, திமுக மற்றும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளை கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல், 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், இடையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் என்று 3 தேர்தலில் வெற்றிகளைக் குவித்து அதிமுக தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அதனால் அதிமுகவுடன் தற்போது உள்ள சிறுசிறு கட்சிகளை இயக்கங்களைத் தவிர வேறு கட்சிகள் இணைய சாத்தியமில்லை.
ஆனால் இன்று விடுதலைப் பெற்ற ஜெயலலிதாவுக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வாழ்த்துக்களைத் தெரிவித்து ஒரு புதிய அரசியல் கணக்கைத் தொடங்கியிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக அரசியலில் ஏற்பட்ட நட்டத்தை வரும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈடுகட்டி லாபம் பார்க்க அகில இந்திய பாஜக தலைமை விரும்புகிறது.அதற்கு இப்போதிருந்தே பணிகளை விரைவுப் படுத்தியிருக்கிறது. அண்மையில் கூட தமிழிசை சௌந்திரராஜன், தமிழகத்தில் தேமுதிக,பாமக ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திப்போம்.எங்களோடு இணைவது குறித்து ஜி.கே.வாசன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆக தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கையில், ஜெயலலிதா விடுதலையால் அதிமுகவின் பார்வை, பாஜக மீது கனிந்தால் இரண்டு கட்சிகளும் கரம் கோர்க்கலாம்.அப்படி நடந்தால் விஜயகாந்தின் தேமுதிக,ராமதாஸின் பாமக ஆகியவற்றின் அரசியல் இடம் மாறுபடலாம். ஆனால், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த நாள் முதல் இன்று வரை பாமக தனித்து நிற்கும் பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்றே கூறிவரும் டாக்டர் ராமதாஸ், வரும் நாட்களில் எப்படி செயல்படுவார் என்பதும் கவனிக்கத் தக்கது.
கட்சிகள் நிலை குறித்து கணக்கிட்டு அணி பிரிப்பது சற்று சிரமமானாலும், வரும் நாட்களில் கூட்டணிகள் தெளிவாகும். கடந்த 7 மாதங்களாக, 'ஜெயலலிதா மீண்டும் சிறை சென்றுவிடுவார். அதனால் அரசியலில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுவிடும். அதை நாம் நிரப்பிவிடலாம்' என்றே திமுக,பாமக,தேமுதிக,காங்கிரஸ் ,பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் தங்களின் திட்ட நிரல்களை முன் வைத்து செயல்பட்டு வந்தன. ஆனால் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்துள்ளதால்,மீண்டும் ஜெயலலிதா தமிழக முதல்வராக அரியணையில் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா, தற்போது தனக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பை மக்கள் மன்றத்தில் முன்வைத்து தன் மீது வீண்பழி சுமத்தப்பட்டதாக கூறி, வாக்குகளை அறுவடை செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால், மீண்டும் முதல்வர் பதவியை ஏற்ற ஒரு சில மாதங்களிலேயே, ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனால் மீண்டும் ஒரு புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது.
விகடன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது
அருமையான கணிப்பு
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது
எனக்கு ஒரு சந்தேகம்.
MP-க்கான தேர்தலுக்கு கொடுத்ததை விட அதிக பணம் கொடுப்பார்களா? அல்லது அதைவிட குறைவாக கொடுப்பார்களா? யாரவது அதையும் கணிச்சு சொல்லுங்கோ......
MP-க்கான தேர்தலுக்கு கொடுத்ததை விட அதிக பணம் கொடுப்பார்களா? அல்லது அதைவிட குறைவாக கொடுப்பார்களா? யாரவது அதையும் கணிச்சு சொல்லுங்கோ......
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» சூடுபிடிக்கிறது தமிழக அரசியல் களம் : தேர்தல் கூட்டணிக்கு கட்சிகள் மாறுமா...
» மரிஜுவானா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
» 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?
» ரஜினிக்கு அரசியல் ஆசை மீண்டும் வருகிறது..!!!
» புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழகம் பெயர்போனது: வெங்கையா
» மரிஜுவானா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
» 2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?
» ரஜினிக்கு அரசியல் ஆசை மீண்டும் வருகிறது..!!!
» புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழகம் பெயர்போனது: வெங்கையா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|