ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 
ayyasamy ram
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 
mohamed nizamudeen
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 
VENKUSADAS
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 

Top posting users this month
heezulia
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 
ayyasamy ram
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 
mohamed nizamudeen
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 
VENKUSADAS
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

+5
Dr.சுந்தரராஜ் தயாளன்
anikuttan
ayyasamy ram
உமா
சிவா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா Wed May 06, 2015 12:07 am


ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு தேதி - தொடரும் சஸ்பென்ஸ் - ஏகிறும் டென்சன்

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு தேதி தள்ளிக் கொண்டே செல்வதால், தமிழக அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் டென்சனில் உள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீிதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, குற்றவாளிகள் தரப்புக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ 100 கோடி அபராமுதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதனால், இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கர்நாடக நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் பவானி சிங்கின் நியமனத்தை தமிழக அரசே நியமனம் செய்ததால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பவானி சிங் நியமனம் குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று பரபரப்பு தீர்ப்பளித்தனர்.

அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான வாதங்களையும், கர்நாடாக அரசின் எழுத்துப் பூர்வமான வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பவானிசிங் வைத்த வாதங்களை ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வாதங்களை கணக்கில் கொண்டு, நன்கு பரிசீலித்த பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின்படி, கர்நாடக உயர் நீதி மன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 81 பக்கம் மனுவும், கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 18 பக்க எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தனர்.

தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருக்குமா அல்லது அவரது எதிர்காலத்தை மீண்டும் புரட்டிப் போடும் வகையில் இருக்குமா என மில்லியன் டாலர் கேள்வி அதிமுக , திமுக தரப்பில் மட்டும் இன்றி இந்தியா முழுமைக்கும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறித்து மே 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதிக்குள் நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என கர்நாடாகவில் தகவல் பரவிவருகின்றது.

இந்த தகவல் உறுதியாகாத நிலையில், தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் கடும் டென்சனில் உலா வருகின்றனர்.

முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ள கூட்டுச்சதி குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என நால்வர் தரப்பிலும் கடந்த வாரம் தாக்கல் செய்த‌ மனு விசாரணைக்கு வந்தது.


 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by உமா Wed May 06, 2015 10:45 am

என்ன முடிவோ??????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by ayyasamy ram Wed May 06, 2015 11:32 am

டென்சன் தேவையில்லை....
-
உச்ச நீதி மன்றம் இருக்கையிலே கவலை எதற்கு...??
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா Sun May 10, 2015 2:16 am

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெ., ஆஜராக தேவையில்லை: மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நாளை தீர்ப்பு வெளியாகிறது. இவ்வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என, அரசியல் வட்டாரங்களில், பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.வழக்கை விசாரித்த, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உட்பட நால்வருக்கும், தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அபராதமாக ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாயும் விதித்தார்.இதையடுத்து, நால்வரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, பின், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, ஜாமினில் வெளியே வந்தனர்.சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஜெயலலிதா உள்ளிட்ட, நால்வரும், மேல்முறையீட்டு மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இம்மனுக்களை, நீதிபதி குமாரசாமி விசாரித்தார். மூன்று மாதங்கள் விசாரணை நடந்தது. மார்ச் மாதம், தீர்ப்பு தேதியை தள்ளி வைத்தார். மே, 12ம் தேதிக்குள், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது.

அதன்படி, நாளை, 11ம் தேதி, நீதிபதி குமாரசாமி, மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்குகிறார். இந்த தீர்ப்பு, ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதாக இருக்கும் என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.ஊழல் வழக்கில், குறைந்தபட்சம் ஓராண்டு முதல், ஏழாண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்தது.


 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா Sun May 10, 2015 2:16 am

பொதுவாக, மேல்முறையீட்டு வழக்கில், என்னென்ன வாய்ப்புகள் இருக்கும் என்பது, யாராலும் யூகிக்கக் கூடியது தான்.

* குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால், விடுதலையாவர்.
* நிரூபணமானால், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்யும்.
* அபராதம், சிறை தண்டனை அதிகபட்சம் என, உயர் நீதிமன்றம் கருதினால், தண்டனையையும், அபராதத்தையும் குறைக்கலாம்.
* தீர்ப்பு வழங்கும் நாளில், உயர் நீதிமன்றத்தில், குற்றவாளிகள் ஆஜராக தேவையில்லை.
* கீழமை நீதிமன்றங்களில் தான், தீர்ப்பு வழங்கும் தேதியில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும். உயர் நீதிமன்றத்தில், அப்படி ஒரு நடைமுறை இல்லை.
* தண்டனை உறுதி செய்யப்பட்டாலோ, குறைக்கப்பட்டாலோ, குறிப்பிட்ட நாட்களுக்குள், தனி நீதிமன்றத்தில் சரணடையும்படி, குற்றவாளிகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிடும்.
* உயர் நீதிமன்றம் குறிப்பிடும் நாட்களுக்குள், குற்றவாளிகள் சரணடைந்து, சிறைக்கு செல்ல வேண்டும். பின், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்து, ஜாமினில் வெளி வர வேண்டும்.
* ஊழல் வழக்கில் ஒருவருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டால் கூட, அவர், தேர்தலில் போட்டியிடும் தகுதியை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இழக்கிறார்.

வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டால், அபராதத் தொகையை செலுத்திய நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் வரை, தேர்தலில் போட்டியிட முடியாது.சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சிறை தண்டனையை அனுபவித்த பின், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

உதாரணத்துக்கு, ஊழல் வழக்கில் ஒருவருக்கு, ஓராண்டு சிறை விதிக்கப்பட்டால், அந்த ஓராண்டு சிறை வாசம், ஆறு ஆண்டுகள் என, மொத்தம், ஏழு ஆண்டுகள், தேர்தலில் போட்டியிட முடியாது.ஊழல் வழக்கில், பொது ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால், அவர் மட்டும் விடுதலைஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை எனவும், சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.பொது ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல், உடந்தையாக, தூண்டுதலாக இருப்பவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மட்டும், தண்டனை விதிக்க முடியும் என்கின்றனர், வழக்கறிஞர்கள். இந்திய அரசியலில், முதன் முதலாக, முதல்வராக பதவி வகிக்கும் போது, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டவர் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பை, அரசியல் வட்டாரமே எதிர்பார்த்து உள்ளது.

உச்சகட்ட டென்ஷனில் அ.தி.மு.க.,வினர்:

இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து தரப்பினரும், தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கியபடி உள்ளனர்.ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையானால் மட்டுமே, நமக்கு எதிர்காலம் உண்டு என நினைக்கும், அ.தி.மு.க.,நிர்வாகிகள், அவர் விடுதலையாக வேண்டும் என,கோவில்களை வலம் வந்த வண்ணம் உள்ளனர்.


 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா Sun May 10, 2015 2:38 am


சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு: வெளியே கசியாமல் இருக்க குமாரசாமி வைத்த கெடுபிடி

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ள நிலையில், நீதிபதி குமாரசாமி தீர்ப்பை தயாரித்த விதம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, தீர்ப்பு தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற அனைவரும் தீர்ப்பு வெளியாகும் வரை செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறை விதிக்கப்பட்டது.

மேலும், நீதிபதியின் சேம்பருக்கு வரும் போது துண்டு சீட்டுகளோ, வேறு எந்த மின் சாதனங்களையோ கொண்டு வரக் கூடாது, கொண்டு செல்லவும் கூடாது.

இதன் மூலம் தீர்ப்பு வெளியே கசிந்து விடக் கூடாது என்பதில் நீதிபதி குமாரசாமி எச்சரிக்கையாக இருந்தார்.


 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா Sun May 10, 2015 2:39 am

தர்மத்தின் பாதையில் ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு என்ன?

வழக்கு என்று வந்துவிட்டால் ஆண்டவனானாலும் நீதியின் விசாரணைக்கு ஆட்பட்டே ஆக வேண்டும் என்பதே சத்தியம் நமக்கு சொல்லுகின்ற உண்மை. சத்தியமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் என்பது நமது தேசப்பிதாவின் வாக்கு. ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் ஒரு வழக்கின் விசாரணையில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதையே புராணங்களும் வரலாறுகளும் நமக்கு எடுத்துரைக்கின்றது. நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதித்த மன்னர்களின் வரலாற்றையும் நாம் படித்திருக்கிறோம். இப்போது மக்களாட்சியில் நீதியின் நிலை சர்ச்சைக்குரியதாக இருக்கிறது என்றாலும், சட்டம் தன் கடமையை சரியாக செய்து கொண்டுதான் இருக்கிறது என பல வழக்குகள் நிரூபித்துள்ளன. அந்த வகையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சுமார் 19 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பலகட்டங்களை கடந்து வந்திருந்தபோதும், தற்போது தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீர்ப்பு வரும் திங்கள் (11.5.2015) அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்கு கடந்துவந்த பாதைகளை நாம் திரும்பிப் பார்ப்போமே.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாலருமான ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக சுப்பிரமணியன் சுவாமி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபியாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க ஆணையிட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு, ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானர். இந்நிலையில், இந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனக் கூறி ஜெயலலிதா மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு பச்சப்பரே, மனோலி, ஆன்ரிக்ஸ், மல்லிகா அர்ஜுனையா, சோமராசு, பாலகிருஷ்ணா என ஆறு நீதிபதிகள் அடுத்தடுத்து இந்த வழக்கை விசாரித்தனர். நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து, முடிகவுடர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கின் குற்றவாளிகளான (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) நான்கு பேரும் ஆஜராக வேண்டும். மீண்டும் 30-ம் தேதிக்கு வாய்தா போடுகிறேன். அன்று நான்கு பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன் என்று கண்டிப்பு காட்டினார். இதையடுத்து நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் நடந்திருக்கிறது. கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து எங்கள் அனைவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும் 30 -ம் தேதி ஒரு நாள் விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அபோதைய விசாரணையின் முடிவில், நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ஆனால் ‘உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் நான்கு பேருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்த வழக்கை நான்கு வார காலத்துக்கு தள்ளிப்போட வேண்டும். குறைந்தது மூன்று வார காலத்துக்காவது தள்ளிப்போட வேண்டும் என்று ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் கூறியதையடுத்து, நீதிபதி முடிகவுடர் வழக்கை நவம்பர் 21 -ம் தேதிக்கு தள்ளிப்போடுவதாக கூறினார். இந்நிலையில், 31.10.2013 அன்று தேதி மாலையே வழக்கின் 8-வது நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் துறையின் பதிவாளராக இருந்த ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

நவம்பர் 21 -ம் தேதி, புதிய நீதிபதியான ஜான் மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் முழு விவரங்களை கேட்ட நீதிபதிக்கு, ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், ‘‘1991 முதல் 1996 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 1997 -ம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அவர்களால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏ1, ஏ2, ஏ3, ஏ4 (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) ஆகியோரின் சொத்துக்கள் அனைத்தும் ஏ1 (ஜெயலலிதா) உடையது என்றும், ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் கம்பெனியுடைய சொத்துக்களும் ஏ1 உடையது என்றும், கட்டட மதிப்பீட்டிலும் குளறுபடிகள் இருக்கிறது’’ என்றதும் குறுக்கிட்ட நீதிபதி, ‘‘எல்லா வழக்குகளிலும் குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். அதைக் களைவது நம்முடைய பொறுப்பு’’ என்றார் .

‘‘இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் போடப்பட்டுள்ளது’’ என்று சொன்ன ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், தங்களுடைய தரப்பினர் ஆஜர் ஆகாமல் இருப்பதற்கான மனுவையும் கொடுத்தார்கள்.

தி.மு.க தரப்பு வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளான தங்க, வைர ஆபரணங்களை இங்கு கொண்டுவர வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்ட குன்ஹா, ‘‘யாரும் எமோஷனல் ஆக வேண்டாம். அனைவரும் சேர்ந்தே கோப்புகளைப் பார்த்து நீதியை நிலைநாட்டுவோம்’’ என்று கூறினார்.

மீண்டும் இந்த வழக்கு டிசம்பர் 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பாராமுகமாக இருந்துவிட்டார். இந்தச் சொத்துகள் அனைத்தும் இந்த வழக்கின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றன. அதைப் பார்த்து தீர்ப்பு வழக்குவதுதான் முறையாக இருக்கும் என்று நீதிபதி குன்ஹா கூறினார். அதனை அடுத்து மீண்டும் வழக்கு டிசம்பர் 21 -ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எங்களுக்கு சில சொந்த வேலைகள் இருப்பதால், வழக்கை ஒரு வார காலம் தள்ளிப்போட வேண்டும் என்றதால், நீதிபதி குன்ஹா வழக்கை ஒத்திவைத்தார். பின்னர் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்கு பேரும் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காததால் , நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அந்த மனுவை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் ‘‘1996 -ம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.55 லட்சத்து 80,000 மதிப்புள்ள 1,116 கிலோ வெள்ளிப் பொருட்களை, ஜெயலலிதாவின் ஆலோசகரான சென்னை கொட்டிவாக்கம் கற்பகம்பாள் நகரைச் சேர்ந்த பாஸ்கரன், சென்னை நீதிமன்றத்தில் இருந்து பெற்றுச் சென்றார். நீதிமன்றம் கேட்கும்போது அந்தப் பொருட்களை ஒப்படைப்பதாகக் கூறியிருந்தார். அந்தப் பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிட வேண்டும். அந்த நகைகளை, அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட வாசுதேவன் என்ற நகை மதிப்பீட்டாளரைக் கொண்டு நீதிமன்றத்தில் குறியீடு செய்ய வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இந்த மனு மீது பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும். என்றார். இதனால் ஆவேசம் அடைந்த நீதிபதி குன்ஹா, இந்த வழக்கை விசாரிக்க நான் சம்பளம் வாங்குகிறேன். இது மக்களின் பணம். வழக்கை இழுத்தடித்து காலதாமதம் செய்ய என் மனசாட்சி இடம் அளிக்கவில்லை. இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தினமும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையே மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் இயக்குநர் சண்முகம் சார்பில், அவரின் வழக்கறிஞர் தியாகராஜன், இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் அவரது மனு நிராகரிக்கப்படும் என நீதிமன்றம் கூறியதையடுத்து, இதைத் தொடர்ந்து, அவரது சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அந்த மனுவைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து பிப்ரவரி 5 -ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேராசிரியர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞரும் தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான தாமரைசெல்வன், ஒரு புதிய மனு தாக்கல் செய்தார்.

அதில் அந்த மனுவில், ‘அரசு வழக்கறிஞர் பவானி சிங் பிப்ரவரி 3 -ம் தேதி தாக்கல் செய்த மனுவில் 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஜெயலலிதாவின் ஆலோசகர் பாஸ்கரன் என்பவரிடம் உள்ளதாகவும், அதை நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவில் குறிப்பிட்டுள்ள பாஸ்கரன் என்பவர் கடந்த 2013 டிசம்பர் 3 -ம் தேதி இறந்துவிட்டார். அந்தச் செய்தி தினசரி நாளேடுகளில் வந்திருக்கிறது (அதற்கான ஆதாரத்தையும் இணைத்திருந்தார்). இந்த விவரம் தெரிந்தும், வேண்டும் என்றே உண்மையை மறைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இதற்கு முன் விசாரணை நடத்திய நீதிபதி பாலகிருஷ்ணா முன் ஆகஸ்ட் 23 முதல் 26 -ம் தேதி வரை அரசு வழக்கறிஞர் பவானி சிங் வாதம் செய்தார். அப்போது பாஸ்கரன் உயிருடன் இருந்தார். அப்போது வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று கேட்டு அரசு வழக்கறிஞர் ஏன் மனுத் தாக்கல் செய்யவில்லை. பாஸ்கரன் இறந்துபோன தகவல் அரசு வழக்கறிஞருக்கு எப்படி தெரியாமல் போனது?

நீதிபதி பாலகிருஷ்ணா முன் நான்கு நாட்கள் வாதம் செய்த அரசு வழக்கறிஞர், வழக்கு தொடர்பான ஆவணங்களைப் படிக்காமலும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலும் வாதம் செய்தாரா அல்லது வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கத்தில் செயல்படுகிறாரா என்று சந்தேகம் வருகிறது. ஆகவே, வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது நீதிமன்றத்துக்கு உகந்ததாகக் கருதப்படும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதற்குப் பதில் அளித்த அரசு வழக்கறிஞர் பவானி சிங் எனக்கு முழு விவரம் தெரியாது என்றார். இதையடுத்து இந்த மனு மீதான ஆட்சேபணையை பிப். 6 -ம் தேதிக்கு தாக்கல் செய்யலாம் என்று அரசு மற்றும் ஜெ தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பு எழுதப்பட்டுவிட்ட இந்த வழக்கில், அடுத்தடுத்து என்னென்ன நடந்தது?

நாளை பார்க்கலாம்…


 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா Sun May 10, 2015 2:39 am

கர்நாடக உயர் நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்குறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11ம் தேதி வழங்கப்பட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தை சுற்றி உள்ள ஒரு கி.மீ., தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இவ்வுத்தரவு அமலில் இருக்கும் என்று பெங்களூரு காவல்துறை ஆணையாளர் எம்.என். ரெட்டி தெரிவித்துள்ளார். வதடையுத்தரவு உள்ள பகுதிகளில் நான்கு பேருக்கு மேல் கூட்டமாக சேர முடியாது.

எனவே, தீர்ப்பு பாதகமாக வந்தால் தர்ணா நடத்தவோ, சாதகமாக வந்தால், கொண்டாட்டம் நடத்தவோ முடியாது. தீர்ப்பு காலை 11 மணிக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா Sun May 10, 2015 2:48 am

ஜெ. வழக்கில் தீர்ப்பு.. உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் ஆலோசனை

பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று முதல்வர் சித்தராமையா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெங்களூருவிலுள்ள கர்நாடக போலீஸ் இயக்குநர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் தொடங்கியது. S

இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், போலீஸ் டிஜிபி, மாவட்ட எஸ்.பிக்கள் உள்பட அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இது வழக்கமான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் என்றபோதிலும், வரும் திங்கள்கிழமை, கர்நாடக ஹைகோர்ட், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்கப்போவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக பெங்களூருவை சேர்ந்த உயர் அதிகாரிகளிடம், பாதுகாப்பு விஷயத்தில் உஷாராக இருக்கும்படி சித்தராமையா உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டபோது, பாதுகாப்பு ஏற்பாடுகளை பெங்களூரு போலீசார் சிறப்பாக மேற்கொண்டதாக அப்போது சித்தராமையா பாராட்டு தெரிவித்தார்.


 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by சிவா Sun May 10, 2015 4:28 am

ஜெ.,வுக்கு விடுதலையா, தண்டனையா? தமிழகத்தில் சூடுபிடித்த சூதாட்டம்

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவிருக்கும் நிலையில், இது தொடர்பான சூதாட்டம், தமிழகம் முழுவதும் நடப்பதாக கூறப்படுகிறது.

வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாவார் என்றும், கீழ் கோர்ட் தீர்ப்பு உறுதியாக தண்டனையடைவார் என்றும், ஆளாளுக்கு சூதாட்டத்தில் பந்தயம் கட்டுவதால், இதை வைத்து ஒரு சிலர், பெரிய அளவில் கல்லா கட்ட திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் சூதாட்டம்:

போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:ஐ.பி.எல்., கிரிக்கெட்டை மையமாக வைத்து சூதாட்டம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாயை, கல்லா கட்டி வருகின்றனர். போலீசார், இந்த மாதிரி சூதாட்டம் நடத்தப்படுவதை சில ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தொடர்ச்சியாக அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது நடக்கும் ஐ.பி.எல்., மேட்சுகளையும் வைத்து, பலே சூதாட்டம் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. போலீசாருக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

ரூ.1க்கு ரூ.1.90:

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பை மையமாக வைத்து, தமிழகம் முழுவதும் சூதாட்டம் நடந்து வருகிறது. வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுபடுவார் என, ஒருவர் ஒரு ரூபாய் பணம் கட்டினால், அவர் எதிர்பார்ப்புப்படி தீர்ப்பு அமைந்துவிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு, சூதாட்டம் நடத்துகிறவர், 1.90 ரூபாய் திருப்பிக் கொடுத்து விடுவார். அதே நேரம், ஜெயலலிதா தண்டனை அடைவார் என, ஒரு ரூபாய் பணம் கட்டி, தீர்ப்பில் ஜெயலலிதா தண்டனையடைந்து விட்டால், சம்பந்தப்பட்டவருக்கு, சூதாட்டப் போட்டி நடத்துபவர், 1.10 ரூபாயாக திருப்பிக் கொடுப்பது தான் விளையாட்டு.

அதாவது, ஜெயலலிதா தண்டனை பெற அதிக வாய்ப்புள்ளது என்பதோடு, அந்த அடிப்படையிலேயே நிறைய பேர் பணம் கட்டுவதால், சூதாட்டம் நடத்துபவருக்கு நஷ்டம் வந்து விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

ஜெயலலிதா குற்றமற்றவர் என்றுதான் தீர்ப்பு வரும்! பெட் கட்ட யாராவது வறீங்களா?


 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 16 வருடமாக சொத்து குவிப்பு வழக்கை சந்திக்கும் ஜெ. முதல்வராக தொடரலாமா?: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!
» ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டனம்
» ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜன.5க்கு ஒத்திவைப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum