ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_c10வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_m10வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_c10 
VENKUSADAS
வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_c10வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_m10வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_c10வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_m10வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_c10 
VENKUSADAS
வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_c10வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_m10வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது

+2
யினியவன்
ராஜா
6 posters

Go down

வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Empty வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது

Post by ராஜா Sat Jan 03, 2015 3:16 pm

உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்தியாவில் ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை தாக்குதல் நடத்த வேண்டும், நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்து, இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க வேண்டும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மத்தியில் இந்த இரண்டு திட்டங்களும் செய்து முடிக்க முடியாத ஒன்றாக உள்ளது. ‘‘புனிதபோர்’’ என்ற போர்வையில் கோழைகள் போல வந்து தாக்கும் இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கிறது.

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, இந்தியாவுக்குள் தற்கொலை படைகளாக அனுப்பும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வருகிற 26–ந்தேதி ஒபாமா இந்தியா வருவது எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஒபாமா இந்தியா வருவதற்கு முன்பு மிகப்பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என்பது அவர்களது இலக்காக உள்ளது.

இதற்காக காஷ்மீர் எல்லை வழியாகவும், குஜராத் கடல் பகுதி வழியாகவும் ஊடுருவ கடந்த 10 நாட்களாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் தீவிரமாக உள்ளனர். காஷ்மீர் எல்லையில் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து ஊடுருவல் முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார்கள் என்று கருதப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், பாகிஸ்தானின் லஷ்கர்–இ– தொய்பா தீவிரவாதிகள் நாசவேலை திட்டத்துடன் கடல் பகுதியில் உள்ளனர் என்று எச்சரித்தனர்.

இதையடுத்து இந்தியாவில் உள்ள எல்லா பிரிவு உளவுத் துறையினரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நகர்வு பற்றி போட்டிப் போட்டு தகவல்கள் சேகரித்தனர். இந்த நிலையில் கடந்த 30–ந்தேதி இரவு லஷ்கர்–இ– தொய்பா தீவிரவாதிகளின் ஒரு படகு கராச்சி அருகில் உள்ள கீத்பந்தர் பகுதியில் இருந்து புறப்பட்டதை தேசிய தொழில் நுட்ப ஆய்வுக் கழகத்தின் உளவுப்பிரிவு கண்டுபிடித்தது.

இந்த உளவுப்பிரிவு, தேசிய பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுப் பிரிவாகும். அன்றிரவு அந்த உளவுப் பிரிவு சேகரித்த தகவலில் கீத்பந்தரில் புறப்பட்ட படகு ஆழ்கடல் பகுதிக்கு சென்று வெடிகுண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு வாரத்துக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு இந்திய கடலோரத்தை நோக்கி வருவதை உறுதி செய்தனர்.

உடனடியாக அவர்கள் இந்திய கடலோரக் காவல் படையை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் படகு ஒன்று சந்தேகப்படும்படி வருவதாக எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து 31–ந்தேதி காலை 9 மணிக்கு இந்திய கடலோர காவல்படையினர் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.

முதலில் கடலோர கண்காணிப்பு விமானம் ஒன்று குறிப்பிட்ட கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீவிரவாதிகள் உஷாராகி விடக்கூடாது என்பதற்காக தாழ்வாக பறக்காமல், நல்ல உயரத்தில் பறந்து, அந்த படகை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி அந்த படகை ஆய்வு செய்த கடற்படை விமானம், அந்த படகு, இந்திய கடலோரத்தை நோக்கி வருவதை உறுதி செய்தனர். இதுபற்றி அவர்கள் குஜராத், மராட்டிய மாநிலங்களில் உள்ள கடலோர காவல் படை தலைமையகங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் கடலோர காவல் படையினர் உஷாரானார்கள். அடுத்தக்கட்டமாக அந்த படகில் வருபவர்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்று நவீன கருவி மூலம் இடைமறித்து ஒட்டுக் கேட்டனர். அப்போது படகில் இருப்பவர்கள், பாகிஸ்தானில் இருப்பவர்களுடன் பேசுவது தெரிய வந்தது.

படகில் இருப்பவர்கள், ‘‘எங்கள் வீட்டுக்கு பணம் கொடுத்து விட்டீர்களா?’’ என்று கேட்டதற்கு ‘‘ஆமாம், கொடுத்து விட்டோம். தலா ரூ.5 லட்சம் கொடுத்துள்ளோம்’’ என்று பாகிஸ்தானில் இருப்பவர்கள் கூறினார்கள். பிறகு அவர்கள் ‘‘ஆயுதங்கள் வந்து விட்டதா?’’ என்று கேட்டதற்கு, படகில் இருப்பவர்கள் ’’ஆமாம். வாங்கி விட்டோம்’’ என்றனர். அவர்களது உரையாடல் இப்படியே சில நிமிடங்கள் நீடித்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலை படை இந்திய நகரம் ஒன்றை குறி வைத்து வருவது உறுதி செய்யப்பட்டது. மீண்டும் காலை 11 மணிக்கு இந்திய கடற்படை விமானம் ஒன்று பறந்து சென்று அந்த படகை கண்காணித்தது. அப்போதும் அந்த படகு இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து மதியம் 2 மணிக்கு மீண்டும் ஒரு கடற்படை விமானம் ரோந்து சென்று அந்த படகு சர்வதேச கடல் பகுதியில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து கூறியது. மாலை 5.30 மணிக்கு போர்பந்தரில் இருந்து புறப்பட்டு சென்ற கடற்படை விமானம், அந்த படகு இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டதை உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து அந்த படகை சுற்றி வளைத்து பிடிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் முடிவு செய்தனர். அவர்கள் உத்தரவின்பேரில் இரண்டு கடற்படை கப்பல்கள், அந்த படகு வரும் திசை நோக்கி விரைந்தன.

31–ந்தேதி இரவு 11 மணிக்கு பாகிஸ்தான் படகு ஒன்று வந்து கொண்டிருப்பதை இந்திய கடற்படை கப்பல்கள் கண்டுபிடித்தன. போர் பந்தரில் இருந்து சரியாக 365–வது கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தானின் படகு வழிமறிக்கப்பட்டது.

11.15 மணிக்கு கடற்படை கப்பல்களில் ஒன்று, படகில் இருந்தவர்களிடம் தகவல் தொடர்பை ஏற்படுத்தினார்கள். முதலில், ‘‘நீங்கள் யார்? எங்கு இருந்து வருகிறீர்கள்? எங்கு செல்கிறீர்கள்? என்று கடற்படையினர் கேட்டனர்.

அதற்கு படகில் இருந்தவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து இந்திய கடற்படையினர், ‘‘உங்கள் படகை சோதனையிட வேண்டும். படகை அந்த இடத்திலேயே நிறுத்துங்கள்’’ என்றனர்.

ஆனால் படகில் இருந்தவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. படகில் இருந்த அனைத்து விளக்குகளையும் அணைத்தனர்.

கடலுக்குள் அந்த சமயத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றம், பலத்த காற்று மற்றும் கும்மிருட்டை பயன்படுத்தி, இந்திய கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்பி குஜராத் கடல் பகுதிக்குள் நுழைய படகில் இருந்த தீவிரவாதிகள் வேகம் காட்டினார்கள்.

கடலுக்குள் அந்த படகை விரட்டுவது இந்திய கடற்படை கப்பல்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. அங்கும், இங்குமாக ஓடி அலைக்கழித்த அந்த படகை சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இந்திய கடற்படை கப்பல்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

படகை சற்று நெருங்கிய போது, அதில் 4 தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்தனர். சரண்அடைந்து விடும்படி அவர்களுக்கு இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர். அதை கேட்டதும் 4 தீவிரவாதிகளும் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடனடியாக இந்திய கடற்படை கப்பல்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு, அந்த முயற்சியை முறியடித்தன.

இந்த நிலையில் அந்த படகை தீவிரவாதிகள் இந்திய கடற்படை கப்பல் மீது மோத செய்து தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் அபாயரகமான சூழ்நிலையும் ஏற்பட்டது. எனவே அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை இந்திய கடற்படை அதிகாரிகள் எடுத்தனர்.

இந்திய கடலோர படையினரும் அவர்களுக்கு உதவியாக சென்றனர், போர்பந்தர் மற்றும் மும்பையில் உள்ள கடற்படை அதிகாரிகள் படகின் நகர்வை கண்காணித்தப்படி உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

இத்தகைய அடுத்தடுத்த நடவடிக்கைகளால் தீவிரவாதிகள் படகு எங்கும் தப்பஇயலவில்லை. அதற்குள் புத்தாண்டு பிறந்து அதிகாலை 4 மணியாகிவிட்டது.

அப்போது எதிர்பாராத விதமான முடிவை தீவிரவாதிகள் திடீரென எடுத்தனர். பாகிஸ்தானில் இருந்து அந்த உத்தரவு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

4 தீவிரவாதிகளும் படகின் அடிப்பகுதிக்கு சென்றனர். சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர்.

திடீரென படகில் இருந்த 4 தீவிரவாதிகளும் குண்டுகளை வெடிக்க செய்தனர். அடுத்த நிமிடம் அந்த படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

4 தீவிரவாதிகளும் தீயில் கருகி தற்கொலை செய்தனர். சில மணி நேரத்தில் தீப்பிடித்து உருக்குலைந்த படகு, தீயில் கருகிய 4 தீவிரவாதிகள் உடல்களுடன் கடலுக்குள் மூழ்கியது.

அந்த படகு மற்றும் தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை சேகரிக்க கடலோர காவல்படை முயன்றது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

வெடித்து சிதறிய படகின் சில பகுதிகளும், ஒரு சாடிலைட் போன் மட்டுமே கடற்படையினர் வசம் கிடைத்தது. அந்த சாடிலைட் போனில் பாகிஸ்தானில் இருந்து அழைப்புகள் வந்து இருப்பது பதிவாகி உள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மிகப் பெரிய நாசவேலை திட்டம் அதிர்ஷ்டவசமாக முறியடிக்கப்பட்டுள்ளது. 16 மணி நேரம் போராடி இந்த சாகசத்தை உளவுத் துறையினரும், கடலோர காவல்படையினரும் நிகழ்த்தியுள்ளனர்.

இதையடுத்து இந்திய உளவு அமைப்பகளையும் கடலோர காவல் படையினரையும் மத்திய மந்திரிகள் பாராட்டி வருகிறார்கள். கடலோர காவல் படைக்கு முப்படை தளபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Empty Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது

Post by ராஜா Sat Jan 03, 2015 3:20 pm

நாம் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடிட்டு சியர்ஸ் வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது 676261 போதையில் காரை டாங்கர் லாரி மேல் மோதி தற்கொலை செய்துக்குறோம்.


அங்கே நமக்காக விடிய விடிய இந்திய கடற்படை மற்றும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகளை கொன்றழித்துள்ளனர்.

இனியாவது திருந்துவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Empty Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது

Post by யினியவன் Sat Jan 03, 2015 3:23 pm

வாழ்த்துகள் நம் வீரர்களுக்கு.

நம் நாட்டினுள் இருக்கும் புல்லுருவிகள் - இவர்களின் கூட்டாளிகள் யாரென்று கண்டுபிடித்து வேரறுக்க வேண்டும் விரைவில்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Empty Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது

Post by krishnaamma Sat Jan 03, 2015 3:31 pm

'அவங்களுக்கு' ஏன் தான் இப்படி ஒரு கெட்ட எண்ணமோ........... ...நாம் விலகிப்போனாலும் ரொம்ப படுத்தறாங்க......ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள்...........அவங்களை....'புழு' போல நசுக்கிடணும்...................... கோபம்
.
.
.
வாழ்த்துகள் நம் வீரர்களுக்கு..................... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Empty Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது

Post by பாலாஜி Sat Jan 03, 2015 5:51 pm

வாழ்த்துகள் ...

மிக சிரமான பணியை மிக சிறப்பாக செய்த அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Empty Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது

Post by ayyasamy ram Sat Jan 03, 2015 6:56 pm

பாலாஜி wrote:வாழ்த்துகள் ...

மிக சிரமான பணியை மிக சிறப்பாக செய்த அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள் .

மேற்கோள் செய்த பதிவு: 1113265
-
வாழ்த்துவோம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Empty Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது

Post by சிவனாசான் Sat Jan 03, 2015 7:07 pm

இப்படிப்பட்ட பணியை செய்த இவர்களை பாராட்டி எப்படிங்க வாழ்தாமல் இருக்க முடியும் .அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டி முறையிடுவோம்............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Empty Re: வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum