ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார்.

2 posters

Go down

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார். Empty சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார்.

Post by kshanmuganathan Thu Jan 08, 2015 1:36 am

சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரணை செய்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார். குடும்ப அரசியல், வெறுப்பு அரசியலை தவிர்க்க அறிவுரை வழங்கினார். மேலும், ''அரசியல் கட்சிகளை, அதன் தலைவர்களை விமர்சிக்கும் போது, நாகரிகம், கண்ணியம், கட்டுப்பாடுடன், அரசியல் கட்சி தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும்; தலைவர்களின் பேச்சு, செயல், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்,'' எனவும் கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர், 2014, மார்ச், 14ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். அப்போது, குழித்துறையில், பொதுப்பணித் துறை கட்டடத்தில், சில நிமிடங்கள், ஸ்டாலின் தங்கினார்.

விதி மீறல் :
இதையடுத்து, தேர்தல் விதி மீறல் நடந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., மற்றும் களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், புகார் அளிக்கப்பட்டது.எந்த நடவடிக்கையும் எடுக்காததால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், விளவங்கோடு தொகுதி, தேர்தல் பொறுப்பாளரான, அ.தி.மு.க., பிரமுகர் உதயகுமார், மனு தாக்கல் செய்தார்.மனு நேற்று சென்னையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருபாகரன், பிறப்பித்த உத்தரவு:

20 நிமிடங்கள் :
தேர்தல் பிரசாரத்தில் இருக்கும், ஒரு அரசியல் தலைவர், இயற்கை உபாதைக்காகவோ அல்லது ஓய்வுக்காகவோ, பொதுப்பணித் துறையின் ஆய்வு மாளிகைக்கு வந்திருப்பார். அதுவும், 20 நிமிடங்கள் தான், அங்கு இருந்துள்ளார். இதை, விதி மீறல் எனக் கூற முடியாது.இந்த செயலை, தேர்தல் நடத்தை விதி மீறல் என, மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், தேர்தல் குற்றமாகவோ, விதி மீறல் என்றோ கூற முடியாது. எனவே, இம்மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இந்த வழக்கு, அரசியல் எப்படி எல்லாம் விளையாடுகிறது என்பதை காட்டுகிறது. மனுவை தாக்கல் செய்யும் செயலை பார்க்கும் போது, வெறுப்பு அரசியலை காட்டுகிறது.அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகளாக இருக்கலாம்; எதிரி
கட்சிகளாக இருக்கக் கூடாது.ஆளுங்கட்சி, தேர்தலில் தோற்று விட்டால், முதல்வர் பதவியை துறப்பவர், புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை; அவர், எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.

வாழ்த்து:
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில்லை; அலுவல் நிகழ்ச்சி உட்பட எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்து, தொண்டர்களும் அதே மாதிரி செயல்படுகின்றனர்.ராஜாஜி, ஈ.வெ.ரா., காமராஜர், அண்ணாதுரை, ஆகியோர் காலத்தில் இருந்த ஆரோக்கிய அரசியல், போய் விட்டது. 1970ல் இருந்து, எதிர்மறையான சூழ்நிலை நிலவி வருகிறது.

விமர்சனம்:
அரசியல் கட்சிகளின் கூட்டங்களில், தனிப்பட்ட முறையில், அவமரியாதையாக, எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிக்கின்றனர். தலைவர்கள் முன்னிலையிலேயே இத்தகைய அவதூறான விமர்சனங்கள் நடக்கின்றன. அதை, அவர்களும் ரசிப்பதுபோல் உள்ளது.பெரும்பாலான கட்சிகள், பரம்பரை முறையை பின்பற்றுகின்றன. மேல்மட்ட தலைவர்களின் குடும்பத்தினர், வாரிசுகள் தான், தலைவர்களாக வருகின்றனர். அவர்களும், ஒருவருக்கு ஒருவர், ஒரே கட்சிக்குள் சண்டை போடுகின்றனர்.

விரோதம்:
எனவே, வெறுப்பு அரசியல் என்பது, கட்சிகளுக்கு இடையே மட்டும் அல்லாமல், கட்சிக்கு உள்ளேயும் நடப்பது தெளிவாகிறது. அரசியல் கட்சிகளுக்குள், வெவ்வேறு குழுக்கள், விரோதத்தை காட்டுகின்றன. கடந்த மாதம், ஒரு அரசியல் கட்சியின் தேர்தலின் போது, தொண்டர்களுக்குள் மோதல் ஏற்பட்ட சம்பவமும் நடந்தது. ஜனநாயகம் முறையாக இயங்க, தலைவர்களின் பங்கு மிகவும் அவசியம். ஆரோக்கிய, நாகரிகமான அரசியலுக்கு, அவர்களின் வழிகாட்டுதல் வழிவகுக்கும்.அரசியல் கட்சிகளை சார்ந்து தான், பார்லிமென்ட் ஜனநாயகம் உள்ளது. தேர்தல் மூலம், மக்கள் தான், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை, சட்டசபைக்கும், பார்லிமென்டுக்கும் தேர்ந்தெடுக்கின்றனர்.

Advertisement
இவர்களின் செயல்கள், பேச்சுக்கள் தான், ஜனநாயகத்தில் முத்திரை பதிப்பதாக இருக்க வேண்டும். கட்சிகளை, தலைவர்களை விமர்சிக்கும் போது, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், கண்ணியம், கட்டுப்பாடு, நாகரிகத்தை வெளிப்படுத்த வேண்டும்.அவர்களின் பேச்சு, செயல்பாடு, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இதுபோன்ற மனுக்களை, தவிர்க்க முடியாது.கட்சி தொண்டர்கள் பெரும்பாலானோர் உயிரை விடக் கூடியவர்களாக உள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது.வெறுப்பு அரசியலை கண்டித்து, ஆரோக்கிய அரசியலை, தலைவர்கள் ஊக்குவிக்கவில்லை என்றால், தற்போதைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.ஜனநாயகத்தின் மாண்புகளை, தொண்டர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தி முடிப்பதுடன், தேர்தல் ஆணையரின் பணி முடிந்து விடாது. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.ஆத்திரமூட்டும் பேச்சு, அதனால் நடக்கும் செயல்களை விசாரித்து, அந்த அரசியல் கட்சிக்கு எதிராக,நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது, அந்த கட்சி உறுப்பினரை, தற்காலிகமாக நீக்கும்படியாவது, அரசியல் கட்சிக்கு உத்தரவிட வேண்டும்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, விளம்பரத்துக்காக, மேல்மட்ட தலைவர்களின் கவனத்தையும், அங்கீகாரத்தையும் பெறும் நோக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய போக்கு, தற்போது எல்லா கட்சிகளிலும் காணப்படுகிறது.சில நேரங்களில், இத்தகைய செயல்களுக்கு, பரிசுகளும் கிடைக்கின்றன. அதனால், தொண்டர்களும், கீழ்மட்ட தலைவர்களும், இத்தகைய முறைகளை பின்பற்ற முயற்சிக்கின்றனர். இது, ஆரோக்கிய அரசியலுக்கு நல்லதல்ல.

எதிர்பார்ப்பு:
எனவே, வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். அருவருக்கத்தக்க பேச்சுகள், செயல்களை, கண்டிக்க வேண்டும். இதை தான், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம், இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.முன்னாள் முதல்வரை பற்றி, அவதூறான கட்டுரை, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளிவந்ததற்காக, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒருமனதாக கண்டித்தனர். அதையடுத்து, அந்த கட்டுரை வாபஸ் பெறப்பட்டது. இலங்கை அரசு, மன்னிப்பும் கேட்டது.இத்தகைய போக்கு தொடரும் என, நீதிமன்றம் நம்புகிறது. அப்போது, இதுமாதிரியான வழக்கு வருவதற்கும், சந்தர்ப்பம் இருக்காது.இவ்வாறு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டு உள்ளார்.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார். Empty Re: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார்.

Post by ayyasamy ram Thu Jan 08, 2015 12:14 pm

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார். 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!
» கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள் : உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை
» இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளை நம்புவது இல்லை: நாராயணசாமி
» அட்வகேட் ஜெனரலுக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை
» ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum