ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம்

2 posters

Go down

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Empty தெருவெல்லாம் தமிழ் முழக்கம்

Post by சிவா Tue Mar 03, 2015 2:09 am


கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி.

மன்னர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தரப்பினரும் தமிழ் மொழியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

தற்போதும் கூட தமிழ் மொழி மீது தாக்குதல் நடைபெற்றால் அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து போராடுகின்றனர்.

ஆனால், எந்தத் தரப்பினரும் தமிழ் மொழியை அதற்கே உரிய சீரோடும், சிறப்புகளோடும் கலப்படமின்றி தூய்மையாய் வாழவைக்க முயற்சிகளை எடுக்கவில்லை.

ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலப்படமாகி தமிழ் சொற்களைப் போலவே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மற்றொருபுறம் மீண்டும் ஹிந்தித் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இம்மண்ணில் வாழும் தமிழர்களில் பலருக்கும் தமிழ் உணர்வு இல்லை. தமிழ் உணர்வு கொண்டவர்களும்கூட அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் உள்ளனர்.

ஆங்கில மொழிவழிக் கல்விதான் அறிவை வளர்க்கும் என்ற தவறான கண்ணோட்டம் அனைவரது மனதிலும் நிறைந்துவிட்டது.

வீடுகளில், பள்ளிகளில், பணிபுரியும் இடங்களில், அரசு அலுவலகங்களில், பொது இடங்களில்கூட ஆங்கிலம் பேச துடிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

எல்லாவற்றுக்கும் காரணம் என்ன? ஆங்கில மொழியில் பேசுபவனே நாகரிகம் தெரிந்தவன், அறிவுடையவன் என்ற சிந்தனை பரவியிருப்பதே காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில்கூட ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை அல்லது முன்னுரிமை கிடைக்கும் என்ற எதார்த்த உண்மை தமிழர்களை

தங்கிலீஷ்காரர்களாக மாற்றியுள்ளது.

பொருளாதாரம், வேலை இதற்காகத்தான் ஆங்கிலம் தேவை என்பதைத் தாண்டி, எவருக்கும் ஆங்கில மொழி மீது பெரும் பற்று கிடையாது.

தமிழ் பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருந்தால் போதுமானது என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

மழலையர் வகுப்பு தொடங்கி கல்லூரிப் படிப்பு வரை ஆங்கில வழியில் கல்வி பயின்ற பலர் சிறந்த தமிழ் பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக இந்த மண்ணில் தடம் பதித்துள்ளனர்.

தமிழைச் சார்ந்து இயங்குகிற ஊடகங்களில் ஆங்கில வழியில் பயின்றவர்கள் பலர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்து, உணவளிப்பது தமிழ்மொழிதான். எனவே, கற்றல் மொழியின் அடிப்படையில்தான் வேலை கிடைக்கும் என்ற கண்ணோட்டம் தவறு.

அதேபோல, தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த அறிஞர்கள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்களில் பலர் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்றும், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் பேசி தமது அறிவை பிறருக்கு கற்பித்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

ஆக, அறிவை தம் தாய்மொழியில் வளர்த்தாலும், தொடர்பு மொழியைப் பயன்படுத்தி உலகுக்கே கற்பிக்க முடியும் என்பதுதான் உண்மை.

தமிழிலே கல்வி கற்கும் அதே வேளையில், ஆங்கிலம் மட்டுமல்ல ஹிந்தி, பிரெஞ்சு, சீனம் உள்ளிட்ட எந்த மொழியையும் தொடர்பு மொழியாக கற்றுக் கொள்வதற்கு இங்கு தடையற்ற நிலை உருவாக வேண்டும்.

அந்த நிலையை எட்டிவிட்டால், தமிழ்நாட்டிலே எந்த மொழியை யார் திணிக்க முயற்சித்தாலும் தமிழனுக்குக் கவலை தேவையில்லை.

பிறமொழிக் கலப்படம் இல்லாத தூய தமிழை நான் பேசுவேன் என்று ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து சொல்வதே தமிழுக்குப் பெருமை.

இந்த இலக்கை எட்டுவதற்கு, வீதிகள்தோறும் மதுக்கடைகள் என்ற நிலை மாறி, வீதிகள்தோறும் தமிழ்ச் சங்கங்கள் என்ற நிலை வர வேண்டும்.

முதல்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் தமிழ்ச் சங்கங்களை அரசு சார்பில் நிறுவி, அங்கு தமிழறிஞர்களைப் பணியமர்த்துவன் மூலம் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட முடியும்.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினராகி, தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சென்று தூய தமிழை கற்கும் நிலை வர வேண்டும்.

வார விடுமுறை நாள்களில் தமிழ்ச் சங்கங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடி தூய தமிழ்ப் பேசி பழகினாலே போதும், அதே பழக்கம் அவர்கள் வாழ்க்கையிலும் வந்துவிடும்.

கடைகளில், நிறுவனங்களில் தமிழிலே பெயர்ப்பலகை, விலைப் பட்டியல் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவிக்காமல், அவ்வாறு வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியிருப்பவர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு முறையை கட்டாயம் அமலாக்க வேண்டும்.

பொதுமக்களுக்குப் புரியாது என்ற காரணத்தைச் சொல்லி, ஆங்கில சொற்களைக் கலந்து செய்தி வெளியிடாமல் தூய தமிழில் செய்தி வெளியிடவேண்டியது ஊடகங்களின் கடமை.

வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு மதத்திற்கும், தனித்தனிச் சாதிக்கும் சிறப்பு இடஒதுக்கீடு கொடுத்ததைப் போல, தமிழ் மொழித் தேர்வை தனியாக நடத்தி அதில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை மாறிவிடும்.

தமிழ் படித்தால், தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை போய் தமிழ் படித்தால் மட்டுமே முன்னுரிமை என்று வந்துவிட்டால், மக்களின் எண்ண ஓட்டங்கள் தமிழை நோக்கி திரும்பாதா?

வெறுமனே தமிழுக்காகக் குரல் விடுப்பதோடு நின்று விடாமல், இதுபோன்ற நல்ல தீர்மானங்களை செயல்படுத்துமாறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்ய அரசால் முடியாதா? அப்படிச் செய்ய அரசு முன்வரவில்லை என்றால், தமிழர்கள் ஒன்றுபட்டு வென்று காட்ட முடியாதா?

தினமணி


தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் Empty Re: தெருவெல்லாம் தமிழ் முழக்கம்

Post by மாணிக்கம் நடேசன் Tue Mar 03, 2015 11:54 am

இல்லமெல்லாம் நமது இனிய தமிழ் இனிக்க வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» சீனாவில் தமிழ் முழக்கம்!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum