ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?

3 posters

Go down

'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?  Empty 'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?

Post by Powenraj Wed Oct 22, 2014 4:21 pm

உணவை நன்கு ரசித்து புசிப்பபவர்களை, சாப்பாட்டில் அதிக நாட்டம்
கொண்டவர்களைச் 'சரியான சாப்பாட்டு ராமன்' என்பார்கள் சமூகத்தில்.

'ராமன் எத்தனை ராமனடி..' என ராமனுக்கு பல பெயர்களை சூட்டி மகிழந்து போற்றினாலும், அத்தனையிலும் இந்த 'சாப்பாட்டு ராமன்' என்கிற பெயர் சற்று வித்தியாசனமானது. அண்ணலுக்கு இந்த பெயர் எப்படி வந்தது?

உபன்யாசர் எம் ஏ.வெங்கட்கிருஷ்ணன் தம் உபநயன நிகழ்ச்சி ஒன்றில் இதன் பின்னணியை சுவைபட இப்படிச் சொன்னார்.

''இலங்கையில் ராவணவதம் முடிந்ததும், சீதை, லட்சுமணர், சுக்ரீவர், விபீஷணர் மற்றும் வானரப்படைகளுடன் அயோத்திக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார் ராமபிரான். அயோத்திக்கு செல்லும் முன்பாக, பரதவாஜ முனிவரை தரிசிக்க விரும்பினார் ராமர். ஆனால் அயோத்திக்குச் செல்ல நேரம் தாமதமாகிக் கொண்டே இருந்ததால், பரதன் தீமூட்டி அதில் தான் விழுந்துவிடுவதாய் சொன்னதையும் நினைத்துப்பார்த்தார்.

ஆம், 14 ஆண்டுகள் முடிந்த உடனேயே அண்ணன் வராவிட்டால், தான் தீயில் விழுந்து மாண்டுவிடுவதாக முன்னமே பரதன் சொல்லி இருந்தான். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் அறிவார். ஆனாலும் பரத்வாஜ முனிவரை தரிசிக்காமல் செல்ல மனமில்லை. விரைந்து அதைமுடித்துச்செல்ல திட்டமிட்டவரை, முனிவர் பரவசமாய் வரவேற்றார்.

"தென்னிலங்கை சென்று ராவணனை வெற்றிகொண்ட ஸ்ரீராமா! என் ஆஸ்ரமத்திற்கு நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று இரவு இங்கே தங்கிவிட்டு,நாளை இங்கு நடக்கும் ததீயாராதனைக்கு (மதிய உணவு) இருந்து, நன்றாக சாப்பிட்ட பிறகே செல்லவேண்டும்!" என கேட்டுக் கொண்டார்.

ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதேநேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார். ஆகவே அனுமனை அழைத்தார்.

”அஞ்சனைகுமாரனே. என் அருமை பக்தனே எனக்காக நீ பரதனிடம் விரைவாகச் சென்று, நான் எல்லோருடனும் வந்துகொண்டிருப்பதை சொல்லிவிட்டு வா. வாயுபுத்திரனான நீ இதை காற்றாய் ஓடிச்சென்று முடித்து உடன் இங்கு வரவேண்டும்” என்றார்.

அண்ணல் சொன்ன சொல்லை நிறைவேற்ற இமைப் பொழுதில் அங்கிருந்து அகன்றான் அனுமன். மறுநாள்... விருந்திற்காக இலையினைப்போட்டார் முனிவர் பெருமான். அனைவரும் அமர்ந்துவிட்டனர் , அனுமன் பரதனை சந்தித்துவிட்டு வந்துவிட்டான். அனுமன் விருந்துக்கு வருவாரென முனிவர் நினைக்கவில்லை.

அனுமனுக்கு இலை எதுவும் காலி இல்லை. ராமன் அன்புடன் அனுமனை தன் இலைக்கு எதிர்ப்புறம் அமரச்சொன்னார். அனுமன் காய் பழங்களைத்தான் உண்பார் என ராமருக்குத்தெரியும். ஆகவே பரிமாறுபவர்களிடம் இலையின் மேல்பக்கத்தில்(அனுமன் அமர்ந்த திசையில் அல்லது அவருக்கு அருகிலிருந்த இடத்தில்) காய் பழங்களை பரிமாறச் சொன்னார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் போடச் சொன்னார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடித்தார்கள்.


சாப்பாட்டிற்காக முனிவர் கேட்டுக்கொண்டதற்காக, தன் பயணத்தின் இடையே தங்கி சாப்பாட்டினை முடித்துக்கொண்டதால் ராமர், சாப்பாட்டு ராமன் ஆகிறார். காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டதாம்!

-ஆன்மிக விகடனிலிருந்து...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?  Empty Re: 'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?

Post by யினியவன் Wed Oct 22, 2014 4:50 pm

அனுமன் ராமனின் அலைபேசி - கட்டணத்திற்கு பதில் காய் பழங்கள்

நல்ல பகிர்வு பவுன்ராஜ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?  Empty Re: 'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?

Post by krishnaamma Wed Oct 22, 2014 9:11 pm

எனக்கு என்னவோ இந்த விளக்கம் சரியா படலை.........மன்னிக்கணும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?  Empty Re: 'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum