ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் பெண் கிணறு தெரியுமா?

+2
ராஜா
krishnaamma
6 posters

Go down

ஆண் பெண் கிணறு தெரியுமா? Empty ஆண் பெண் கிணறு தெரியுமா?

Post by krishnaamma Sun Dec 28, 2014 12:46 pm

இந்த தலைமுறைக்கு கிணறை பற்றித் தெரியாது. கிணற்றில் குளிப்பது, விளையாடுவது, கிணற்று படிக்கட்டில் அமர்ந்து படிப்பது, கோபித்துக்கொண்டால் கிணற்று படிக்கட்டில் அமர்ந்து அழுவது என கிராமங்களில் வாழ்ந்தவர்கள், கிணற்றின் நெருக்கத்தை நன்கு அனுபவித்தனர்.

"நினைவுகள் கசியும் இடம் கிணறு' என்பார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மார்ந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு-

என திருவள்ளுவர், கேணி (கிணறுகளை) பற்றி எழுதியுள்ளார்.

அதாவது, மணலில் ஊற்று தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல மனிதருக்கு கற்ற அளவிற்கேற்ப அறிவு சுரக்கும். இதிலிருந்து கிணறுகளுக்கு, வயது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அணைகள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக, கிணறுகள் தோண்டி பயன்படுத்தினர். மனிதன் மற்றும் பிற உயிரினங்களில் இருபாலினம் உள்ளதைப்போல் ஆண் கிணறு, பெண் கிணறு என வகைப்படுத்தினர். விவசாய நிலத்தில் இருப்பது ஆண் கிணறு. அதை, விவசாயிகள் தங்கள் பிள்ளைகளைவிட அதிகம் நேசிப்பர். கயிற்றில் மாடுகளை பூட்டி, நாட்டுப்புற பாடல் பாடியவாறே கமலை மூலம் "சால்' கிணற்றுக்குள் இறக்கி, நீரை வெளியே இறைப்பர். ஏற்றம் மூலம் மனிதர்களே நீர் இறைப்பர்.

ஆண் பெண் கிணறு தெரியுமா? TlE5JBJ7RkevwwZLh7BQ+kinaRu

கிணற்றில் நீர் மட்டம் உயர்வது, குறைவதை வைத்தே விவசாயம் செழிப்பா? அல்லது வறட்சியா? என முடிவு செய்வர். கிணறு வற்றிவிட்டால், விவசாயி முடங்கிப் போய்விடுவான். வீட்டின் பின்புறம் இருப்பது பெண் கிணறு. கிணற்றடிதான் பெண்களின் அந்தரங்க வெளி. தண்ணீர் இறைத்து பாத்திரம் கழுவுதல், குளித்தல், துணி துவைத்தல், ஏகாந்த மனநிலையில் பாடுதல், அழுதல் என பெண்களின் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் தோழி கிணறு. பஞ்சம் பிழைப்பதற்காக, நல்லதங்காள் 7 பிள்ளைகளுடன், உடன் பிறந்த அண்ணன் நல்லதம்பி வீட்டிற்கு வந்தாள். நல்லதம்பியின் மனைவி மூளி அலங்காரியின் கொடுமையால், 7 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்று, தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

நல்லதங்காள். அதற்கு சாட்சியாக வத்ராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில், "நல்லதங்காள் கிணறு' உள்ளது. இதன் நீட்சியாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் பெண்கள் கோபித்துக்கொண்டு தலைமறைவானால், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வர். கிணறுகளின் நினைவாக, மதுரையில் தொட்டியன் கிணற்று சந்து, வாணியர் கிணற்று சந்து, நல்ல தண்ணீர் கிணற்று சந்து என நன்றியுடன் தெருக்களுக்கு பெயர் சூட்டியுள்ளனர். மதுரை அருகே காதக்கிணறு, விருதுநகர் மாவட்டம்

மல்லாங்கிணறு, ராமநாதபுரம் கேணிக்கரை, கோவை கிணத்துக்கடவு என ஊர்களின் பெயரில் கிணறுகள் ஒட்டிக்கொண்டு உள்ளன.

திருமணம் முடிந்ததும், புதுப்பெண்ணை உறவுக்கார பெண்கள் ஊர் பொதுக் கிணற்றிற்கு அழைத்துச் செல்வர். புதுமணப் பெண்ணின் இரு கைகளிலும் வெற்றிலைகளை கொடுத்து, அதே கிணற்றில் வாளியில் இறைத்த நீரை கைகளில் ஊற்றுவர். கிணற்றில் வெற்றிலைகள் மிதக்கும். அதன்பிறகே, புதுமணப்பெண் அக்கிணற்றில் தண்ணீர் இறைக்க அனுமதிக்கப்படுவாள்.

ஊர் பொதுக் கிணற்றை சுற்றி, வட்டமாக மேடை அமைத்திருப்பர். அதில், இரவு பஞ்சாயத்து கூடுவது, அரசியல் பேசுவது, தூங்குவது நடக்கும். வெளி உலகம் தெரியாத நபரை, "கிணற்றுத் தவளையா இருக்கேயப்பா...,' எனவும், ஒரு பணி அல்லது முயற்சியில் பாதி முடித்து, முழுமையடையாவிடில் ",பாதி கிணறு தாண்டிட்ட, அப்புறம் என்னப்பா தயக்கம்,' என்பர்.
குடும்ப சண்டையின் போது பெண்கள் அழுதுகொண்டே, "எங்கப்பன் போயும், போயும் இப்பிடி பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டானே' (புதர், பூச்சி மண்டிய பராமரிப்பில்லாத கிணறு) என புலம்புவர். ஒரு சிறிய சம்பவம் மேலும் பூதாகரமாகும் போது," என்ன...,கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா இருக்கு...,' என பழமொழிகள் நீளும்.

மழைநீரை சேமிக்க, கிணறுபோல் வேறு அமைப்பு எதையும் ஒப்பிட முடியாது. மழைநீரை உள்வாங்கி, பின் மக்களுக்கே தருகிறது கிணறு. "போர்வெல்', நீரை உறிஞ்சி வெளியே தள்ளுவதோடு சரி. அளவுகோல் இன்றி, எந்த சாமானியனும் நிலத்தடி நீர் மட்டத்தை தெரிந்துகொள்ளலாம் கிணற்றில். நீர் இறைப்பது உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது. "உனக்கென்னப்பா..., முப்பாட்டன் காலத்திலிருந்து கிணத்து தோட்டம் வச்சுருக்க, கவலையில்ல,' என பெருமை தேடித்தந்தன கிணறுகள். "ஏற்றமுன்னா ஏற்றம், இதிலே இருக்குது முன்னேற்றம்...,,' எனவும் "ஏத்தமய்யா, ஏத்தம்...,எங்கப்பன், உம்பாட்டன், முப்பாட்டன் சொத்து இது ஏத்தம்..,' என சினிமா பாடல்கள் கிணறுகளின் பெருமையை ஒலித்தன. மின் மோட்டார்கள் வந்தபின், கிணற்று நீரை உறிஞ்சி வெளியே தள்ளின. இன்று கிணறுகளில் கமலை ஓசை, ஏற்றம், கப்பி, துலா சத்தம் அடங்கி விட்டன. கிணறுகள் பயனற்று பாழுங்கிணறுகள் ஆகிவிட்டன. பல கிணறுகள் இருந்த சுவடு தெரியாமல் மூடப்பட்டு, கட்டடங்களாகிவிட்டன.

ஆண் பெண் கிணறு தெரியுமா? UEs6P8EQOu46UGcZg5qp+images

"விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு, மனித மனசுகூட மிஷினாச்சு போபுள்ள...,' திரைப்பாடல் வரிகள் உணர்த்துவது, நாம் தொலைத்தது முப்பாட்டன் சொத்தான 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஈரமுள்ள கிணறுகளை மட்டுமல்ல, நம் நெஞ்சின் ஈரத்தையும்தான்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் பெண் கிணறு தெரியுமா? Empty Re: ஆண் பெண் கிணறு தெரியுமா?

Post by ராஜா Sun Dec 28, 2014 1:08 pm

எங்க அம்மா வழி பாட்டி வீட்டில் கிணறு இருக்கும் , இப்ப நினைத்தாலும் குளிருது புன்னகை அவ்வளவு ஜில்லுனு இருக்கும் அந்த தண்ணி , வாளியில் இறைத்து இறைத்து எவ்வளவு நேரம் குளித்தாலும் ஆசை விடாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண் பெண் கிணறு தெரியுமா? Empty Re: ஆண் பெண் கிணறு தெரியுமா?

Post by ayyasamy ram Sun Dec 28, 2014 8:41 pm

ஆண் பெண் கிணறு தெரியுமா? 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண் பெண் கிணறு தெரியுமா? Empty Re: ஆண் பெண் கிணறு தெரியுமா?

Post by விமந்தனி Sun Dec 28, 2014 10:47 pm

அருமையான பகிர்வு.


ஆண் பெண் கிணறு தெரியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண் பெண் கிணறு தெரியுமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண் பெண் கிணறு தெரியுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆண் பெண் கிணறு தெரியுமா? Empty Re: ஆண் பெண் கிணறு தெரியுமா?

Post by யினியவன் Sun Dec 28, 2014 10:59 pm

கிணற்றில் நீர் இறைப்பதே சுகம்
இறைத்து இறைத்து மூச்சு
இறைப்பதும் சுகமே

இறைத்து பின் மூச்சு இறைத்து
குளித்தால் எடுக்கும் குளிரில்
நடுங்கி துவட்டி வரும்
சுகமே தனி தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண் பெண் கிணறு தெரியுமா? Empty Re: ஆண் பெண் கிணறு தெரியுமா?

Post by சிவனாசான் Mon Dec 29, 2014 5:08 am

ஏற்றம் இரைப்பவர் பாடிய பாட்டின் வரிக்குஅடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞர் சிந்தனையை தூண்டிய................ ஏற்றப்பாட்டு நீர் இறைப்பின்போது பாடின கற்பனை பாட்டிற்கு கவிஞனே திகைக்கும் அளவிற்கு இருந்தகாலம்.... அருமையானபதிவு....பகிற்வு.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆண் பெண் கிணறு தெரியுமா? Empty Re: ஆண் பெண் கிணறு தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum