ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதை மாறிய பழமொழிகள்..

+9
சந்திரா ப்ரிய தர்ஷினி
ayyasamy ram
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
உதயசுதா
பாலாஜி
ராஜா
soplangi
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty பாதை மாறிய பழமொழிகள்..

Post by soplangi Sat Dec 13, 2014 1:13 pm

[You must be registered and logged in to see this image.]

பல ஆண்டுகளாக நம் சமுதாயத்தில், பண்பாட்டில் உருவான அனுபவங்களை, கருத்துக்களை, எண்ணங்களை நறுக்கு தெறித்தாற் போல நாலு வார்த்தைகளில் சொல்லியவை பழமொழிகள்.

சமூகத்தின் அனுபவ பிழிவாக திகழ்ந்த இப்பழமொழிகள், ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு கால கட்ட மக்களுக்கு செவி வழி இலக்கியங்களாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது சில சொற்கள் திரிந்தோ, உருமாறியோ, வேறு பொருள் தருமாறு புரிந்தோ, பாதை மாறி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன.

சைவர்கள், சமணர்களை வாதத்திற்கு அழைத்து தோல்வியுறச்செய்து, எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய செய்தியை எட்டாயிரம் சமணர்கள் என்று தவறாக பொருள் கொண்டவர்களே அதிகம். விழுப்புரம் அருகே உள்ள "எண்ணாயிரம்” என்ற ஊரை சேர்ந்த சமணர்களை கழுவில் ஏற்றப்பட்டதே உண்மை நிகழ்வு.

இலங்கை வேந்தன் ராவணன் பத்து கலைகளில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கியதால், அவனை 'பத்து கலை ராவணன்' என்று அழைத்திருக்கிறார்கள். அது திரிந்து பத்து தலை ராவணனாக மாறியிருக்கிறது.

பழமொழியின் திரிபு :

"வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு போ, ''போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழி கூட"வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு போ, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழியின் திரிபே ஆகும்.

"சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” என்ற பழமொழி உருமாறி "சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்று மாறி போயிருக்கிறது. "சும்மாடு” என்பது தலையில் சுமை தாங்க பயன்படும் பொருள்.

புதிதாக வந்த மருமகள் வீட்டிற்குரிய மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றும் செயலுக்கும், அதற்கு இணையான நிகழ்வுகளுக்கும் எடுத்தாளப்படும் பழமொழியே, "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” என்பதாகும்.

இதில் பிடாரி என்பது பெண் தெய்வத்தை குறிக்கிறது. லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு ஊரின் நடுவே கோயில் அமைக்கப்பட்டு, கொற்றவையும், காளிக்கும் ஊரின் எல்லையில் கோயில் அமைக்கப்பட்டன. அந்த நிகழ்வை குறிக்க உருவான பழமொழியே இது.


மகாபாரத போரின்போது, குந்தியிடம் கர்ணன் கூறும் "ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற வாசகம் பின்னர் பொருள் புதைந்து மாறிப்போயிருக்கிறது. ஐந்து சகோதரர்களோடு ஆறாவதாக கர்ணன் சேர்ந்தாலும் போரில் சாவு உறுதி. துரியோதனன் கூட்டத்தார் நூறு பேரோடு இருந்தாலும் சாவு உறுதி என்பதே உண்மை பொருள்.

புழக்கத்தில் பழமொழிகள் :


"ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” -பின்னாளில் "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்றும் "ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று சொன்னதை "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று பொருள் இன்றளவும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது.

"கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்” என்ற தொடரில் கண்டதை கற்கும் ஒருவன் எப்படி வல்லுனன் ஆக முடியும்? கண்ணால் மட்டுமே கண்ட ஒரு செயலை, அல்லது கலையை கற்று கொள்பவன் பண்டிதன் ஆகி விடுவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

"களவும் கவறும் மற” அல்லது "களவும் கத்தும் மற” என்ற தொடரே, "களவும் கற்றுமற” என முரண்பட்டு நிற்கிறது. களவாகிய திருட்டை செய்து பின் மறந்து விட வேண்டும் என்ற பொருளிலேயே இன்று வரை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். 'கத்து' என்ற சொல் 'பொய்' 'சூது' 'கயமை' போன்ற பொருளை குறிக்கிறது. களவாகிய திருட்டையும், கயமையாகிய பொய் சூதையும் மறந்து விட வேண்டும் என்பற்கான பழமொழியே இது.

தாயும் பிள்ளையும் :

"சேல் (விழி) அகட்டும் (அலைபாயவிடும்) பெண்ணை நம்பாதே”தான் "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே” என்றாகி போனது.

"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்” என்ற பழமொழி கூட 'தாய்' என்பது வாழையையும் 'பிள்ளை' என்பது தென்னையையும் குறித்து எழுந்ததாகும். வாழை மரத்துக்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்துக்கு பதினாறடி இடைவெளியும் வேண்டும் (அதன் வேர் நீளும் அளவு) என்பதையே இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.

"விருந்தும் மருந்தும் மூன்று நாள்” என்ற தொடர் கூட விருந்து படைக்க திங்கள், புதன், வெள்ளி என்ற மூன்று நாட்களையும், மருந்து உட்கொள்ள ஞாயிறு, செவ்வாய், வியாழன் என்ற மூன்று நாட்களையும் நம் முன்னோர் பயன்படுத்தியதை குறித்து வந்தது. சனிக்கிழமையை "சனி நீராடு” என்று கூறி எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நாளாக கொண்டனர்

'பாத்திரமறிந்து பிச்சையிடு” என்ற பழமொழியும் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. "பாத்திறம் (பா+திறம்) அறிந்து பிச்சையிடு” என்று தான் இருந்திருக்கிறது. புலவர்களும், பாணர்களும், அரசர்களை, வள்ளல்களை புகழ்ந்து பாடி பொருளுதவி (பிச்சை) பெற்று வாழ்க்கை நடத்தி வந்த சூழலில் அவர்களின் "பா”த்திறம் (பாட்டுத்திறன்) அறிந்து அதற்கேற்றாற்போல் பொருளுதவி செய்திட வலியுறுத்தி வந்ததே இப்பழமொழி.

அகத்தின் அழகு :

"நல்ல மாட்டுக்கு ஒரு சுவடுதான்” -'சூடு' என்று திரிந்து போனது. மாட்டின் அடிச்சுவட்டை வைத்தே அதன் வலிமை, உடல்நலத்தை கணித்ததை இப்பழமொழி உணர்த்தியது.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற முதுமொழியை கூட நாம் மேலோட்டமாகவே அணுகி வருகிறோம். இப்பழமொழி தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் பொருள்கள் ஏராளம்.நம் அகத்தினுள் இருக்கும் நுரையீரல், இருதயம், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் என்ற ஐந்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான் நம் உடல் நலமாக இருக்கும். அந்த ஐந்து உறுப்புகளின் இயக்கத்தை அறிந்து கொள்ள, இன்றைய அறிவியல் உலகில் கருவிகள் வந்து விட்டாலும், நம் முன்னோர்களுக்கு நமது 'முகமே' கருவியாக பயன்பட்டிருக்கிறது.

நுரையீரலுக்கு மூக்கு, இருதயத்திற்கு 'நாக்கு', மண்ணீரலுக்கு உதடு, கல்லீரலுக்கு கண், சிறுநீரகத்துக்கு காது என்று நமது ஐந்து ராஜ உறுப்புகளுக்கும் முகத்தில் உள்ள இந்த ஐந்து உறுப்புகளோடு தொடர்பு இருப்பதை அறிந்து, அதன் நிலையறிந்து சிகிச்சை அளித்தனர். இப்படி நம் முகத்தில் தெரியும் அழகை கண்டு, இனி நாம் நம் உடல் நலத்தை காத்து கொள்வோம்.

நம் முன்னோர்களின் பொக்கிஷங்களான பழமொழிகளை சரியான பாதைகளில் பயணிக்க செய்வோம்.

கவிஞர் தமிழ்மதி நாகராசன்,
முதுகலை தமிழாசிரியர்,
ராமநாதன் செட்டியார் மேல்நிலை பள்ளி,
புதுவயல்.
83445 50111.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by ராஜா Sat Dec 13, 2014 1:20 pm

அருமையான பதிவு பாதை மாறிய பழமொழிகள்.. 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by பாலாஜி Sat Dec 13, 2014 1:39 pm

நல்ல பதிவு ..... பகிர்வுக்கு நன்றி பாதை மாறிய பழமொழிகள்.. 3838410834 பாதை மாறிய பழமொழிகள்.. 103459460 பாதை மாறிய பழமொழிகள்.. 1571444738


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by உதயசுதா Sat Dec 13, 2014 2:22 pm

நல்ல பதிவு இது.பகிர்ந்தமைக்கு நன்றி


[You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by ஜாஹீதாபானு Sat Dec 13, 2014 3:42 pm

பாதை மாறிய பழமொழிகள்.. 103459460 பாதை மாறிய பழமொழிகள்.. 1571444738


[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by Dr.S.Soundarapandian Sat Dec 13, 2014 6:55 pm

பாதை மாறிய பழமொழிகள்.. 1571444738

தமிழில் பழமொழி இலக்கியம் - என்ற எனது நூலில் இதுபோலப் பற்பல பழமொழிகளின் உண்மைப் பொருளை நான் ஆய்ந்து கூறியுள்ளேன் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by T.N.Balasubramanian Sat Dec 13, 2014 7:56 pm

Dr.S.Soundarapandian wrote:பாதை மாறிய பழமொழிகள்.. 1571444738

தமிழில் பழமொழி இலக்கியம் - என்ற எனது நூலில் இதுபோலப் பற்பல பழமொழிகளின் உண்மைப் பொருளை நான் ஆய்ந்து கூறியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1109291

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by T.N.Balasubramanian Sat Dec 13, 2014 7:59 pm

நல்ல பதிவு .
கவிஞர் தமிழ்மதி நாகராஜன் / soplangi இருவருக்கும் நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by ayyasamy ram Sun Dec 14, 2014 3:58 pm

பாதை மாறிய பழமொழிகள்.. 3838410834 பாதை மாறிய பழமொழிகள்.. 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82738
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by சந்திரா ப்ரிய தர்ஷினி Mon Jun 15, 2015 1:10 pm

அப்புடியா சேதி
சந்திரா ப்ரிய தர்ஷினி
சந்திரா ப்ரிய தர்ஷினி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 15/06/2015

http://www.addressingoftamil.blogspot.com

Back to top Go down

பாதை மாறிய பழமொழிகள்.. Empty Re: பாதை மாறிய பழமொழிகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum