ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு - சிறுகதை

5 posters

Go down

உறவு - சிறுகதை Empty உறவு - சிறுகதை

Post by சிவா Tue Apr 28, 2015 6:49 pm

உறவு - சிறுகதை 201504281450411016_Relationship_SECVPFஅம்மாவை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து வீட்டுக்கும், வாசலுக்குமாக நடையாய் நடந்தாள் அமுதா. கணவன் கலையரசன் வருகைக்காகத்தான் இத்தனை எதிர்பார்ப்பு. வழக்கமாக ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடுபவன் இன்னும் வராதது அமுதாவுக்கு தவிப்பை அதிகமாக்கியது. கவலையோடு கதவில் சாய்ந்தாள். சிறிது நேரத்துக்கு பின் வாசலில் அரவம் கேட்கவே கவனத்தை கலைத்தாள்.

கலைய ரசனுடன் அவனுடைய தம்பியும் வந்திருந்தான். இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு, டிபன் தயார் செய்து முடிப்பதற்குள் இரவு எட்டு மணியாகிவிட்டது. அவன் தம்பி சாப்பிட்டுவிட்டு கிளம்பியதும், பேச நினைத்த விஷயத்துக்கு நேரம் கிடைக்காமல் அதுவரையில் தவித்து கொண்டிருந்தவள் கணவன் அருகில் அமர்ந்து பேச்சை தொடங்கினாள்.

‘‘என்னங்க! அம்மா ரொம்ப முடியாமல் இருக்காங்க. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. போய் பார்த்துட்டு வந்தேன். நீங்க வந்ததும் உங்களுக்கு சமைச்சு வைச்சிட்டு அம்மாவை உடன் இருந்து கவனிக்கலாம்னு நினைத்தேன். உங்க தம்பி வந்ததால எதுவும் கேட்க முடியலை. நேரமும் ஆயிடுச்சு’’ என்றாள்.

‘‘அமுதா! உங்க அம்மா வயசானவங்க தானே! அடிக்கடி உடம்புக்கு முடியாமல்தான் ஆகும். அதுக்கு தக்கபடி அப்பப்ப வைத்தியம் பார்த்துக்க வேண்டியதுதான். அதான் உன் தம்பி இருக்கான்லே. அவன் கூட இருந்து பார்த்துப்பான். நீ ஏன் மனசை போட்டு குழப்பிக்கிற. பேசாமல் தூங்கு. நாளைக்கு போய் பார்த்துக் கலாம்’’என்றவன் நித்திரையில் மூழ்க தொடங்கினான்.

‘தானுண்டு, தன் காரியமுண்டு! என்று தன்னைச்சுற்றி சிறிய வட்டம்போட்டுக்கொண்டு அக்கம் பக்கம் பாராது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கும் தன் கணவன் நல்லவனா, இல்லை கெட்டவனா?’ என்று புரியாத குழப்பத்துடன் தூங்க சென்றாள்.

மறுநாள் காலையில் மனக்கவலைகளோடு அன்றாட வீட்டுவேலைகளும் சேர்ந்து கொள்ள எல்லாவற்றையும் செய்து முடிப்பதற்குள் ஒன்பது மணி ஆகிவிட்டது.

‘‘என்னங்க! நான் ஆஸ்பத்திரிக்கு போறேன். ஆபீசுல லீவு சொல்லிட்டு நீங்களும் சீக்கிரமா வந்திடுங்க. அம்மா ரொம்ப முடியாமல் இருக்காங்க. தம்பி சின்ன பையன்.. அவனுக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது!’’ என்றாள்.

அவசரமாக பைகளில் தனது மாற்றுத் துணிகளை திணித்துக்கொண்டே ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் தெரிவித்துக்கொண்டிருந்த மனைவியை படபடப்புடன் குறுக்கிட்டு தடுத்தான்.

‘‘அநாவசியமா அலட்டிக்காதே அமுதா! உங்க அம்மாவுக்கு குணமாயிடும். நான் உன்னை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் விட்டுட்டு அவங்களையும் பார்த்து பேசிட்டு ஆபீஸ் போறேன். ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே. தம்பியும், அவன் மனைவியும் ஒரு கல்யாணத்துக்கு வெளியூர் போறாங்களாம். அம்மாவை இன்னைக்கு நம்ம வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொன்னான். அதனால நீ உங்க அம்மாவை பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துடு’’ என்றான்.

வெடுக்கென ஆவேசத்தோடு நிமிர்ந்தாள் அமுதா. அவன் குணம் அப்படித்தான் என்றாலும் அம்மா உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது இப்படியா நடந்து கொள்வது? என்று கொந்தளித்தாள். விழிகளில் வழிந்த நீரை துடைத்தவாறே பைக்கில் ஏறினாள்.

சம்பிரதாயத்துக்கு ஆஸ்பத்திரியில் இருந்த அத்தையை பார்த்துவிட்டு நலம் விசாரித்த கலையரசன் அவசரமாக அலுவலகம் புறப்பட்டான்.

‘‘ஏங்க! அம்மா டிஸ்சார்ஜ் ஆகுறது வரைக்கும் நான் ஆஸ்பத்திரியில் இருந்து அவங்களை கவனிச்சுக்குறேன். உங்க அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிடுங்க’’ என்றாள்.

‘‘உன் தம்பி இருக்கிறப்ப நீ ஏன் கவலைப்படுற’’ என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் பேசிய அவன் அம்மாவிடம் விஷயத்தை சொன்னான். அதை கேட்டவர், உடனே போனை அமுதாவிடம் கொடுக்க சொன்னார். அமுதாவும் விரக்தியில் போனை வாங்கி பேசினாள்.

‘‘அமுதா! உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கா. நீ கவலைப்படாதே. நான் உடனே கிளம்பி வந்திடுறேன். நாம இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து உங்க அம்மாவை கவனிச்சிப்போம்’’ என்ற அத்தையின் பேச்சு அமுதாவை ஆசுவாசப்படுத்தியது. அத்தைக்கு மன முருக நன்றி சொன்னாள்.

தினத்தந்தி


உறவு - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறவு - சிறுகதை Empty Re: உறவு - சிறுகதை

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 6:53 pm

ஒரு பெண்ணிற்குத்தான் தெரியும், பெண்ணின் மன வலி.. நல்ல கதை...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உறவு - சிறுகதை Empty Re: உறவு - சிறுகதை

Post by விமந்தனி Tue Apr 28, 2015 10:45 pm

சரியான நேரத்தில் புரிதல், மனதிற்கு மிக ஆறுதலான விஷயம். உறவு - சிறுகதை 3838410834


உறவு - சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறவு - சிறுகதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறவு - சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உறவு - சிறுகதை Empty Re: உறவு - சிறுகதை

Post by ஜாஹீதாபானு Wed Apr 29, 2015 5:55 pm

நல்ல கதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உறவு - சிறுகதை Empty Re: உறவு - சிறுகதை

Post by krishnaamma Thu May 07, 2015 8:27 pm

நல்ல கதை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உறவு - சிறுகதை Empty Re: உறவு - சிறுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum