Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொம்பன் - திரை விமர்சனம்
4 posters
Page 1 of 1
கொம்பன் - திரை விமர்சனம்
கார்த்தி – ராஜ்கிரண் – இலட்சுமி மேனன் கூட்டணி என்றபோதே இரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்க –
போதாக் குறைக்கு, ஜாதிப் பிரச்சனையைப் பேசும் படம், அதனால் தடை செய்ய வேண்டும் என ஒரு சில தமிழக குழுக்கள் போராட்டத்தில் இறங்க –
கொம்பனுக்கு ஏகப்பட்ட விளம்பரம்தான்! இருந்தாலும் ஏமாற்றவில்லை இயக்குநர்.
![கொம்பன் - திரை விமர்சனம் Komban-Poster](https://2img.net/h/www.selliyal.com/wp-content/uploads/2015/04/Komban-Poster.jpg)
போதாக் குறைக்கு, ஜாதிப் பிரச்சனையைப் பேசும் படம், அதனால் தடை செய்ய வேண்டும் என ஒரு சில தமிழக குழுக்கள் போராட்டத்தில் இறங்க –
கொம்பனுக்கு ஏகப்பட்ட விளம்பரம்தான்! இருந்தாலும் ஏமாற்றவில்லை இயக்குநர்.
![கொம்பன் - திரை விமர்சனம் Komban-Poster](https://2img.net/h/www.selliyal.com/wp-content/uploads/2015/04/Komban-Poster.jpg)
படத்தைப் பார்த்தால், ஓர் இடத்தில் கூட ஜாதிப் பெயர் இல்லை. ஒரு காட்சியில் கூட ஜாதிப் பிரச்சனை பேசும் வசனங்களோ, கதை அமைப்போ இல்லை. பிரச்சனைக்குப் பின்னர் இயக்குநர் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்ட மாதிரியும் தெரியவில்லை.
ஒரு சிலர் எழுப்பிய பிரச்சனையால் படத்திற்கு கூடுதலான விளம்பரம்தான் கிடைத்திருக்கிறது.
படம் முழுக்க மைய இழையாக இயக்குநர் இழைத்துப் பின்னியிருப்பது, மாமனார்- மருமகன் இடையிலான உறவு முறையையும், அவர்களுக்கு இடையில் சில சமயங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளையும்தான்.
ஏற்கனவே பல படங்களில் மாமனார் – மருமகன் இடையிலான காட்சிகள் இடையிடையே வந்திருந்தாலும், அந்த அம்சத்தை மையமாக வைத்து முழுப் படத்தையும் வித்தியாசமாகக் கையாண்டிருக்கும் இயக்குநர் முத்தையா பாராட்டப்பட வேண்டியவர்.
ஏற்கனவே, சசிகுமாரை வைத்து “குட்டிப்புலி” என்ற வெற்றிப்படத்தைத் தந்தவர் இந்த முத்தையா.
கதைக் களம்
படத்தின் ஆரம்பக் காட்சிகள் அப்படியே பருத்தி வீரனை நினைவுபடுத்துகின்றன. கார்த்திக்கும் அதே போன்ற மீசை, தோற்றத்தில் வருகின்றார். வசன உச்சரிப்புகளிலும் அதே பாவனை.
இருந்தாலும், முதல் கால்வாசிப் படத்தில் படத்தின் பல்வேறு கதாப் பாத்திரங்களை அறிமுகப்படுத்திவிட்டு, கார்த்தியின் குணாதிசயக் காட்சிகளையும் காட்டிவிட்டு, பின்னர் கல்யாணக் காட்சிகளுக்கும், மாமனார், மருமகன் இடையிலான உறவின் கசப்புகளையும், சுவாரசியங்களையும் காட்டத் தாவி விடுகின்றார் இயக்குநர்.
படம் முழுக்க சிறு சிறு காட்சிகளாக அமைத்திருப்பதும், முடிவடையும் ஒரு காட்சியையும், தொடங்கும் அடுத்த காட்சியையும் அழகாக நகைச்சுவையுடன் தொடர்பு படுத்தி இணைத்துக் கொண்டே போவதிலும் இயக்குநரின் ரசனையும், சிந்தனை உழைப்பும் வெளிப்படுகின்றது.
அடிதடி எனச் சுற்றிக் கொண்டிருக்கும் கொம்பனாக வரும் கார்த்தி, பழனி என்ற இலட்சுமி மேனனைப் பார்த்துக் காதலில் விழுகின்றார்.
இலட்சுமி மேனனோ, தந்தையோடு வாழ்கின்றார். “என் அப்பா என்கூடத்தான் இருப்பார். ஒத்துக் கொள்பவரைத்தான் திருமணம் செய்வேன்” என இலட்சுமி மேனன் விதிக்கும் கட்டுப்பாட்டுக்கு கார்த்தியும் அவரது அம்மா கோவை சரளாவும் ஒப்புக் கொள்ள, அவருக்கும் கார்த்திக்கும் கல்யாணம் நடைபெறுகின்றது.
ஒரே வீட்டில் தங்கும் மாமனார் ராஜ் கிரணுக்கும், மருமகன் கார்த்திக்கும் இடையிடையே ஏற்படும் உரசல்கள் – அதனால் விளையும் சண்டை சச்சரவுகள் என திரைக்கதை போகின்றது.
பின்னர் மாமனாரின் நல்ல குணத்தையும், தன்மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும் புரிந்து கொள்ளும் கார்த்தி, வில்லன்களால் மாமனாருக்கு ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்க களத்தில் இறங்க, வழக்கமான வெட்டு, குத்தல் என படம் தொடர்கின்றது.
இருப்பினும், வித்தியாசமான, இயல்பான, நகைச்சுவை ததும்பும் சம்பவச் செருகல்கள், சில புதிய களங்கள், உச்சகட்ட இறுதிக் காட்சியில் ராஜ்கிரணனின் சாமியாடும் பின்னணி என இறுதி வரை படத்தை சுவாரசியம் குறையாமல், கலகலப்பாகக் கொண்டு செல்கின்றார் இயக்குநர்.
யாரோ ஒருவர் கொலை செய்யப்படப் போகின்றார் என்பதுபோல எதிர்பார்க்க வைத்து, யாரையும் சோகத்துக்காக “போட்டுத் தள்ளாமல்” சுபமாக முடித்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
படத்தின் பலம்
இயக்குநரின் கதை சொல்லும் திறனில், அவருக்கு நன்கு ஒத்துழைத்திருப்பது படத் தொகுப்பும், வேல்ராஜின் ஒளிப்பதிவும்.
இறுதிக் காட்சிகளில் இரவு நேரத்தில் தீப்பந்தம் தூக்கிக்கொண்டு சாமியாடிக் கொண்டே ஓடும் ராஜ்கிரணோடு வேல்ராஜின் காமெராவும் ஓடியிருக்கின்றது.
கிராமத்துத் தெருக்களின் இயல்பாக வாழ்க்கையையும், மனிதர்களின் உரையாடல்களையும், அவர்களின் பரிமாற்றங்களையும் அசலாகப் பதிவு செய்திருக்கின்றார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ஒரு காட்சியில் நடிக்கவும் செய்திருக்கின்றார்.
படத்திற்கு பலம் சேர்ப்பதும், அடிக்கடி ரசிகர்களின் கைதட்டலைப் பெறுவதும் வசனங்கள்தான். அவ்வளவு கூர்மை. அவ்வளவு இயல்பு – சில இடங்களில் நெகிழ்ச்சி. குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பாக ராஜ்கிரணுக்கும், கார்த்திக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள், படம் பார்க்கும் மாமனார்களுக்கு மருமகன்களையும், மருமகன்களுக்கு மாமனாரையும் ஞாபகப்படுத்தியிருக்கும்.
சந்தானம், சூரி ரக காமெடிகளுக்கு மட்டுமே கைதட்டி மகிழ்ந்த ரசிகர்கள் இந்தப் படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்காக மட்டுமே கைதட்டி, ஆரவாரிப்பது, இயக்குநரின் எழுத்து சாமர்த்தியத்திற்கு எடுத்துக்காட்டு.
கார்த்தியும் அவரது அம்மாவாக வரும் கோவை சரளாவும் சண்டை போட்டுக்கொள்வதும், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும் அவ்வளவு இயல்பு. ஏதோ வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போலவே இருக்கிறது.
மாமனார் – மருமகன் இடையிலான வசனங்களிலும் அவ்வளவு கூர்மை. யதார்த்தம்.
வில்லன்கள் முகத்திலேயே வில்லத்தனமாக கவிதைகளை எழுதி வழங்குகின்றார்கள். பொருத்தமான தேர்வுகள்.
காட்சிகளை சிறிய சிறிய காட்சிகளாக அமைத்திருப்பதால், உடனுக்குடன் மாறும் காட்சிகளால் படம் எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.
கிராமத்துக் காட்சிகளுக்கேற்ற பரபரப்பான பின்னணி இசையை, கிராமத்து வாத்தியங்களோடு வழங்கி அசத்தியிருக்கின்றார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஆனால், பாடல்கள் எதுவும் மனதில் தங்கவில்லை.
சிறப்பான நடிப்பு
படத்தின் மிகப் பெரிய பலம் ஒவ்வொருவரின் நடிப்பு. கார்த்தி பல இடங்களில் தனது ஹீரோயிசத்தைக் காட்டினாலும், கதையோடு பொருந்திப் போகின்றார். கதையோடு இணைந்து வாழ்ந்திருக்கின்றார். பருத்தி வீரனின் மறு விஜயம் என்றாலும், தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றார்.
ராஜ்கிரணைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. மகளுக்காக உருகும் காட்சிகளிலும், பின்னர் மருமகனுக்காக கவலைப்படும் காட்சிகளிலும், தனது ஸ்டைலில் வேட்டியை மடித்துக் கொண்டு நடுத்தெருவில் சண்டை போடும் காட்சிகளிலும் வெளுத்துக் கட்டியிருக்கின்றார்.
தம்பி ராமையாவும், கோவை சரளாவும், நகைச்சுவையில் கைகொடுக்கிறார்கள்.
இலட்சுமி மேனனும் பாந்தமான, நடிப்பை வழங்கியிருக்கின்றார். தன் மேல் கைவைக்க முனையும் வில்லனிடம் “தொடுறா பார்க்கலாம்” என சீறும் காட்சியில் விசிலையும், கைதட்டலையும் ஒரு சேரப் பெறுகின்றார். கவர்ச்சி காட்டாமலேயே, கிராமத்துப் பெண்ணின் வேடத்தில் கவரும் இலட்சுமி மேனன், ஒரு பாடலில் மட்டும், கார்த்தியோடு பின்னிப் பிணைந்திருக்கின்றார்.
படத்தின் பலவீனம், குறைகள் என்றால், நீளமான சண்டைக் காட்சிகள்தான். மற்றொரு குழப்பம் வில்லன்களுக்கிடையில் ஏன் திடீரென வெட்டு குத்து, அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது இறுதி வரை விளக்கமாக காட்டப்படாமலேயே படத்தை முடித்திருப்பது.
இவற்றைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், கொம்பன் – தாராளமாக நம்பிப் பார்க்க வேண்டிய படம்.
அதிலும் மாமனார், மருமகன் உறவின் பெருமையை வித்தியாசமான கோணத்தில் அணுகி உணர்த்திய விதத்தில் தனித்து நிற்கின்றான் கொம்பன்!
-இரா.முத்தரசன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொம்பன் - திரை விமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொம்பன் - திரை விமர்சனம்
கொம்பன் விமர்சனம் - தி இந்து
படத்தில் குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி இருக்கிறார்கள் என்று பல பிரச்சினைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்ததால், அப்படி இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்ற ஆர்வம் தூண்டப்பட்டது.
ஒரு கொலையுடன் தொடங்குகிறது திரைக்கதை. ஒருவேளை பிரச்சினை எல்லாம் உண்மையோ என்று யோசிப்பதற்குள் அடுத்தடுத்த காட்சிகள் மலர, கதைக்குள் நம்மை கவர்ந்து கொள்கிறார் இயக்குநர் முத்தையா.
வழக்கமான ஆக்ஷன் படங்களில் வரும் கதாநாயகக் கட்டுமானத்துக்கான வசன முன்மொழிதலுடன் களமிறங்கும் கார்த்தி, கையில் சிக்குவோரைப் புரட்டி எடுக்கிறார். ஊர்ப்பாசம் கொண்ட கோபக்கார இளைஞன், வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கும் கார்த்தி சட்டென பாத்திரத்தோடு பொருந்திப் போகிறார்.
அப்பா ராஜ்கிரணுக்கு ஒரு கிளாஸ் பிராந்தியும் தட்டு நிறைய மீனும் கொடுக்கும் பாசக்கார மகளாய் அறிமுகமாகும் லட்சுமி மேனனுக்கு விசில் தியேட்டரில் பறந்தது. "இத மாதிரி ஒரு பொண்ணு எந்த அப்பனுக்கு வாய்க்கும்" என்று ரசிகர்களின் பேச்சை திரையரங்கிகளில் கேட்க முடிந்தது.
பள்ளிக்குப் போக மறுக்கும் சிறுவனிடம் ஒரு தாய், "ஏலேய்… ஒழுங்கா படிச்சுப்புடணும். இல்லேன்னா …ந்தா போறானுங்க பாரு. பெருசு பெருசா மீசைய வச்சுகிட்டு. அவனுக மாதிரி வெட்டியா திரிய வேண்டியதுதான்!" என்று சொல்வதில் பொடி வைக்கிறார் இயக்குநர்.
ஊரில் தப்பு பண்ணினால் அடிப்பேன் என்று விறைப்புடன் திரியும் கார்த்திக்கு, ஊரே போய் பெண் கேட்க, ராஜ்கிரண் ஊரில் கார்த்தியைப் பற்றி விசாரித்துவிட்டு தனது மகளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறார்.
கார்த்தியின் அண்ணனாக கருணாஸ், அம்மாவாக கோவை சரளா. கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு இருவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். பருத்தி வீரன் கார்த்திக்கு ஒரு சித்தப்பு என்றால், இதிலே மாமனாக தம்பி ராமையா. புகுத்தப்பட்ட நகைச்சுவையாக இல்லாமல், படம் நெடுக, தன் ஒரு வரி வசனங்களால் சிரிக்க வைக்க முயல்கிறார்.
ஊர்ப்பாசத்தால் கார்த்தி சில பெரிய தலைகளைப் பகைத்துக் கொள்கிறார். எப்போது வேண்டுமானாலும் சண்டைக்காட்சி வந்துவிடும் என்ற நினைப்பை விதைக்கிறார்கள்.
மாப்பிள்ளை கார்த்தியால் அவ்வப்போது அவமானப்படுத்தப்பட்டும் பொறுத்துப் போகும் காட்சிகளில் மட்டுமன்றி, தான் வரும் காட்சிகளில் எல்லாம் தான் ஒரு மேம்பட்ட நடிகர் என்பதை நிரூபிக்கிறார் ராஜ்கிரண். நுணுக்கமான வெளிப்பாடுகளில், குரலில், உடல்மொழியில் என கச்சிதமான நடிப்பு.
எதிர்பாராத விதமாக கார்த்தியின் எதிரிகளிடம் ராஜ்கிரணும் சிக்கிக்கொள்ள, அப்பிரச்சினையில் இருந்து கார்த்தி - ராஜ்கிரண் தப்பித்தார்களா என்பதுதான் கதை. இந்த கமர்ஷியல் கதைக்குள் மாமனார் - மருமகன் பாசப் பிணைப்பை அழகாக கோர்த்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
கார்த்தியும் ராஜ்கிரணும் முதலில் பேசாமல் இருப்பது, பின்பு சண்டையிட்டு கொள்வது, உண்மை தெரிந்து பாசத்தால் உருகுவது என இருவருமே நடிப்பில் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
"இப்பாத்திரம் எழுதும் போதே எனக்கு ராஜ்கிரணை தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்று இயக்குநர் கூறியிருந்தார். அது உண்மைதான். மாப்பிள்ளையைப் பற்றி விசாரிப்பது, மாப்பிள்ளை உதாசீனப்படுத்துவதை தாங்கிக் கொள்வது, மாப்பிள்ளைக்கு ஒண்ணும் ஆகக் கூடாது என்று உருகுவது என வாழ்ந்திருக்கிறார் ராஜ்கிரண்.
'மெட்ராஸ்' படத்துக்கு பிறகு வேறு ஒரு ஏரியாவில் புகுந்து விளையாடி இருக்கிறார் கார்த்தி. வேஷ்டியை தூக்கி கட்டிக் கொண்டு கம்பீரமாக அறிமுகமாகும் காட்சியில் 'பருத்தி வீரன்' மாதிரியே தெரியுதே என்று நினைத்து பார்க்க ஆரம்பித்தால், அடுத்த அடுத்த காட்சிகளில் இவன் 'கொம்பன்' என்கிறார்.
இப்படத்தில் மாமனார் - மருமகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம் என்று விளம்பரப்படுத்தினார்கள், ஆனால் படத்தில் அந்த போராட்டத்தை விட வில்லன்களுக்கும் கார்த்திக்கும் நடக்கும் போராட்டம் தான் எக்கசக்கம். முதல் பாதியில் கார்த்தி யாரையாவது அடிக்கிறார் அல்லது உதைக்கிறார் இப்படியே நகர்கிறது கதை. இடைவேளைக்கு முன்பு ஆரம்பிக்கும் மாமனார் - மருமகன் கதை, இடைவேளைக்கு பின்பு சில காட்சிகள் மட்டுமே இருக்கிறது. இன்னும் பிணைப்பை அதிகப்படுத்தும் காட்சிகள் இருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும்.
'எம் மவனை மாட்டு சாணியா நினைச்சுகிட்டு இருக்கு ஊர். அவனை விபூதியாக்குறது உன் கையில்தான் இருக்கு. அவனை விபூதியாக்குவியோ, இல்ல அஸ்தியாக்குவியோ? உன் பொறுப்பு', 'பெத்தவங்க வெறும் நெற்றிதான். அதுல இருக்கிற பொட்டுதான்மா புருஷன். நெத்தி எவ்வளவு பெரிசா இருந்தாலும் பெருமையில்ல. ஆனா அதுல பொட்டு நிரந்தரமா இருக்கணும்' என ஆங்காங்கே 'உவமை கருத்து' வசனங்கள்.
'கொம்பன்' படத்தில் எந்த ஒரு சாதியையும் சாடவில்லை. யாரும் யாரையும் சாதி பெயர் வைத்து அழைக்கவில்லை. பின்னே ஏன் போராடுகிறார்கள், தடை கேட்கிறார்கள் என்று தியேட்டரில் என் பக்கத்து சீட்டுக்காரர் கேட்டார். தொண்டையைக் கணைத்துக் கொண்டு பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது ஒரு சண்டைக் காட்சி வர, நிமிர்ந்து உட்கார்ந்து படத்தில் லயிக்க ஆரம்பித்துவிட்டார்.
படத்தில் இருக்கும் சண்டைக்காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கிறலாம். ஆளாளுக்கு விதவிதமாய் கத்தியோடு அலைகிறார்கள். சண்டைக்காட்சியின்போது படம் பார்க்கும் திரை கிழிந்துவிடுமோ என்று எண்ணுமளவுக்கு சீவி சீவி மிரட்டுகிறார்கள்.
இப்படத்தின் இடம்பெற்றுள்ள குறியீடுகள், கொள்கைப் பிரச்சாரங்கள், சித்தாந்த கருத்துகளை இந்து டாக்கீஸ் விமர்சனக் குழு பார்த்துக்கொள்ளும்.
'கறுப்பு நிறத்தழகி' பாடல் கவர்ந்து இழுத்தாலும், மற்ற பாடல்கள் ஏனோ மறுக்கிறது. ஆனால், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் 'மங்காத்தா' தீம் மியூசிக்கை அப்படியே மேள தாளத்துடன் இணைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஏன் ஜி.வி.பிரகாஷ் சார்?
ஒரு படம் பார்க்கச் சென்றால், போர் அடிக்காமல் கதை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் வசிகரிக்கிறான் இந்த 'கொம்பன்'.
தேவையில்லாமல் ஏனோ கொம்பு சீவியவர்களுக்கு ஒரு சீப்பை கொடுத்து, தலை வாரச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால், "ஏற்கெனவே 'ஃப்யூஸ்' புடிங்கப்பட்டுதாம்பா... கொம்பன் இறங்கி இருக்கான்" என்று ஓர் இளம் ரசிகர் சொன்னதுதான், 'சென்சார்' அமைப்பின் வீச்சை எனக்கு உணர்த்தியது.
நாளைக்கு ரிலீஸ்... இல்லை... இன்றே ரிலீஸ்... இன்றுதான் ரிலீஸ்... ஆனா, எப்போது என்று தெரியவில்லை... இப்படி பட வெளியீட்டிலேயே பரபரப்பு ஆனான் 'கொம்பன்'.
படத்தில் குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி இருக்கிறார்கள் என்று பல பிரச்சினைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருந்ததால், அப்படி இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்ற ஆர்வம் தூண்டப்பட்டது.
ஒரு கொலையுடன் தொடங்குகிறது திரைக்கதை. ஒருவேளை பிரச்சினை எல்லாம் உண்மையோ என்று யோசிப்பதற்குள் அடுத்தடுத்த காட்சிகள் மலர, கதைக்குள் நம்மை கவர்ந்து கொள்கிறார் இயக்குநர் முத்தையா.
வழக்கமான ஆக்ஷன் படங்களில் வரும் கதாநாயகக் கட்டுமானத்துக்கான வசன முன்மொழிதலுடன் களமிறங்கும் கார்த்தி, கையில் சிக்குவோரைப் புரட்டி எடுக்கிறார். ஊர்ப்பாசம் கொண்ட கோபக்கார இளைஞன், வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கும் கார்த்தி சட்டென பாத்திரத்தோடு பொருந்திப் போகிறார்.
அப்பா ராஜ்கிரணுக்கு ஒரு கிளாஸ் பிராந்தியும் தட்டு நிறைய மீனும் கொடுக்கும் பாசக்கார மகளாய் அறிமுகமாகும் லட்சுமி மேனனுக்கு விசில் தியேட்டரில் பறந்தது. "இத மாதிரி ஒரு பொண்ணு எந்த அப்பனுக்கு வாய்க்கும்" என்று ரசிகர்களின் பேச்சை திரையரங்கிகளில் கேட்க முடிந்தது.
பள்ளிக்குப் போக மறுக்கும் சிறுவனிடம் ஒரு தாய், "ஏலேய்… ஒழுங்கா படிச்சுப்புடணும். இல்லேன்னா …ந்தா போறானுங்க பாரு. பெருசு பெருசா மீசைய வச்சுகிட்டு. அவனுக மாதிரி வெட்டியா திரிய வேண்டியதுதான்!" என்று சொல்வதில் பொடி வைக்கிறார் இயக்குநர்.
ஊரில் தப்பு பண்ணினால் அடிப்பேன் என்று விறைப்புடன் திரியும் கார்த்திக்கு, ஊரே போய் பெண் கேட்க, ராஜ்கிரண் ஊரில் கார்த்தியைப் பற்றி விசாரித்துவிட்டு தனது மகளை கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறார்.
கார்த்தியின் அண்ணனாக கருணாஸ், அம்மாவாக கோவை சரளா. கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு இருவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். பருத்தி வீரன் கார்த்திக்கு ஒரு சித்தப்பு என்றால், இதிலே மாமனாக தம்பி ராமையா. புகுத்தப்பட்ட நகைச்சுவையாக இல்லாமல், படம் நெடுக, தன் ஒரு வரி வசனங்களால் சிரிக்க வைக்க முயல்கிறார்.
ஊர்ப்பாசத்தால் கார்த்தி சில பெரிய தலைகளைப் பகைத்துக் கொள்கிறார். எப்போது வேண்டுமானாலும் சண்டைக்காட்சி வந்துவிடும் என்ற நினைப்பை விதைக்கிறார்கள்.
மாப்பிள்ளை கார்த்தியால் அவ்வப்போது அவமானப்படுத்தப்பட்டும் பொறுத்துப் போகும் காட்சிகளில் மட்டுமன்றி, தான் வரும் காட்சிகளில் எல்லாம் தான் ஒரு மேம்பட்ட நடிகர் என்பதை நிரூபிக்கிறார் ராஜ்கிரண். நுணுக்கமான வெளிப்பாடுகளில், குரலில், உடல்மொழியில் என கச்சிதமான நடிப்பு.
எதிர்பாராத விதமாக கார்த்தியின் எதிரிகளிடம் ராஜ்கிரணும் சிக்கிக்கொள்ள, அப்பிரச்சினையில் இருந்து கார்த்தி - ராஜ்கிரண் தப்பித்தார்களா என்பதுதான் கதை. இந்த கமர்ஷியல் கதைக்குள் மாமனார் - மருமகன் பாசப் பிணைப்பை அழகாக கோர்த்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
கார்த்தியும் ராஜ்கிரணும் முதலில் பேசாமல் இருப்பது, பின்பு சண்டையிட்டு கொள்வது, உண்மை தெரிந்து பாசத்தால் உருகுவது என இருவருமே நடிப்பில் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
"இப்பாத்திரம் எழுதும் போதே எனக்கு ராஜ்கிரணை தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்று இயக்குநர் கூறியிருந்தார். அது உண்மைதான். மாப்பிள்ளையைப் பற்றி விசாரிப்பது, மாப்பிள்ளை உதாசீனப்படுத்துவதை தாங்கிக் கொள்வது, மாப்பிள்ளைக்கு ஒண்ணும் ஆகக் கூடாது என்று உருகுவது என வாழ்ந்திருக்கிறார் ராஜ்கிரண்.
'மெட்ராஸ்' படத்துக்கு பிறகு வேறு ஒரு ஏரியாவில் புகுந்து விளையாடி இருக்கிறார் கார்த்தி. வேஷ்டியை தூக்கி கட்டிக் கொண்டு கம்பீரமாக அறிமுகமாகும் காட்சியில் 'பருத்தி வீரன்' மாதிரியே தெரியுதே என்று நினைத்து பார்க்க ஆரம்பித்தால், அடுத்த அடுத்த காட்சிகளில் இவன் 'கொம்பன்' என்கிறார்.
இப்படத்தில் மாமனார் - மருமகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம் என்று விளம்பரப்படுத்தினார்கள், ஆனால் படத்தில் அந்த போராட்டத்தை விட வில்லன்களுக்கும் கார்த்திக்கும் நடக்கும் போராட்டம் தான் எக்கசக்கம். முதல் பாதியில் கார்த்தி யாரையாவது அடிக்கிறார் அல்லது உதைக்கிறார் இப்படியே நகர்கிறது கதை. இடைவேளைக்கு முன்பு ஆரம்பிக்கும் மாமனார் - மருமகன் கதை, இடைவேளைக்கு பின்பு சில காட்சிகள் மட்டுமே இருக்கிறது. இன்னும் பிணைப்பை அதிகப்படுத்தும் காட்சிகள் இருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும்.
'எம் மவனை மாட்டு சாணியா நினைச்சுகிட்டு இருக்கு ஊர். அவனை விபூதியாக்குறது உன் கையில்தான் இருக்கு. அவனை விபூதியாக்குவியோ, இல்ல அஸ்தியாக்குவியோ? உன் பொறுப்பு', 'பெத்தவங்க வெறும் நெற்றிதான். அதுல இருக்கிற பொட்டுதான்மா புருஷன். நெத்தி எவ்வளவு பெரிசா இருந்தாலும் பெருமையில்ல. ஆனா அதுல பொட்டு நிரந்தரமா இருக்கணும்' என ஆங்காங்கே 'உவமை கருத்து' வசனங்கள்.
'கொம்பன்' படத்தில் எந்த ஒரு சாதியையும் சாடவில்லை. யாரும் யாரையும் சாதி பெயர் வைத்து அழைக்கவில்லை. பின்னே ஏன் போராடுகிறார்கள், தடை கேட்கிறார்கள் என்று தியேட்டரில் என் பக்கத்து சீட்டுக்காரர் கேட்டார். தொண்டையைக் கணைத்துக் கொண்டு பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது ஒரு சண்டைக் காட்சி வர, நிமிர்ந்து உட்கார்ந்து படத்தில் லயிக்க ஆரம்பித்துவிட்டார்.
படத்தில் இருக்கும் சண்டைக்காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கிறலாம். ஆளாளுக்கு விதவிதமாய் கத்தியோடு அலைகிறார்கள். சண்டைக்காட்சியின்போது படம் பார்க்கும் திரை கிழிந்துவிடுமோ என்று எண்ணுமளவுக்கு சீவி சீவி மிரட்டுகிறார்கள்.
இப்படத்தின் இடம்பெற்றுள்ள குறியீடுகள், கொள்கைப் பிரச்சாரங்கள், சித்தாந்த கருத்துகளை இந்து டாக்கீஸ் விமர்சனக் குழு பார்த்துக்கொள்ளும்.
'கறுப்பு நிறத்தழகி' பாடல் கவர்ந்து இழுத்தாலும், மற்ற பாடல்கள் ஏனோ மறுக்கிறது. ஆனால், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் 'மங்காத்தா' தீம் மியூசிக்கை அப்படியே மேள தாளத்துடன் இணைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஏன் ஜி.வி.பிரகாஷ் சார்?
ஒரு படம் பார்க்கச் சென்றால், போர் அடிக்காமல் கதை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் வசிகரிக்கிறான் இந்த 'கொம்பன்'.
தேவையில்லாமல் ஏனோ கொம்பு சீவியவர்களுக்கு ஒரு சீப்பை கொடுத்து, தலை வாரச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால், "ஏற்கெனவே 'ஃப்யூஸ்' புடிங்கப்பட்டுதாம்பா... கொம்பன் இறங்கி இருக்கான்" என்று ஓர் இளம் ரசிகர் சொன்னதுதான், 'சென்சார்' அமைப்பின் வீச்சை எனக்கு உணர்த்தியது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொம்பன் - திரை விமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொம்பன் - திரை விமர்சனம்
பதிவுக்கு நன்றி சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொம்பன் - திரை விமர்சனம்
![கொம்பன் - திரை விமர்சனம் 11030793_10152920788838579_5734086906662989623_n](https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11030793_10152920788838579_5734086906662989623_n.jpg?oh=cbca1a57b93244e5d121e1a17d035ee3&oe=55B6C228)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொம்பன் - திரை விமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» திரை விமர்சனம்- ஆடை
» திரை விமர்சனம்: ஜோ
» யா யா - திரை விமர்சனம்!
» திரை விமர்சனம்: ஜோ
» திரை விமர்சனம்- ஆடை
» திரை விமர்சனம்: ஜோ
» யா யா - திரை விமர்சனம்!
» திரை விமர்சனம்: ஜோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|