Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது?
3 posters
Page 1 of 1
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது?
தமிழகத்தில் ‘மக்கள் முதல்வரு’க்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பீகாரிலோ அம்மாநில முதல்வருக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெறுமனே செய்தியாக படித்து கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் வெளியே சென்றதும் பூசாரிகள் கோயிலைக் கழுவிவிட்டனர். நான் கோயிலுக்குள் சென்றதற்காக அதை கழுவிவிட்டு தீட்டுக் கழித்திருக்கிறார்கள் என தற்போது முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை அடைய வேண்டுமானால் கல்வியும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அவசியம் என்றார் அம்பேத்கர். ஆனால், ஒரு தலித் படித்து கலெக்டராகவோ, நீதிபதியாகவோ ஆனாலும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதல்வர் ஆனாலும், கலெக்டர், முதல்வர் என்ற அடையாளங்களைவிட 'தாழ்த்தப்பட்டவன்’ என்ற அடையாளத்தோடுதான் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.
சாதிக்கொடுமைகளுக்கும், தீண்டாமைகளுக்கும் பீகார் மாநிலம் பெயர் பெற்றது. கடந்த ஆகஸ்ட் 15, 2013ல் பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்திலுள்ள பட்டி என்ற கிராமத்தில், குரு ரவிதாஸ் கோயிலின் முன்பாக தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பான பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் விலாஸ் ராம் என்ற தலித் கொல்லப்பட்டார். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 54 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலின்போது விளையாடிக் கொண்டிருந்த பல குழந்தைகள் ஆலயத்தின் கூரைப் பகுதியில் இருந்து கீழே தூக்கி வீசி எறியப்பட்டனர். இரும்புக்கம்பி, தடிகள், பெட்ரோல் குண்டுகளுடன் நடந்த இந்தத் தாக்குதலில் தலித் பெண் ஒருவருக்கு கரு கலைந்தது. இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.
பீகார் முதல்வரின் கூற்றைப் படிக்கும்போது பாபு ஜெகஜீவன்ராமின் நினைவு வந்தது. ஜெகஜீவன் ராம் சுதந்திரப்போராட்ட வீரர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் எனப் பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். மொராஜி தேசாய் பிரதமராக இருந்தபோது துணைப்பிரதமராகவும் இருந்தவர். ஜெகஜீவன்ராம் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை கங்கை நீர் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது. ராணுவ அமைச்சரே சாதி என்ற மோசமான போர்க்களத்தில் கையறுநிலையில் நின்று கலங்கியது அவலம்தான்.
கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனபோது, ‘ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் உயரிய பதவியை வகிக்கிறார்’ என்று கொண்டாடப்பட்டது. ஆனால் நாராயணன் குடியரசுத் தலைவரான பிறகும் மேலவளவில் முருகேசன் என்ற தலித், பஞ்சாயத்துத் தலைவராக இருக்கக் கூடாது என்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஒரு தலித் குடியரசுத் தலைவர்கூட ஆகலாம், ஆனால் சாதியம் இறுக்கமடைந்து கிடக்கும் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக முடியாது என்பதுதான் அந்தப் படுகொலை நமக்கு உணர்த்திய எதார்த்தம்.
தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம். ஓர் அரசியல் கட்சிக்கு எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் தலித்கள் பொதுத்தொகுதியில் நிறுத்தப்படுவது அரிதினும் அரிது. வெற்றிபெற்ற பிறகும் பெரும்பாலும் தலித்துகளுக்கு ஆதி திராவிடர் நலத் துறைதான் ஒதுக்கப்படுகிறது. இப்படி உள்ளும் வெளியிலுமான ஏராளமான சாதிய மனநிலையும் தீண்டாமை ஒதுக்கலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
“இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகள் தேசத்துக்கு எதிரானவை. முதலில் சாதி, சமூக வாழ்க்கை முறையில் பிளவை ஏற்படுத்துகிறது. சாதி தேசத்துக்கு எதிரானது மட்டுமல்ல; சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப்பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். சாதிகள் அற்ற ஒரு தேசம் உருவாகும்போதுதான் சகோதரத்துவம் உண்மையாகும். சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்” என்றார் அம்பேத்கர்.
மங்கள்யானை ஏவி செவ்வாயை நெருங்கிவிட்டதாகப் பெருமை கொள்கிறோம். இதே தேசத்தில் வாழும் நம்மைப் போன்ற சக மனிதர்களின் மனங்களை எப்போது நெருங்கப்போகிறோம்?
Nandri:Vikatan
பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் வெளியே சென்றதும் பூசாரிகள் கோயிலைக் கழுவிவிட்டனர். நான் கோயிலுக்குள் சென்றதற்காக அதை கழுவிவிட்டு தீட்டுக் கழித்திருக்கிறார்கள் என தற்போது முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை அடைய வேண்டுமானால் கல்வியும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அவசியம் என்றார் அம்பேத்கர். ஆனால், ஒரு தலித் படித்து கலெக்டராகவோ, நீதிபதியாகவோ ஆனாலும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதல்வர் ஆனாலும், கலெக்டர், முதல்வர் என்ற அடையாளங்களைவிட 'தாழ்த்தப்பட்டவன்’ என்ற அடையாளத்தோடுதான் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.
சாதிக்கொடுமைகளுக்கும், தீண்டாமைகளுக்கும் பீகார் மாநிலம் பெயர் பெற்றது. கடந்த ஆகஸ்ட் 15, 2013ல் பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்திலுள்ள பட்டி என்ற கிராமத்தில், குரு ரவிதாஸ் கோயிலின் முன்பாக தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பான பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் விலாஸ் ராம் என்ற தலித் கொல்லப்பட்டார். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 54 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலின்போது விளையாடிக் கொண்டிருந்த பல குழந்தைகள் ஆலயத்தின் கூரைப் பகுதியில் இருந்து கீழே தூக்கி வீசி எறியப்பட்டனர். இரும்புக்கம்பி, தடிகள், பெட்ரோல் குண்டுகளுடன் நடந்த இந்தத் தாக்குதலில் தலித் பெண் ஒருவருக்கு கரு கலைந்தது. இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.
பீகார் முதல்வரின் கூற்றைப் படிக்கும்போது பாபு ஜெகஜீவன்ராமின் நினைவு வந்தது. ஜெகஜீவன் ராம் சுதந்திரப்போராட்ட வீரர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் எனப் பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். மொராஜி தேசாய் பிரதமராக இருந்தபோது துணைப்பிரதமராகவும் இருந்தவர். ஜெகஜீவன்ராம் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை கங்கை நீர் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது. ராணுவ அமைச்சரே சாதி என்ற மோசமான போர்க்களத்தில் கையறுநிலையில் நின்று கலங்கியது அவலம்தான்.
கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனபோது, ‘ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் உயரிய பதவியை வகிக்கிறார்’ என்று கொண்டாடப்பட்டது. ஆனால் நாராயணன் குடியரசுத் தலைவரான பிறகும் மேலவளவில் முருகேசன் என்ற தலித், பஞ்சாயத்துத் தலைவராக இருக்கக் கூடாது என்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஒரு தலித் குடியரசுத் தலைவர்கூட ஆகலாம், ஆனால் சாதியம் இறுக்கமடைந்து கிடக்கும் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக முடியாது என்பதுதான் அந்தப் படுகொலை நமக்கு உணர்த்திய எதார்த்தம்.
தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம். ஓர் அரசியல் கட்சிக்கு எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் தலித்கள் பொதுத்தொகுதியில் நிறுத்தப்படுவது அரிதினும் அரிது. வெற்றிபெற்ற பிறகும் பெரும்பாலும் தலித்துகளுக்கு ஆதி திராவிடர் நலத் துறைதான் ஒதுக்கப்படுகிறது. இப்படி உள்ளும் வெளியிலுமான ஏராளமான சாதிய மனநிலையும் தீண்டாமை ஒதுக்கலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
“இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகள் தேசத்துக்கு எதிரானவை. முதலில் சாதி, சமூக வாழ்க்கை முறையில் பிளவை ஏற்படுத்துகிறது. சாதி தேசத்துக்கு எதிரானது மட்டுமல்ல; சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப்பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். சாதிகள் அற்ற ஒரு தேசம் உருவாகும்போதுதான் சகோதரத்துவம் உண்மையாகும். சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்” என்றார் அம்பேத்கர்.
மங்கள்யானை ஏவி செவ்வாயை நெருங்கிவிட்டதாகப் பெருமை கொள்கிறோம். இதே தேசத்தில் வாழும் நம்மைப் போன்ற சக மனிதர்களின் மனங்களை எப்போது நெருங்கப்போகிறோம்?
Nandri:Vikatan
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது?
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» மனங்களை விரியுங்கள்
» மனங்களை கொன்ற மணங்கள்............
» மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
» தமிழர்கள் மனங்களை ஜெயித்தால் - நடிகர் ரஜினிகாந்த்
» சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு
» மனங்களை கொன்ற மணங்கள்............
» மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
» தமிழர்கள் மனங்களை ஜெயித்தால் - நடிகர் ரஜினிகாந்த்
» சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|