ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

4 posters

Go down

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Post by ராஜா Sun Mar 22, 2015 12:19 am

கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

அவரது மகன்களில் ஒருவனான சலிம் என்ற 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் திருடிவிட்டதாக இன்று ஷகினா கேள்விப்பட்டார். பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது.

இந்த கோபத்தில் வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து சலிமை மனம்போன போக்கில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிறுவன் சில நிமிடங்கள் துடிதுடித்து, துவண்டுப்போய் இறந்து விட்டான்.

இதைக் கண்டு பதறிப்போன தாய், திருத்த முயன்று ஆத்திரத்தில் பெற்ற மகனையே அடித்துக் கொன்றுவிட்டோமே என மனம் வெதும்பினார். அதே வேளையில், இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்தால் நம்மை சிறையில் போட்டு விடுவார்களே, தந்தை இல்லாத நமது இரண்டு பிள்ளைகளும் தாயும் இல்லாமல் அனாதையாக திண்டாடிப் போவார்களே என சிந்திக்க தொடங்கினார்.

உடனடியாக வீட்டில் கிடந்த ஒரு பெரிய சூட்கேஸை எடுத்து அதனுள் சலிமின் பிரேதத்தை திணித்தார். அருகாமையில் எங்காவது பிணத்தை புதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் சூட்கேஸை சுமந்து சென்ற ஷகினாவின் தோற்றத்தை கண்டு சந்தேகப்பட்ட அப்பகுதிவாசிகள் போலீசில் புகாரில் அளித்தனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty Re: திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Post by ராஜா Sun Mar 22, 2015 12:27 am

தற்போதைய இந்திய இளம் தலைமுறைக்கு இவரை போன்ற நல்ல தாய் தான் தேவை, அப்பா தான் வளரும் அடுத்த தலைமுறை கள்ளம் கபடம் இன்றி நல்ல பிள்ளைகளாக வளருவார்கள்.

இவருக்கு இருக்கும் இன்னும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இவரை கோர்ட் மன்னித்து விடுதலை செய்யவேண்டும் சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty Re: திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Post by Aathira Sun Mar 22, 2015 12:32 am

திருத்துவதற்கு இது அல்ல வழி. ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.


திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Tதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Hதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Iதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Rதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Aதிருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty Re: திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Post by ayyasamy ram Sun Mar 22, 2015 5:38 am

ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு. ...
-
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty Re: திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Post by ராஜா Sun Mar 22, 2015 12:33 pm

Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி.  ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.
அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .

பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty Re: திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Post by Dr.S.Soundarapandian Sun Mar 22, 2015 3:34 pm

ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty Re: திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Post by ராஜா Sun Mar 22, 2015 5:22 pm

Dr.S.Soundarapandian wrote:ராஜா அவர்களே நன்றி !
பெத்த கடனுக்குத்தான் அவனை அடித்து
வட்டியைக் கட்டிப்புட்டா !- இனி
அவள் நிலைமை என்னாகும் ? அது என்னாகும் ?
அவள் நிலை என்னாகும் என்பதை விட , அடுத்து இருக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் தான் மிகப்பெரிய கேள்விகுறி....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty Re: திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Post by Aathira Sun Mar 22, 2015 6:21 pm

ராஜா wrote:
Aathira wrote:திருத்துவதற்கு இது அல்ல வழி.  ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு.
அவ்வளவு கோபம் எப்படி வரலாம். எதற்கும் ஒரு அளவு உண்டு.
அடித்து கொன்றதை நானும் சரி என்று சொல்லவில்லை , இந்த வரிகள் தான் இவர் மேல் பரிதாபப்பட வைத்தது .

பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது
இது போல எண்ணம் கொண்ட ஒருவரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பிற்காலத்தில் கண்டிப்பாக ஒழுக்கமான மனிதர்களாக சமூகத்தில் வாழ்வார்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன்
மேற்கோள் செய்த பதிவு: 1126436
புரிகிறது ராஜா. நாம் என்னதான் சமாதானம் சொன்னாலும்... உயிரின் விலை? தாய்க்கே இத்தனை கோபம் இருந்தால் அந்தக் குழந்தை அப்படித்தானே இருந்திருக்கும் என்றல்லவா எண்ணத் தோன்றும். அமர்ந்து பேசுவது அறிவுரைகள் வழங்குவது அன்பு காட்டுவது இவற்றை விடவா அடி உதவிடப் போகிறது.  இன்னும் என்னால் இதனைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.  பாவம் மற்ற இரு குழந்தைகளும். இனி அவை???
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய் Empty Re: திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum