ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

2 posters

Go down

தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் Empty தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

Post by சிவா Mon Mar 02, 2015 6:08 pm

நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தப்படுவதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசி கடத்தப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்கான அரிசியில் 12 விழுக்காட்டுக்கும் கூடுதலான அரிசி கடத்தப்படுவதை சாதாரண விசயமாக ஒதுக்கிவிட முடியாது.

தமிழகத்தில் நடைபெறும் அரிசிக் கடத்தல் தொடர்பாக தேசிய மாதிரிக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் இந்தக் குற்றச்சாட்டை பொருளாதார ஆய்வறிக்கை முன்வைத்துள்ளது.

மிகப்பெரிய அளவில் ஊழல்

2011-12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில் 31.56 லட்சம் டன் அரிசி மட்டும் தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்றும், மீதமுள்ள 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.610 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரிசி அளவின் அடிப்படையில் பார்த்தால் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசியில் சுமார் 12 விழுக்காடு கடத்தப்பட்டிருக்கிறது. மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் அரிசி மானியத்துக்கான ரூ.3200 கோடியில் சுமார் 19% அளவுக்கு கடத்தல் நடைபெற்றிருக்கிறது. இது மிகப்பெரிய அளவிலான ஊழல் ஆகும்.

அரிசி கடத்தலைத் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் துல்லியமானவை அல்ல என்றும், இதனால் இதை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது அரிசிக் கடத்தல் ஊழலை அடியோடு மூடி மறைக்கும் முயற்சி ஆகும்.

அரிசிக் கடத்தல் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் அரிசிக் கடத்தலின் அளவைக் குறைத்து வேண்டுமானால் காட்டியிருக்கலாமே தவிர நிச்சயமாக அதிகரித்துக் காட்டியிருக்க வாய்ப்பு இல்லை. அதற்கெல்லாம் மேலாக கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல தமிழகத்தில் நடைபெறும் நியாயவிலைக் கடை அரிசி கடத்தல் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். எனவே. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் துல்லியத் தன்மையை காரணம் காட்டி இந்த ஊழலை மூடி மறைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு

தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் எந்த நியாயவிலைக் கடைக்கு சென்றாலும் 20 ஆம் தேதிக்குப் பிறகு அரிசி வழங்கப்படாது. அதேபோல், சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை 10 ஆம் தேதிக்குப் பிறகு வாங்க முடியாது. காரணம் ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் எந்த அளவுக்கு அரிசி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமோ, அதில் 60% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல், பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் 50% அளவுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அப்படியானால் மீதமுள்ள பொருட்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தான் கொள்ள வேண்டும்.

இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் அரிசி கடத்தல் மூலம் ரூ.1280 கோடியும், பருப்பு மற்றும் பாமாயில் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.697 கோடியும் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். இது பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விட பல மடங்கு அதிகமாகும். நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தப்படுவதன் மூலம் அரசுக்கு ஓராண்டுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1977 கோடி என்றால், 4 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.7908 கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு தான் உள்ளது. தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படவில்லை என்று தமிழக அரசு கருதுமானால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தான் மக்கள் நம்ப வேண்டியிருக்கும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

#ஊழல


தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் Empty Re: தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

Post by prabatneb Mon Mar 02, 2015 9:46 pm

2011-12 பற்றி மட்டும் ராமதாஸ் பேசுகிறார்.. அதற்கு முந்தய ஆண்டுகள் பற்றி ஏன் பேசவில்லை.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» நாம் தமிழர் கட்சி சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்
» ஊழலை ஊக்குவிக்கிறதா உயர்நீதிமன்ற தீர்ப்பு? ராமதாஸ் !
»  நரகாசுரனைக் கொன்றவர்களை விசாரிக்க சிபிஐ வரவேண்டும்...!!
» சிபிஐ இயக்குநர் சின்கா , ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க கூடாது...!
» ஊழலை ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்: மன்மோகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum