ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

Top posting users this month
ayyasamy ram
ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_m10ஒக்காண்டே தூங்கலாம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒக்காண்டே தூங்கலாம்!

2 posters

Go down

ஒக்காண்டே தூங்கலாம்! Empty ஒக்காண்டே தூங்கலாம்!

Post by தமிழ்நேசன்1981 Sat 11 Oct 2014 - 22:31

ஒக்காண்டே தூங்கலாம்!
பாக்கியம் ராமசாமி
ஓவியங்கள்: ஹரன்

ஒக்காண்டே தூங்கலாம்! P100

உ ட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப் படுத்துக்கொண்டாலும் தூக்கம் வருவதில்லை. நண்பன் நாராயணன் அடிக்கடி சொல்வான்... ‘‘செத்தாக்கூட எனக்குத் தூக்கம் வராதுடா!’’

பிள்ளை இல்லாதவர்களுக்குதான் பிள்ளையின் அருமை தெரியும்.

உட்கார்ந்துகொண்டே தூங்குவது யோகிகளின் தியானத்தைவிடவும் உசத்தி என்றுகூடச் சொல்லலாம்.

உட்கார்ந்துகொண்டு தூங்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது.

இட நெருக்கடி காரணமாக விஸ்தாரமான பரப்பில் வீடுகள், பங்களாக்கள் அருகி வருகின்ற ஒரு கால கட்ட(ட)த்தில் நாம் இருக்கிறோம்.
ஒக்காண்டே தூங்கலாம்! P101
‘கையைக் காலை வீசிக்கொண்டு படுக்கவெல்லாம் எதிர்காலத்தில் நிச்சயம் நமக்கு இடம் கிடைக்கப் போவதில்லை’ என்பதை உணர்ந்த ஞானிகளும், ரிஷி புங்கவர்களும் கண்டுபிடித்த ஒருவகை யோகமே, ஒக்காண்டே தூங்குவது!

மனிதர்களுக்கு நேரம் முக்கியம்; காரியமும் முக்கியம். பஸ் பிடித்து ஆபீஸ் போவது என்பது ஒரு காரியம். காலை வேளையில், பஸ்ஸில் வசதியாக இடம் கிடைத்து உட்கார்ந்ததுமே சிலர் அந்த ஒக்காண்டே தூங்கும் யோக நிலைக்கு வந்துவிடுவார்கள். அதுவும், நீண்ட தூர பஸ் பயணத்துக்கு உட்கார்ந்து தூங்கும் நிலை ரொம்பவும் இதமானது.

நம்மைத் தாங்க யாருமே இல்லையே என சுய கழிவிரக்கப்படுகிறவர்கள் பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணிகளாக உட்கார்ந்து தூங்கினால், தன்னைத் தாங்குகிறவர்கள் அக்கம்பக்கம் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை நிச்சயம் உணர்ந்து ஆறுதல் பெறுவார்கள்.
ஒக்காண்டே தூங்கலாம்! P102a
உட்கார்ந்து தூங்கும்போது, நமது தலை மதில்மேல் பூனை மாதிரி இடப் பக்கமும் சாயலாம்; வலப் பக்கமும் சாயலாம். பின்புறமோ, முன்புறமோகூட சாயலாம்.

சர்க்கஸ்காரன் கம்பி மேல் அநேக வித சேஷ்டைகள் செய்தாலும், கீழே விழுந்துவிட மாட்டான். உட்கார்ந்து தூங்கும் தூக்கமும் அப்படித்தான்! என்னதான் சாய்ந்தாலும், தொபுக்கடீரென அச்சு கழன்று ஒரேயடியாகக் கீழே சாய்ந்து விட மாட்டார்கள். சாய்வது போலிருக்கும்... ஆனால், அந்த அசைவே வெடுக்கென்று ஒரு உணர்வைத் தந்து விழிக்கச் செய்துவிடும். அது ஓர் அதிசயமான டூ-இன்-ஒன் மெகானிஸம்.

மனிதனது உடல்கூறும், மெடபாலிஸம் எனப்படும் உள்விவகார விநோதமும் எந்த சுஜாதாவுக்கும் எட்டாத அதிசயம்!

ஆசாமி தன்னை மறந்து தூங்கிக்கொண்டு இருக்கிறானே... இறங்க வேண்டிய இடத்தில் இறங்குவானோ, மாட் டானோ என்றெல்லாம் யாரும் கவலைப்படத் தேவையில்லை. இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்ததும், ஒரு மேஜிக் போல் அந்தத் தூக்கம் சட்டென்று கலைந்து, விழிப்பு உணர்வு உண்டாகி, கூட்டத்தைப் பிளந்துகொண்டு வெளியேறி விடுவான்.

படுத்துத் தூங்குகிறவர்களுக்கு இந்த சென்ஸிடிவ்னெஸ் குறைவு. ரயிலில் தான் பார்க்கிறோமே... ‘சேலம் வந்ததும் கொஞ்சம் எழுப்பிவிடறீங்களா?’ என்று கேட்பார்கள். ‘‘நான் முழிச்சிட்டிருந் தால் எழுப்பறேன்’’ என்று பதிலாளிகள் சாமர்த்தியமாகக் கூறுவார்கள்.
ஒக்காண்டே தூங்கலாம்! P102
சில பர்த் கேஸ்கள் இறங்க வேண்டிய இடத்தைத் தாண்டியும் தூங்கிப் போய்விடுவது உண்டு. ஆனால், உட்கார்ந்துகொண்டே தூங்குகிறவர்கள் ஒருநாளும் தூரம் கடந்து தூங்கிவிட மாட்டார்கள்.

இயற்கை அப்படி ஒரு இன் - பில்ட் விழிப்பு உணர்ச்சியை, பொறுப்பு உணர்ச்சியை உட்கார்ந்து கொண்டே தூங்குகிறவர்களுக்கு வழங்கியிருக்கிறது.

உட்கார்ந்த நிலையில், டி.வி. பார்த்த படியே உறங்குவது போன்ற சுகத்துக்கு ஈடானது உலகத்தில் எதுவுமே இல்லை. டி.வி. நிகழ்ச்சிகளால், முக்கியமாக மெகா தொடர்களால் ஏற்படும் ரத்தக் கொதிப்பு, டென்ஷன் போன்ற வியாதிகள், டி.வி. முன்னே உட்கார்ந்துகொண்டு தூங்குகிறவர் களை அணுகுவதில்லை என்பது அனுபவரீதியான உண்மை.

ஆனால், பாவம்... உட்கார்ந்து தூங்கும் வழக்கத்தில், பெண்கள் சற்றுப் பின்தங்கியவர்களே!

காந்தி, சர்ச்சில், பெரியார் இவர்கள் எல்லாம்கூட காரில் செல்லும்போது சட்டென்று உட்கார்ந்தவாறே தூங்கி விடுவார்களாம். அரசியல் தலைவர்களில் இப்போது கர்நாடகத்தைக் கதிகலக்கி வரும் தேவகௌடா முன்னாளில் பிரதமராக இருந்தபோதும் சரி, தற்காலத்தில் கர்நாடக அரசில் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருக்கும்போதும் சரி, உற்சாகத் தின் உறைவிடமாக (உறங்குமிடமாக என்று தூக்கக் கலக்கத்தில் படித்துவிட வேண்டாம்) இருப்பதற்குக் காரணமே அவரது ஒக்காண்டே தூங்கும் வழக்கம்தான் என்கிறார்கள்.

விகடன்.காம்

உட்கார்ந்து தூங்கும் பழக்கம் நாட்டில் பரவினால், இன்னும் சில பொது நன்மைகளும்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசியல் கூட்டங்களில் கலாட்டாக்களும், கலவரங்களும் குறையும்.

ஆகவே, உட்கார்ந்துண்டே தூங்குகிறவர்களை யாரும் கேலி பண்ண வேண்டாம். வாயை ரொம்பவும் அகலமாகத் திறந்து கொண்டோ, அக்கம்பக்கம் அதிர்வுகள் ஏற்படுமாறு ஹை-டெஸிபலில் குறட்டை விட்டுக்கொண்டோ தூங்க வேண்டாம்என ஒரே ஒரு சின்ன வேண்டுகோளை வேண்டு மானால், அவர்களுக்கு விடுக்கலாம்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஒக்காண்டே தூங்கலாம்! Empty Re: ஒக்காண்டே தூங்கலாம்!

Post by krishnaamma Sat 11 Oct 2014 - 23:07

புன்னகை ரொம்ப நல்லா இருக்கு நேசன் ! சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum