ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது

5 posters

Go down

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது Empty உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Post by சிவா Thu Feb 05, 2015 11:11 pm

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது 10349013_820546848018414_7626910437990813446_n

இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்பு இந்தியா வந்த அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு தமிழக தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதோடு, தமிழகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள், இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் மோடி தனது அரசியல் மேதைமையை நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால், விமர்சனங்கள், வேண்டுகோள்கள் எதையும் பிரதமர் காதில் போட்டுக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாரத்தில் இருந்த ராஜபட்ச தோல்வியடைந்து, மிதவாதியான சிறீசேன ஆட்சியைப் பிடித்தார். இந்த வெற்றி குறித்து இந்திய, தமிழகத் தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், இதன்பின்னால் இருந்த சூட்சமத்தை அவர்கள் அறியவில்லை.

அதையும் ராஜபட்சவே தொடக்கி வைத்தார். இலங்கையில் இயங்கிவந்த இந்திய உளவுத் துறையினர் (ரா) திட்டமிட்டு தனது வெற்றியை தடுத்துவிட்டனர் என்று. அதன் பிறகே இந்திய மக்களுக்கு இப்படியும் நடந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது.

ராஜபட்சவுக்கு தனது அரசின் உளவுத் துறை மூலம் இது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஆனாலும், அவர் தனது வெற்றியின் மீது இருந்த நம்பிக்கையால், அதை பொருள்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

தன் தோல்விக்குப் பிறகே இந்தியாவின் உண்மையான வலிமை அவருக்குப் புரிந்திருக்கும்.

இப்போது, இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், பெளத்தர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்குமான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன.

இருந்தும் தமிழகத் தலைவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உடனடியாக அனைத்து நலன்களையும் பெற்றுத் தந்துவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள்.

வண்டியில் சுமையை அளவுக்கு அதிகமாக வைத்தால், அச்சு முறிந்துவிடும் என்பது நம் தலைவர்களுக்கு தெரியாததல்ல.

இலங்கை பிரச்னையில் பிரதமர் மோடி தனது அரசியல் மேதைமையை நிரூபிக்க வேண்டும் என கூறிய தலைவர்கள், அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறிய பிறகுகூட பிரதமரை பாராட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கையில் ஒருவேளை ஆட்சிமாற்றம் ஏற்படாமல் போய்விட்டால், இலங்கைத் தமிழர்கள் பிரச்னை மட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை பிரதமர் கணிக்கத் தவறவில்லை.

இதன் வெளிப்பாடே அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புக்கு அவர் அச்சாரம் போட்டது.

நமக்கு அச்சுறுத்தலாக இருப்பது, நிலவியல் ரீதியாக நமது அண்டை நாட்டுப் பங்காளிகளான சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளே.

இந்த மூன்று நாடுகளையும் வழிக்குக் கொண்டுவரும் முன்னதாக, பிரதமர் மோடி இவற்றுடன் நட்புரீதியாக பழகி பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள விரும்பினார்.

இதற்காக, இலங்கை, சீனா, பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைத்து நட்பை நாடினார்.

ஆனால், சீன அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போதே சீனப் படை இந்திய எல்லையில் ஊடுருவியது. பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியப் படைகள் சீன எல்லையில் குவிக்கப்பட்ட பிறகே சீனா பின்வாங்கியது.

அதேபோல, சீன அதிபரின் இந்திய விஜயத்தின் போது, இந்தியாவில் அதிக அளவிலான சீன முதலீடு குறித்து அதிபர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இலங்கைக்கு அளித்த முக்கியத்துவத்தை இந்தியாவுக்கு அளிக்கவில்லை என்பதே உண்மை.

அதேபோல, பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், அவர்களிடமிருந்து தன்னையே காத்துக்கொள்ள முடியாத சூழலிலும் உள்ள பாகிஸ்தான், இந்தியாவில் ஊடுருவ முயற்சிப்பது, பயங்கரவாதத்தை வேரூன்றச் செய்யும் முயற்சி, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது போன்றவற்றை இன்னும் கைவிடவில்லை.

இதற்கு, அந்த நாட்டுக்கு உறுதுணையாக இருப்பது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா ஆண்டுதோறும் அளித்தவரும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவிதான்.

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய பயணம் அமைந்தது. எல்லையில் அச்சுறுத்தும் பாகிஸ்தான், தங்களது உற்பத்தி பொருள்களை எல்லையில்லாமல் இந்தியாவில் திணிக்கும் சீனா, சீனாவுக்கு கப்பல் தளம் அமைக்க அனுமதி வழங்கி, அதன்மூலம் அவர்களின் ஆதரவோடு இந்தியாவை அச்சுறுத்த நினைத்த இலங்கை என இந்த நிலவியல் பங்காளிகளுக்கு உலக வல்லரசான அமெரிக்கா, இந்தியாவைக் கட்டியணைத்ததும் வியர்த்துவிட்டது.

இதனால் பயந்து போன சீனா, அவசர அவசரமாக தனது ராணுவ அணிவகுப்பு விழாவை ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க ரஷிய அதிபர் புதினை அழைத்துள்ளது.

உக்ரைன் பிரச்னையில் அமெரிக்கா தன்னோடு மோதி வரும் நிலையில், நட்பு நாடாக இருந்த இந்தியாவும், அமெரிக்காவுடன் நெருங்கிச் செல்வதால், இதற்கு பதிலடியாக ரஷியாவும் சீன விழாவில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் அண்டை நாட்டு பங்காளிகள் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் அணுசக்தித் துறை சம்பந்தமாக சில சந்தேகம், விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்தாலும், பிரதமர் மோடி மீது உள்ள நம்பிக்கையால் அது தீவிரமாக்கப்படவில்லை.

பொதுவாக, அமெரிக்க அதிபரின் இந்திய வருகை, இலங்கையில் ஆட்சி மாற்றம் போன்றவை பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மேதைமையை நிரூபித்துள்ளன என்றே கூறலாம்.

தினமணி


உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது Empty Re: உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Post by யினியவன் Thu Feb 05, 2015 11:18 pm

நிறை குடம் தழும்பாது என்று நிரூபித்து நாட்டு நலனே முக்கியம் என்று தொடர்ந்து செயலாற்றட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது Empty Re: உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Post by விமந்தனி Fri Feb 06, 2015 2:34 pm

சூப்பருங்க நன்றி நன்றி


உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது Empty Re: உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Post by M.Saranya Fri Feb 06, 2015 3:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பிரதமரின் நல்ல பல நடவடிக்கைகள் தொடரட்டும்....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது Empty Re: உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Post by vendan.vetri Sat Feb 07, 2015 10:21 am

[url=http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article6868288.ece?homepage=true]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article6868288.ece?homepage=true[/url]
vendan.vetri
vendan.vetri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 12/09/2011

Back to top Go down

உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது Empty Re: உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை வியந்து, பயந்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum