ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்!

2 posters

Go down

சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்! Empty சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்!

Post by சிவா Mon Apr 13, 2015 11:13 pm

சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்! P77

சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்! P76 சைத்ர விஷூ புண்ணிய காலம் என்பார்கள் சித்திரை மாதப் பிறப்பை. ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள்; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரையை வசந்த ருது என்பார்கள். அற்புதமான இந்த மாதத்தில் உரிய வழிபாடுகளும் திருக்கோயில் தரிசனமும் செய்து நம் வாழ்வையும் வசந்தமாக்கிக் கொள்ளலாம்!

சித்திரை முதல் நாளன்று பஞ்சாங்கம் படிப்பது சிறப்பு. இந்த தினத்தில் வீடுகளில் மட்டுமல்ல கோயில்களிலும் பஞ்சாங்கம் படிப்பார்கள். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். திதியை அறிவதால் திருமகள் அருள் கிட்டும்; நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீரும்; அனுதினமும் அன்றைய யோகம் என்ன என்பதை அறிவதால் நோயற்ற வாழ்வு கிட்டும்; கரணம் அறிவதால் காரிய ஸித்தி உண்டாகும். அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டிய இந்தப் பழக்கத்தை, சித்திரை முதல் நாளே துவங்குவது விசேஷம்!

சித்திரை முதல் நாளில், திறந்தவெளியில் சூரியக் கடவுளுக்கு பூஜைகள் செய்வர். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சித்திரை முதல் நாளை புனித தினமாகக் கொண்டாடுகின்றனர். பிரம்மன் உலகைப் படைத்தது சித்திரை முதல்நாளில் என்கின்றன சில ஞான நூல்கள்.

சித்ரா பௌர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்து கொண்டாள். அதேபோல் காஞ்சி ஸ்ரீகாமாட்சிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நிகழ்ந்ததும் சித்ரா பௌர்ணமியில்தான்.

சித்திரை சுக்லபட்ச பஞ்சமியில்தான் ஆதிசங்கர ஜயந்தி. ஸ்ரீராமானுஜர் அவதார வைபவமும், ஸ்ரீரமணர் ஆராதனையும் சித்திரையில்தான்.

சித்திரை சுக்லபட்ச திருதியை அன்றுதான் அட்சய திருதியை கொண்டாடப் படுகிறது. எமதருமனின் கணக்கரான சித்திரகுப்தன் தோன்றியது சித்ரா பவுர்ணமி அன்றுதான்.

சித்திரை- சுக்லபட்ச அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருநாளில் அம்பிகையை மனமுருகி பூஜிப்பதும், நதி நீராடலும் சிறப்பாகும். சித்திரை திருவோணத்தில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு வசந்தகால அபிஷேகம் நடைபெறும்.

அப்பப்பா... சித்திரைக்குதான் எவ்வளவு சிறப்புகள்? இந்தப் புண்ணிய மாதத்தில், ஆல யங்களில் நடைபெறும் பல்வேறு வைபவங் களைத் தரிசிப்பதும் பெரும் புண்ணியம்!

சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்! P78 திருநெல்வேலி- அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது பாபநாசம். இங்கு கோயில் கொண் டிருக்கும் அருள்மிகு பாபநாசரை, சூரியன் தனது கிரணங்களால் வழிபடும் வைபவம் சித்திரை மாதத்தில் (தொடர்ந்து 12 நாட்கள்) நிகழ்கிறது.

இந்த நாட்களில் இங்கு வந்து, காலைக் கதிரோனின் ஒளி உடம்பில் படும்படி நின்று தியானித்து வணங்கும் பக்தர் களுக்குத் துயரங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில், சித்திரை மாதப்பிறப்பன்று விஷ§ புண்ணிய காலத்தில், அகத்தியருக்கு இறைவன் திருமணக் கோலம் காட்டியருளும் வைபவம் வெகு சிறப்பாக நடை பெறுகிறது. சித்திரை மாதம் முதல் நாளன்று இங்கு வந்து பாபநாச தீர்த்தத்தில் நீராடி, சூரியன் வழிபடும் காட்சியையும் திருக் கல்யாண காட்சி வைபவத்தையும் தரிசிப்பது பெரும் புண்ணியம் சேர்க்கும்.

காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் உள்ள தங்கத் தேர், சித்திரை முதல் நாளன்று மட்டுமே நான்கு ராஜ வீதியிலும் உலாவரும். முன்னதாக சந்நிதித் தெருவில் உள்ள சித்திரை மண்டபத்தில் எழுந்தருள் கிறாள் அம்பாள். அங்கிருந்து தேரில் ஏறி, வீதியுலா வருகிறாள். வெள்ளிக்கிழமைகள், மாதப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி,

காஞ்சி மகாபெரியவாளின் பிறந்தநாள் போன்ற தினங்களில், கோயிலின் வெளிப்பிராகாரத்தில் மட்டுமே தங்கத் தேர் பவனி நடைபெறும்!

கோவை- பாலக்காடு மார்க்கத்தில் உள்ள ஊர் நவக்கரை. இங்கு கோயில் கொண்டிருக்கும் அம்பாள் ஸ்ரீதுர்கா பகவதியம்மன். இங்கே பிரமாண்டமான நந்தி சிலையை தரிசிக்கலாம். இதன் உயரம் 31 அடி; நீளம் 41 அடி; அகலம் 21 அடி!

சித்ரா பௌர்ணமியை ஒட்டி 3 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த நாட்களில் மன நோயாளிகளுக்காக சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள். சித்ரா பௌர்ணமி அன்று மலர் அலங்காரத்துடன், கோயிலைச் சுற்றி அம்மன் உலா வரும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்!

சேலத்திலிருந்து 27 கிமீ தூரத்தில் உள்ளது ராசிபுரம். இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் கோயிலில் பஞ்சலிங்க மூர்த்திகளுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சிவனாருக்கு ஐந்து முகங்கள் இருப்பது விசேஷம். அம்பாள்- ஸ்ரீஅன்னபூரணி. இவள் சந்நிதி அருகேயுள்ள கிளி மண்டபம் சித்ரா பௌர்ணமியன்று திருக்கல்யாண வைபவம் களைகட்டும். இந்த வைபத்தைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு மண வாழ்க்கை இனிதாகும். சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலமும், கன்னிப் பெண்களுக்கு கல்யாண வரமும் கைகூடும் என்பர்.

சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்! P79 சென்னை அருகில் பொன்னேரியில் அமைந்துள்ள ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் ஆலயம். கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், நின்ற கோலத்தில் அருளும் கண்ணன், வலக்காலை நன்றாக ஊன்றியும் இடக்காலை சற்றே மடித்துவைத்த நிலையிலும் காட்சி தருகிறார்.

இந்தக் கோயிலுக்கு அருகிலேயே அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயமும் உள்ளது. இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அரனும் அரியும் சந்திக்கும் வைபவம் (ஹரிஹரன் பஜார் வீதியில்) நடைபெறுகிறது!

கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரரும் ஸ்ரீமங்களாம்பிகையும், சித்திரை மாதம் நடைபெறும் சப்தஸ்தான விழாவுக்காக பல்லக்கில் புறப்பட்டு, சுமார் 20 கி.மீ தூரம் பயணித்து... சாக்கோட்டை, திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய ஏழு திருத்தலங்களுக்கும் சென்று திரும்புகிறார்கள். மிக அற்புதமான விழா வைபவம் இது!

கோவை சிங்காநல்லூரில், சித்திரகுப்தருடன் எமதருமன் சேர்ந்து அருளும் தனிக்கோயில் உள்ளது. இங்கே, சித்ரா பௌர்ணமியன்று 101 வகை படையல்கள் படைத்து, பொங்கலிட்டு வெகுச் சிறப்பாக வழிபாடுகள் நிகழும். வராத கடன்பாக்கி வந்துசேரவும், மரண பயம் நீங்கவும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டி பலனடைகிறார்கள்.

சிவகங்கை அருகே, கண்டமாணிக்க தலத்தில் உள்ள ஸ்ரீமாணிக்க நாச்சியம்மன் ஆலயத்தில் புதுமையாகக் கொண்டாடப்படுகிறது சித்திரைத் திருவிழா.

இதன் நிறைவு நாளன்று, அம்மன் வீதியுலா வரும்போது ஆண்களும் பெண்களுமாக கூடி நின்று குடம்குடமாக பன்னீர் அள்ளித் தெளித்து வழிபடுகின்றனர். விழாவோடு விழாவாக மாப்பிள்ளை, பெண் பார்க்கும் படலமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பத்து- பதினைந்து திருமணங்களாவது நிச்சயமாகி விடுமாம்!

கன்னியாகுமரி மாவட்ட ஆலயங்களில் சித்திரகுப்த பூஜை சிறப்பாகக் கொண் டாடுவார்கள். இந்த மாவட்டத்தில், வீர நாராயணமங்கலம் என்ற ஊரில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமுத்தாரம்மன். இவளது ஆலயத்தில், உடற்சூடு தணிக்கும் காய்கனிகள், எலுமிச்சை, சர்க்கரை, சுக்கு கலந்த பானம் செய்து அம்மனுக்குப் படைத்து வழிபடுகிறார் கள். பிறகு பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் விநியோகிப்பர்.

சித்ரா பௌர்ணமி தினத்தில் குமரி கடலில் சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் ஒரே நேரத்தில் தரிசிப்பது விசேஷம்.

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எனும் ஊருக்கு மேற்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது ஸ்ரீஅத்ரிபரமேஸ்வரர் மலைக்கோயில்.

இங்கே, ஸ்ரீருத்ர விநாயகர் சந்நிதிக்கு பின்புறம் நெடிதுயர்ந்து நிற்கும் மரத்தை, அம்ருதவர்ஷிணி மரம் என்கின்றனர். சித்திரை மாதம் முழுவதும் இதன் கிளைகளில் இருந்து பன்னீர் துளிகள் போல தண்ணீர் சொட்டுவது, கலியுக அற்புதம்தான்!

- இரா.இராதாபாய், புதுவை


சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்! Empty Re: சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்!

Post by ayyasamy ram Tue Apr 14, 2015 2:57 am

சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்! 103459460 சிந்தை மகிழும் சித்திரை மாதம்! சித்திரை தரிசனம்! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum