ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த பின்னும் உலகை ரசிக்க!

3 posters

Go down

இறந்த பின்னும் உலகை ரசிக்க! Empty இறந்த பின்னும் உலகை ரசிக்க!

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 8:16 am

இறந்த பின்னும் உலகை ரசிக்க! P28

''இருக்கும் வரை ரத்த தானம்.

இறந்த பின் கண் தானம்!’
என்று ஆட்டோக்களில் கூட எழுதி வைக்கிறோம்.கண் தானம் மற்றும் உடல் உறுப்புதானத்துக்கு பெயர் கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்திற்குத்தான் முதல் இடம். ஆனாலும் தானம் கிடைப்பது மிகவும் குறைவுதான். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததும், நெருங்கிய உறவு இறந்த துக்கத்தில் உடன் இருப்பவர்கள் உடனே அதுபற்றி யோசிக்காததுமே இதற்குக் காரணங்கள். கூடவே, கண்தானம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளன' என்கிறார் கண் டாக்டர் அருள்மொழிவர்மன்.

''கண்ணின் மேல்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுதான், கருவிழி எனப்படும் கார்னியா. இதன் உதவியால்தான் நம்மால் பார்க்க முடிகிறது. விபத்து, வயது மற்றும் கூர்மையான பொருட்கள் தாக்குவது போன்ற காரணங்களால் கார்னியா பாதிக்கப்பட்டு பார்வையே சிலருக்குப் பறிபோகலாம். இதற்கு ஒரே தீர்வு, கண் தானம் மட்டும்தான். இறந்த ஒருவரின் கருவிழிகளை, பாதிக் கப்பட்டவருக்குப் பொருத்து வதன் மூலம், பலருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வழி செய்யலாம். 1905ஆம் ஆண்டு 'முதல் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை’ நடந்தது. உலக அளவில் இதுவரை 49 லட்சம் பேர் கருவிழிப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். தானம் செய்யப்படும் கண் மூலம் தங்களுக்கு பார்வை கிடைக்கும் என இவர்கள் காத்திருக்கிறார்கள்.

கண் தானம்


இறந்தவரின் கண்களை எடுத்து, பார்வை வேண்டி காத்திருக்கும் இருவருக்குப் பொருத்தி உலகைப் பார்க்க வைப்பதே கண்தானம். கண்தானம் செய்ய விரும்புபவர்கள், உயிருடன் இருக்கும்போதே கண் வங்கியை அணுகி, தங்கள் கண்களை தானமாகத் தருவதற்கான, உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும். தன்னுடைய விருப்பத்தைப் பற்றி, குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் கண் வங்கிக்கு தகவல் கொடுக்க முடியும்.

ஒருவரின் உயிர் பிரிந்த ஆறு மணி நேரத்துக்குள், அவரது கண்களை எடுத்துவிட வேண்டும். இதற்கான வழிமுறைகள்:

இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும். மின்விசிறியை இயக்கக்கூடாது. இறந்தவரின் தலையை, ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி, படுக்கவைக்க வேண்டும்.

அருகில் இருக்கும் கண் வங்கிக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒப்புதல் மற்றும் இரண்டு சாட்சிகள் இருந்தால் மட்டுமே, கண் தானம் செய்ய முடியும்.

கண்ணை தானமாகப் பெறும்போது, நோய்த்தொற்று உள்ளதா என்பதை அறிய இறந்தவரின் ரத்தம் சிறிதளவு சேகரிக்கப்படும்.

கண் தானம் அளிக்கும் அறுவை சிகிச்சையால் இறுதிச்சடங்கு பாதிக்கப்படுமா?


இறுதிச்சடங்கில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. கண்களை ஆபரேஷன் மூலம் எடுப்பதற்கு 20 நிமிடங்களாவது ஆகும். மேலும், கண் தானம் செய்தால் கண்ணில் குழி விழுவது போன்ற எந்தப் பாதிப்பும் இருக்காது.

யாரெல்லாம் கண் தானம் செய்யக் கூடாது?

மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், ரத்தப் புற்றுநோய், ரேபீஸ், மூளையில் ட்யூமர் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் கண்களை தானமாகப் பெற இயலாது. ஆனால் ஆஸ்துமா, காசநோய், உயர் ரத்த அழுத்தத்தால் இறந்தவர்களின் கண்களை தானமாகப் பெற முடியும்.

கண் தானத்துக்குப் பிறகு ஒருவருடைய விழிகள் மற்றவருக்கு எப்படிப் பொருத்தப்படுகிறது?

கருவிழிகள்தான் கண் தானத்தின்போது அதிகமாக எடுக்கப்படும். கருவிழிகளை மற்றொரு நோயாளிக்குப் பொருத்த, குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். அதில் நோயாளியின் தேவைக்கு ஏற்ப கருவிழிகள் பொருத்துவது மாறுபடும்.

கண் தானத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்?


அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்க வேண்டும். கருவிழிகளை மட்டும் எடுப்பது, முழு கண்களையும் எடுப்பது என கண் தானத்தில் இரண்டு வகைகள் உண்டு.

கண் தானத்துக்குப் பிறகு, கண்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன?


முன்பெல்லாம் தானம் பெற்ற கண்களை, சில நாட்களுக்குள் மற்றவர்களுக்குப் பொருத்திட வேண்டும். ஆனால் தற்போது அதிகபட்சம் 28 நாட்கள் வரை கண் விழிகளைப் பாதுகாப்பாக வைக்க முடியும்.

ஒரு கண் விழியில் இருந்து இரண்டு லேயர்களைப் பிரித்து எடுக்கலாம். அது இரண்டு கண் நோயாளிகளுக்கு பொருத்தப்படுகிறது. இப்படி ஒரு கண் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு பார்வை கிடைக்கும். அதுவே இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனை!

விகடன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இறந்த பின்னும் உலகை ரசிக்க! Empty Re: இறந்த பின்னும் உலகை ரசிக்க!

Post by விமந்தனி Sat Oct 18, 2014 10:35 am

இறந்த பின்னும் உலகை ரசிக்க! 3838410834 சூப்பருங்க


இறந்த பின்னும் உலகை ரசிக்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇறந்த பின்னும் உலகை ரசிக்க! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இறந்த பின்னும் உலகை ரசிக்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இறந்த பின்னும் உலகை ரசிக்க! Empty Re: இறந்த பின்னும் உலகை ரசிக்க!

Post by M.M.SENTHIL Sat Oct 18, 2014 5:19 pm

இறந்த பின்னும் உலகை காண்போம்
இருக்கும் போது - கண் தானத்திற்கு பதிவு செய்வோம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இறந்த பின்னும் உலகை ரசிக்க! Empty Re: இறந்த பின்னும் உலகை ரசிக்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum