ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்'

2 posters

Go down

ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்' Empty ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்'

Post by kshanmuganathan Thu Jan 08, 2015 2:27 am

பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான, இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று நடந்தது.

நீதிபதி குமாரசுவாமி: வழக்கு விசாரணையை தொடரலாம்.

ஜெயலலிதா வழக்கறிஞர் குமார்: 1991 - -96 வரை, ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருந்தார். அப்போது, மாதத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார்.
நீதிபதி (குறுக்கிட்டு): வீட்டு வாடகை படி, பயணப்படி, கார், டிரைவர், தொலைபேசி உட்பட, ஏதாவது வசதிகளை, முதல்வர் என்ற முறையில் பெற்றிருந்தாரா?
வழக்கறிஞர்: இல்லை. மாதத்துக்கு, ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே வாங்கினார். இந்த காலக் கட்டத்தில், எந்த சொத்தும், நகையும் வாங்கவில்லை. முதல்வராவதற்கு முன்பிருந்தே, கோடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சை தோட்டம், அவரின் தாயார் சந்தியா துவங்கிய நாட்டிய பள்ளி ஆகியவற்றின் மூலமும், வங்கியில், ஜெயலலிதா வைத்திருந்த வைப்பு நிதியின் மூலம் வந்த வட்டி பணத்தின் மூலம், போயஸ் கார்டன் விரிவாக்கத்தின் போது, சில கட்டடங்களை கட்டினார்.
இதற்கான டைல்ஸ், மார்பிள்ஸ், மர சாமான்கள், மின்சார பொருட்கள் வாங்கியதற்கு, மும்பையிலிருந்து, 'பில்' கொடுத்து உள்ளனர். ஆனால், ஊழல் தடுப்பு போலீசார், இதையெல்லாம் பார்க்காமல், தங்கள் இஷ்டப்படி, பல மடங்கு அதிகமாக, விலை நிர்ணயித்து, கோடிக்கணக்கில் செலவழித்து, வீடு கட்டியதாக கணக்கு காட்டிஉள்ளனர்.
போயஸ் கார்டனில், இரண்டு மேனேஜர், ஆறு பணியாளர்கள், ஆறு டிரைவர்கள் வேலை செய்வதாகவும், இருவர், வீட்டை சுத்தம் செய்வதாகவும், இவர்களுக்கு, மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்ததாகவும், ஊழல் தடுப்பு போலீசார், மிகைபடுத்தி காண்பித்து உள்ளனர்.
நீதிபதி: '4991' என்ற எண்ணில் துவங்கும், தொலைபேசி யாருடையது? அரசுடையதா? தனியாருடையதா?
வழக்கறிஞர்: தனியார் தொலைபேசி. 1995, செப்.,7ம் தேதி, ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும், சிவாஜி கணேசன் பேத்தி சத்ய லட்சுமிக்கும் திருமணம் நடந்தது.
இதற்காக, பெண்ணின் தாய்மாமன், ஒரு கோடி ரூபாய் செலவழித்தார். இவை அனைத்தும், செக்காக கொடுக்கப்பட்டு உள்ளது. உணவு, வரவேற்பு பந்தல், மின் விளக்குகள், கட்-அவுட் செலவை, கட்சியினர் விருப்பத்துடன் செய்துள்ளனர். இந்த திருமணத்துக்கு, 6.40 கோடி ரூபாய் செலவழித்ததாக, மிகைப்படுத்தி காட்டப்பட்டு
உள்ளது.
நீதிபதி: திருமண அழைப்பிதழ் அனுப்ப எவ்வளவு செலவானது?
வழக்கறிஞர்: 2.24 லட்சம் ரூபாய் செலவானது. 1991 - -96 காலக் கட்டத்தில், கோடநாடு எஸ்டேட்டில், சில கட்டடங்கள் கட்டப்பட்டதாக கூறுவது தவறு. இக்கட்டடங்கள், 1991க்கு முன்னரே கட்டப்பட்டது.
நீதிபதி: ஜெயலலிதா, நடிகையாக இருந்த போது, ஒரு படத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினார்?
வழக்கறிஞர்: இரண்டு லட்சம் ரூபாய் வாங்கினார்.
நீதிபதி: எத்தனை படங்கள் நடித்துள்ளார்?
வழக்கறிஞர்: ஏறக்குறைய, 200 படங்கள் நடித்துள்ளார். இவ்வழக்கில், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட, ஆறு நிறுவனங்களை விற்று, அபராதத்தை செலுத்தும் படி, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள், 1991க்கு முன்பிருந்தே செயல்பட்டவை. இதற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நீதிபதி: நீங்கள், எத்தனை நாள் வாதிடப்போகிறீர்கள்?
வழக்கறிஞர்: ஜெயலலிதா தரப்பில், 15 நாட்கள் வாதிட போகிறோம்.
நீதிபதி: (அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை பார்த்து) நீங்கள் எத்தனை நாள் வாதிடுவீர்கள்?
பவானி சிங்: நான்கைந்து நாட்கள்.இவ்வாறு, நேற்று விசாரணை நடந்தது.

அன்பழகன் மனுவுக்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு:"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு, மேல்முறையீட்டுமனு விசாரணையில், மூன்றாவது பார்ட்டி தேவையில்லை. நாங்களே வாதிடுகிறோம்,” என்று, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மனுவுக்கு, அரசு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தங்களை மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன் வாதிட்டார்.இதற்கு நீதிபதி குமாரசுவாமி, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், 'உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார். 'என் கருத்தை மனுவாக தெரிவிக்கிறேன்' என்று, நேற்று முன்தினம், பவானி சிங் கூறினார்.இதையடுத்து, 'அரசு மற்றும் ஜெயலலிதா கருத்துக்களை, 7ம் தேதி (இன்று) தாக்கல் செய்ய வேண்டும்' என்று, நீதிபதி குமாரசுவாமி உத்தரவிட்டிருந்தார்.இது தொடர்பாக, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், நேற்று நிருபர்கள் கேட்டபோது, "இந்த வழக்கு விசாரணையில், மூன்றாவது பார்ட்டி என்பது தேவையில்லை; நாங்களே வாதிடுகிறோம்; ஆட்சேபனை மனு தாக்கல் செய்வதற்கு தயாராக உள்ளேன்,” என்றார்.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்' Empty Re: ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்'

Post by ayyasamy ram Thu Jan 08, 2015 9:15 am

ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்' By6mwmlSi7BZvqzqrLQy+images(2)
-
ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்' 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum