Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருகிறது பிரதமர் மோடியின் 'பலே' திட்டம்!
5 posters
Page 1 of 1
வருகிறது பிரதமர் மோடியின் 'பலே' திட்டம்!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாதம் முதல் "ஜன ஒளஷதம்' (மக்கள் மருந்து) என்ற வணிக முத்திரையுடன் மூலக்கூறு மருந்துகள் (GENERIC MEDICINE) குறைந்த விலையில் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் தற்போது நிலவும் நோய்க்கு மாமருந்தாக இருக்கும்.
இந்த ஜன ஒளஷதம், 504 மூலக்கூறு மருந்துகளில் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதில் நோய் எதிர்ப்பு மாத்திரைகள், வலி நிவாரணிகள், ஊட்டச்சத்து மாத்திரைகள்; இருதயம், நுரையீரல், வயிறு தொடர்பான நோய்களுக்கான மருந்துகள், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் ஆகியவையும் அடங்கும்.
நோயாளிகளுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள், மாத்திரைகளின் மூலக்கூறு பெயர்களை மட்டுமே எழுத வேண்டும் என்றும், பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வணிக முத்திரை மருந்துகளின் (BRANDED MEDICINE) பெயர்களை எழுதக்கூடாது என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே கடைப்பிடிக்கின்றனர்.
அதே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது, தனியார் வணிக முத்திரை மருந்துகளின் பெயர்களையே எழுதும் நிலை உள்ளது. மருத்துவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை அல்லது ஆலோசனை வழங்கினாலும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடுமானால், இந்த ஜன ஒளஷதம் மூலம் மக்கள் பெருமளவு பயனடைவார்கள்.
1980-களில் ரூ.1,500 கோடியாக இருந்த இந்திய மருந்து தயாரிப்புத் தொழில், 2012-ஆம் ஆண்டு இறுதியில் ரூ.1,19,000 கோடி மதிப்புள்ள தொழில்துறையாக வளர்ந்துள்ளது. அந்த அளவுக்கு நோய்களும் பெருகியுள்ளன. விழிப்புணர்வும் பெருகியுள்ளது.
தற்போது நடைமுறையில், சுமார் 300 மருந்துகள் அட்டவணைப் பட்டியலில் உள்ளன. இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசு நிர்ணயிக்கும் விலையில்தான் அவற்றை விற்க வேண்டும். இந்த மருந்துகளை மிகக் குறைந்த அளவிலேயே மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இதன்மூலம் சந்தையில் மருந்துத் தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. அட்டவணையில் உள்ள மூலக்கூறு மருந்துகளுடன் சில வைட்டமின்களை சேர்த்து வணிக முத்திரையுடன் சந்தையில் விற்கின்றன. இந்த மாத்திரைகளின் விலையை மருந்து நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயித்துக்கொள்ள முடியும். ஆகவேதான் 300 மடங்குவரை கூடுதல் விலை நிர்ணயித்து விற்பதிலும், இவற்றைப் பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதிலும் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதனால்தான் மூலக்கூறு மருந்துகள் பலவும் சாமானியனின் வாங்கும் சக்தியை மீறியதாக இருக்கின்றன.
சில உயிர்காப்பு மருந்துகளின் விலையை நிர்ணயிக்க முடியாதபோதிலும், அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசு ஈடுபடுகிறது. ஆனாலும், காப்புரிமைப் பிரச்னைகளால் இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறுவது கடினமாக உள்ளது.
ஜன ஒளஷதம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமானால், அரசு மருந்தகங்கள் மட்டுமின்றி, தனியார் கடைகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தப் பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், மாநில அரசுகள் ஈடுபடலாம். இவற்றுக்கு விலைக் கழிவு உண்டு என்று ஜன ஒளஷதம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதைச் சில்லறை மருந்து விற்பனையாளர்களுக்குப் புரிய வைத்தாக வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை அம்மா மருந்தகங்கள் பல இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவுபடுத்துவது, அல்லது முகவர்களை நியமித்து அம்மா மருந்தகத்தின் கொள்கைப்படி குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்வது மிக எளிது. இருப்பினும், தற்போது அம்மா மருந்தகங்களில் வணிக முத்திரை மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜன ஒளஷதம் மருந்து, மாத்திரைகள் மூலக்கூறு அடிப்படையில் கிடைக்கும்போது, அவற்றை அம்மா மருந்தகங்கள் விற்பனை செய்ய முற்பட்டால், மக்களுக்கு உண்மையிலேயே குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் மூலக்கூறு மருந்துகள் எழுதித் தரப்படுகின்றன என்ற போதிலும், வெளியிடங்களிலும் பெருநிறுவன மருத்துவக்கூடங்களிலும் அத்தகைய சூழ்நிலை இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவ ஆலோசனை வழங்கும் அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டால், இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் மாத்திரை, மருந்துகள் கிடைக்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழும்.
தமிழ்நாட்டில் ஒருசில கூட்டுறவு அங்காடிகளில் மருந்துகள் விலைக் கழிவுடன் விற்பனை செய்யப்பட்டாலும், அந்த மருந்தகங்கள் நொடிந்து போனதற்குக் காரணம், அவை விற்கும் வணிக முத்திரை மருந்துகளின் பெயரை மருத்துவர்கள் பரிந்துரைகளில் குறிப்பிடாததுதான். உண்மையில் மருந்து இருக்கும். ஆனால் மருத்துவர் எழுதித் தந்த பெயரிலான மருந்தாக இருக்காது. அதற்கு இணையான மருந்து என்று சொல்லி விற்கவும் மாட்டார்கள். ஆகவேதான், கூட்டுறவு அங்காடிகள் நொடிந்து போயின.
விரைவில் ஜன ஒளஷதம் என்ற வணிக முத்திரையில் மூலக்கூறு மருந்துகள் கிடைக்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் மூலக்கூறு மருந்துகளை விற்பனை செய்யவும், அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்யவுமான நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
(மருந்துக்கு மருந்து - தலையங்கம் - தினமணி நாளிதழ்)
இந்த ஜன ஒளஷதம், 504 மூலக்கூறு மருந்துகளில் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதில் நோய் எதிர்ப்பு மாத்திரைகள், வலி நிவாரணிகள், ஊட்டச்சத்து மாத்திரைகள்; இருதயம், நுரையீரல், வயிறு தொடர்பான நோய்களுக்கான மருந்துகள், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் ஆகியவையும் அடங்கும்.
நோயாளிகளுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள், மாத்திரைகளின் மூலக்கூறு பெயர்களை மட்டுமே எழுத வேண்டும் என்றும், பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வணிக முத்திரை மருந்துகளின் (BRANDED MEDICINE) பெயர்களை எழுதக்கூடாது என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே கடைப்பிடிக்கின்றனர்.
அதே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது, தனியார் வணிக முத்திரை மருந்துகளின் பெயர்களையே எழுதும் நிலை உள்ளது. மருத்துவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை அல்லது ஆலோசனை வழங்கினாலும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடுமானால், இந்த ஜன ஒளஷதம் மூலம் மக்கள் பெருமளவு பயனடைவார்கள்.
1980-களில் ரூ.1,500 கோடியாக இருந்த இந்திய மருந்து தயாரிப்புத் தொழில், 2012-ஆம் ஆண்டு இறுதியில் ரூ.1,19,000 கோடி மதிப்புள்ள தொழில்துறையாக வளர்ந்துள்ளது. அந்த அளவுக்கு நோய்களும் பெருகியுள்ளன. விழிப்புணர்வும் பெருகியுள்ளது.
தற்போது நடைமுறையில், சுமார் 300 மருந்துகள் அட்டவணைப் பட்டியலில் உள்ளன. இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசு நிர்ணயிக்கும் விலையில்தான் அவற்றை விற்க வேண்டும். இந்த மருந்துகளை மிகக் குறைந்த அளவிலேயே மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இதன்மூலம் சந்தையில் மருந்துத் தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. அட்டவணையில் உள்ள மூலக்கூறு மருந்துகளுடன் சில வைட்டமின்களை சேர்த்து வணிக முத்திரையுடன் சந்தையில் விற்கின்றன. இந்த மாத்திரைகளின் விலையை மருந்து நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயித்துக்கொள்ள முடியும். ஆகவேதான் 300 மடங்குவரை கூடுதல் விலை நிர்ணயித்து விற்பதிலும், இவற்றைப் பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதிலும் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதனால்தான் மூலக்கூறு மருந்துகள் பலவும் சாமானியனின் வாங்கும் சக்தியை மீறியதாக இருக்கின்றன.
சில உயிர்காப்பு மருந்துகளின் விலையை நிர்ணயிக்க முடியாதபோதிலும், அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசு ஈடுபடுகிறது. ஆனாலும், காப்புரிமைப் பிரச்னைகளால் இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறுவது கடினமாக உள்ளது.
ஜன ஒளஷதம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமானால், அரசு மருந்தகங்கள் மட்டுமின்றி, தனியார் கடைகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தப் பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், மாநில அரசுகள் ஈடுபடலாம். இவற்றுக்கு விலைக் கழிவு உண்டு என்று ஜன ஒளஷதம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதைச் சில்லறை மருந்து விற்பனையாளர்களுக்குப் புரிய வைத்தாக வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை அம்மா மருந்தகங்கள் பல இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவுபடுத்துவது, அல்லது முகவர்களை நியமித்து அம்மா மருந்தகத்தின் கொள்கைப்படி குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்வது மிக எளிது. இருப்பினும், தற்போது அம்மா மருந்தகங்களில் வணிக முத்திரை மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜன ஒளஷதம் மருந்து, மாத்திரைகள் மூலக்கூறு அடிப்படையில் கிடைக்கும்போது, அவற்றை அம்மா மருந்தகங்கள் விற்பனை செய்ய முற்பட்டால், மக்களுக்கு உண்மையிலேயே குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் மூலக்கூறு மருந்துகள் எழுதித் தரப்படுகின்றன என்ற போதிலும், வெளியிடங்களிலும் பெருநிறுவன மருத்துவக்கூடங்களிலும் அத்தகைய சூழ்நிலை இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவ ஆலோசனை வழங்கும் அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டால், இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் மாத்திரை, மருந்துகள் கிடைக்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழும்.
தமிழ்நாட்டில் ஒருசில கூட்டுறவு அங்காடிகளில் மருந்துகள் விலைக் கழிவுடன் விற்பனை செய்யப்பட்டாலும், அந்த மருந்தகங்கள் நொடிந்து போனதற்குக் காரணம், அவை விற்கும் வணிக முத்திரை மருந்துகளின் பெயரை மருத்துவர்கள் பரிந்துரைகளில் குறிப்பிடாததுதான். உண்மையில் மருந்து இருக்கும். ஆனால் மருத்துவர் எழுதித் தந்த பெயரிலான மருந்தாக இருக்காது. அதற்கு இணையான மருந்து என்று சொல்லி விற்கவும் மாட்டார்கள். ஆகவேதான், கூட்டுறவு அங்காடிகள் நொடிந்து போயின.
விரைவில் ஜன ஒளஷதம் என்ற வணிக முத்திரையில் மூலக்கூறு மருந்துகள் கிடைக்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் மூலக்கூறு மருந்துகளை விற்பனை செய்யவும், அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்யவுமான நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
(மருந்துக்கு மருந்து - தலையங்கம் - தினமணி நாளிதழ்)
Re: வருகிறது பிரதமர் மோடியின் 'பலே' திட்டம்!
generic மருந்துகள் தயாரிப்பு ஒரு ரூபாய் ஆகும் என்றால் ,
அவர்களிடம் இருந்து வாங்கி , brand பெயர் போட்டு 25 /30 ரூபாய்க்கு
விற்கும் கம்பனிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன .
மெடிகல் ரெப் கணிசமான செலவு ,
டாக்டருக்களுக்கு கொடுக்கும் இலவச பொருட்கள் / கமிஷன்,
கொள்ளை லாபம் , brand கம்பனிக்கு .
துட்டு அழுவது பாவம், மக்கள் .
நல்ல பதிவு , சாமி அவர்களே !
ரமணியன் .
அவர்களிடம் இருந்து வாங்கி , brand பெயர் போட்டு 25 /30 ரூபாய்க்கு
விற்கும் கம்பனிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன .
மெடிகல் ரெப் கணிசமான செலவு ,
டாக்டருக்களுக்கு கொடுக்கும் இலவச பொருட்கள் / கமிஷன்,
கொள்ளை லாபம் , brand கம்பனிக்கு .
துட்டு அழுவது பாவம், மக்கள் .
நல்ல பதிவு , சாமி அவர்களே !
ரமணியன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: வருகிறது பிரதமர் மோடியின் 'பலே' திட்டம்!
நல்ல பதிவு அன்பரே....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரதமர் மோடியின் அறிவிப்பு
» பிரதமர் மோடியின் விடைபெறும் தாடி
» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
» பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை
» பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்
» பிரதமர் மோடியின் விடைபெறும் தாடி
» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
» பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் முழு உரை
» பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|