ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!

2 posters

Go down

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Empty கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!

Post by krishnaamma Wed Apr 01, 2015 12:41 am

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  KcIujZSnTyyaVi4AG4Ol+dex

துவாபரயுக முடிவில் திருமால் தேவகி வயிற்றில் திருஅவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார்.

கண்ணனுக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை இஷ்டம். தினமும் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்பதில் கண்ணனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த யசோதை கண்ணபிரானை ஒரு உரலில் கட்டிப்போட்டு விடவேண்டும் என்று ஒரு தாம்புக் கயிற்றை எடுத்துக் கண்ணபிரான் வயிற்றைச் சுற்றினாள். கயிற்றின் பற்றாக்குறை! அதனால் வேறு ஒரு கயிற்றை எடுத்து அதனுடன் முடிந்தாள். அப்படியும் பற்றவில்லை. இப்படி எத்தனையோ கயிறுகளை எடுத்து முடிந்தும்கூட கண்ணபிரான் வயிற்றை அந்தக் கயிற்றால் கட்ட முடியவில்லை. யசோதை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தாள்.

"கேவலம் ஒரு கயிற்றால் கூடக் கண்ணனைக் கட்ட நம்மால் முடியவில்லையே' என்று அழுகையே வந்துவிட்டது. பார்த்தார் கண்ணபிரான்! சற்றுவிட்டால் தாயார் அழுது விடுவாள் என்ற நிலையில் அவளின் அன்பை நினைத்து மாய விளையாட்டு போதும் என்று தன் வயிற்றைச் சுருக்கிக் கொண்டார். சடக்கென்று கயிற்றால் கண்ணனைக் கட்டி விட்டாள் யசோதை! உரலில் கயிற்றினால் கட்டுப்பட்ட வயிற்றை உடையவர் என்று பொருள் கண்ணபிரானின் ஒரு பெயரான தாமோதரன் என்ற பெயருக்கு!

கண்ணனை உரலோடு சேர்த்துக் கட்டிவிட்டுத் தன் இதர வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டாள் யசோதை. உரலில் கண்ணனின் வயிற்றைக் கட்டினாளே தவிர கண்ணனின் கால்களைக் கட்டவில்லை அவள்! அதனால் சற்று அப்படி இப்படி அசைத்து நடந்தால் இறுக்கிய கயிறு தளர்ந்துவிடும். உடனே கயிற்றை அவிழ்த்துவிட்டு வெண்ணேய் வைத்துத் தொங்க விடப்பட்டிருக்கும் உறியை லாவிப் பற்றி விடலாம் என்று கண்ணன் கட்டிய உரலோடு இழுத்து இழுத்து நடந்தான்.

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  1zBj93M7RL6afKQ19kfw+ages

நந்தகோபன் வீட்டு வாசலில் இரண்டு மருத மரங்கள் அருகருகே உயர்ந்து நின்றன. அவற்றின் நடுவே புகுந்து செல்ல முயன்றார் கண்ணபிரான். அவர் போய்விட்டார். ஆனால் உரல் போகமுடியவில்லை, அந்த மருத மரங்கள் தடுத்தன. உடனே வலது காலால் ஒரு உதை, இடது காலால் ஒரு உதை விட்டார். அந்த மருத மரங்கள் இரண்டும் வேருடன் சாய்ந்து விழுந்தன. விழுந்த மரங்களில் இருந்து இரண்டு மிகப் பிரகாசம் பொருந்திய உருவங்கள் தோன்றி கண்ணபிரானை வணங்கின! யார் இவர்கள்?! எதனால் இப்படி மரமாக நின்றிந்தார்கள்? அதற்கு ஒரு சிறிய முன் கதை உண்டு.

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  NnxgHKr0TICb7R7McYia+index

இந்த இரண்டு பேரும் குபேரனுடைய புத்திரர்கள். ஒருவன் பெயர் நளகூபரன். இன்னொருவன் மணிக்ரீவன். மகா ஆற்றல் படைத்தவர்கள். மன்மதனை பழிக்கும் பேரழகு உடையவர்கள். இவர்கள் இருவரும் ஒருநாள் கயிலைமலையில் ஒரு தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள். கூடவே அவர்களது மனைவிமார்கள்! இந்த சமயம் பார்த்து நாரதர் அந்த பக்கம் வந்துகொண்டிருந்தார். தூரத்தில் அவர் வருவதைப் பார்த்துவிட்ட பெண்கள் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாரதரை வணங்கினார்கள். ஆனால் நீரைவிட்டு வெளியே வராத ஆடவர்களுக்கு நாரதரைக் கண்டு எரிச்சல்...!

இருவரில் நளகூபரன் சற்றுத் தமாஷ் பேர்வழி. அவன் நாரதரைப் பார்த்து, அவர் கையில் வைத்திருக்கும் தம்புராவை இசைத்து பாடும்படியாக கேலி பேசினான்.

நாரதருக்கு மகா கோபம், ""ஏய் மூடர்களே! நீங்கள் இருவரும் முப்பதாயிரம் வருஷம் மருத மரங்களாய் இருந்து கண்ணபிரான் கால்பட்டு சாபம் நீங்கப் பெறுவீர்கள்!'' என்று சபித்துவிட்டுப் போய் விட்டார்!

அந்த இருவரும்தான் நந்தகோபனின் வாசலில் நின்றிருந்த மருத மரங்கள். 30,000 ஆண்டுகளாய் அங்கே நின்று கொண்டே இருந்திருக்கிறார்கள் கண்ணபிரானின் வரவை எதிர்பார்த்து!

சாபம் நீங்கப் பெற்ற அந்த இருவரும் கண்ணபிரானை வணங்கித் தொழுது துதி பாடினர். பின்பு விண்ணுலகம் சென்றனர்.

மயிலை சிவா.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  Empty Re: கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!

Post by ayyasamy ram Wed Apr 01, 2015 1:11 am

கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  BsdrWvB9SCylWC4N3G8V+kanna
-
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum