Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்
3 posters
Page 1 of 1
மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், காலியிடங்களை நிரப்பாமல், பணியில் உள்ள டிரைவர், கண்டக்டர்களை, ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால், அவர்கள் விபத்தில் சிக்கி, உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த, போக்குவரத்துத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
21 மண்டலம் :
அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில், எட்டு கோட்டம், 21 மண்டலம் உள்ளது. இவற்றில், 330 டிப்போவுக்கு உட்பட்டு, 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன், அலுவலர்கள் என, 1.45 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழகம், கடந்த சில ஆண்டுகளாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. புதிய பஸ்கள் விடுவதற்கு ஏற்ப, பாடாவதி பஸ்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேஇருக்கிறது.
போக்குவரத்து ஊழியருக்கான, சம்பள ஒப்பந்தம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பதும், டி.ஏ., அரியர்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதும், ஊழியர்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.இந்த நிலையில், விழாக்காலங்களில், கூடுதல் பஸ்களை விட்டு, சிறப்பு பஸ்கள் என, வருவாயை பெருக்க, போக்குவரத்து நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. இதனால் பலிகடா ஆவதும், பாதிக்கப்படுவதும், டிரைவர், கண்டக்டர்கள் மட்டும் தான்.தீபாவளி பண்டிகையையொட்டி, 9,400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போதைய நிலையில்,
20 சதவீதம் அளவில், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. அதை சமாளிக்க, தற்காலிக அடிப்படையில் உள்ளவர்களை பணிக்கு அமர்த்துவதும், எட்டு மணி நேரம், 12 மணி நேரம் டூட்டி பார்க்கும் டிரைவர், கண்டக்டர்களை, தொடர்ச்சியாக, மேலும், 12 மணி நேரம் கட்டாயப்படுத்தி பார்க்க வைத்ததாக புகார் எழுந்தது.
தொடர் பணியால், பாதிக்கப்படுவது, அவர்கள் மட்டுமின்றி, பஸ்சில் பயணிக்கும் அப்பாவி மக்களும் தான் என்பதை அதிகாரிகள் மறந்து விடுகின்றனர்.சமீபத்தில், மதுரையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ், நாமக்கல் புதுச்சத்திரம் அருகே, நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆறு பேர் பரிதாபமாக இறந்தனர். அதேபோல், பெரம்பலுார் அருகே, லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நடந்தது.தர்மபுரி நல்லம்பள்ளி அருகில், ஒரே நேரத்தில், மூன்று வாகனங்கள் தொடர்ச்சி யாக மோதியதில், பஸ் டிரைவர் மட்டுமின்றி, பயணியும் பலியானார். மற்ற சில விபத்துகளில், டிரைவர் தப்பியபோதும், பயணிகள் உயிரிழந்தனர். விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி எடுக்காமல், வருவாயை பெருக்கும் நோக்குடன் அதிகாரிகள் நடந்து கொள்வதால், உயிரிழப்பு சம்பவம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
மனஉளைச்சல்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 330 டிப்போக்களில், 7,000 டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடம் இருக்கிறது. தற்போது இருப்போரை கொண்டு, ரெகுலர் பஸ்களையும், விழாக்கால சிறப்பு பஸ்களையும் இயக்க செய்கின்றனர். அவர்களுக்கு, ஓவர் டைம் கொடுப்பதற்கு ஏற்ப, அதற்கான சம்பளம் கொடுப்பது இல்லை.அரை சம்பளமாக கொடுக்கும்போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரு லிட்டர் டீசலுக்கு, 6 கிலோ மீட்டர் இயக்க வேண்டும் என, அதிகாரிகள் கெடுபிடி செய்கின்றனர். சமீபத்தில், பாலகிருஷ்ணன் என்ற டிரைவர், தர்மபுரி அருகே விபத்தில் சிக்கி இறந்தார். மதியம், 1.15 மணிக்கு பஸ்சை டிப்போவுக்கு கொண்டு வந்த நிலையில், மீண்டும், 2:௦௦ மணிக்கு, ஓவர் டைம் போட்டு அவரை அனுப்பினர். 45 நிமிடத்தில், எந்தவித ஓய்வும்
Advertisement
எடுக்காமல் சென்றதால், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதிகாரிகளின் மிரட்டலால், நெருக்கடியுடனே டிரைவர்கள் பஸ்களை இயக்குகின்றனர். வாரத்தில், 48 மணி நேரம் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஓவர் டைம் கொடுத்தாலும், 50, 100 கி.மீ., தொலைவுக்கு கொடுத்தால் டிரைவரால் சமாளிக்க முடியும்.
உடல் சோர்வு:
அதுமட்டுமின்றி, பஸ்களை மாற்றி இயக்க செய்யும்போது, அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. தமிழகத்தில் தான் அரசு பஸ்கள் அதிக விபத்துக்கு உள்ளாகின்றன என்று, மனித உரிமை ஆணையமும், மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தமிழக போக்குவரத்துத்துறையை எச்சரித்துள்ளது.ஆனால், அவற்றை மீறி கூடுதல் நேரத்தில் பஸ்சை இயக்க செய்து, டிரைவர், பயணிகளைபாதிப்புக்குஉள்ளாக்கின்றனர். தொடர்ச்சியாக பஸ்சை இயக்கும்போது, உடல் சோர்ந்து விபத்தில் சிக்குகின்றனர்.அதிகாரிகள், தங்களுக்கு இன்சென்டிவ் கிடைக்க வேண்டும் என்பதால், டிரைவர்களை கசக்கி பிழியும் போக்கு உள்ளது. தற்காலிகமான டிரைவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறைவாக தான் உள்ளது. பஸ்கள் தரமற்ற நிலையில் உள்ளதால், டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாக இயக்குனர் சமாளிப்பு:
சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் கூறியதாவது:விபத்து தொடர்பான அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வருகிறோம். தர்மபுரியில் நிகழ்ந்த விபத்தில், டிரைவர் ஓவர் டைம் பார்த்ததால் தான், இறந்து விட்டார் என்று கூறுவது தவறு. ஒரு நாள் ஓய்வுக்கு பின் தான் பணிக்கு வந்து உள்ளார். சிலர், ஓய்வு நாளில், சொந்த வேலைகளை பார்த்து விட்டு, பஸ்சை இயக்க வருவதால், தேவையில்லாத சம்பவங்கள் உருவாகின்றன. தொழிலாளியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான பயிற்சியை அவ்வப்போது வழங்கி வருகிறோம். சங்கத்தின் பெயரில் சிலர் தவறான தகவல்களை கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
21 மண்டலம் :
அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில், எட்டு கோட்டம், 21 மண்டலம் உள்ளது. இவற்றில், 330 டிப்போவுக்கு உட்பட்டு, 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன், அலுவலர்கள் என, 1.45 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழகம், கடந்த சில ஆண்டுகளாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. புதிய பஸ்கள் விடுவதற்கு ஏற்ப, பாடாவதி பஸ்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேஇருக்கிறது.
போக்குவரத்து ஊழியருக்கான, சம்பள ஒப்பந்தம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பதும், டி.ஏ., அரியர்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதும், ஊழியர்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.இந்த நிலையில், விழாக்காலங்களில், கூடுதல் பஸ்களை விட்டு, சிறப்பு பஸ்கள் என, வருவாயை பெருக்க, போக்குவரத்து நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. இதனால் பலிகடா ஆவதும், பாதிக்கப்படுவதும், டிரைவர், கண்டக்டர்கள் மட்டும் தான்.தீபாவளி பண்டிகையையொட்டி, 9,400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போதைய நிலையில்,
20 சதவீதம் அளவில், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. அதை சமாளிக்க, தற்காலிக அடிப்படையில் உள்ளவர்களை பணிக்கு அமர்த்துவதும், எட்டு மணி நேரம், 12 மணி நேரம் டூட்டி பார்க்கும் டிரைவர், கண்டக்டர்களை, தொடர்ச்சியாக, மேலும், 12 மணி நேரம் கட்டாயப்படுத்தி பார்க்க வைத்ததாக புகார் எழுந்தது.
தொடர் பணியால், பாதிக்கப்படுவது, அவர்கள் மட்டுமின்றி, பஸ்சில் பயணிக்கும் அப்பாவி மக்களும் தான் என்பதை அதிகாரிகள் மறந்து விடுகின்றனர்.சமீபத்தில், மதுரையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ், நாமக்கல் புதுச்சத்திரம் அருகே, நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆறு பேர் பரிதாபமாக இறந்தனர். அதேபோல், பெரம்பலுார் அருகே, லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நடந்தது.தர்மபுரி நல்லம்பள்ளி அருகில், ஒரே நேரத்தில், மூன்று வாகனங்கள் தொடர்ச்சி யாக மோதியதில், பஸ் டிரைவர் மட்டுமின்றி, பயணியும் பலியானார். மற்ற சில விபத்துகளில், டிரைவர் தப்பியபோதும், பயணிகள் உயிரிழந்தனர். விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி எடுக்காமல், வருவாயை பெருக்கும் நோக்குடன் அதிகாரிகள் நடந்து கொள்வதால், உயிரிழப்பு சம்பவம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
மனஉளைச்சல்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 330 டிப்போக்களில், 7,000 டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடம் இருக்கிறது. தற்போது இருப்போரை கொண்டு, ரெகுலர் பஸ்களையும், விழாக்கால சிறப்பு பஸ்களையும் இயக்க செய்கின்றனர். அவர்களுக்கு, ஓவர் டைம் கொடுப்பதற்கு ஏற்ப, அதற்கான சம்பளம் கொடுப்பது இல்லை.அரை சம்பளமாக கொடுக்கும்போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரு லிட்டர் டீசலுக்கு, 6 கிலோ மீட்டர் இயக்க வேண்டும் என, அதிகாரிகள் கெடுபிடி செய்கின்றனர். சமீபத்தில், பாலகிருஷ்ணன் என்ற டிரைவர், தர்மபுரி அருகே விபத்தில் சிக்கி இறந்தார். மதியம், 1.15 மணிக்கு பஸ்சை டிப்போவுக்கு கொண்டு வந்த நிலையில், மீண்டும், 2:௦௦ மணிக்கு, ஓவர் டைம் போட்டு அவரை அனுப்பினர். 45 நிமிடத்தில், எந்தவித ஓய்வும்
Advertisement
எடுக்காமல் சென்றதால், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதிகாரிகளின் மிரட்டலால், நெருக்கடியுடனே டிரைவர்கள் பஸ்களை இயக்குகின்றனர். வாரத்தில், 48 மணி நேரம் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஓவர் டைம் கொடுத்தாலும், 50, 100 கி.மீ., தொலைவுக்கு கொடுத்தால் டிரைவரால் சமாளிக்க முடியும்.
உடல் சோர்வு:
அதுமட்டுமின்றி, பஸ்களை மாற்றி இயக்க செய்யும்போது, அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. தமிழகத்தில் தான் அரசு பஸ்கள் அதிக விபத்துக்கு உள்ளாகின்றன என்று, மனித உரிமை ஆணையமும், மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தமிழக போக்குவரத்துத்துறையை எச்சரித்துள்ளது.ஆனால், அவற்றை மீறி கூடுதல் நேரத்தில் பஸ்சை இயக்க செய்து, டிரைவர், பயணிகளைபாதிப்புக்குஉள்ளாக்கின்றனர். தொடர்ச்சியாக பஸ்சை இயக்கும்போது, உடல் சோர்ந்து விபத்தில் சிக்குகின்றனர்.அதிகாரிகள், தங்களுக்கு இன்சென்டிவ் கிடைக்க வேண்டும் என்பதால், டிரைவர்களை கசக்கி பிழியும் போக்கு உள்ளது. தற்காலிகமான டிரைவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறைவாக தான் உள்ளது. பஸ்கள் தரமற்ற நிலையில் உள்ளதால், டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாக இயக்குனர் சமாளிப்பு:
சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் கூறியதாவது:விபத்து தொடர்பான அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வருகிறோம். தர்மபுரியில் நிகழ்ந்த விபத்தில், டிரைவர் ஓவர் டைம் பார்த்ததால் தான், இறந்து விட்டார் என்று கூறுவது தவறு. ஒரு நாள் ஓய்வுக்கு பின் தான் பணிக்கு வந்து உள்ளார். சிலர், ஓய்வு நாளில், சொந்த வேலைகளை பார்த்து விட்டு, பஸ்சை இயக்க வருவதால், தேவையில்லாத சம்பவங்கள் உருவாகின்றன. தொழிலாளியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான பயிற்சியை அவ்வப்போது வழங்கி வருகிறோம். சங்கத்தின் பெயரில் சிலர் தவறான தகவல்களை கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
kshanmuganathan- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
Re: மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்
உண்மையான தகவல்... இது சம்பந்தமான அதிகாரிகள் யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மனஉளைச்சல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர்
ஈகரை தமிழ்களஞ்சிய விதிமுறைகளின் படி , உங்கள் பதிவுகளின் கீழ் நீங்கள் எங்கிருந்து இந்த செய்திகளை எடுத்தீர்கள் என்று போடவேண்டும். இதை ஏற்கனவே சில நிர்வாக குழு உறுப்பினர்களும் தலைமை நடத்துனர்களும் உங்களுக்கு பின்னூட்டத்தில் தெரிவித்தும் தனிமடல் அனுப்பியும் சொல்லியாகிவிட்டது மீண்டும் மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் இது போன்ற பதிவுகள் நீக்கப்படும்
Similar topics
» ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. !
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» கழிவுநீர்த் தொட்டி மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு
» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. !
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» கழிவுநீர்த் தொட்டி மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு
» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|