Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 2:15 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்மம் காக்க உதித்த அய்யா வைகுண்டர்
Page 1 of 1
தர்மம் காக்க உதித்த அய்யா வைகுண்டர்
‘உபகார நாதனாகிய நான் ஆணையிட்டுச் சொல்கிறேன்.
என்றைக்கும் மலையின் மீது ஏற்றிய தீபம் போலும்,
கன்றுக்குப் பால் போலும்,
கண்ணுக்குப் புருவம் போலும்
என்றைக்கும் மக்கா உங்களிடம் இருந்து அரசாள்வேன்’
– அய்யா வைகுண்டர்.
என்றைக்கும் மலையின் மீது ஏற்றிய தீபம் போலும்,
கன்றுக்குப் பால் போலும்,
கண்ணுக்குப் புருவம் போலும்
என்றைக்கும் மக்கா உங்களிடம் இருந்து அரசாள்வேன்’
– அய்யா வைகுண்டர்.
பரம்பொருளான இறைவன் தான் படைத்து இயக்கி வரும் இந்த பூஉலகில் யுகங்கள் தோறும் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்கு பற்பல அவதாரங்களாக தோன்றுகிறார்.
கலியன் பிறப்பு
அந்த வகையில் துவாபார யுகத்தில் துரியோதனாதிகளை அழித்து பின் பஞ்சபாண்டவர்களுக்கு குருநாடு பட்டமும் சூட்டிவிட்டு, மகாவிஷ்ணு ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் தன்னுடைய அவதார சடலமாகிய உபாயமாய கூட்டை பர்வதா உச்சி மலையிலே பத்திரப்படுத்தி விட்டு, கங்கை கரை வழியே ஒரு பண்டார வேடம் எடுத்து வந்து கொண்டிருந்தார். அங்கே கங்கையிலே சப்த மாதர்கள் 7 பேரும் நீராடி கொண்டு இருந்தார்கள்.
அவர்களின் கற்பை சோதித்த மகாவிஷ்ணு ஏழு லோகம் சென்று ஏழு வித்தும் எடுத்து வந்து சப்த கன்னியர்கள் மூலம் சான்றோர்கள் 7 பேரை பிறவி செய்தார். பிறகு அந்த குழந்தைகளை பத்திரகாளியிடம் வளர்க்கும் படி கொடுத்து விட்டு ஸ்ரீரங்கம் சென்றார். அதைத்தொடர்ந்து பூலோகத்தில் கலியன் பிறக்கிறான். அவனுடைய பிறவி எவ்வாறு இருக்கிறது என்றால் பூமி வெடித்து தலை கீழும், கால் மேலுமாக பிறக்கிறான். அவனை சிவபெருமானிடம் கொண்டு நிறுத்தினார்கள்.
உலகை நடுங்க வைக்கும் வரங்கள்
கலியன் ஈசனிடம் மேல் லோகமும், கீழ் லோகமும் நடுங்க வரங்களை கேட்கிறான். எல்லா இறைசக்தி களின் இறை மூலங்களையும் வரமாக பெறுகிறான். மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை பணமாக மாற்றி பெற்றுக்கொண்டான். கூடுவிட்டு கூடுபாயும் வரமும் பெற்றான். இவ்வாறு வரங்கள் பெற்ற கலியன் மக்கள் மனதில் புகுந்தான்.
கலி என்பது ஓர் உருவம் அல்லாது மக்கள் மனதில் ஏற்படும் தீய எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். இதனால் சாதி பேதம், ஏற்றத்தாழ்வுகள், பொறாமை, அறியாமை, மூடநம்பிக்கை போன்றவற்றால் நீதிக்கும், நேர்மைக்கும் புறம்பாக மக்கள் செயல்பட்டனர். இந்த கலியனால் சான்றோர் படும் துயரம் பொறுக்க முடியாமல் மகாவிஷ்ணு கலியை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்கு திருவுள்ளம் கொண்டார்.
அய்யா அவதரித்தார்
கொல்லம் ஆண்டு 1008–ல் மாசி மாதம் 20–ம் தேதி திருச்செந்தூர் திருப்பாற்கடலில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியாக வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து கலி அழிப்பதற்கு உண்டான வழிமுறைகளை இறை அறிவாக (விஞ்சை) வெளிப்படுத்தி விட்டு, அங்கிருந்து எண்ணாயிரம் சூரிய பிரகாசமாக வெளிப்பட்டு, தெய்வமும் அவராய் திருவுள்ளமும் அவராய் மனிதன் கண் காண மனுச்சொரூபம் எடுத்து தெட்சணாமூலை என்று சொல்லக்கூடிய கன்னியாகுமரியில் அமைந்துள்ள சாமிதோப்பு பகுதியில் பண்டார கோலமாக வந்து அமர்ந்தார்.
அய்யா வைகுண்டர் தோன்றிய அந்த நாளைத்தான் அய்யாவின் அவதார தின விழாவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அய்யா கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்களுக்கு அன்பு, தர்மம், பொறுமை இவற்றை கலியை அழிக்கும் தாரக மந்திரமாக மக்களுக்கு அருளினார். இறைவன் ஒன்று, அவனுக்கு உருவம் கிடையாது, சாதி பேதமில்லை, எல்லோரும் ஓர் இனம் என்பதை உணர்த்தினார். அறியாமை, மூடநம்பிக்கை இவற்றை அகற்றி இந்த கலியுகத்திற்கு உண்டான சட்ட திட்டங்களை வகுத்தார்.
ஆங்காங்கே தெய்வநிலைகளில் நின்ற சக்திகளை எல்லாம் தனக்குள் ஆக்கி, மந்திர, தந்திர, மாயாஜாலம் எல்லாம் ஒடுக்கி, அன்பு என்னும் ஒரு குடைக்குள் ஆட்சி செய்து தர்மயுகம் என்னும் புது யுகத்தை வருத்தி மாசற்ற மக்களை வைத்து அரசு ஆளவரும் புதுமையை நமக்கு உணர்த்தினார்.
தர்மயுக வாழ்வுக்கு வழி காட்டும், முக்காலத்தையும் உணர்த்தும் காலக்கண்ணாடியாக திகழும் அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் போன்ற ஆகமங்களை அருளினார்.
நெற்றியில் திருநாமம் அணிய செய்த அய்யா வைகுண்ட பரம்பொருள், அடிமைத்தனத்தை ஒழிக்கும் விதமாக எல்லோரும் இந்த நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சமம் என்று சொல்லி தலையில் தலைப்பாகை (கிரீடம்) அணிய செய்தார்.
நீடிய யுகம், சதுர யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், நடந்து கொண்டு இருக்கும் கலி யுகம், வர இருக்கும் தர்ம யுகம் ஆகிய எட்டு யுகச் செய்தி களையும் உள்ளடக்கி ‘‘அகிலத்திரட்டு அம்மானை’’ என்னும் ஆகமத்தின் மூலம் நமக்கு அருளினார். அகிலத்திரட்டு ஆகமத்தை அய்யாவின் சீசர்களில் ஒருவரான சகாதேவ சீசர் என அழைக்கப்படும் அரிகோபால சீசர் மூலமாக கொல்லம் ஆண்டு 1016–ல் கார்த்திகை மாதம் 27–ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று எழுத தொடங்கினார். அன்றைய தினம் சீசர் இரவில் நித்திரையில் ஆழ்ந்து இருந்தபோது இறைவன் அவர் அருகில் வந்திருந்து அவருக்கு ஞான உபதேசம் வழங்கி ‘‘ஏரணியும் மாயோன்’’ என்னும் அடியை எடுத்து கொடுத்து இந்த ஆகமத்திற்கு முதல் சீராய் அமைத்து பின்வருவனவற்றை எல்லாம் தாமே அவர் மனமிருந்து சொல்வதாக உறுதி கொண்டு, ஆகமத்தை எழுத பணித்தார்.
அப்போது தம்முள் வைகுண்டர் உறைந்திருப்தைப் போன்ற ஓர் உணர்வு அவரை மெய்மறக்கச் செய்தது. அந்த நேரம் அவரது கண்களுக்கு மகாவிஷ்ணு, மகாலட்சுமியிடம் உலக வரலாற்றை கூறுவதைப் போன்ற ஒரு காட்சி தெரிந்தது.
அந்த அருட்காட்சியில் கேட்டவை அனைத்தையும் அப்படியே அம்மானை ராகத்தில் பனை ஓலைகளில் எழுத ஆரம்பித்தார். 14 நாட்களில் அதை எழுதி நிறைவு செய்தார். இது, இறைவனால் அம்மாவுக்குச் சொன்ன செய்தி ஆகையால், அந்த ஆகமத்திற்கு ‘அகிலத்திரட்டு அம்மானை’ என்று வைகுண்டரின் அனுமதியோடு பெயர் சூட்டினார்.
அய்யா வைகுண்டர் அருள் வாக்குப்படியே, ஓலைச்சுவடியில் அரிகோபால சீசரால் எழுதப்பெற்ற இந்த அகிலத்திரட்டு அம்மானை என்ற ஆகமம் இப்போது உலக மக்கள் பயன்பெறும் வகையில் புத்தக வடிவில் வெளிவந்து இருக்கிறது. அனைவரும் படிக்கும் வகையில் எளிய நடையில் உள்ளது. அது படிக்கும்போதே இப்போது உலகில் நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்கள் எல்லாம் நம் நினைவுக்கு வரும்.
எழுதிய எழுத்துக்குள்ளே எண்ண அடங்காத கருத்து புதையல்களை தன் அகத்தே கொண்டு இந்த அகிலத்திரட்டு ஆகமம் விளங்குகிறது. இதில் கலியை அழிப்பதற்கு உண்டான இறை ஞானத்தை (விஞ்சை) மக்களுக்கு அருளி இருக்கிறார்.
நான்கு வேதங்களின் சாரம் பிரபஞ்சம் தோன்றியது. ஒவ்வொரு யுகங்கள் தோறும் நிகழ்ந்த அவதாரங்கள் இனி வர இருக்கும் தர்மயுக வளமையையும் இந்த ஆகமத்தில் அருளி இருக்கிறார். இது நம்மை தர்மயுகத்திற்கு அழைத்து செல்லும் பாலமாக அமைந்து உள்ளது. அய்யா வைகுண்ட பரம்பொருள் காட்டிய வழியை (அய்யா வழி) பின்பற்றுபவர்களுக்கு இந்த அகிலத்திரட்டு அம்மானை புத்தகம் புனித நூலாக அமைந்து உள்ளது.
முக்காலப் பெட்டகமாக விளங்கும் அகிலத்திரட்டு அம்மானையை சாமித்தோப்பு அருகே உள்ள தாமரைக்குளம் பதியில் வைத்து அரிகோபால சீசர் எழுதி முடித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தர்மம் காக்க உதித்த அய்யா வைகுண்டர்
சுடரை தாங்கும் தாமரை
அய்யா வழி என்றாலே சுடரை தாங்கும் தாமரைதான் நினைவில் இருக்கும். இதில் தாமரை 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் நம்முள் இயங்கும் ஆன்ம ஜோதியாகிய பரப்பிரம்மம் அய்யா வைகுண்ட பரம்பொருளையும் குறிக்கும்.
இந்த தாமரை சகஸ்ரார சக்கரம் ஆதலால் இதற்கு தண்டு வரையப்படாது. அய்யா வைகுண்டர் அவதார தினம் கொல்லம் ஆண்டு 1008 ஆகும். அதனால் 1008 இதழ் தொகுதி அய்யா வழி சின்னமாகிய தாமரையில் பயன்படுத்தப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அய்யா வைகுண்டர்
» அய்யா வைகுண்டர்
» அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு,,,,,,,,,
» அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...
» அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டிலிருந்து சில வரிகள்...
» அய்யா வைகுண்டர்
» அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு,,,,,,,,,
» அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...
» அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டிலிருந்து சில வரிகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|