Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Jenila |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து
4 posters
Page 1 of 1
மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மத மாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார்’ என்று கூறினார்.
இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுபோன்ற கருத்துகளை அரசியல் ஆக்கக் கூடாது. யாரையும் உங்கள் விருப்பம் போல் வர்ணிக்காதீர்கள் என்று சோனியாவுக்கும், ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அன்னை தெரசா பற்றி காங்கிரஸ் விசுவாசி நவீன் சாவ்லா எழுதிய புத்தகத்தை படித்துப்பாருங்கள். அதில், அன்னை தெரசா அளித்த ஒரு பேட்டியில், அவர் மத மாற்றத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
அதில், ‘என்னை சமூக சேவகி என்று நினைத்து மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகி அல்ல. நான் கர்த்தருக்காக சேவை செய்து வருகிறேன். கிறிஸ்தவ மத கருத்துகளை பரப்புவதும், மதத்துக்குள் மக்களை கொண்டு வருவதும் தான் எனது பணி’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.
அதே சமயத்தில், மோகன் பகவத் கருத்தை நான் நியாயப் படுத்துவதாக கருதக்கூடாது. அதற்கு நான் யார்? அவரது கருத்துகளுடன் எனக்கோ, மத்திய அரசுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு மீனாட்சி லேகி கூறினார்.
இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல் மார் பசலியோஸ் கிளீமிஸ், திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலகம் புகழும், நோபல் பரிசு பெற்ற, பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரசாவை தேவையற்ற சர்ச்சைக்கு உள்ளாக்கி இருப்பது துரதிருஷ்டவசமானது. அவரை களங்கப் படுத்துவது மனிதத் தன்மையற்ற செயல். மத, சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் அவரை ‘வாழும் புனிதர்’ ஆக பார்த்தனர். ஏழைகளுக்கு தொண்டு செய்வதைத் தவிர அவருக்கு வேறு நோக்கம் இருந்தது இல்லை.
பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரிந்து, இக்கருத்தை மோகன் பகவத் தெரிவித்திருப்பதாக நாங்கள் கருதவில்லை. மத சுதந்திரத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை பிரதமர் மீறி விட்டதாகவும் கருதவில்லை. இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். மோகன் பகவத்தின் கருத்து, நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னை தெரசா தொடங்கிய ‘மிஷினரிஸ் ஆப் சாரிட்டி’யின் செய்தித் தொடர்பாளர் சுனிதா குமார் கூறியதாவது:-
இந்த சாரிட்டியில், அன்னை தெரசா உயிருடன் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, மத மாற்றமே நிகழ்ந்ததே இல்லை. சுயநலமின்றி ஏழைகளுக்கு தொண்டு செய்து, அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். யாரையும் அவரது மதம் என்ன என்று நாங்கள் பார்ப்பது இல்லை. சர்வமத கூட்டங்கள் கூட நடத்தி வருகிறோம். நான் சீக்கியராக இருந்தாலும், இந்த சாரிட்டியுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னை தெரசாவுடன் நெருக்கமாக பழகிய சகோதரி எஸ்.எம்.சிரிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-maalaimalar
இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுபோன்ற கருத்துகளை அரசியல் ஆக்கக் கூடாது. யாரையும் உங்கள் விருப்பம் போல் வர்ணிக்காதீர்கள் என்று சோனியாவுக்கும், ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அன்னை தெரசா பற்றி காங்கிரஸ் விசுவாசி நவீன் சாவ்லா எழுதிய புத்தகத்தை படித்துப்பாருங்கள். அதில், அன்னை தெரசா அளித்த ஒரு பேட்டியில், அவர் மத மாற்றத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
அதில், ‘என்னை சமூக சேவகி என்று நினைத்து மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகி அல்ல. நான் கர்த்தருக்காக சேவை செய்து வருகிறேன். கிறிஸ்தவ மத கருத்துகளை பரப்புவதும், மதத்துக்குள் மக்களை கொண்டு வருவதும் தான் எனது பணி’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.
அதே சமயத்தில், மோகன் பகவத் கருத்தை நான் நியாயப் படுத்துவதாக கருதக்கூடாது. அதற்கு நான் யார்? அவரது கருத்துகளுடன் எனக்கோ, மத்திய அரசுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு மீனாட்சி லேகி கூறினார்.
இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல் மார் பசலியோஸ் கிளீமிஸ், திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலகம் புகழும், நோபல் பரிசு பெற்ற, பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரசாவை தேவையற்ற சர்ச்சைக்கு உள்ளாக்கி இருப்பது துரதிருஷ்டவசமானது. அவரை களங்கப் படுத்துவது மனிதத் தன்மையற்ற செயல். மத, சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் அவரை ‘வாழும் புனிதர்’ ஆக பார்த்தனர். ஏழைகளுக்கு தொண்டு செய்வதைத் தவிர அவருக்கு வேறு நோக்கம் இருந்தது இல்லை.
பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரிந்து, இக்கருத்தை மோகன் பகவத் தெரிவித்திருப்பதாக நாங்கள் கருதவில்லை. மத சுதந்திரத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை பிரதமர் மீறி விட்டதாகவும் கருதவில்லை. இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். மோகன் பகவத்தின் கருத்து, நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னை தெரசா தொடங்கிய ‘மிஷினரிஸ் ஆப் சாரிட்டி’யின் செய்தித் தொடர்பாளர் சுனிதா குமார் கூறியதாவது:-
இந்த சாரிட்டியில், அன்னை தெரசா உயிருடன் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, மத மாற்றமே நிகழ்ந்ததே இல்லை. சுயநலமின்றி ஏழைகளுக்கு தொண்டு செய்து, அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். யாரையும் அவரது மதம் என்ன என்று நாங்கள் பார்ப்பது இல்லை. சர்வமத கூட்டங்கள் கூட நடத்தி வருகிறோம். நான் சீக்கியராக இருந்தாலும், இந்த சாரிட்டியுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னை தெரசாவுடன் நெருக்கமாக பழகிய சகோதரி எஸ்.எம்.சிரிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-maalaimalar
Re: மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து
தகவலுக்கு நன்றி..........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து
அன்னை தெரசா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மோகன் பகவத் பேச்சுக்கு சிவசேனா கட்சி ஆதரவு
அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி ஆதரவு அளித்து உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், அவரது சேவையின் பின்புறம் மதமாற்ற நோக்கம் இருந்தது’’ என்றார்.
தொழு நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு தன் வாழ்நாள் எல்லாம் சேவை செய்து, பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை, மத மாற்றத்தில் ஈடுபட்டார் என்று மோகன் பகவத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், கிறிஸ்தவ அமைப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில், அன்னை தெரசா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு, பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:–
இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளின் (சமயப்பரப்பாளர்கள்) நோக்கம், மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற வேண்டும் என்பது தான். முஸ்லிம்கள் பட்டயத்தால் மதமாற்றத்தை திணிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பணத்தை கொண்டு, சேவை என்ற பெயரில் மதமாற்றத்தை அரங்கேற்றுகிறார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த உண்மையை எடுத்துக் கூறி, மோகன் பகவத் தேசிய சேவை செய்து இருக்கிறார். கசப்பான உண்மையை அவர் பேசியிருக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து
உண்மை என்றும் கசக்கவே செய்யும். என்ன செய்வது? கீழ்காணும் காணொளி காட்சியை பாருங்கள். உண்மை புரியும்.
https://www.youtube.com/watch?v=65JxnUW7Wk4
https://www.youtube.com/watch?v=65JxnUW7Wk4
Similar topics
» பத்மாவதி பட விவகாரம் : சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா எம்.பி
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து
» நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து
» நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|