ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை

5 posters

Go down

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Empty நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை

Post by சிவா Fri Mar 06, 2015 3:34 pm

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Naka_2332930f

நாகாலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவரை வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையொட்டி வெடித்த கலவரத்தில் போராட்ட நபர் ஒருவரும் உயிரிழந்தார்.

பிப்ரவரி 23-ம் தேதி நாகாலாந்தின் திமாப்பூரில் நாகா பழங்குடியினப் பெண்ணை வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் பல முறை பாலியல் வல்லுறுவுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விசாரணைக்காக திமாப்பூர் சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குற்றவாளியின் பெயர் பரீத் கான் என்றும், அவர் வங்கதேசத்திலிருந்து முறைகேடான முறையில் புகுந்து நாகாலாந்தில் தொழில் செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பழங்குடியின பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதால், நாகாலாந்து மக்கள் கடுமையான கோபமடைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வியாழக்கிழமை நடந்த போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் 4000-த்துக்கும் அதிகமானோர் திரண்டனர்.

போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒரு பிரிவினர் வாகனங்களை தீயிட்டு எரித்தும் கடைகளை உடைத்தும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகையை பீய்த்து அடித்தனர்.

அப்போது திடீரென போலீஸாரை தாக்கிவிட்டு சிறைக்குள் புகுந்த பொதுமக்களில் பலர், காவலில் அடைக்கப்பட்டிருந்த நபரை நிர்வாணமாக வெளியே இழுத்து வந்து, அவரது சரமாரியாக அடித்து தாக்கினர்.

"பொதுமக்கள் அடித்து தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்தார். இதனை அடுத்து நாங்கள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்து அந்த நபரின் உடலை மீட்டோம். இதில் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார்" என்று காவல்த்துறை அதிகாரி தெரிவித்தார்.

திமாப்பூரில் பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராஜ்நாத் விளக்கம்

திமாபூரின் சட்டம் ஒழுங்கு குறித்து நேற்று (விழாகக்கிழமை) மாலை அவசர அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொது மக்கள் வன்முறையில் ஈடுப்பட்டு சட்டத்தை கையில் எடுத்த செயலுக்கு அமைச்சரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாகாலாந்து முதல்வர் செலியாங் டெல்லியில் உள்ல நிலையில், இந்த அவசரக் கூட்டம் அவர் இல்லாமல் நடந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைமை மோசமடைந்த காரணம் குறித்து நியமிக்கப்பட்ட குழு விரிவான அறிக்கை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு தலையிட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசும் ஒழுங்குப்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Empty Re: நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை

Post by SajeevJino Fri Mar 06, 2015 5:19 pm

,

இப்படிதான் இது போன்ற கொடியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

திமாப்பூர் மக்களுக்கு எனது சல்யூட்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Empty Re: நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை

Post by விமந்தனி Fri Mar 06, 2015 7:13 pm

திமாப்பூர் ஜனங்களுக்கு ஜெ....!


நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Empty Re: நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை

Post by ராஜா Fri Mar 06, 2015 8:28 pm

கொடுமையான தண்டனை , இந்திய தண்டனை சட்டங்கள் குற்றவாளிகளை கண்ணுக்கு தெரிந்து தப்பவிடுவதற்கு தான் பெரிதும் பயன்படுகிறது.

இது போல மக்களே சட்டங்களை கையில் எடுப்பது தவறு என்றாலும் இப்ப இந்தியாவிற்கு மிகவும் அவசியமான ஒன்று.

ஜெயிலில் உட்கார்ந்துகொண்டு "கற்பழிக்கும் போது அந்த பெண் எதிர்த்து போராடியிருக்க கூடாது" என்று திமிருடன் பேட்டி கொடுத்த நாய்க்கும் இவனை போன்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் இதே தண்டனையை மக்கள் கொடுக்க வேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Empty Re: நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை

Post by சிவா Sat Mar 07, 2015 4:20 am

கற்பழிப்பு குற்றவாளியை பொதுமக்கள் அடித்துக் கொன்ற விவகாரம் தொடர்பாக கலெக்டர் உள்பட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாகாலாந்தின் திமாபூரில் வசித்து வந்தவர் சையத் பரீத்கான் (வயது 35). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்த அவர், நாகா பழங்குடி இனத்தை சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட பரீத்கான், விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆத்திரம் தணியாத பொதுமக்கள், பாதுகாப்பையும் மீறி சிறையை உடைத்து பரீத்கானை வெளியில் இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கினர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய பிறகே அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த தாக்குதலில் பரீத்கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீஸ் துப்பாக்கி சூட்டில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச்சம்பவம் குறித்து நாகாலாந்து அரசு அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அமைச்சரவை இன்று அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்த தவறியதால், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, மத்திய சிறை சூப்பிரெண்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, முதல் அமைச்சரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Empty Re: நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை

Post by சிவனாசான் Sat Mar 07, 2015 4:55 am

இப்படிதான் செய்யனும் சரியானதீர்ப்பு.கைது...விசாரனை நீதிமன்றம் என்பதெல்லாம் வெறும்..............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை Empty Re: நாகாலாந்தில் பலாத்கார வழக்கின் சிறைக் கைதி அடித்துக் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum