Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்கிங் பண்ணுவோம்!
Page 1 of 1
வாக்கிங் பண்ணுவோம்!
![வாக்கிங் பண்ணுவோம்! Walking02](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/walking02.jpg)
உடலைப் பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும். ஆனால், இன்றைய வாழ்க்கை சூழலில், உயரத்துக்கு ஏற்ற எடையை விட மிக அதிகமாக இருக்கின்றனர். உடல் எடையைக் குறைத்து, பிட்டாக இருக்க ஜிம்முக்குப் போய்க் கடினமாக வொர்க் அவுட்ஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிமையாக நடைபயிற்சி மற்றும் உணவுகட்டுபாடுகளைக் கடைபிடித்தாலே ஜிம்முக்குப் போகாமலேயே உடலை 'ஜம்' என்று வைத்துக் கொள்ளலாம்" என்கிறார் திருச்சியைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் ஜேசு சவரிமுத்து.
உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க எளிமையான வழி நடைபயிற்சி தான். அட்டவணை ஒன்றை தயார் செய்து கொண்டு அதற்கேற்ப நடக்கத் தொடங்குங்கள். தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி போதுமானது. தொடர்ந்து 3 மாதம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பதை ஒரு கோர்ஸ் போல எடுத்துக் கொள்ளலாம்.
இதுவரை எந்தவித உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்யாதவர்களும் கூட முதல் நாள் மெதுவாக நடைபயிற்சியைத் தொடங்கலாம். ஆர்வக்கோளாறில் சிலர் திடீரென்று 4 கிலோமீட்டர் வரை கூட நடந்துவிட்டு அதன் பிறகு சோர்ந்து போய், நடைபயிற்சியை விட்டு விடுவார்கள். முதலில் மெல்லமாக நடக்கத் தொடங்க வேண்டும்.
நடைப்பயிற்சி ஆரம்பித்த முதல் வாரம் வழக்கமாக எவ்வளவு சாப்பிடுவீர்களோ அனைத்தையும் சாப்பிடலாம். ஆனால், 45 நிமிடம் நடக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து உங்கள் நடையில் படிப்படியாக வேகம், தூரம் இரண்டையும் கூட்ட வேண்டும். அதே சமயம் உணவிலும் படிப்படியாகக் கவனம் செலுத்தி எண்ணெய் மற்றும் கொழுப்புச்சத்துள்ள உணவு பொருள்களைத் தவிர்க்க ஆரம்பிக்கவேண்டும். ஒரு வாரம் நடந்தவுடனேயே எனக்கு உடல் எடை குறையவில்லையே என்று சோர்வடைந்துவிடக்கூடாது. 3 மாதம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
நடைபயிற்சிக்கான அட்டவணை:
முதல் 15 நாட்கள் - நடக்க முடியும் தொலைவு மெதுவாக நடக்க வேண்டும். ஆனால் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும்.
16-30 வது நாள் வரை - ஏற்கனவே நடந்த தொலைவை விட அதிகமாக 45 நிமிடத்துக்குள் நடக்க வேண்டும்.
30 - 45 நாள் வரை- ஒரு நிமிடம் வேகமான நடை 2 நிமிடம் மெதுவான நடை. இதை 5 முறை தொடர்ந்து செய்த பிறகு ரெஸ்ட் எடுக்காமல் மிக மெதுவாக 5 நிமிடத்துக்கு நடக்கவேண்டும். பிறகு, மீண்டும் ஒரு நிமிடம் வேகமான நடை இரண்டு நிமிடம் மெதுவான நடை, 5 நிமிடம் மிக மெதுவான நடைபோட வேண்டும் இந்தச் சுழற்சியை 45 நிமிடங்கள் வரைக்கும் செய்ய வேண்டும்.
45 - 60 வது நாள் வரை - ஒரு நிமிடம் வேக நடை ஒரு நிமிடம் மெதுவான நடை இதே போல 45 நிமிடம் நடக்க வேண்டும்.
60 - 75 வது நாள் வரை - இரண்டு நிமிடம் வேகமான நடை ஒரு நிமிடம் மெதுவான நடை இதைத் தொடர்ச்சியாக 45 நிமிடம் செய்ய வேண்டும்.
75 வது நாள் முதல் 90 வது நாள் வரை - ஒரு நிமிடம் மிதமான ஜாக்கிங் மற்றும் ஒரு நிமிடம் மெதுவான நடை போட வேண்டும்.
இந்த 90 நாட்கள் முறையாகச் செய்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மிதமான வேகத்தில் ஜாக்கிங் செய்வதை அதிகரித்து 20 நிமிடம் ஜாக்கிங் 25 நிமிடம் நடைபயிற்சி என்ற நடைமுறைக்குக் கொண்டு வந்து தொடர்ந்து தினமும் இதே வகையில் வாக்கிங், ஜாக்கிங் செய்வது உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க உதவும்.
கவனிக்க வேண்டியவை
* கண்டிப்பாகக் கைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கைபேசியைச் சைலண்டில் போட்டுவிடலாம்.
* நடக்க ஆரம்பிப்பதற்கு முன் 3 நிமிடம் வார்ம் அப் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இதனால், தசைகளில் சுருக்கம், வலி ஏற்படாமல் எளிதில் நடக்க ஏதுவாக இருக்கும்.
* நடந்து கொண்டிருக்கும்போது, அடிக்கடி நாக்கு உலர்ந்து போகலாம். அந்தச் சமயத்தில், சிறிதளவு தண்ணீர் மட்டும் அருந்த வேண்டும். 45 நிமிடம் நடைபயிற்சி செய்தவுடன் தேவையான அளவு தண்ணீரை அருந்தலாம். 20 நிமிடம் கழித்து உணவு உண்ணலாம்.
* காலை, மதியம், மாலை, இரவு என எந்த நேரத்திலும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். எனினும் காலை நேரத்தில் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் நடைபயிற்சி செய்வது மிகவும் உற்சாகத்தைத் தரும்.
இனியும் தாமதிக்காமல், வீரு நடை போட்டுக் கொழுப்பை குறைங்க! வெயிட் தன்னால இறங்கிடும்.
ரா. வருண் பிரசாத்
(மாணவ பத்திரிகையாளர்)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: வாக்கிங் பண்ணுவோம்!
அரசு, ஆலம், மாதுளை... குழந்தைப்பேறுக்கு கைகொடுக்கும் இயற்கை!
![வாக்கிங் பண்ணுவோம்! Nature2](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/nature2.jpg)
குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் கஷ்டப்படுறாங்க. இதுக்கு உடல்ரீதியா நிறைய காரணங்கள் இருந்தாலும், ரசாயனம் கலந்த சாப்பாட்டை சாப்பிடுறதும் ஒரு காரணமா இருக்கு. இதைச் சொன்னா பலபேரு நம்ப மாட்டாங்க. ஆனா, நம்ம உடம்புல வர்ற பல பிரச்னைகளுக்கும் காரணமே... தினம் தினம் நாம சாப்பிடற சாப்பாடு, தண்ணி இது ரெண்டும்தான்.
இதை உறுதிப்படுத்திக்க எங்கயும் போகத் தேவையில்ல... ஒவ்வொரு நாளும் காலையில எழுந்திருக்கும்போது உடம்பு சும்மா ஃப்ரெஷ்ஷா இருந்தா... பிரச்னையே இல்லை. இதுக்கு மாறா எழுந்திரிக்க முடியாம, கஷ்டப்பட்டு எழுந்திரிச்சாலும், தூக்கம் தூக்கமாவே இருக்கும் சிலருக்கு. காலைக் கடன்களை உடனே முடிக்காத நிலையும் இருக்கும். அதுக்கும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வயிறு கும்னு அடைச்சுக்கிட்டு இருக்கும். கண்ணு ரெண்டும் பொங்கிக்கிட்டு வரும். இதுமாதிரியான அறிகுறிகள் இருந்தா... நாம சாப்பிட்ட சாப்பாட்டுல ஏதோ பிரச்னைங்கிறத புரிஞ்சுக்கலாம்.
இப்போதைய சூழல்ல எல்லாருடைய சாப்பாட்டு பழக்க வழக்கங்களும் காலத்துக்கு தகுந்தமாதிரி நிறையவே மாறிக்கிடக்கு. உதாரணமா சொல்லப்போனா எலுமிச்சை ஜூஸ்னா... ஒரிஜினல் எலுமிச்சம்பழத்தை சாறு எடுத்து, சர்க்கரையோ, தேனோ சேர்த்து சாப்பிடணும். இந்த அவசர உலகத்துல பாட்டில்ல அடைச்சி வச்சிருக்கிற ஜூஸையோ, கூல்டிரிங்க்ஸையோ வாங்கி குடிக்கிறோம். இது, நாம தயாரிக்கிற லெமன் ஜூஸைவிட டேஸ்ட்டா இருக்கும். ஆனா, இதுக்காக என்னென்ன ரசாயனங்கள் கலந்திருப்பாங்கனு நமக்குத் தெரியாது. பாக்கெட்டுல அடைச்சி விக்கிற மஞ்சள் தூள், சாம்பார் பொடியில என்னென்ன கலந்திருக்குனு யாருக்கு தெரியும்?
இப்படி தினந்தோறும் நாம சாப்பிடுற எல்லா பொருட்கள்லயும் கண்ணுக்கு தெரியாத என்னென்னவோ பொருட்கள் கலந்திருக்கு. இதெல்லாம் உள்ள போய், எந்த பாகத்தை பாதிச்சி, என்ன மாதிரியான பிரச்னைகளை உண்டாக்கும்னு யாருக்கும் தெரியாது. போதாக்குறைக்கு பான்பராக், கஞ்சா மாதிரி போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகுறவங்க ஒருபக்கம். தெருவுக்கு தெரு ஒயின்ஷாப் திறந்துவிட்டதால வயசு வித்தியாசம் இல்லாம ஆணும், பெண்ணும் குடிக்கிறாங்க. இதுமாதிரியான பழக்கங்களால கணையம் தொடங்கி உடல் உறுப்புகள் பலதும் பாதிக்கப்படுது. இதனாலயும் குழந்தை இல்லாத பிரச்னை தலைதூக்கி நிக்குது.
குழந்தைப் பேறு தர்றோம்னு முக்குக்கு முக்கு ஆஸ்பத்திரி திறந்துட்டாங்க டாக்டருங்க. இப்பல்லாம், இங்கதான் கூட்டம் அப்பிக்கிட்டிருக்கு. சிலருக்கு பலன் கிடைக்குது. சிலருக்கு கிடைக்கிறதுல்ல. இதுக்காக கொடுக்கிற மருந்துகள்லயும் ரசாயனம்தான் தலைதூக்கி நிக்குது. இதுவே இயற்கைமுறை மருத்துவத்தை பயன்படுத்தினா, நிச்சயம் கைமேல பலன் கிடைக்கும். ஆனா, இதுக்காக கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.
அற்புதம் செய்யும் அரச இலை!
உதாரணமா... அரச இலையை சாப்பிட்டாலே இந்த பிரச்னையை பெரும்பாலும் சரி பண்ண முடியும். அரச இலைக்கு அவ்வளவு அற்புதமான மருத்துவக் குணங்கள் இருக்கு. ஏனோ பலருக்கும் இது தெரியுறதில்லை. அரச இலை ஆண்மைக்குறை போக்குறதோட, பெண்களோட கர்ப்பப்பை பிரச்னையை சரிபண்ணி, குழந்தைப்பேறு தரக்கூடிய அற்புதமான மருந்து. அரச மரத்தோட இளம்தளிர் இலைகளை அரைச்சி, தயிர் சேர்த்து காலையில வெறும் வயித்துல 48 நாள் சாப்பிட்டு வந்தா, நல்ல பலன் கிடைக்கும். ஆண், பெண் ரெண்டு பேருமே சாப்பிடணும். இந்தக் காலகட்டத்துல உடலுறவு வெச்சுக்கக்கூடாது. பிரச்னையைப்பொறுத்து 48 நாளோ அல்லது 3, 4 மாதமோ சாப்பிட்டு வந்தால் அதன்பிறகு பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதனால்தான் அரச மரத்தை சுத்தி வந்தா கருத்தரிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அரச மரத்தோட இலை,பழம், பட்டை எல்லாமே கர்ப்பப்பைக் கோளாறை சரி செய்யக்கூடியது. இயற்கை வைத்தியத்தில் இது சாத்தியமாகுது.
வாழைப்பூவும் கைகொடுக்கும்!
கர்ப்பப்பை கோளாறுகளுக்கு வாழைப்பூவும் கைகொடுக்கும். வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து, பனங்கல்கண்டு சேர்த்து அவ்வப்போது பெண்கள் சாப்பிட்டு வரலாம். வாழைப்பூவை பொரியல் செஞ்சி ஆண் - பெண் ரெண்டு பேருமே சாப்பிடலாம். இதை பிரச்னை தீரும் வரை சாப்பிடலாம்.
ஆலம்பூவை பொடியாக்கி, ஆணும் பெண்ணும் சாப்பிட்டு வந்தா... காலப்போக்குல குழந்தையில்லா பிரச்னை சரியாகும்.
மாதுளம் பூ
மாதவிலக்கு வந்த 3வது நாள்ல இருந்து மொத்தம் ஏழு நாளைக்கு, தினமும் 4 மாதுளம்பூவை கஷாயம் பண்ணி, பனங்கல்கண்டு சேர்த்து காலை, மாலை குடிச்சிட்டு வரணும். அடுத்தடுத்த மாசங்கள்லயும் இதேபோல செய்துட்டு வந்தா... 3வது மாசத்துக்கு பிறகு, கர்ப்பப்பை பிரச்னை முழுசா சரியாகி, குழந்தை தங்குறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.
இதேமாதிரி கீழாநெல்லி இலையை எடுத்து அரைச்சி ஒரு கோலிக்காய் அளவு எடுத்து, பால்ல கலந்து சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். இதையும் மாதவிலக்கான 3வது நாள்ல இருந்து 7 நாள் சாப்பிட்டு வரலாம். அடுத்தடுத்து 3 மாசம் வரை சாப்பிடணும்.
மாதவிடாய் நிக்குற காலத்துல வரக்கூடிய ‘மெனோபாஸ்’, சிலரை பாடாய்படுத்தி எடுத்துவிடும். இதை சரி பண்ணணும்னா வாழைப்பூவை கஷாயம் பண்ணி, அதோட சோம்புனு சொல்ற பெருஞ்சீரகம், சீரகம் எல்லாத்தையும் நெய்விட்டு தாளிச்சி தினமும் சாப்பிட்டு வந்தா, ஒரு வாரத்துல பிரச்னை சரியாகும். ரத்தப்போக்கு நிக்குறதோட, கர்ப்பப்பையில வரக்கூடிய கோளாறுகள் சரியாகி கர்ப்பப்பையும் சுருங்கிப்போயிரும்.
இளம் ஆலம் விழுது 20 கிராம் அளவு எடுத்து அரைச்சி, பசும்பால்ல சேர்த்து மாதவிலக்கு வந்த முதல் நாள்ல இருந்து 5 நாள் வரை சாப்பிட்டு வந்தா... கர்ப்பப்பை கோளறுகள் சரியாகும்.
செலவில்லாத எளிய இயற்கை முறைகள்ல இப்படி நிறைய வைத்தியம் இருக்கு. இதையெல்லாம் சரியான விதத்துல செஞ்சுட்டு வந்தா, நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்.
மேலே சொன்ன இந்த வைத்தியமும் சரி, கூடுதலா வேற விளக்கம் எதுவும் வேணும்னாலும் சரி, கடலூர்ல உள்ள வைத்தியர் அன்னமேரி பாட்டிகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிடலாம்.
-எம்.மரிய பெல்சின்
![வாக்கிங் பண்ணுவோம்! Nature2](https://2img.net/h/cdnw.vikatan.com/news/images/nature2.jpg)
குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் கஷ்டப்படுறாங்க. இதுக்கு உடல்ரீதியா நிறைய காரணங்கள் இருந்தாலும், ரசாயனம் கலந்த சாப்பாட்டை சாப்பிடுறதும் ஒரு காரணமா இருக்கு. இதைச் சொன்னா பலபேரு நம்ப மாட்டாங்க. ஆனா, நம்ம உடம்புல வர்ற பல பிரச்னைகளுக்கும் காரணமே... தினம் தினம் நாம சாப்பிடற சாப்பாடு, தண்ணி இது ரெண்டும்தான்.
இதை உறுதிப்படுத்திக்க எங்கயும் போகத் தேவையில்ல... ஒவ்வொரு நாளும் காலையில எழுந்திருக்கும்போது உடம்பு சும்மா ஃப்ரெஷ்ஷா இருந்தா... பிரச்னையே இல்லை. இதுக்கு மாறா எழுந்திரிக்க முடியாம, கஷ்டப்பட்டு எழுந்திரிச்சாலும், தூக்கம் தூக்கமாவே இருக்கும் சிலருக்கு. காலைக் கடன்களை உடனே முடிக்காத நிலையும் இருக்கும். அதுக்கும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வயிறு கும்னு அடைச்சுக்கிட்டு இருக்கும். கண்ணு ரெண்டும் பொங்கிக்கிட்டு வரும். இதுமாதிரியான அறிகுறிகள் இருந்தா... நாம சாப்பிட்ட சாப்பாட்டுல ஏதோ பிரச்னைங்கிறத புரிஞ்சுக்கலாம்.
இப்போதைய சூழல்ல எல்லாருடைய சாப்பாட்டு பழக்க வழக்கங்களும் காலத்துக்கு தகுந்தமாதிரி நிறையவே மாறிக்கிடக்கு. உதாரணமா சொல்லப்போனா எலுமிச்சை ஜூஸ்னா... ஒரிஜினல் எலுமிச்சம்பழத்தை சாறு எடுத்து, சர்க்கரையோ, தேனோ சேர்த்து சாப்பிடணும். இந்த அவசர உலகத்துல பாட்டில்ல அடைச்சி வச்சிருக்கிற ஜூஸையோ, கூல்டிரிங்க்ஸையோ வாங்கி குடிக்கிறோம். இது, நாம தயாரிக்கிற லெமன் ஜூஸைவிட டேஸ்ட்டா இருக்கும். ஆனா, இதுக்காக என்னென்ன ரசாயனங்கள் கலந்திருப்பாங்கனு நமக்குத் தெரியாது. பாக்கெட்டுல அடைச்சி விக்கிற மஞ்சள் தூள், சாம்பார் பொடியில என்னென்ன கலந்திருக்குனு யாருக்கு தெரியும்?
இப்படி தினந்தோறும் நாம சாப்பிடுற எல்லா பொருட்கள்லயும் கண்ணுக்கு தெரியாத என்னென்னவோ பொருட்கள் கலந்திருக்கு. இதெல்லாம் உள்ள போய், எந்த பாகத்தை பாதிச்சி, என்ன மாதிரியான பிரச்னைகளை உண்டாக்கும்னு யாருக்கும் தெரியாது. போதாக்குறைக்கு பான்பராக், கஞ்சா மாதிரி போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகுறவங்க ஒருபக்கம். தெருவுக்கு தெரு ஒயின்ஷாப் திறந்துவிட்டதால வயசு வித்தியாசம் இல்லாம ஆணும், பெண்ணும் குடிக்கிறாங்க. இதுமாதிரியான பழக்கங்களால கணையம் தொடங்கி உடல் உறுப்புகள் பலதும் பாதிக்கப்படுது. இதனாலயும் குழந்தை இல்லாத பிரச்னை தலைதூக்கி நிக்குது.
குழந்தைப் பேறு தர்றோம்னு முக்குக்கு முக்கு ஆஸ்பத்திரி திறந்துட்டாங்க டாக்டருங்க. இப்பல்லாம், இங்கதான் கூட்டம் அப்பிக்கிட்டிருக்கு. சிலருக்கு பலன் கிடைக்குது. சிலருக்கு கிடைக்கிறதுல்ல. இதுக்காக கொடுக்கிற மருந்துகள்லயும் ரசாயனம்தான் தலைதூக்கி நிக்குது. இதுவே இயற்கைமுறை மருத்துவத்தை பயன்படுத்தினா, நிச்சயம் கைமேல பலன் கிடைக்கும். ஆனா, இதுக்காக கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.
அற்புதம் செய்யும் அரச இலை!
உதாரணமா... அரச இலையை சாப்பிட்டாலே இந்த பிரச்னையை பெரும்பாலும் சரி பண்ண முடியும். அரச இலைக்கு அவ்வளவு அற்புதமான மருத்துவக் குணங்கள் இருக்கு. ஏனோ பலருக்கும் இது தெரியுறதில்லை. அரச இலை ஆண்மைக்குறை போக்குறதோட, பெண்களோட கர்ப்பப்பை பிரச்னையை சரிபண்ணி, குழந்தைப்பேறு தரக்கூடிய அற்புதமான மருந்து. அரச மரத்தோட இளம்தளிர் இலைகளை அரைச்சி, தயிர் சேர்த்து காலையில வெறும் வயித்துல 48 நாள் சாப்பிட்டு வந்தா, நல்ல பலன் கிடைக்கும். ஆண், பெண் ரெண்டு பேருமே சாப்பிடணும். இந்தக் காலகட்டத்துல உடலுறவு வெச்சுக்கக்கூடாது. பிரச்னையைப்பொறுத்து 48 நாளோ அல்லது 3, 4 மாதமோ சாப்பிட்டு வந்தால் அதன்பிறகு பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதனால்தான் அரச மரத்தை சுத்தி வந்தா கருத்தரிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அரச மரத்தோட இலை,பழம், பட்டை எல்லாமே கர்ப்பப்பைக் கோளாறை சரி செய்யக்கூடியது. இயற்கை வைத்தியத்தில் இது சாத்தியமாகுது.
வாழைப்பூவும் கைகொடுக்கும்!
கர்ப்பப்பை கோளாறுகளுக்கு வாழைப்பூவும் கைகொடுக்கும். வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து, பனங்கல்கண்டு சேர்த்து அவ்வப்போது பெண்கள் சாப்பிட்டு வரலாம். வாழைப்பூவை பொரியல் செஞ்சி ஆண் - பெண் ரெண்டு பேருமே சாப்பிடலாம். இதை பிரச்னை தீரும் வரை சாப்பிடலாம்.
ஆலம்பூவை பொடியாக்கி, ஆணும் பெண்ணும் சாப்பிட்டு வந்தா... காலப்போக்குல குழந்தையில்லா பிரச்னை சரியாகும்.
மாதுளம் பூ
மாதவிலக்கு வந்த 3வது நாள்ல இருந்து மொத்தம் ஏழு நாளைக்கு, தினமும் 4 மாதுளம்பூவை கஷாயம் பண்ணி, பனங்கல்கண்டு சேர்த்து காலை, மாலை குடிச்சிட்டு வரணும். அடுத்தடுத்த மாசங்கள்லயும் இதேபோல செய்துட்டு வந்தா... 3வது மாசத்துக்கு பிறகு, கர்ப்பப்பை பிரச்னை முழுசா சரியாகி, குழந்தை தங்குறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.
இதேமாதிரி கீழாநெல்லி இலையை எடுத்து அரைச்சி ஒரு கோலிக்காய் அளவு எடுத்து, பால்ல கலந்து சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். இதையும் மாதவிலக்கான 3வது நாள்ல இருந்து 7 நாள் சாப்பிட்டு வரலாம். அடுத்தடுத்து 3 மாசம் வரை சாப்பிடணும்.
மாதவிடாய் நிக்குற காலத்துல வரக்கூடிய ‘மெனோபாஸ்’, சிலரை பாடாய்படுத்தி எடுத்துவிடும். இதை சரி பண்ணணும்னா வாழைப்பூவை கஷாயம் பண்ணி, அதோட சோம்புனு சொல்ற பெருஞ்சீரகம், சீரகம் எல்லாத்தையும் நெய்விட்டு தாளிச்சி தினமும் சாப்பிட்டு வந்தா, ஒரு வாரத்துல பிரச்னை சரியாகும். ரத்தப்போக்கு நிக்குறதோட, கர்ப்பப்பையில வரக்கூடிய கோளாறுகள் சரியாகி கர்ப்பப்பையும் சுருங்கிப்போயிரும்.
இளம் ஆலம் விழுது 20 கிராம் அளவு எடுத்து அரைச்சி, பசும்பால்ல சேர்த்து மாதவிலக்கு வந்த முதல் நாள்ல இருந்து 5 நாள் வரை சாப்பிட்டு வந்தா... கர்ப்பப்பை கோளறுகள் சரியாகும்.
செலவில்லாத எளிய இயற்கை முறைகள்ல இப்படி நிறைய வைத்தியம் இருக்கு. இதையெல்லாம் சரியான விதத்துல செஞ்சுட்டு வந்தா, நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்.
மேலே சொன்ன இந்த வைத்தியமும் சரி, கூடுதலா வேற விளக்கம் எதுவும் வேணும்னாலும் சரி, கடலூர்ல உள்ள வைத்தியர் அன்னமேரி பாட்டிகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிடலாம்.
-எம்.மரிய பெல்சின்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வயிற்றை ‘க்ளீன்’ பண்ணுவோம்!
» புதிதாக என்ன பண்ணுவோம்?
» எங்கே போனாலும் ‘வாக்’ பண்ணுவோம்!
» தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
» கூழாங்கல் வாக்கிங்
» புதிதாக என்ன பண்ணுவோம்?
» எங்கே போனாலும் ‘வாக்’ பண்ணுவோம்!
» தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை பண்ணுவோம் வாங்க
» கூழாங்கல் வாக்கிங்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|