Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?
+3
krishnaamma
Aathira
Powenraj
7 posters
Page 1 of 1
சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?
''நீ காதலிச்சிருக்கியா?’னு சிம்புவைப் பார்த்து வேற எந்த ஹீரோயின் கேட்டாலும் அது வழக்கமான சினிமா வசனம். அதையே நயன்தாரா கேட்டா, ஒரு எக்ஸ்ட்ரா எனர்ஜி இருக்குல... அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல். 'சிம்பு-நயன்தாரா பேசப்போறாங்க’னு மெனக்கெட்டு நான் எந்த வசனமும் எழுதலை. ஆனா, சாதாரண வசனம்கூட அவங்க பேசுனா, அது சம்திங் ஸ்பெஷல் ஆகிடுது'' - 'இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு-நயன் இடையிலான கலகல கெமிஸ்ட்ரி பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
''டீஸர்ல சிம்புவும் நயனும் மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்கிறாங்களே... ஷூட்டிங் அப்போ அந்த வசனங்களுக்கு அவங்க எதுவும் சொல்லலையா?''
''நடிக்கிறப்ப விட்டுக்கொடுத்திரக் கூடாதுனு அவங்களுக்குள்ள ஒரு போட்டி இருக்குமே தவிர, அந்தக் கலாய் வசனம் பத்தி அவங்க கண்டுக்கவே மாட்டாங்க. 'நீங்க காதலிச்சிருக்கீங்களா?’னு சிம்புகிட்ட நயன் கேட்கிறப்ப, சூரி 'நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறதைத்தானே பொழப்பாவே வெச்சிருக்கீங்க’னு சொல்ற மாதிரி டீஸர் தயாரிச்சு அரக்கபரக்க ரிலீஸ் பண்ணிட்டோம். ஆனா, சூரி அப்படி கவுன்ட்டர் கொடுக்கிறது சிம்பு, நயன் ரெண்டு பேருக்குமே தெரியாது. வெளியான டீசரை ரெண்டு பேருக்கும் சின்னத் தயக்கத்தோட ப்ளே பண்ணேன். பார்த்துட்டு என்ன சொல்வாங்களோனு பதற்றத்துல இருந்தா, 'இந்த டயலாக் நம்ம ரெண்டு பேருக்கும் செமத்தியா செட் ஆகுதுல’னு சியர்ஸ் சொல்லிச் சிரிக்கிறாங்க. 'ஆஹா... அவங்க ரெண்டு பேரும் நல்ல ஃபார்ம்ல இருக்காங்க’னு நினைச்சுக்கிட்டேன்.''
![சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? NPBIg7fhTPS6kiJAmcMl+p93a](https://www.filepicker.io/api/file/nPBIg7fhTPS6kiJAmcMl+p93a.jpg)
'' 'படத்துல சிம்பு - நயனுக்குக் கல்யாணம் ஆகிருது’னு முன்னாடியே சொல்லிட்டீங்க. அப்புறம் என்ன சுவாரஸ்யம்?''
''அப்புறம்தானே பிரமாண்டமா பிரச்னை வெடிக்குது. அதுக்கு முன்னாடி நடக்கிற காதல் கலாட்டா எல்லாம் டிரெய்லர்தான். கல்யாணத்துக்குப் பிறகான பிரச்னைகள்தான் மெயின் பிக்சர். 'இதுக்கு முன்னால ரெண்டு பேரைக் காதலிச்சிருக்கீங்கள்ல... போதும் அதோட நிறுத்திக்கங்க’னு நயன்தாரா சொன்னா, 'முதல்ல நீ நிறுத்து. அப்புறம் நான் நிறுத்துறேன்’னு எகிறுவார் சிம்பு. இப்படி ஏறுக்குமாறா நிறைய சிச்சுவேஷன். அதுக்கு தாறுமாறு டயலாக்ஸ். 'கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?’னு எனக்கே திடீர்னு ஜெர்க் ஆகிருச்சு. 'ஏங்க படம் பூரா உங்க ரெண்டு பேரையும் இந்த ஓட்டு ஓட்டுறேனே... உங்களுக்குக் கோபம் வரலையா?’னு அவங்ககிட்டயே வாய்விட்டுக் கேட்டுட்டேன். 'நாங்க ரெண்டு பேரும் ஆர்ட்டிஸ்ட். படத்துக்காக நீங்க என்ன சொன்னாலும் அதைப் பண்ணுவோம். அதையெல்லாம் வெச்சுக்கிட்டு ஹிட் கொடுக்க வேண்டியது உங்க பிரச்னை’னு கூலா சொல்லிட்டுச் சிரிக்கிறாங்க.''
![சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? 2dXbhmjNQHOjAl5wMH1W+p93b](https://www.filepicker.io/api/file/2dXbhmjNQHOjAl5wMH1W+p93b.jpg)
''இதுக்கு நடுவுல ஆண்ட்ரியா, ஜெய்க்கு என்ன வேலை?''
''சிம்பு-ஆண்ட்ரியா காதல் படத்துல ஒரு போர்ஷன். ஆண்ட்ரியா வர்ற அந்த ஏரியா தனி படம் மாதிரி இருக்கும். அந்த 40 நிமிஷமும் காதல் ரகளை. ஜெய்க்கு கெஸ்ட் ரோல். படத்துல ஒருத்தரோட காதலர் அவர். யார் அவர், அது என்ன போர்ஷன்... அது செம ட்விஸ்ட்.''
''பரபரனு படம் ஆரம்பிச்சீங்க. ஆனா, ரெண்டு வருஷம் தாண்டியும் படம் முடியலையே... 'டீஸருக்கு குறளரசன் மியூசிக் இன்னும் வரலை. என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’னு நீங்களே கலாய்ச்சிருந்தீங்களே...''
''இந்தப் படம் லேட் ஆகும்னு தெரிஞ்சுத்தான் நான் கமிட் ஆனேன். ஆனா, இவ்வளவு லேட்... நானே எதிர்பார்க்காதது. மத்தபடி இந்தத் தாமதத்துக்கு நானோ சிம்புவோ காரணம் அல்ல. 'நாளைக்கு ஷூட்டிங்’னு இன்னைக்குச் சொன்னாக்கூட சிம்பு வந்து நின்னுடுவாப்ல. இசைக்காகவும் தயாரிப்பு தரப்புலையும்தான் தாமதம். நான் அப்படி ட்விட் பண்ணது சிம்புவுக்கே கொஞ்சம் வருத்தம்தான். ஆனா, இப்போ எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. சிம்பு ஹேப்பி அண்ணாச்சி!''
''உங்க படம்னு இல்ல... ரெண்டு வருஷமா சிம்புவுக்குப் படமே வரலை. அப்படி என்னதான் அவருக்குப் பிரச்னை?''
''விகடன் பேட்டியில 'சிம்பு தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர்’னு கௌதம் மேனன் சாரே சொல்லியிருக்கார். நானும் அதைத்தான் சொல்றேன். சிம்பு சிறந்த நடிகர். அதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவர்கிட்ட இருக்கிற சின்னச் சோம்பேறித்தனத்தை மட்டும் தூக்கிப்போட்டுட்டு வருஷத்துக்கு ரெண்டு படங்கள் பண்ணா, அவர் எங்கேயோ போயிடுவார். 'இது நம்ம ஆளு’ படத்துல ஒரு கொரிய நடிகை நடிச்சிருக்காங்க. சிம்புவை அவருக்கு அறிமுகப்படுத்தினோம். சிம்புவோட நடிப்பைப் பார்த்து அந்தப் பொண்ணு பிரமிச்சுட்டே இருந்தாங்க. கூகுள் பண்ணிப் பார்த்துட்டு, 'ஓ... நீங்க சின்ன வயசுல இருந்தே நடிச்சுட்டு இருக்கீங்களா? ஒரே டேக்ல ஓ.கே பண்றீங்க. ரெண்டு நாள்ல எடுக்க வேண்டிய விஷயங்களை ஒரே நாள்ல முடிக்கிறீங்க. வெரி ஸ்மார்ட். நீங்க ஏன் தமிழ்ப் படம் மட்டும் பண்றீங்க? இந்திக்கும் போகலாமே’னு அவங்க சிம்புகிட்டயே கேட்டாங்க. அதுக்கு இவர், 'நான் தமிழ்நாட்டுல ஷூட்டிங் வெச்சாலே வரமாட்டேன். இதுல இந்தி ஷூட்டிங்குக்கு எங்கே போறது?’னு சிரிக்கிறார். இப்படி தன் திறமைகளைப் பற்றி அவரே கண்டுக்காம இருக்கார். அவரோட தாக்கத்துல சினிமாவுக்கு வந்த பலர், மேல மேலனு போயிட்டே இருக்காங்க. ஆனா, இவர் கூலா இருக்கார். 'எல்லாரும் 30 நாட்கள் வேலை பாத்துட்டு ஒரு நாள் ரெஸ்ட் எடுப்பாங்க. நீங்க ஒரு நாள் வேலை பாத்துட்டு 30 நாட்கள் ரெஸ்ட் எடுக்கிறீங்களே... அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை’னு அவர்கிட்டயே சொல்லிட்டேன். அதுக்கும் சிரிக்கிறார் மனுஷன்.
![சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? A2il4dt5RAeeefjvCCjz+p93c](https://www.filepicker.io/api/file/a2il4dt5RAeeefjvCCjz+p93c.jpg)
ஆனா, மனசைத் தொட்டுச் சொல்றேன். தனி மனுஷனா சிம்பு ரொம்ப நல்ல பையன். மனசுக்குள்ள ஒண்ணு வெச்சுட்டு வெளியில ஒண்ணு பேச மாட்டார். நாலு சுவத்துக்குள்ள என்ன பேசுவாரோ, அதையேதான் 400 பேர் கூடியிருக்கும்போதும் பேசுவார். 'இதைச் சொன்னா யாரும் தப்பா நினைப்பாங்களே’னு தயக்கம் மயக்கம் அவர்கிட்ட கிடையாது. சிம்புகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச குணம் அதுதான்!''
நன்றி-ஆனந்த விகடன்
''டீஸர்ல சிம்புவும் நயனும் மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்கிறாங்களே... ஷூட்டிங் அப்போ அந்த வசனங்களுக்கு அவங்க எதுவும் சொல்லலையா?''
''நடிக்கிறப்ப விட்டுக்கொடுத்திரக் கூடாதுனு அவங்களுக்குள்ள ஒரு போட்டி இருக்குமே தவிர, அந்தக் கலாய் வசனம் பத்தி அவங்க கண்டுக்கவே மாட்டாங்க. 'நீங்க காதலிச்சிருக்கீங்களா?’னு சிம்புகிட்ட நயன் கேட்கிறப்ப, சூரி 'நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறதைத்தானே பொழப்பாவே வெச்சிருக்கீங்க’னு சொல்ற மாதிரி டீஸர் தயாரிச்சு அரக்கபரக்க ரிலீஸ் பண்ணிட்டோம். ஆனா, சூரி அப்படி கவுன்ட்டர் கொடுக்கிறது சிம்பு, நயன் ரெண்டு பேருக்குமே தெரியாது. வெளியான டீசரை ரெண்டு பேருக்கும் சின்னத் தயக்கத்தோட ப்ளே பண்ணேன். பார்த்துட்டு என்ன சொல்வாங்களோனு பதற்றத்துல இருந்தா, 'இந்த டயலாக் நம்ம ரெண்டு பேருக்கும் செமத்தியா செட் ஆகுதுல’னு சியர்ஸ் சொல்லிச் சிரிக்கிறாங்க. 'ஆஹா... அவங்க ரெண்டு பேரும் நல்ல ஃபார்ம்ல இருக்காங்க’னு நினைச்சுக்கிட்டேன்.''
![சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? NPBIg7fhTPS6kiJAmcMl+p93a](https://www.filepicker.io/api/file/nPBIg7fhTPS6kiJAmcMl+p93a.jpg)
'' 'படத்துல சிம்பு - நயனுக்குக் கல்யாணம் ஆகிருது’னு முன்னாடியே சொல்லிட்டீங்க. அப்புறம் என்ன சுவாரஸ்யம்?''
''அப்புறம்தானே பிரமாண்டமா பிரச்னை வெடிக்குது. அதுக்கு முன்னாடி நடக்கிற காதல் கலாட்டா எல்லாம் டிரெய்லர்தான். கல்யாணத்துக்குப் பிறகான பிரச்னைகள்தான் மெயின் பிக்சர். 'இதுக்கு முன்னால ரெண்டு பேரைக் காதலிச்சிருக்கீங்கள்ல... போதும் அதோட நிறுத்திக்கங்க’னு நயன்தாரா சொன்னா, 'முதல்ல நீ நிறுத்து. அப்புறம் நான் நிறுத்துறேன்’னு எகிறுவார் சிம்பு. இப்படி ஏறுக்குமாறா நிறைய சிச்சுவேஷன். அதுக்கு தாறுமாறு டயலாக்ஸ். 'கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?’னு எனக்கே திடீர்னு ஜெர்க் ஆகிருச்சு. 'ஏங்க படம் பூரா உங்க ரெண்டு பேரையும் இந்த ஓட்டு ஓட்டுறேனே... உங்களுக்குக் கோபம் வரலையா?’னு அவங்ககிட்டயே வாய்விட்டுக் கேட்டுட்டேன். 'நாங்க ரெண்டு பேரும் ஆர்ட்டிஸ்ட். படத்துக்காக நீங்க என்ன சொன்னாலும் அதைப் பண்ணுவோம். அதையெல்லாம் வெச்சுக்கிட்டு ஹிட் கொடுக்க வேண்டியது உங்க பிரச்னை’னு கூலா சொல்லிட்டுச் சிரிக்கிறாங்க.''
![சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? 2dXbhmjNQHOjAl5wMH1W+p93b](https://www.filepicker.io/api/file/2dXbhmjNQHOjAl5wMH1W+p93b.jpg)
''இதுக்கு நடுவுல ஆண்ட்ரியா, ஜெய்க்கு என்ன வேலை?''
''சிம்பு-ஆண்ட்ரியா காதல் படத்துல ஒரு போர்ஷன். ஆண்ட்ரியா வர்ற அந்த ஏரியா தனி படம் மாதிரி இருக்கும். அந்த 40 நிமிஷமும் காதல் ரகளை. ஜெய்க்கு கெஸ்ட் ரோல். படத்துல ஒருத்தரோட காதலர் அவர். யார் அவர், அது என்ன போர்ஷன்... அது செம ட்விஸ்ட்.''
''பரபரனு படம் ஆரம்பிச்சீங்க. ஆனா, ரெண்டு வருஷம் தாண்டியும் படம் முடியலையே... 'டீஸருக்கு குறளரசன் மியூசிக் இன்னும் வரலை. என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’னு நீங்களே கலாய்ச்சிருந்தீங்களே...''
''இந்தப் படம் லேட் ஆகும்னு தெரிஞ்சுத்தான் நான் கமிட் ஆனேன். ஆனா, இவ்வளவு லேட்... நானே எதிர்பார்க்காதது. மத்தபடி இந்தத் தாமதத்துக்கு நானோ சிம்புவோ காரணம் அல்ல. 'நாளைக்கு ஷூட்டிங்’னு இன்னைக்குச் சொன்னாக்கூட சிம்பு வந்து நின்னுடுவாப்ல. இசைக்காகவும் தயாரிப்பு தரப்புலையும்தான் தாமதம். நான் அப்படி ட்விட் பண்ணது சிம்புவுக்கே கொஞ்சம் வருத்தம்தான். ஆனா, இப்போ எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. சிம்பு ஹேப்பி அண்ணாச்சி!''
''உங்க படம்னு இல்ல... ரெண்டு வருஷமா சிம்புவுக்குப் படமே வரலை. அப்படி என்னதான் அவருக்குப் பிரச்னை?''
''விகடன் பேட்டியில 'சிம்பு தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர்’னு கௌதம் மேனன் சாரே சொல்லியிருக்கார். நானும் அதைத்தான் சொல்றேன். சிம்பு சிறந்த நடிகர். அதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவர்கிட்ட இருக்கிற சின்னச் சோம்பேறித்தனத்தை மட்டும் தூக்கிப்போட்டுட்டு வருஷத்துக்கு ரெண்டு படங்கள் பண்ணா, அவர் எங்கேயோ போயிடுவார். 'இது நம்ம ஆளு’ படத்துல ஒரு கொரிய நடிகை நடிச்சிருக்காங்க. சிம்புவை அவருக்கு அறிமுகப்படுத்தினோம். சிம்புவோட நடிப்பைப் பார்த்து அந்தப் பொண்ணு பிரமிச்சுட்டே இருந்தாங்க. கூகுள் பண்ணிப் பார்த்துட்டு, 'ஓ... நீங்க சின்ன வயசுல இருந்தே நடிச்சுட்டு இருக்கீங்களா? ஒரே டேக்ல ஓ.கே பண்றீங்க. ரெண்டு நாள்ல எடுக்க வேண்டிய விஷயங்களை ஒரே நாள்ல முடிக்கிறீங்க. வெரி ஸ்மார்ட். நீங்க ஏன் தமிழ்ப் படம் மட்டும் பண்றீங்க? இந்திக்கும் போகலாமே’னு அவங்க சிம்புகிட்டயே கேட்டாங்க. அதுக்கு இவர், 'நான் தமிழ்நாட்டுல ஷூட்டிங் வெச்சாலே வரமாட்டேன். இதுல இந்தி ஷூட்டிங்குக்கு எங்கே போறது?’னு சிரிக்கிறார். இப்படி தன் திறமைகளைப் பற்றி அவரே கண்டுக்காம இருக்கார். அவரோட தாக்கத்துல சினிமாவுக்கு வந்த பலர், மேல மேலனு போயிட்டே இருக்காங்க. ஆனா, இவர் கூலா இருக்கார். 'எல்லாரும் 30 நாட்கள் வேலை பாத்துட்டு ஒரு நாள் ரெஸ்ட் எடுப்பாங்க. நீங்க ஒரு நாள் வேலை பாத்துட்டு 30 நாட்கள் ரெஸ்ட் எடுக்கிறீங்களே... அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை’னு அவர்கிட்டயே சொல்லிட்டேன். அதுக்கும் சிரிக்கிறார் மனுஷன்.
![சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? A2il4dt5RAeeefjvCCjz+p93c](https://www.filepicker.io/api/file/a2il4dt5RAeeefjvCCjz+p93c.jpg)
ஆனா, மனசைத் தொட்டுச் சொல்றேன். தனி மனுஷனா சிம்பு ரொம்ப நல்ல பையன். மனசுக்குள்ள ஒண்ணு வெச்சுட்டு வெளியில ஒண்ணு பேச மாட்டார். நாலு சுவத்துக்குள்ள என்ன பேசுவாரோ, அதையேதான் 400 பேர் கூடியிருக்கும்போதும் பேசுவார். 'இதைச் சொன்னா யாரும் தப்பா நினைப்பாங்களே’னு தயக்கம் மயக்கம் அவர்கிட்ட கிடையாது. சிம்புகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச குணம் அதுதான்!''
நன்றி-ஆனந்த விகடன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?
பகிர்வுக்கு நன்றி.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்? W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிம்புவும் நயனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...என்ன நடக்கும்?
பொதுவாக முதல் காதல் தோல்விதான் என்பர் .
இந்த கல்யாணம் நடந்தால் ,
முதல் காதல் இருவருக்கும் வெற்றி என்று கூறலாம் .
ரமணியன்
இந்த கல்யாணம் நடந்தால் ,
முதல் காதல் இருவருக்கும் வெற்றி என்று கூறலாம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்க வீட்ல என்ன செய்வாங்க..?
» அமலாக்கத்துறையின் முக்கிய அதிகாரங்கள் என்ன? சோதனையின் போது என்ன நடக்கும்?
» "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
» எப்போ கல்யாணம் நடக்கும்? என் கஷ்டம் உனக்கு புரியுதா? செல்லப்பிராணியிடம் கோரிக்கை வைத்த சிம்பு!
» என்ன நடக்கும்?
» அமலாக்கத்துறையின் முக்கிய அதிகாரங்கள் என்ன? சோதனையின் போது என்ன நடக்கும்?
» "தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
» எப்போ கல்யாணம் நடக்கும்? என் கஷ்டம் உனக்கு புரியுதா? செல்லப்பிராணியிடம் கோரிக்கை வைத்த சிம்பு!
» என்ன நடக்கும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|