Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரண காமெடி
3 posters
Page 1 of 1
மரண காமெடி
'சாகிற நாள் தெரிஞ்சா, வாழுற நாள் நரகமாயிடும்’ இது 'சிவாஜி’ வசனம். ஆனால் மரணமே இல்லாம இருந்தா எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான்!
மும்தாஜின் நினைவாக ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டியிருக்க மாட்டார். அப்படியே கட்டியிருந்தாலும் தாஜ்மஹாலை கல்யாணம், காது குத்துக்கு வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் பார்த்திருப்பார். அங்கு வரும் மக்களும் தாஜ்மஹாலை 'அதிசயமாக’ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காமல் பீடா போட்டபடி வாசலுக்கு வந்து கழட்டிப்போட்ட செருப்பைத் தேடிக்கொண்டு இருந்திருப்பார்கள்.
சுடுகாடுனு ஒண்ணு இருந்திருக்காது. பாலா படம் எடுத்து சாகடிக்காம (நம்மளை இல்லப்பா நடிகர்களை!) அரியரே இல்லாம தமிழ் இலக்கியம் முடிச்சதோட, ஸ்கூல் வாத்தியாராகிப் பசங்களை வெளுத்திருப்பார். இயல்பாகப் பாடம் நடத்தியதால், நல்லாசிரியர் விருதுகள் கிடைத்திருக்கும். படிக்கிற பசங்க லீவுக்காக பாட்டியை சாகடிச்சிருக்க மாட்டாங்க.
சிவாஜி 'எழுதுங்கள் என் கல்லறையில்...’னு பாடியிருக்க மாட்டார். முக்கியமா கவிதை சொல்றேன்னு 'என் கல்லறையில் கண்ணீர் சிந்தாதீர்கள். துடைத்துவிட எழுந்துவிடுவேன்’னு யாருமே கலவரமாக்கியிருக்க மாட்டாங்க. 'கருவறை முதல் கல்லறை வரை சில்லரை தேவை’னு தத்துவம் பேசி நம்மளை ஊறப்போட்டு துவைச்சிருக்கவும் மாட்டாங்க.
மூக்கில் குழாயுடன் முகேஷ் பேசும் 'நான்தான் முகேஷ்...’ விளம்பரம் ஒளிபரப்பாகாது என்பதால், நிம்மதியாக பாப்கார்னை சுவைத்தபடி படம் பார்த்திருப்பார்கள் ரசிகர்கள். 'நீ சாகணும்னாலும் நான்தான் முடிவு பண்ணணும். நான் சாகணும்னாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும்’ங்கிற பன்ச் வசனத்தை வைக்கணும்னு யாருமே முடிவு பண்ணியிருக்க மாட்டாங்க.
ஒவ்வொரு குடும்பத்திலும் பாட்டன், பூட்டன், தாத்தா, பாட்டி, அப்பா... என மக்கள்தொகை வாழையடி வாழையாக வளர்ந்துகொண்டே வரும் என்பதால், குடும்பத்தின் பாதி உறுப்பினர்கள் கட்டாயம் வேற்று கிரகத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கும். இதற்காகவே வாரத்தின் ஒவ்வொரு திங்களும் 'செவ்வாய் கிரகத்துக்கு செல்வது எப்படி’ என குடிமக்களுக்கு கோச்சிங் கிளாஸ் எடுத்திருப்பார்கள் விஞ்ஞானிகள்.
கட்சித் தலைவரின் மகனே தன் தலைவருக்கு எதிராக 'ஒருவர் ஒருமுறைதான் முதல்வராக வேண்டும்’ என கோரிக்கை வைத்து கோர்ட்டில் கேஸ் போட்டிருப்பார். விசாரணை, குறுக்கு நெடுக்கு விசாரணைகள் என வழக்கு முடிய எப்படியும் 200, 300 வருடங்களைத் தாண்டும் என்பதால், நாற்காலியில் ஃபெவிகால் தடவிக்கொண்டு உட்கார்ந்திருப்பார் தலைவர்.
சாலையோரம் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் மருத்துவமனைக்குப் போகாமல் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸை எண்ணிக் கொண்டிருப்பார். அதற்கு முன்பாகவே உடைந்த கையை சிரித்துக்கொண்டே ஸ்குரூ போட்டு அட்ஜெஸ்ட் செய்யும் ஒருவனின் போட்டோ 80,000 லைக்ஸைத் தாண்டியிருக்கும். பேய், பிசாசுகள் என்றால் என்னவென்றே தெரியாது என்பதால் 'முனி’, 'பீட்சா’ படங்களையெல்லாம் பார்த்து விழுந்து புரண்டு சிரித்திருப்போம்.
'காலம்பூரா உன்னோட மட்டும்தான் வாழணும்’னு எந்தப் பொண்ணும் சொல்ல மாட்டாள். அப்படியே சொன்னாலும் அதை எந்தப் பையனும் ஏத்துக்க மாட்டான். 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா, உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா, செத்தாலும் என் மூஞ்சியில முழிக்காத’ இந்த மாதிரி வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் என்ன என்று புரியாமல் விழித்திருப்போம்.
இப்படி மொத்த கேலக்ஸியே கிறுக்கு பிடிச்சு சுத்திக்கிட்டு இருக்கும். கடைசியாக அரசே 'மனிதர்களைக் கொல்வது எப்படி’னு ஆராய்ச்சி பண்ணி மருந்தைக் கண்டுபிடிக்கும். அதே சமயம் அந்த மருந்தைச் செயலிழக்க வைக்கிறதுக்கான மாற்று மருந்து முயற்சிகளும் நடந்துகிட்டுத்தான் இருக்கும்.
டைம்பாஸ் விகடன்
மும்தாஜின் நினைவாக ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டியிருக்க மாட்டார். அப்படியே கட்டியிருந்தாலும் தாஜ்மஹாலை கல்யாணம், காது குத்துக்கு வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் பார்த்திருப்பார். அங்கு வரும் மக்களும் தாஜ்மஹாலை 'அதிசயமாக’ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காமல் பீடா போட்டபடி வாசலுக்கு வந்து கழட்டிப்போட்ட செருப்பைத் தேடிக்கொண்டு இருந்திருப்பார்கள்.
சுடுகாடுனு ஒண்ணு இருந்திருக்காது. பாலா படம் எடுத்து சாகடிக்காம (நம்மளை இல்லப்பா நடிகர்களை!) அரியரே இல்லாம தமிழ் இலக்கியம் முடிச்சதோட, ஸ்கூல் வாத்தியாராகிப் பசங்களை வெளுத்திருப்பார். இயல்பாகப் பாடம் நடத்தியதால், நல்லாசிரியர் விருதுகள் கிடைத்திருக்கும். படிக்கிற பசங்க லீவுக்காக பாட்டியை சாகடிச்சிருக்க மாட்டாங்க.
சிவாஜி 'எழுதுங்கள் என் கல்லறையில்...’னு பாடியிருக்க மாட்டார். முக்கியமா கவிதை சொல்றேன்னு 'என் கல்லறையில் கண்ணீர் சிந்தாதீர்கள். துடைத்துவிட எழுந்துவிடுவேன்’னு யாருமே கலவரமாக்கியிருக்க மாட்டாங்க. 'கருவறை முதல் கல்லறை வரை சில்லரை தேவை’னு தத்துவம் பேசி நம்மளை ஊறப்போட்டு துவைச்சிருக்கவும் மாட்டாங்க.
மூக்கில் குழாயுடன் முகேஷ் பேசும் 'நான்தான் முகேஷ்...’ விளம்பரம் ஒளிபரப்பாகாது என்பதால், நிம்மதியாக பாப்கார்னை சுவைத்தபடி படம் பார்த்திருப்பார்கள் ரசிகர்கள். 'நீ சாகணும்னாலும் நான்தான் முடிவு பண்ணணும். நான் சாகணும்னாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும்’ங்கிற பன்ச் வசனத்தை வைக்கணும்னு யாருமே முடிவு பண்ணியிருக்க மாட்டாங்க.
ஒவ்வொரு குடும்பத்திலும் பாட்டன், பூட்டன், தாத்தா, பாட்டி, அப்பா... என மக்கள்தொகை வாழையடி வாழையாக வளர்ந்துகொண்டே வரும் என்பதால், குடும்பத்தின் பாதி உறுப்பினர்கள் கட்டாயம் வேற்று கிரகத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கும். இதற்காகவே வாரத்தின் ஒவ்வொரு திங்களும் 'செவ்வாய் கிரகத்துக்கு செல்வது எப்படி’ என குடிமக்களுக்கு கோச்சிங் கிளாஸ் எடுத்திருப்பார்கள் விஞ்ஞானிகள்.
கட்சித் தலைவரின் மகனே தன் தலைவருக்கு எதிராக 'ஒருவர் ஒருமுறைதான் முதல்வராக வேண்டும்’ என கோரிக்கை வைத்து கோர்ட்டில் கேஸ் போட்டிருப்பார். விசாரணை, குறுக்கு நெடுக்கு விசாரணைகள் என வழக்கு முடிய எப்படியும் 200, 300 வருடங்களைத் தாண்டும் என்பதால், நாற்காலியில் ஃபெவிகால் தடவிக்கொண்டு உட்கார்ந்திருப்பார் தலைவர்.
சாலையோரம் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் மருத்துவமனைக்குப் போகாமல் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸை எண்ணிக் கொண்டிருப்பார். அதற்கு முன்பாகவே உடைந்த கையை சிரித்துக்கொண்டே ஸ்குரூ போட்டு அட்ஜெஸ்ட் செய்யும் ஒருவனின் போட்டோ 80,000 லைக்ஸைத் தாண்டியிருக்கும். பேய், பிசாசுகள் என்றால் என்னவென்றே தெரியாது என்பதால் 'முனி’, 'பீட்சா’ படங்களையெல்லாம் பார்த்து விழுந்து புரண்டு சிரித்திருப்போம்.
'காலம்பூரா உன்னோட மட்டும்தான் வாழணும்’னு எந்தப் பொண்ணும் சொல்ல மாட்டாள். அப்படியே சொன்னாலும் அதை எந்தப் பையனும் ஏத்துக்க மாட்டான். 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா, உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா, செத்தாலும் என் மூஞ்சியில முழிக்காத’ இந்த மாதிரி வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் என்ன என்று புரியாமல் விழித்திருப்போம்.
இப்படி மொத்த கேலக்ஸியே கிறுக்கு பிடிச்சு சுத்திக்கிட்டு இருக்கும். கடைசியாக அரசே 'மனிதர்களைக் கொல்வது எப்படி’னு ஆராய்ச்சி பண்ணி மருந்தைக் கண்டுபிடிக்கும். அதே சமயம் அந்த மருந்தைச் செயலிழக்க வைக்கிறதுக்கான மாற்று மருந்து முயற்சிகளும் நடந்துகிட்டுத்தான் இருக்கும்.
டைம்பாஸ் விகடன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: மரண காமெடி
நேசன் , என்ன ஆச்சு 'திரிகளை' மாத்தி மாத்தி போடறீங்க ? இது கதைகள் கீழ வர வேண்டாமோ ? இதையும் மாத்திடறேன்
.
.
.
சூப்பர் ! .....................
.
.
.
சூப்பர் ! .....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரண காமெடி
மேற்கோள் செய்த பதிவு: 1094459krishnaamma wrote:நேசன் , என்ன ஆச்சு 'திரிகளை' மாத்தி மாத்தி போடறீங்க ? இது கதைகள் கீழ வர வேண்டாமோ ? இதையும் மாத்திடறேன்
.
.
.
சூப்பர் ! .....................
இது பதிவு கொஞ்சம் காமெடியா இருந்ததால குழப்பம் ஏற்பட்டுவிட்டது..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: மரண காமெடி
வாழ்க்கையே கிளிஷேதான் பாஸ்!
'இந்த சீன் கிளிஷேவா இருக்கு’, 'அந்த டயலாக் கிளிஷேவா இருக்கு’னு சினிமாக் களை மட்டும் வாய் வலிக்கக் கலாய்க் கிறீங்களே... உங்க தினசரி வாழ்க்கையில நடக்கிற 'கிளிஷே’ விஷயங்களையும் பேசுற 'கிளிஷே’ வார்த்தைகளையும் கொஞ்சம் பார்க்க லாம்.
என்னதான் ஹோட்டல்கள்ல நீங்க சர்வர்கிட்ட சமையல் குறிப்பு கொடுத்தாலும் அவர் 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்ம்ம்ம்...’னு அசால்ட்டா சொல் லிட்டுப் போயிடுறார். இருந்தாலும் ஒவ்வொரு தடவை யும் 'அண்ணே... ஆம்லேட்ல ஆனியன் ஜாஸ்தியா’ 'காரச்சட்னி மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட் ராண்ணே...’னு சொல்றீங்களே மக்கா.
ஆம்னி பஸ்ஸூக்கு டிக்கெட் புக் பண்ணப்போறீங்களே, தீபாவளி, பொங்கல்னா வண்டி கிடைக்கிறதே அந்த வண்டி கருப்பண்ணசாமி புண்ணியம். அதுவுமில்லாம வண்டி தாம்பரம் தாண்டுறதுக்குள்ளே தூங்கப்போற நீங்க, 'விண்டோ சீட்டா குடுங்க’னு கேட்டு நச்சரிக்கிறீங்களே... ஏன் ப்ரோ?
உங்க அங்காளி, பங்காளிகள்ல ஒருத்தர் கஷ்டப்பட்டு அசிஸ்டென்ட் டைரக்டராகியிருக்கிறார்னா அவரைப் பாராட்டுங்க. அதை விட்டுட்டு அவர் ஊருக்கு வரும்போதெல்லாம், 'உன் படத்துல எனக்கு ஒரு கேரக்டர் தா பங்காளி...’னு பிட்டு போட வேண்டியது. ஆமா, நீங்க என்ன பெரிய தயாரிப்பாளர் மகனா, உங்களை ஹீரோவா வெச்சுப் படம் பண்றதுக்கு..?
ஜுரம் வந்து தெருமுனையில இருக்கிற தேன்மொழி டாக்டர்கிட்ட போறீங்க. ஓகே. அங்கே போய் 'ஊசின்னாலே சின்ன வயசிலிருந்தே பயம் டாக்டர்... கொஞ்சம் வலிக்காம போடுங்க’னு ரெக்வெஸ்ட் வெக்கிறீங்களே, உங்களுக்கு ஜுரம் சரியாகணுமா வேணாமா சார்..?
அது ஏன் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கினாலும் 1,000 ரூபாய்க்கு வாங்கினாலும் கொஞ்சூண்டு கொசுறு கேட்டு வாங்குறீங்க, இப்போ அந்தக் கொசுறு வாங்கலைனா சாமி குத்தமா ஆகப்போகுது?
உங்களுக்கு தமிழ்நாட்டுல உள்ள எல்லா ஊரையும் பத்தி தெரியும்தான். அதுக்காக யாரைப் பார்த்தாலும் ஊர் பேர் கேட்டு, 'அங்கே எங்க அண்ணன் பொண்ணைக் கட்டிக் கொடுத்திருக்கு, அந்த ஊர் பிரசிடென்ட்கூட நம்மாளுதான்’னு டீட்டெய்ல்ஸ் சொல்றீங்களே... நீங்க என்ன குட்டி கூகுளா?
'அதான் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்னு தெரியும்ல.. அப்புறம் ஏன் இன்னும் அதைப்பத்தியே பில்டப் பண்ணிப் பேசிட்டிருக்கீங்க..?''
இது எப்டி இருக்கு?
'இந்த சீன் கிளிஷேவா இருக்கு’, 'அந்த டயலாக் கிளிஷேவா இருக்கு’னு சினிமாக் களை மட்டும் வாய் வலிக்கக் கலாய்க் கிறீங்களே... உங்க தினசரி வாழ்க்கையில நடக்கிற 'கிளிஷே’ விஷயங்களையும் பேசுற 'கிளிஷே’ வார்த்தைகளையும் கொஞ்சம் பார்க்க லாம்.
என்னதான் ஹோட்டல்கள்ல நீங்க சர்வர்கிட்ட சமையல் குறிப்பு கொடுத்தாலும் அவர் 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்ம்ம்ம்...’னு அசால்ட்டா சொல் லிட்டுப் போயிடுறார். இருந்தாலும் ஒவ்வொரு தடவை யும் 'அண்ணே... ஆம்லேட்ல ஆனியன் ஜாஸ்தியா’ 'காரச்சட்னி மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட் ராண்ணே...’னு சொல்றீங்களே மக்கா.
ஆம்னி பஸ்ஸூக்கு டிக்கெட் புக் பண்ணப்போறீங்களே, தீபாவளி, பொங்கல்னா வண்டி கிடைக்கிறதே அந்த வண்டி கருப்பண்ணசாமி புண்ணியம். அதுவுமில்லாம வண்டி தாம்பரம் தாண்டுறதுக்குள்ளே தூங்கப்போற நீங்க, 'விண்டோ சீட்டா குடுங்க’னு கேட்டு நச்சரிக்கிறீங்களே... ஏன் ப்ரோ?
உங்க அங்காளி, பங்காளிகள்ல ஒருத்தர் கஷ்டப்பட்டு அசிஸ்டென்ட் டைரக்டராகியிருக்கிறார்னா அவரைப் பாராட்டுங்க. அதை விட்டுட்டு அவர் ஊருக்கு வரும்போதெல்லாம், 'உன் படத்துல எனக்கு ஒரு கேரக்டர் தா பங்காளி...’னு பிட்டு போட வேண்டியது. ஆமா, நீங்க என்ன பெரிய தயாரிப்பாளர் மகனா, உங்களை ஹீரோவா வெச்சுப் படம் பண்றதுக்கு..?
ஜுரம் வந்து தெருமுனையில இருக்கிற தேன்மொழி டாக்டர்கிட்ட போறீங்க. ஓகே. அங்கே போய் 'ஊசின்னாலே சின்ன வயசிலிருந்தே பயம் டாக்டர்... கொஞ்சம் வலிக்காம போடுங்க’னு ரெக்வெஸ்ட் வெக்கிறீங்களே, உங்களுக்கு ஜுரம் சரியாகணுமா வேணாமா சார்..?
அது ஏன் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கினாலும் 1,000 ரூபாய்க்கு வாங்கினாலும் கொஞ்சூண்டு கொசுறு கேட்டு வாங்குறீங்க, இப்போ அந்தக் கொசுறு வாங்கலைனா சாமி குத்தமா ஆகப்போகுது?
உங்களுக்கு தமிழ்நாட்டுல உள்ள எல்லா ஊரையும் பத்தி தெரியும்தான். அதுக்காக யாரைப் பார்த்தாலும் ஊர் பேர் கேட்டு, 'அங்கே எங்க அண்ணன் பொண்ணைக் கட்டிக் கொடுத்திருக்கு, அந்த ஊர் பிரசிடென்ட்கூட நம்மாளுதான்’னு டீட்டெய்ல்ஸ் சொல்றீங்களே... நீங்க என்ன குட்டி கூகுளா?
'அதான் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்னு தெரியும்ல.. அப்புறம் ஏன் இன்னும் அதைப்பத்தியே பில்டப் பண்ணிப் பேசிட்டிருக்கீங்க..?''
இது எப்டி இருக்கு?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: மரண காமெடி
ஹா....ஹா.....ஹாஆ.............சூப்பர் !
.
.
ஆனால் இது மட்டும்........................
ஆம்னி பஸ்ஸூக்கு டிக்கெட் புக் பண்ணப்போறீங்களே, தீபாவளி, பொங்கல்னா வண்டி கிடைக்கிறதே அந்த வண்டி கருப்பண்ணசாமி புண்ணியம். அதுவுமில்லாம வண்டி தாம்பரம் தாண்டுறதுக்குள்ளே தூங்கப்போற நீங்க, 'விண்டோ சீட்டா குடுங்க’னு கேட்டு நச்சரிக்கிறீங்களே... ஏன் ப்ரோ?
நல்லா காத்துவாங்கிண்டே தூங்கத்தான் ..................
.
.
ஆனால் இது மட்டும்........................
ஆம்னி பஸ்ஸூக்கு டிக்கெட் புக் பண்ணப்போறீங்களே, தீபாவளி, பொங்கல்னா வண்டி கிடைக்கிறதே அந்த வண்டி கருப்பண்ணசாமி புண்ணியம். அதுவுமில்லாம வண்டி தாம்பரம் தாண்டுறதுக்குள்ளே தூங்கப்போற நீங்க, 'விண்டோ சீட்டா குடுங்க’னு கேட்டு நச்சரிக்கிறீங்களே... ஏன் ப்ரோ?
நல்லா காத்துவாங்கிண்டே தூங்கத்தான் ..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரண காமெடி
ஆரம்பிச்சிடுவாங்கல்ல?
வெற்றிகரமாக மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்துவிட்டது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியில் ஒருபக்கம் வளர்ச்சி ஏற்பட்டாலும் அதையும் தாண்டிப் பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடும். அந்த மாற்றங்கள் என்னன்னு பார்க்கலாமா?
செவ்வாய் கிரகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மூலிகையிலிருந்து தயாரான ஹேர் டை. செவ்வாய் கிரகத்திலிருந்து தயாரான இயற்கை நறுமண மிக்க குளியல் சோப்னு புதுசு புதுசா வியாபாரத்தைத் தொடங்கிடுவாய்ங்க!
திரைப்படங்களில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டரை இனிமேல் செவ்வாய் மாப்பிள்ளையாக்கிடுவாங்க. அமெரிக்க மாப்பிள்ளைக்கு கோட் சூட்னா, இந்த செவ்வாய் மாப்பிள்ளைகள் விண்வெளி வீரர்களின் உடையோடதான் என்ட்ரி கொடுப்பாங்க. ஹீரோயினை ஹீரோவே காதலிச்சுக் கல்யாணம் பண்ணின பிறகு, அந்தக் காதலை வாழ்த்தி டயலாக் பேசிட்டு திரும்பவும் அதே விண்வெளி உடையோடு செவ்வாய்க்கே திரும்பிடுவாங்க!
பாலாற்று மண்ணில் எடுத்த கூழாங்கற்களை, செவ்வாய் கிரகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அதிர்ஷ்டக்கற்கள்னு கலர் கலரா ரீல் விட்டு கூழாங்கற்கள் வியாபாரத்தைத் தொடங்கிடுவாய்ங்க. அது மணல் குவாரி வியாபாரத்தைவிட பாதுகாப்பாகவும் பணம் கொழிக்கக்கூடியதாகவும் மாறிடும்!
அடுத்ததாக செவ்வாய் கிரகத்திலும் பத்தாயிரத்தி ஒண்ணாவது அம்மா உணவகம் கிளை திறந்துவைக்கப்படும்!
செவ்வாய் கிரகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பார். பின்னே... செவ்வாயும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கணும்னா அதன் மீதும் ரெண்டு குண்டாவது போடணும்ல!
இயக்குனர் ஷங்கரோட படத்துல ஒரேயொரு பாடல் காட்சியை செவ்வாயில் ஷூட் பண்ணலாம்!
செவ்வாய் கிரகத்தில், ராமரோட வில்லிலிருந்து கிளம்பிய அம்புகள் துளைத்த தடயங்கள் காணப்படுவதாக புதுசா ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு அதுக்கு நாசா படங்களே சாட்சினு குழி விழுந்த செவ்வாயின் படத்தையும் இணையத்தில் சுத்தவிடுவாங்க. செவ்வாய் கிரகத்தையும் புனித கிரகமாக அறிவிக்கணும்னு சொல்லி ராமகோபாலன் புதுசா ஒரு போராட்ட அரசியலை தொடங்கிவைக்கக்கூடும்!
பூமிக்கு வெகு அருகில், செவ்வாய் கிரகத்தில், 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நகரம் விற்பனைக்குள்ளது என்றும் பத்திரச் செலவு இலவசம், (இறுதி) பயணச் செலவு மட்டும் வசூலிக்கப்படும்னு ரீல் எஸ்டேட் விளம்பரங்கள் தூள் பறக்கும்!
செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் அனுப்பியதில் ஊழல்னு இன்னொரு பூதம் கிளம்பி, மங்கள்யான் பாதையில் தார் ரோடு போட்ட செலவு, மங்கள்யானுக்கு பஞ்சர் ஒட்டிய செலவுனு எழுதப்பட்ட அத்தனை தில்லுமுல்லுகளையும் கண்டுபிடிப்பாங்க. மொத்த விசாரணையும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து சாதனை படைக்கும்!
டைம்பாஸ் விகடன்
வெற்றிகரமாக மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்துவிட்டது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியில் ஒருபக்கம் வளர்ச்சி ஏற்பட்டாலும் அதையும் தாண்டிப் பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடும். அந்த மாற்றங்கள் என்னன்னு பார்க்கலாமா?
செவ்வாய் கிரகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மூலிகையிலிருந்து தயாரான ஹேர் டை. செவ்வாய் கிரகத்திலிருந்து தயாரான இயற்கை நறுமண மிக்க குளியல் சோப்னு புதுசு புதுசா வியாபாரத்தைத் தொடங்கிடுவாய்ங்க!
திரைப்படங்களில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டரை இனிமேல் செவ்வாய் மாப்பிள்ளையாக்கிடுவாங்க. அமெரிக்க மாப்பிள்ளைக்கு கோட் சூட்னா, இந்த செவ்வாய் மாப்பிள்ளைகள் விண்வெளி வீரர்களின் உடையோடதான் என்ட்ரி கொடுப்பாங்க. ஹீரோயினை ஹீரோவே காதலிச்சுக் கல்யாணம் பண்ணின பிறகு, அந்தக் காதலை வாழ்த்தி டயலாக் பேசிட்டு திரும்பவும் அதே விண்வெளி உடையோடு செவ்வாய்க்கே திரும்பிடுவாங்க!
பாலாற்று மண்ணில் எடுத்த கூழாங்கற்களை, செவ்வாய் கிரகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அதிர்ஷ்டக்கற்கள்னு கலர் கலரா ரீல் விட்டு கூழாங்கற்கள் வியாபாரத்தைத் தொடங்கிடுவாய்ங்க. அது மணல் குவாரி வியாபாரத்தைவிட பாதுகாப்பாகவும் பணம் கொழிக்கக்கூடியதாகவும் மாறிடும்!
அடுத்ததாக செவ்வாய் கிரகத்திலும் பத்தாயிரத்தி ஒண்ணாவது அம்மா உணவகம் கிளை திறந்துவைக்கப்படும்!
செவ்வாய் கிரகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பார். பின்னே... செவ்வாயும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கணும்னா அதன் மீதும் ரெண்டு குண்டாவது போடணும்ல!
இயக்குனர் ஷங்கரோட படத்துல ஒரேயொரு பாடல் காட்சியை செவ்வாயில் ஷூட் பண்ணலாம்!
செவ்வாய் கிரகத்தில், ராமரோட வில்லிலிருந்து கிளம்பிய அம்புகள் துளைத்த தடயங்கள் காணப்படுவதாக புதுசா ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு அதுக்கு நாசா படங்களே சாட்சினு குழி விழுந்த செவ்வாயின் படத்தையும் இணையத்தில் சுத்தவிடுவாங்க. செவ்வாய் கிரகத்தையும் புனித கிரகமாக அறிவிக்கணும்னு சொல்லி ராமகோபாலன் புதுசா ஒரு போராட்ட அரசியலை தொடங்கிவைக்கக்கூடும்!
பூமிக்கு வெகு அருகில், செவ்வாய் கிரகத்தில், 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நகரம் விற்பனைக்குள்ளது என்றும் பத்திரச் செலவு இலவசம், (இறுதி) பயணச் செலவு மட்டும் வசூலிக்கப்படும்னு ரீல் எஸ்டேட் விளம்பரங்கள் தூள் பறக்கும்!
செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் அனுப்பியதில் ஊழல்னு இன்னொரு பூதம் கிளம்பி, மங்கள்யான் பாதையில் தார் ரோடு போட்ட செலவு, மங்கள்யானுக்கு பஞ்சர் ஒட்டிய செலவுனு எழுதப்பட்ட அத்தனை தில்லுமுல்லுகளையும் கண்டுபிடிப்பாங்க. மொத்த விசாரணையும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து சாதனை படைக்கும்!
டைம்பாஸ் விகடன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மரண காமெடி
மேற்கோள் செய்த பதிவு: 1094560தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094488krishnaamma wrote:
நன்றிகள் அம்மா...நன்றாக ரசித்தீர்களா...
ஹா...ஹா...........ஹா...நேசன் நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» காமெடி
» புதிர் கேள்வி - என்ன பதில் ???
» இது ஐ.பி.எல். காமெடி
» காமெடி
» முள்ளு.........காமெடி கதை..........
» புதிர் கேள்வி - என்ன பதில் ???
» இது ஐ.பி.எல். காமெடி
» காமெடி
» முள்ளு.........காமெடி கதை..........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|