Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
4 posters
Page 1 of 1
பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
![பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் 13a85ce1-fcc2-443e-87e3-f1e723af0894-800x100-bar](https://2img.net/h/www.maalaimalar.com/InternalAdImages/Mar2015/13a85ce1-fcc2-443e-87e3-f1e723af0894-800x100-bar.jpg)
குடி குடியைக்கெடுக்கும் என்பது பழமொழி. ஆனால் குடியை கெடுக்கவேண்டும் என்பதற்காகவே மது பானங்களை அரசாங்கமே ஊற்றி ஊற்றி கொடுக்கும் நிகழ்வுகளை 21 ஆம் நூற்றாண்டு கண்கூடாக பார்த்து வருகிறது.
நாட்டில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கும், கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களுக்கும் குடிபோதை தான் காரணம் என்று எத்தனை அறிக்கைகள் வந்தாலும், அரசு கண்டுகொள்ளப்போவதில்லை. சமீபத்தில் வெளியான 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் நிர்பயா என்ற இளம்பெண்ணை கற்பழித்த கொடூரன் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் இப்படி நடந்துகொண்டோம் என்று கூறியிருப்பதிலிருந்தே, குடிப்பழக்கம் எப்படி மனிதனை மிருகமாக்குகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும்.
இன்றைய நாகரிக உலகில் ஒரு சாதாரண குடிமகன் தனது தினக்கூலியில் வாகனத்துக்கான பெட்ரோலுக்கு 29 சதவீதத்தை செலவிடும் அதே நேரத்தில் மது போதைக்காக அதில் 50 சதவீதத்தை செலவிடுகிறான். ஆக மீதி 21 சதவீதத்தை வைத்து அவன் குடும்பம் எப்படி நிம்மதியாக வாழும்.
தமிழகம் 32 மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய மாநிலம். ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையை போன்று 3 மடங்கு மட்டுமே பெரிதாக உள்ள புதுச்சேரி மாநிலத்தின் மதுக்கடைகளின் எண்ணிக்கையோ ஏறத்தாழ 500-ஐ நெருங்கியுள்ளது. அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு மதுபானக்கடை உள்ளது. அங்கு கடந்த 2013 ஆம் ஆண்டு வரை 373 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை, புதிதாக 90 மதுக்கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதால் 500-ஐ நெருங்கியது. 2013 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி ஏனாம், மாகேயை தவிர்த்து புதுச்சேரியில் மட்டும் 254 மதுக்கடைகளில் மது விற்பனை செய்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் வந்துவிட்டால் புதுச்சேரி மதுக்கடை உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வாகனங்கள் புதுச்சேரி நோக்கி படையெடுக்கும். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும். அந்தளவுக்கு குடிமகன்களின் படையெடுப்பு நிகழும்.
வார நாட்களை எடுத்துக்கொண்டால், திங்கள் முதல் வெள்ளி வரை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சாரி சாரியாக படையெடுப்பார்கள். வீட்டில் சாமி கும்பிடும் போது தான் நாமெல்லாம் ஊதுவத்தி ஏற்றுவோம். ஆனால் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் மாலை ஏழு மணிக்கு மேல் ஊதுவத்தி ஏற்றப்படும். அந்த அளவுக்கு குடிமகன்களால் பஸ்சில் நாற்றம் குடலை பிடுங்கும். ஒரு வேளை அதிகமாக குடித்தால் சீக்கிரம் உனது படத்துக்கு வீட்டில் வத்தி ஏற்றும் நிலை ஏற்படும் என பேருந்து ஓட்டுனர்கள் சூசமாக சொல்கிறார்களோ என்னவோ?
'பாரதி' வாழ்ந்த பூமி இன்று 'பார்'களின் பூமியாக மாறிவிட்டது. அம்மாநிலத்தில் தினம் ஒரு கொலை நடக்க குடிப்பழக்கமே முக்கிய காரணம். அங்குள்ள இளைஞர்களை கல்வியறிவு இல்லாதவர்களாகவும், குடிபோதைக்கு அடிமையானவர்களாகவும் மாற்றிய பெருமை ஆட்சியிலிருந்த, ஆட்சியில் இருக்கும் அரசுகளையே சாரும்.
மதுபான விற்பனையால் அம்மாநிலத்தில் ஆண்டொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது. மதுபானக்கடைகள் நாட்டிற்கே அவமானச்சின்னமாக மாறியுள்ளன. இப்படி சொந்த நாட்டு மக்களையும், அண்டை மாநில மக்களையும் ஏமாற்றி பணம் ஈட்டவேண்டியது தான் ஒரு அரசின் கடமையா? என்பதை அரசுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு அமுலில் இருந்த
போதும் கூட பாண்டிச்சேரியில் கள், சாராயக் கடைகள்
இயங்கிக் கொண்டிருந்தன.
-
அம்மாநிலத்தில் குடிப்பழக்கம் உள்ள எவரும் வீதியில்
தள்ளாடி நடப்பதோ, ரகளையில் ஈடுபடுவதோ மிக மிக
குறைவு
-
அம்மாநில குடிமகன்களை குறைகூறுவது கூடாது..!!
-
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
-
போதும் கூட பாண்டிச்சேரியில் கள், சாராயக் கடைகள்
இயங்கிக் கொண்டிருந்தன.
-
அம்மாநிலத்தில் குடிப்பழக்கம் உள்ள எவரும் வீதியில்
தள்ளாடி நடப்பதோ, ரகளையில் ஈடுபடுவதோ மிக மிக
குறைவு
-
அம்மாநில குடிமகன்களை குறைகூறுவது கூடாது..!!
-
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
-
Re: பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
அந்த மாநில குடிமகன்களை காட்டிலும் அண்டை மாநில மக்களே அதிகம் பாதிக்க படுகின்றனர்...
ஆம்..இந்த செய்தி உண்மை தான்...நானும் பத்திரிகையில் படித்துள்ளேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1125407ayyasamy ram wrote:
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
-
ஆம்..இந்த செய்தி உண்மை தான்...நானும் பத்திரிகையில் படித்துள்ளேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
அன்றே, பாரதி பாடினார் " பாருக்குள்ளே நல்ல நாடு "என்று .
நம்மவர்கள் தப்பாக புரிந்து கொண்டு
"பார்" குள்ளே நல்ல நாடு என்று மாற்றி வருகின்றனர் .
ரமணியன்
நம்மவர்கள் தப்பாக புரிந்து கொண்டு
"பார்" குள்ளே நல்ல நாடு என்று மாற்றி வருகின்றனர் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்
ayyasamy ram wrote:
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
நீங்கள் இவ்வாறு கேட்பதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது!
இந்தியாவில் கோவாவுக்கு அடுத்து மதுபானங்கள் விலை மலிவாகக் கிடைக்குமிடம் பாண்டிச்சேரி மட்டுமே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|