ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்!

3 posters

Go down

மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Empty மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்!

Post by Powenraj Tue Feb 17, 2015 7:37 pm

மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! DbgULUSPqPwYKRByYM3Q+vaikothump(2)
சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் விசாரணை அறிக்கை, செப்டம்பரில் வெளியாகும் என்ற ஐ.நா சபையின் அறிவிப்பிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' இலங்கையில் இந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரி சிறிபாலசேனா ஈழத்தமிழர்களை கருவறுக்கத் துடித்த ஜே.வி.பி. அமைப்பில் செயல்பட்டவர்.

‘ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது ஒருபோதும் கிடையாது. இங்கு ஒற்றை ஆட்சிமுறைதான்’ என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துவிட்டார். ‘தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தை ஒருபோதும் வெளியேற்ற மாட்டோம்’ எனறு புதிய அதிபர் சிறிபாலசேனா சொல்லிவிட்டார்.

ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் நியமித்த விசாரணைக்குழு அறிக்கை, அடுத்த மாதம் மார்ச்சில் கூட இருக்கிற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்வதாக இருந்தது. இதனைத் தாக்கல் செய்யக்கூடாது என்று சிறிபாலசேனா அரசு பிரசாரத்தில் ஈடுபட்டது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதற்காகவே இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பயணம் செய்தார்.

இந்த நிலையில் இலங்கையின் வடக்கு மாகாண சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஷ்வரன் அவர்கள், சட்டசபைத் தீர்மானத்தை அறிவித்தார். அதன்படி, “ஈழத்தில் நடந்தது போர்க் குற்றமல்ல; இனப்படுகொலை என்றும், இது குறித்து 1950 களில் இருந்து அண்மைக்காலம் வரை நடைபெற்ற தமிழினக் கொலைகள் குறித்து ஐ.நா.மன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், இனப்படுகொலை குற்றவாளியான சிங்கள அரசை சர்வதேச நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் ஐ.நா. பாதுகாப்புச் சபை நிறுத்த வேண்டும்” என்றும் நீதி கோரப்பட்டது.

இந்தப் பின்னணியில் சிங்கள அதிபர் மைத்ரி சிறிபாலசேனா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியா-இலங்கை அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகிவிட்டன. இதைவிட தமிழினத்திற்கு ஒரு துரோகத்தை எவரும் செய்ய முடியாது.

பிரதமர் அறிவித்துள்ள ஒப்பந்தங்கள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை - தமிழக மக்களை மிகத் துச்சமாக மதித்து எடுக்கப்பட்ட எதேச்சதிகார நடவடிக்கையாகும். ஈழத் தமிழ் குலத்தையும், தமிழ் இனத்தையும் அநீதியின் இருட்டில் நிரந்தரமாக அழுத்துவதற்கு இன்றைய நரேந்திர மோடி அரசும் தீட்டம் தீட்டிவிட்டது.

ஐ.நா.வின் புதிய மனித உரிமை ஆணையாளர் ரவுத் அல் உசைன், இலங்கை குறித்து விசாரணை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படாது என்றும், செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது என்றும் நேற்று அறிவித்தது மிகவும் அதிர்ச்சி தருகிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் இதே ஆணையாளர் உசைன்தான், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள்கூட சொல்லமுடியாத அநீதி நடக்கிறது என்று அதிர்ச்சியுற்றதாகக் கூறினார். அதே ஆணையாளர்தான் விசாரணை அறிக்கையை செப்டம்பரில் வெளியிடுவேன் என்கிறார்.

ஐ.நா.மன்றத்தில் நீதி இருப்பது உண்மையானால், மனித உரிமைக் கவுன்சிலுக்கு மனித உரிமைகள் மீது அக்கறை இருப்பது உண்மையானால், கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர் இலங்கைத் தீவிற்குச் சென்று இனக் கொலையுண்டு மடிந்த ஈழத்தமிழர் தாயகத்திற்கு குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் அச்சமின்றி சாட்சியம் அளிக்கின்ற நிலையை ஏற்படுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதனைச் செய்யா விட்டால், மனித உரிமை கவுன்சில் என்பது உலகத்தை ஏமாற்றுகின்ற விளம்பரக் கவுன்சில் என்றுதான் பொருள்படும்.

புதிய அதிபர் விசாரணைக் குழுவை அனுமதிக்காவிட்டால், சிங்கள அரசின் கோரமுகம் மீண்டும் உலகுக்கு வெளிப்படும். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தியா-இலங்கை போட்டுள்ள பொருளாதார ஒப்பந்தங்கள் தமிழக சட்டமன்றத் தீர்மானங்களுக்கு எதிரானது எனக் கண்டித்தும், மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணைக் குழுவினர் இலங்கையின் தமிழர் தாயகத்திற்குச் சென்று விசாரணை நடத்துவதை வலியுறுத்தியும்தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்றப்படும் தீர்மானம், தமிழர்களின் இதயங்களில் சூழ்ந்துள்ள வேதனை இருட்டுக்கு மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றாக விளங்கும்" என்று கூறியுள்ளார்.

நன்றி-விகடன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Empty Re: மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்!

Post by SajeevJino Tue Feb 17, 2015 9:18 pm

.

ஐ நா வின் மனித உரிமைகள் அமைப்பு ஒரு காமடியான அமைப்பு

அது இருக்குதா இல்லையா என்பதே சில நேரங்களில் தெரியாது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Empty Re: மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்!

Post by T.N.Balasubramanian Tue Feb 17, 2015 9:39 pm

இருக்கு ஆனா இல்லை கேசா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்! Empty Re: மனித உரிமை கவுன்சிலா...உலகத்தை ஏமாற்றுகின்ற கவுன்சிலா?: வைகோ ஆவேசம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum