ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் சாதனைகள்

2 posters

Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் சாதனைகள் Empty உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் சாதனைகள்

Post by சிவா Tue Feb 17, 2015 6:35 pm



ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த ஞாயிற்றுகிழமை அடிலெய்டில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்த போட்டியில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அவை

உலக கோப்பை போட்டியில் முதல் அரை சதத்தை சுரேஷ் ரெய்னா (74 ரன்கள், 56 பந்துகள்) பதிவு செய்துள்ளார். கடந்த 2008 ஜூன் 26-ல் கராச்சி நகரில் நடந்த ஒரு நாள் போட்டியில் 69 பந்துகளில் 84 ரன்கள் எடுத்த ரெய்னாவின் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது அரை சதம் இது ஆகும்.

ஷிகர் தவானின் முதல் உலக கோப்பை போட்டி இது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் அரை சதம். ஒரு நாள் போட்டியில் தவானின் 12வது அரை சதம் மற்றும் ஆஸ்திரேலியாவில் அவரது முதல் அரை சதம்.

76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவில் இந்தியா பெற்ற வெற்றி இது. கடந்த 1992ம் ஆண்டில் மார்ச் 4ல் சிட்னி நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக 43 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே அதிக ரன் வித்தியாசமாக இதுவரை இருந்துள்ளது.

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1999ம் ஆண்டில் ஜூன் 8ல், மான்செஸ்டர் நகரில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெறும் முதல் வெற்றி. கடந்த 2014, நவம்பர் 16ந்தேதி ராஞ்சி ஒரு நாள் போட்டியில் இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு பின்னர் பெறும் முதல் வெற்றி.

உலக கோப்பை போட்டிகளில் 68 ஆட்டங்களில் விளையாடி 40 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. (26 போட்டிகளில் தோல்வி, முடிவு இல்லை & 1 மற்றும் ஒரு போட்டி டை) வெற்றி சதவீதம் 60.44.

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் (300/7). கடந்த 1996, மார்ச் 9ல் பெங்களூருவில் 287/8 என்பதே இதுவரை அதிகபட்ச ரன்களாக இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை போட்டியில் 300 ரன்கள் கடந்துள்ளது இது 3வது முறை. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி, கடந்த 2003 பிப்ரவரி 11ல் ஜோகன்னெஸ்பெர்க் நகரில் 310/8 மற்றும் நியூசிலாந்து அணி கடந்த 2011 மார்ச் 8ல் பல்லெகெலே நகரில் 302/7 ரன்களை எடுத்திருந்தது.

ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு நாள் போட்டியில், 300 மற்றும் அதற்கு அதிகம் என்ற அளவில் இந்தியா 3வது முறையாக ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 28ல் ஹோபர்ட் நகரில் இலங்கைக்கு எதிராக 321/3 மற்றும் கடந்த 2004ம் ஆண்டு, ஜனவரி 18ல் பிரிஸ்பேன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 303/4 ரன்களை இந்தியா எடுத்திருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை போட்டியில் முதல் சதத்தை (107 ரன்கள், 126 பந்துகள்) பூர்த்தி செய்துள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார் விராட் கோஹ்லி. கடந்த 2003, மார்ச் 1ல் செஞ்சூரியனில் 75 பந்துகளில் 98 ரன்களை எடுத்திருந்தார்.

உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய நாட்டில் சதம் கடந்த முதல் இந்தியர் கோஹ்லி. கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 1ல் பிரிஸ்பேன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முகமது அசாருதீன் 93 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு நாள் போட்டியில் கோஹ்லியின் 22வது சதம் மற்றும் உலக கோப்பையில் 2வது சதம். பாகிஸ்தானுக்கு எதிரான 2வது சதம்.

கோஹ்லியின் முதல் உலக கோப்பை சதம் வங்காளதேச அணிக்கு எதிராக டாக்கா நகரில், கடந்த 2011, பிப்ரவரி 19ல் (100 நாட் அவுட், 83 பந்துகள்) எடுக்கப்பட்டது.

ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் சச்சின் தெண்டுல்கர் (49), ரிக்கி பாண்டிங் (30), சனத் ஜெயசூர்யா (28), சவுரவ் கங்குலி (22) மற்றும் விராட் கோஹ்லி (22).

ஒரு நாள் போட்டியில் 143 போட்டிகளில் 22 சதங்களை எடுத்து வேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுகிறார் கோஹ்லி. சச்சின் தெண்டுல்கர் 206 போட்டிகளில் சத அளவினை எட்டியுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான கோஹ்லியின் 2வது மேன் ஆப் தி மேட்ச் மற்றும் அவரது 20வது சாதனை இது ஆகும்.

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே போட்டியில் இந்தியா முதல்முறையாக 2 சதங்களை எடுத்துள்ளது. உலக கோப்பை மொத்த போட்டிகளில் இந்தியாவிற்கு இது 3வது முறை. கடந்த 2007ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் பெர்முடா அணிக்கு எதிராக முதல் முறையும் மற்றும் கடந்த 2011 மார்ச் 12ல் நாக்பூரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2வது முறையும் இந்தியா இச்சாதனையை படைத்திருந்தது.

கோஹ்லி மற்றும் தவான் 2வது விக்கெட்டிற்கு 129 ரன்கள் எடுத்திருந்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை போட்டியில், இந்தியாவின் எந்த விக்கெட்டிற்கும் எதிரான அதிக ரன் அளவு இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் 2வது விக்கெட்டுக்கு வேறு எந்த இணையை காட்டிலும் இந்தியா எடுத்துள்ள அதிக ரன் இது.

ரெய்னா மற்றும் கோஹ்லி 3வது விக்கெட்டிற்கு 110 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் இந்தியாவின் விக்கெட் இணை சாதனை இது. கடந்த 2003 மார்ச் 1ல் செஞ்சூரியனில் சச்சின் தெண்டுல்கர் மற்றும் முகமது கைப் இணை 102 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

உலக கோப்பை போட்டிகளில் முதல் 4 நிலையிலுள்ள வீரர்களில் 3 பேர் அரை சதத்திற்கு கூடுதலாக கடந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவற்றில் இது 4வது முறை.

ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக மிஸ்பா&உல்&ஹக் (76 ரன்கள்) அதிக ரன்களை எடுத்துள்ளார். கடந்த 2008 ஜூலை 2ல் கராச்சி நகரில் 70 ரன்கள் (நாட் அவுட்) என்பதே அவரது அதிக ரன்களாக இருந்தது. இந்தியாவிற்கு எதிரான அவரது 3வது அரை சதம். ஒரு நாள் போட்டிகளில் 39வது அரை சதம்.

உலக கோப்பையில் மிஸ்பாவின் 4வது அரை சதம். இந்தியாவிற்கு எதிராக 2வது அரை சதம்.

ஒரு நாள் போட்டிகளில் சொஹைல் கான் (5/55) என்ற சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இது அவருக்கு முதல் முறை.

உலக கோப்பையில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 6வது வீரர் சொஹைல் கான். ஷாஹித் அப்ரிடி 2 முறையும், வாசிம் அக்ரம், அப்துல் காதிர், சக்லைன் முஸ்டாக் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒரு முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.

உலக கோப்பை அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 9வது வீரர் என்ற பெருமையை சொஹைல் கான் பெறுகிறார். அவருக்கு முன்னதாக டேமியன் பிளமிங், கேரி கில்மார், டென்னிஸ் லில்லீ, வின்ஸ்டன் டேவிஸ், ஆஸ்டின் காட்ரிங்டன், மிட்செல் மார்ஷ், ரவி ராம்பால் மற்றும் ஸ்டீவன் பின் ஆகிய 8 பேர் இச்சாதனையை படைத்துள்ளனர்.

உலக கோப்பை அறிமுக போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சொஹைல் கான்.

ஒரு நாள் போட்டிகளில் யூனிஸ் கான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கியதில், கடந்த 2004 நவம்பர் 13ல் கொல்கத்தா நகரில் இந்தியாவிற்கு எதிராக ரன் எதுவும் எடுக்காமலும், கடந்த 2009 ஜனவரி 24ல் லாஹ¨ரில் இலங்கைக்கு எதிராக 4 ரன்கள் மற்றும் கடந்த 2015 பிப்ரவரி 15ல் அடிலெய்ட் நகரில் 6 ரன்கள் எடுத்துமிருந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 3 மெய்டன் (ரன் எதுவும் கொடுக்காமல் 6 பந்துகள்) ஓவர்களை வீசினார். கடந்த 1979 ஜூன் 9ல் பிர்மிங்ஹாம் நகரில் மேற்கு இந்திய அணிகளுக்கு எதிராக நடந்த உலக கோப்பை போட்டியில் 12&3&30&0 என்ற அளவில் 3 மெய்டன் ஓவர்கள் வீசிய கடைசி சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை எஸ். வெங்கடராகவன் பெறுகிறார்.

முகமது ஷமி (4/35) சிறந்த பந்து வீச்சை ஒரு நாள் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2014 அக்டோபர் 11ல் டெல்லியில் மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிராக 4/36 சாதனையை படைத்திருந்தார்.

உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய நாட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஷமி பெறுகிறார். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சாதனையில் அவர் 2வது இடம் பிடித்துள்ளார். கடந்த 1999ல் ஜூன் 8ந்தேதி மான்செஸ்டர் நகரில் இந்தியாவின் வெங்கடேஷ் பிரசாத் (5/27) என்ற சாதனையை படைத்திருந்தார்.


உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் சாதனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் சாதனைகள் Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் சாதனைகள்

Post by T.N.Balasubramanian Tue Feb 17, 2015 6:43 pm

நல்ல சாதனைகள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum