Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
+3
சிவா
krishnaamma
தமிழ்நேசன்1981
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
கே.ஸ்ரீ
குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறும். அந்தப் பெயர் நல்ல பெயராக இருக்க வேண்டும். குறிப்பாக, தெய்வத்தின் பெயரையோ, முன்னோர்களின் பெயரையோ சூட்டுவது வழக்கம். இந்தக் காலத்தில், தங்கள் குழந்தைக்கு நாகரிகமான பெயர்களைச் சூட்டவே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் பொருத்தமில்லாத பெயர்கள் வைப்பதைத் தவிர்த்துவிட்டு, தங்கள் குழந்தை பிறந்த தேதி, நட்சத்திரம் போன்றவற்றின் அடிப்படையில் பெயர் வைத்தால், அந்தக் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும். காரணம், பெயர் என்பது ஒரு குழந்தையை அடையாளப்படுத்த மட்டுமல்ல; அதற்கு ஒரு சக்தி இருக்கிறது. அது அந்தக் குழந்தையின் குணாம்சத்தை வடிவமைப்பதில் பங்கு கொள்கிறது.
பெயருக்கான சக்தி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; தெய்வங்களுக்கும் உண்டு. தெய்வத்தைவிடவும் தெய்வத்தின் திருப் பெயர்களுக்கு சக்தி அதிகம். அதனால்தான், ராமனை வணங்குவதைவிட ராம நாமத்தை ஜபிப்பது இன்னும் அதிக நன்மைகளைத் தரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பெயரில் உள்ள ஒவ்வொரு அட்சரத்துக்கும் அதன் ஒலி அமைப்பைப் பொறுத்து தனிப்பட்ட சில குணங்களும் ஆற்றல்களும் இருக்கின்றன. அந்த வகையில், ஒருவரின் பெயரில் அமைந்திருக்கக்கூடிய எழுத்துக்களின் குணம் மற்றும் ஆற்றல்களைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கணித்துவிடலாம். A முதல் Z வரையிலான எழுத்துக்களின் குணம் மற்றும் ஆற்றல்களைப் பற்றிப் பார்ப்போம்.
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! P106a](https://2img.net/h/cdnw.vikatan.com/sakthi/2014/10/ytjjzj/images/p106a.jpg)
ஆதிக்க எண் - 1
ஆதிக்க கிரகம் சூரியன்
இந்த எழுத்து ஆக்க பலம் கொண்டது. மனிதர்களின் பெயரிலும், தொழில்களின் பெயரிலும் இந்த எழுத்து அதிகம் இடம்பெறுவது சிறப்பு! முதல் எழுத்தாக வருவது மிகவும் சிறப்புடையது. இந்த எழுத்து, உலகமெல்லாம் நிறைந்து நிற்கும் சூரியனைப் போல பிரகாசம் கொண்டதும், வாழ்வில் இருளை நீக்கி ஒளியைத் தரும் ஆற்றல் கொண்டதும் ஆகும்.
மனித உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் வல்லமை பெற்ற இந்த எழுத்து, வாழ்க்கையை உயர்த்திச் செல்லக்கூடியது. வீழ்ச்சியடையும்போது தடுத்து நிறுத்தக்கூடியது. இது எப்போதும் நன்மையையே செய்யும்; ஒருபோதும் தீமை தராது.
இந்த எழுத்தைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாக அமையப் பெற்றவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். அறிவுள்ளவர்களாகவும், நிர்வாகத் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். கலைகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். தலைமைப் பதவிக்கு உரியவர்கள்.
சாதாரண மனிதரையும் திடீரென மேல்நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டது இந்த எழுத்து. புகழ், கௌரவம், பதவி போன்றவற்றைத் தரும். நேர்மையாக இருக்கச் செய்யும்.
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! P106b](https://2img.net/h/cdnw.vikatan.com/sakthi/2014/10/ytjjzj/images/p106b.jpg)
ஆதிக்க எண் - 2
ஆதிக்க கிரகம் சந்திரன்
சிறந்த அறிவாற்றலைத் தரும் எழுத்து இது. கற்பனை வளத்தில் தலைசிறக்கச் செய்யும். இந்த எழுத்தை முதலெழுத்தாக அமையப் பெற்றவர்கள், பலருக்கும் நன்மைகள் செய்வார்கள். தன் பணிகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவார்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள். முன்யோசனை உள்ளவர்கள். மனதில் உதிக்கும் கருத்துக்களை ஒளிக்காமல் வெளியிடுவார்கள். ஆன்மிகத்தில் அதிக பற்றுதல் இருக்கும். கண்ணியமான முறையில் பணம் சம்பாதிக்க விரும்புவார்கள். சமாதானத்தின் சின்னமாக விளங்குவார்கள். வீணான விஷயங்களில் தலையிட மாட்டார்கள்.
அரசருக்கு நிகரான அந்தஸ்து கொண்டவர்கள். ஆத்ம சக்தி இவர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும். தன் வாழ்க்கையை மிகவும் நல்ல முறையில் நிர்ணயித்துக் கொள்வார்கள் (இவர்கள் தங்களின் அறிவை நல்ல முறையில் உபயோகப்படுத்தாவிட்டால் சண்டைக்காரர்களாகவும், வீண் வம்புகளை விலைக்கு வாங்குபவர்களாகவும், கோள் மூட்டும் குணமுள்ளவர்களாகவும் மாறிவிடும் ஆபத்து உண்டு).
சரித்திரம் படைக்கக்கூடியவர்கள். கலைத் துறையில் சாதனை செய்யக்கூடிய எழுத்து வன்மை உள்ளவர்கள். எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்து முடிப்பார்கள்.
மனபலம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், தெய்வ சிந்தை, உழைப்பு போன்றவை இந்த எழுத்து தரும் பலன்கள்.
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! P106c](https://2img.net/h/cdnw.vikatan.com/sakthi/2014/10/ytjjzj/images/p106c.jpg)
ஆதிக்க எண் - 3
ஆதிக்க கிரகம் குரு
ஆன்ம பலத்தையும், ஆதிக்க சக்தியையும் குறிக்கும் எழுத்து இது. இந்த எழுத்தை முதல் எழுத்தாகவோ, தங்கள் பெயரில் அதிக எண்ணிக்கையிலோ அமையப் பெற்றவர்கள் நாட்டை நிர்வகிக்கும் திறன் பெற்றிருப்பார்கள். அரசியலில் அபரிமிதமான சாதனைகளைச் செய்வார்கள். சகலகலா மேதையாகத் திகழ்வார்கள். கரத்தால் உழைப்பதைக் காட்டிலும், கருத்தால் உழைப்பார்கள். உடல் பலத்தைக் காட்டிலும் மூளை பலத்தைக் கொண்டு பொருள் சேர்ப்பார்கள். சுறுசுறுப்பானவர்கள்.
புகழ் பெற வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் இருக்கும். இவர்கள் சற்று வளைந்து கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மற்றவர்கள் இவர்களை சர்வாதிகாரி, முன்கோபி, கொடுமைக்காரர், ஆணவக்காரர் என்று விமர்சிக்க நேரிடும்.
ஐம்புலன்கள் வழியே உணர்ச்சிகள் வெளியேறத் துடிக்கும். எக்காரியத்தையும் திட்டமிட்டு உரிய நேரத்தில் திறம்படச் செய்து முடிப்பார்கள். சிறந்த நிர்வாகத் திறமை மிக்கவர்கள். ஆனால், இவர்கள் தங்கள் முயற்சியை முறையான வழிகளில் பயன்படுத்த வேண்டும்.
சிற்றின்பங்களில் நிதானமும், பொறுமையும் தேவை. அரசியல் மற்றும் சினிமா போன்ற கலைத்துறைகளில் சாதனை செய்வர். எந்த கடினமான வேலையாக இருந்தாலும், சுறுசுறுப்புடன் செய்து முடித்துவிடுவார்கள். இவர்கள் தங்கள் அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தினால், பெரும் புகழ் உண்டாகும்.சுகமாக வாழ வேண்டும் என நினைப்பார்கள். கவனத்துடன் செயல்பட்டால் காரிய வெற்றி உண்டாகும்.
ஆன்ம பலம், சுறுசுறுப்பு, அறிவாற்றல் போன்றவற்றை சுகமுடன் தரும் எழுத்து இது.
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! P106d](https://2img.net/h/cdnw.vikatan.com/sakthi/2014/10/ytjjzj/images/p106d.jpg)
ஆதிக்க எண் 4
ஆதிக்க கிரகம் ராகு
இந்த எழுத்து துணிச்சலும், தன்னம்பிக்கையும் கொண்டது. தர்ம குணம் இருக்கும். நேர்மையான குணமும், கடமை உணர்ச்சி மிக்கவராகவும் இருப்பார்கள். அயராத உழைப்பால் மேன்மை அடைவார்கள். தோல்வியைக் கண்டு துவள மாட்டார்கள். சோதனைகளை சாதனைகளாக்கக்கூடியவர்கள். கண்ணியமானவர்கள்.
உடல் பலமும், மன பலமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள். வாழ்வில் குறுக்கிடும் எதிர்ப்புகளை சற்றும் லட்சியம் செய்யாது வெற்றி காண்பார்கள். உடல் உழைப்பு அதிகம் இருக்கும். பிறரிடம் அன்பு செலுத்துவார்கள்.
புதுமையும் புரட்சியும் செய்யக்கூடியவர்கள். இவர்கள் எங்கு சென்றாலும் சிறப்பு! வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் ஏற்படும். கம்பீரமான தோரணையில் பேசக் கூடியவர்கள்.
நாட்டுக்கும், வீட்டுக்கும் உழைக்கக்கூடியவர்கள். கற்பனா சக்தி அதிகம் இருக்கும். பொதுமக்களிடம் செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டு, பெரிய செல்வந்தராவார்கள்.
உலக சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்க ஆசை இருக்கும். உழைப்பு, பணிவு மிக்கவர்கள். தங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவார்கள்.
- தொடரும்..
விகடன்.காம்
கே.ஸ்ரீ
குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறும். அந்தப் பெயர் நல்ல பெயராக இருக்க வேண்டும். குறிப்பாக, தெய்வத்தின் பெயரையோ, முன்னோர்களின் பெயரையோ சூட்டுவது வழக்கம். இந்தக் காலத்தில், தங்கள் குழந்தைக்கு நாகரிகமான பெயர்களைச் சூட்டவே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் பொருத்தமில்லாத பெயர்கள் வைப்பதைத் தவிர்த்துவிட்டு, தங்கள் குழந்தை பிறந்த தேதி, நட்சத்திரம் போன்றவற்றின் அடிப்படையில் பெயர் வைத்தால், அந்தக் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும். காரணம், பெயர் என்பது ஒரு குழந்தையை அடையாளப்படுத்த மட்டுமல்ல; அதற்கு ஒரு சக்தி இருக்கிறது. அது அந்தக் குழந்தையின் குணாம்சத்தை வடிவமைப்பதில் பங்கு கொள்கிறது.
பெயருக்கான சக்தி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; தெய்வங்களுக்கும் உண்டு. தெய்வத்தைவிடவும் தெய்வத்தின் திருப் பெயர்களுக்கு சக்தி அதிகம். அதனால்தான், ராமனை வணங்குவதைவிட ராம நாமத்தை ஜபிப்பது இன்னும் அதிக நன்மைகளைத் தரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பெயரில் உள்ள ஒவ்வொரு அட்சரத்துக்கும் அதன் ஒலி அமைப்பைப் பொறுத்து தனிப்பட்ட சில குணங்களும் ஆற்றல்களும் இருக்கின்றன. அந்த வகையில், ஒருவரின் பெயரில் அமைந்திருக்கக்கூடிய எழுத்துக்களின் குணம் மற்றும் ஆற்றல்களைக் கொண்டு அவர்களுடைய குணம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கணித்துவிடலாம். A முதல் Z வரையிலான எழுத்துக்களின் குணம் மற்றும் ஆற்றல்களைப் பற்றிப் பார்ப்போம்.
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! P106a](https://2img.net/h/cdnw.vikatan.com/sakthi/2014/10/ytjjzj/images/p106a.jpg)
ஆதிக்க எண் - 1
ஆதிக்க கிரகம் சூரியன்
இந்த எழுத்து ஆக்க பலம் கொண்டது. மனிதர்களின் பெயரிலும், தொழில்களின் பெயரிலும் இந்த எழுத்து அதிகம் இடம்பெறுவது சிறப்பு! முதல் எழுத்தாக வருவது மிகவும் சிறப்புடையது. இந்த எழுத்து, உலகமெல்லாம் நிறைந்து நிற்கும் சூரியனைப் போல பிரகாசம் கொண்டதும், வாழ்வில் இருளை நீக்கி ஒளியைத் தரும் ஆற்றல் கொண்டதும் ஆகும்.
மனித உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் வல்லமை பெற்ற இந்த எழுத்து, வாழ்க்கையை உயர்த்திச் செல்லக்கூடியது. வீழ்ச்சியடையும்போது தடுத்து நிறுத்தக்கூடியது. இது எப்போதும் நன்மையையே செய்யும்; ஒருபோதும் தீமை தராது.
இந்த எழுத்தைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாக அமையப் பெற்றவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். அறிவுள்ளவர்களாகவும், நிர்வாகத் திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். கலைகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். தலைமைப் பதவிக்கு உரியவர்கள்.
சாதாரண மனிதரையும் திடீரென மேல்நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் கொண்டது இந்த எழுத்து. புகழ், கௌரவம், பதவி போன்றவற்றைத் தரும். நேர்மையாக இருக்கச் செய்யும்.
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! P106b](https://2img.net/h/cdnw.vikatan.com/sakthi/2014/10/ytjjzj/images/p106b.jpg)
ஆதிக்க எண் - 2
ஆதிக்க கிரகம் சந்திரன்
சிறந்த அறிவாற்றலைத் தரும் எழுத்து இது. கற்பனை வளத்தில் தலைசிறக்கச் செய்யும். இந்த எழுத்தை முதலெழுத்தாக அமையப் பெற்றவர்கள், பலருக்கும் நன்மைகள் செய்வார்கள். தன் பணிகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவார்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள். முன்யோசனை உள்ளவர்கள். மனதில் உதிக்கும் கருத்துக்களை ஒளிக்காமல் வெளியிடுவார்கள். ஆன்மிகத்தில் அதிக பற்றுதல் இருக்கும். கண்ணியமான முறையில் பணம் சம்பாதிக்க விரும்புவார்கள். சமாதானத்தின் சின்னமாக விளங்குவார்கள். வீணான விஷயங்களில் தலையிட மாட்டார்கள்.
அரசருக்கு நிகரான அந்தஸ்து கொண்டவர்கள். ஆத்ம சக்தி இவர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும். தன் வாழ்க்கையை மிகவும் நல்ல முறையில் நிர்ணயித்துக் கொள்வார்கள் (இவர்கள் தங்களின் அறிவை நல்ல முறையில் உபயோகப்படுத்தாவிட்டால் சண்டைக்காரர்களாகவும், வீண் வம்புகளை விலைக்கு வாங்குபவர்களாகவும், கோள் மூட்டும் குணமுள்ளவர்களாகவும் மாறிவிடும் ஆபத்து உண்டு).
சரித்திரம் படைக்கக்கூடியவர்கள். கலைத் துறையில் சாதனை செய்யக்கூடிய எழுத்து வன்மை உள்ளவர்கள். எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்து முடிப்பார்கள்.
மனபலம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், தெய்வ சிந்தை, உழைப்பு போன்றவை இந்த எழுத்து தரும் பலன்கள்.
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! P106c](https://2img.net/h/cdnw.vikatan.com/sakthi/2014/10/ytjjzj/images/p106c.jpg)
ஆதிக்க எண் - 3
ஆதிக்க கிரகம் குரு
ஆன்ம பலத்தையும், ஆதிக்க சக்தியையும் குறிக்கும் எழுத்து இது. இந்த எழுத்தை முதல் எழுத்தாகவோ, தங்கள் பெயரில் அதிக எண்ணிக்கையிலோ அமையப் பெற்றவர்கள் நாட்டை நிர்வகிக்கும் திறன் பெற்றிருப்பார்கள். அரசியலில் அபரிமிதமான சாதனைகளைச் செய்வார்கள். சகலகலா மேதையாகத் திகழ்வார்கள். கரத்தால் உழைப்பதைக் காட்டிலும், கருத்தால் உழைப்பார்கள். உடல் பலத்தைக் காட்டிலும் மூளை பலத்தைக் கொண்டு பொருள் சேர்ப்பார்கள். சுறுசுறுப்பானவர்கள்.
புகழ் பெற வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் இருக்கும். இவர்கள் சற்று வளைந்து கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மற்றவர்கள் இவர்களை சர்வாதிகாரி, முன்கோபி, கொடுமைக்காரர், ஆணவக்காரர் என்று விமர்சிக்க நேரிடும்.
ஐம்புலன்கள் வழியே உணர்ச்சிகள் வெளியேறத் துடிக்கும். எக்காரியத்தையும் திட்டமிட்டு உரிய நேரத்தில் திறம்படச் செய்து முடிப்பார்கள். சிறந்த நிர்வாகத் திறமை மிக்கவர்கள். ஆனால், இவர்கள் தங்கள் முயற்சியை முறையான வழிகளில் பயன்படுத்த வேண்டும்.
சிற்றின்பங்களில் நிதானமும், பொறுமையும் தேவை. அரசியல் மற்றும் சினிமா போன்ற கலைத்துறைகளில் சாதனை செய்வர். எந்த கடினமான வேலையாக இருந்தாலும், சுறுசுறுப்புடன் செய்து முடித்துவிடுவார்கள். இவர்கள் தங்கள் அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தினால், பெரும் புகழ் உண்டாகும்.சுகமாக வாழ வேண்டும் என நினைப்பார்கள். கவனத்துடன் செயல்பட்டால் காரிய வெற்றி உண்டாகும்.
ஆன்ம பலம், சுறுசுறுப்பு, அறிவாற்றல் போன்றவற்றை சுகமுடன் தரும் எழுத்து இது.
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! P106d](https://2img.net/h/cdnw.vikatan.com/sakthi/2014/10/ytjjzj/images/p106d.jpg)
ஆதிக்க எண் 4
ஆதிக்க கிரகம் ராகு
இந்த எழுத்து துணிச்சலும், தன்னம்பிக்கையும் கொண்டது. தர்ம குணம் இருக்கும். நேர்மையான குணமும், கடமை உணர்ச்சி மிக்கவராகவும் இருப்பார்கள். அயராத உழைப்பால் மேன்மை அடைவார்கள். தோல்வியைக் கண்டு துவள மாட்டார்கள். சோதனைகளை சாதனைகளாக்கக்கூடியவர்கள். கண்ணியமானவர்கள்.
உடல் பலமும், மன பலமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள். வாழ்வில் குறுக்கிடும் எதிர்ப்புகளை சற்றும் லட்சியம் செய்யாது வெற்றி காண்பார்கள். உடல் உழைப்பு அதிகம் இருக்கும். பிறரிடம் அன்பு செலுத்துவார்கள்.
புதுமையும் புரட்சியும் செய்யக்கூடியவர்கள். இவர்கள் எங்கு சென்றாலும் சிறப்பு! வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் ஏற்படும். கம்பீரமான தோரணையில் பேசக் கூடியவர்கள்.
நாட்டுக்கும், வீட்டுக்கும் உழைக்கக்கூடியவர்கள். கற்பனா சக்தி அதிகம் இருக்கும். பொதுமக்களிடம் செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டு, பெரிய செல்வந்தராவார்கள்.
உலக சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்க ஆசை இருக்கும். உழைப்பு, பணிவு மிக்கவர்கள். தங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவார்கள்.
- தொடரும்..
விகடன்.காம்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
அருமையான திரி.....தொடருங்கள் நேசன்................என் எழுத்து ரொம்ப பின்னாடி வரும்............காத்திருக்கேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1096351krishnaamma wrote:அருமையான திரி.....தொடருங்கள் நேசன்................என் எழுத்து ரொம்ப பின்னாடி வரும்............காத்திருக்கேன்![]()
இந்த தொடர் சக்திவிகடனில் இப்போ ஆரம்பித்து உள்ளார்கள்..என்னோட எழுத்தும் கடைசியில்தான் வரும்...நானும் காத்திருக்கிறேன்..அடுத்தடுத்த இதழ்களுக்காக...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
மேற்கோள் செய்த பதிவு: 1096369தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096351krishnaamma wrote:அருமையான திரி.....தொடருங்கள் நேசன்................என் எழுத்து ரொம்ப பின்னாடி வரும்............காத்திருக்கேன்![]()
இந்த தொடர் சக்திவிகடனில் இப்போ ஆரம்பித்து உள்ளார்கள்..என்னோட எழுத்தும் கடைசியில்தான் வரும்...நானும் காத்திருக்கிறேன்..அடுத்தடுத்த இதழ்களுக்காக...![]()
ஓகே நேசன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
இந்த விஷயம் வெள்ளக்காரனுக்கு தெரியுமா நேசன்! அவன் எழுத்தை வைத்துக் கொண்டு என்னமாக நம்மவர்கள் விளையாடுகிறார்கள்!
ஆங்கிலம் நம் நாட்டிற்கு வரும் முன்னர் இந்த எழுத்து ஜோதிடம் எங்கே இருந்தது!
ஆங்கிலம் நம் நாட்டிற்கு வரும் முன்னர் இந்த எழுத்து ஜோதிடம் எங்கே இருந்தது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
என்ன பாஸ் நாடு எவ்வளவு முன்னேறிட்டு இருக்கு - நமக்கு தான் ஒன்னும் தெரிய மாட்டேங்குது
அவனவன் பாத்ரூம் இருக்கற இடத்துல கிச்சன் கட்டுறான், கிச்சன் இருந்த இடத்துல கிணறு தோண்டுறான் - வாஸ்த்து படி, இதெல்லாம் உங்களுக்கு தெரியலேன்னா ஜோசியத்த கிண்டல் பண்ணுறதா? இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அவனவன் பாத்ரூம் இருக்கற இடத்துல கிச்சன் கட்டுறான், கிச்சன் இருந்த இடத்துல கிணறு தோண்டுறான் - வாஸ்த்து படி, இதெல்லாம் உங்களுக்கு தெரியலேன்னா ஜோசியத்த கிண்டல் பண்ணுறதா? இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
யினியவன் wrote:என்ன பாஸ் நாடு எவ்வளவு முன்னேறிட்டு இருக்கு - நமக்கு தான் ஒன்னும் தெரிய மாட்டேங்குது
அவனவன் பாத்ரூம் இருக்கற இடத்துல கிச்சன் கட்டுறான், கிச்சன் இருந்த இடத்துல கிணறு தோண்டுறான் - வாஸ்த்து படி, இதெல்லாம் உங்களுக்கு தெரியலேன்னா ஜோசியத்த கிண்டல் பண்ணுறதா? இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்
இவைகளெல்லாம் இந்த தொழில் செய்பவர்கள் வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில் மக்களை மூளைச் சலவை செய்துள்ளார்கள்! அதற்கேற்றவாறு மக்களும் எதற்கெடுத்தாலும் இவர்களிடம் ஓடுகிறார்கள்.
நான் கடவுளைப் பார்த்தேன் என்றால் இவன் பைத்தியக்காரன் என்கிறார்கள், ஆனால் பேயைப் பார்த்தேன் என்றால், ஆமவா, எப்ப.. எங்கே பார்த்தாய் என்று ஆர்வமுடன் கேட்கிறார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
நம்பிக்கை தான் வாழ்க்கை என்ற அடிப்படையிலேயே
இப்படிப்பட்ட கருத்துக்களை எதிர்நோக்க வேண்டும்...
-
கூட்டு வாழ்க்கை சிதைந்த பின்னர், இக்கட்டனான நேரத்தில்
ஆறுதல் சொல்ல குடும்பத்தில் யாருமில்லை....
எனவே சாமி பூதம் சோசியம் என்ற நம்பிக்கை வேரூன்றுவதை
தடுக்க இயலாது...
-
இப்படிப்பட்ட கருத்துக்களை எதிர்நோக்க வேண்டும்...
-
கூட்டு வாழ்க்கை சிதைந்த பின்னர், இக்கட்டனான நேரத்தில்
ஆறுதல் சொல்ல குடும்பத்தில் யாருமில்லை....
எனவே சாமி பூதம் சோசியம் என்ற நம்பிக்கை வேரூன்றுவதை
தடுக்க இயலாது...
-
Re: எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
A B C மிகவும் நன்றாக பொருந்துகிறது
D சிறிது காலம் பொறுத்து இருந்து பார்க்கவேண்டும்
தொடர்ந்து தாருங்கள் தமிழ் நேசன்
ரமணியன்
D சிறிது காலம் பொறுத்து இருந்து பார்க்கவேண்டும்
தொடர்ந்து தாருங்கள் தமிழ் நேசன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: எழுத்துக்களின் குணங்களும் ஆற்றல்களும்..!
தற்காலத்தில் வாஸ்த்து எனக்கூறி விற்கும் எல்லா பொருள்களும்
தயாரிப்பவர்களின் நிதிநிலைமையை உயர்த்தவே பயன் படுகின்றன .
சமூகத்திற்கு சேவை செய்யவேண்டும் என நினைத்தால் , ஆக்க விலையிலேயே
தரலாமே . தயாரிக்கும் முறையை கூறலாமே .
அவர்களுடைய சில (வாஸ்து )பொருள்கள் ,சிரிப்பை வரவழிக்கின்றது .
மக்களை ஏமாற்றும் கூட்டம் உள்ளது .
(வாஸ்த்து கலையை மதிப்பவன் நான் )
ரமணியன்
தயாரிப்பவர்களின் நிதிநிலைமையை உயர்த்தவே பயன் படுகின்றன .
சமூகத்திற்கு சேவை செய்யவேண்டும் என நினைத்தால் , ஆக்க விலையிலேயே
தரலாமே . தயாரிக்கும் முறையை கூறலாமே .
அவர்களுடைய சில (வாஸ்து )பொருள்கள் ,சிரிப்பை வரவழிக்கின்றது .
மக்களை ஏமாற்றும் கூட்டம் உள்ளது .
(வாஸ்த்து கலையை மதிப்பவன் நான் )
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் எழுத்துக்களின் பெருமை - பகுதி ஒன்றும் இரண்டும்..!
» 9 மற்றும் தமிழ் எழுத்துக்களின் விளக்கம்
» உயிர் எழுத்துக்களின் பெயர் காரணம் !!!
» எழுத்துகளும் அவரவர் குணங்களும்
» அரைக்கீரையும் அற்புத குணங்களும்
» 9 மற்றும் தமிழ் எழுத்துக்களின் விளக்கம்
» உயிர் எழுத்துக்களின் பெயர் காரணம் !!!
» எழுத்துகளும் அவரவர் குணங்களும்
» அரைக்கீரையும் அற்புத குணங்களும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|